என் மலர்
நீங்கள் தேடியது "நிதிஷ்குமார்"
- நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது.
- முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதை எதிர்கொள்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.
பாட்னா:
பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடு முழுவதும் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் நாங்களும் காத்திருக்கிறோம்.
எவ்வளவு சீக்கிரம் தேர்தலை நடத்துகிறீர்களோ, அவ்வளவு நல்லது. தேர்தலுக்கு நாங்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம். முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தல் நடந்தால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். மக்களுக்காக உழைத்து வருகிறோம், தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்வோம்.
சாலைகள், பாலங்கள், மின்சாரம், குடிநீர் வசதிகளை அமைப்பது முதல் பல உள்கட்டமைப்பு திட்டங்கள் வரை மாநிலத்தில் பல பணிகளை செய்துள்ளோம். வாக்காளர்களே இறுதி முடிவை எடுப்பார்கள் என தெரிவித்தார்.
- பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததை குற்றம் சாட்டியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
- போலீசார் உடனடியாக அந்த போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பெங்களூரு:
அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார் ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து அவரது மாநிலமான பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் கடந்த மாதம் 23-ந் தேதி நடந்தது. எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் நேற்று தொடங்கியது. இதன் 2-வது நாள் ஆலோசனை இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் எதிர்க் கட்சிகள் கூட்டம் நடைபெறும் பெங்களூருவில் நிதிஷ்குமாரை குறி வைத்து போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. நிலையற்ற பிரதமர் வேட்பாளர் என்று அவரை விமர்சனம் செய்து சுவ ரொட்டிகள் காணப்பட்டது. மேலும் பீகாரில் பாலம் இடிந்து விழுந்ததை குற்றம் சாட்டியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
ஒரு போஸ்டரில் பீகார் முதல்-மந்திாி நிதிஷ்குமாரை வரவேற்கிறோம். சுல்தான் கஞ்ச் பாலம் நிதிஷ்குமாரின் பரிசு. பாலம் தொடர்ந்து இடிந்து வருகிறது. பீகாரில் உள்ள பாலங்கள் அவரது ஆட்சியை தாங்க முடியாத நிலையில் எதிர்க் கட்சிகளை அவர் வழி நடத்துவார் என்று நம்புங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு போஸ்டரில் நிலையற்ற பிரதமர் போட்டியாளர். நிதிஷ்குமாருக்கு பெங்களூருவில் சிவப்பு கம்பளம் விரிக்கிறது. சுல்தான் கஞ்ச் பாலம் இடிந்த முதல் தேதி ஏப்ரல் 2022. சுல்தான் கஞ்ச் பாலம் இடிந்த 2-வது தேதி ஜூன் 2023 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
எதிர்க் கட்சிகள் கூட்டம் நடைபெறும் பகுதி அருகே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் நிதிஷ்குமாரை குற்றம் சாட்டும் இந்த சுவரொட்டி கள் முக்கிய போக்குவரத்து சந்திப்பில் காணப்பட்டது.
போலீசார் உடனடியாக அந்த போஸ்டர்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். போஸ்டர்களை ஒட்டியது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நாளை பிற்பகல் பாட்னாவில் உள்ள முக்கிய அரங்கில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
- எதிர்க்கட்சிகள் திட்டம் நாளைய கூட்டத்துக்கு பிறகுதான் எப்படி இருக்கும் என்பது தெரியவரும்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை எதிர்க்கட்சிகள் இடையே சுமூகமான ஒருமித்த கருத்து உருவாகவில்லை.
இந்த நிலையில் பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நாளை (23-ந் தேதி) எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பாட்னாவுக்கு வரும் எதிர்க்கட்சி தலைவர்களை வரவேற்க நகரம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சி தலைவர்களில் தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி ஆகியோர் இன்று இரவுக்குள் பாட்னா சென்று சேர உள்ளனர். அவர்கள் தங்குவதற்கு பாட்னாவில் பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் நாளை காலை பாட்னா செல்ல உள்ளனர். பெரும்பாலான தலைவர்கள் நாளை மதியத்துக்குள் பாட்னா சென்று சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர்கள் தங்கி ஓய்வு எடுப்பதற்காக பாட்னாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் 17 அறைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இது தவிர நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நாளை பிற்பகல் பாட்னாவில் உள்ள முக்கிய அரங்கில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட உள்ளன. குறிப்பாக தேசிய கட்சிகளுடன் மாநில கட்சிகள் தொகுதிகளை விட்டுக் கொடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.
மேலும் பா.ஜனதாவுக்கு எதிராக 450 தொகுதிகளில் பொது வேட்பாளர்களை நிறுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. இவை தவிர எதிர்க்கட்சிகள் அனைத்துக்கும் சேர்த்து பொதுவான தேர்தல் திட்டங்கள் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் பா.ஜனதாவை எதிர்த்து முதல் முறையாக நாளை கூடுகின்றன. இந்த கூட்டத்தில் பொதுத் திட்டம் கொண்டுவர இயலுமா என்பதில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் எதிர்க்கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து உருவாகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மாநில கட்சிகள் செல்வாக்குள்ள தங்களது தொகுதிகளை விட்டுக் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சிகளில் பல வலுவான தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே எதிர்க்கட்சிகள் திட்டம் நாளைய கூட்டத்துக்கு பிறகுதான் எப்படி இருக்கும் என்பது தெரியவரும்.
- சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்து தலைமை உரை நிகழ்த்துகிறார்.
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டம் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது.
இதற்காக ரூ.12 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் பொது வாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பே திருவாரூர் வந்து விட்டார். நேற்று விழா ஏற்பாடுகளை கவனித்தார். இன்று காலையிலும் கலைஞர் கோட்டம் நிகழ்ச்சியை காண வந்திருந்தார்.
காலை 10 மணிக்கு திறப்பு விழா நிகழ்ச்சி மங்கள இசையுடன் கோலாகலமாக தொடங்கியது. முதலில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.
இதில் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் கவிதை வாசித்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.
இதன் பிறகு சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது முத்தமிழறிஞர் கலைஞரின் 'பேச்சே' என்ற தலைப்பில் புலவர் சண்முக வடிவேல், கவிதா ஜவகர், ராஜா ஆகியோர் பேசினார்கள். 'எழுத்தே' என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம், மாது, பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசினார்கள்.
நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் வந்து பார்த்து ரசித்தார். அவருடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமைக்கழக நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் அமர்ந்து பார்வையிட்டனர்.
காலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் 3.30 மணிக்கு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்து தலைமை உரை நிகழ்த்துகிறார்.
கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் வரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ், சஞ்சய்சிங் எம்.பி. ஆகிய இருவரும் பீகாரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் செல்கின்றனர். அவர்களுடன் திருச்சி சிவா எம்.பி.யும் செல்கிறார்.
இதனால் கலைஞர் கோட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று மாலை திறக்கப்படுகிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த விழாவில் நிதிஷ் குமார் திடீரென கலந்து கொள்ளாதது தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
- முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கிறார்.
திருவாரூர்:
மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
அதில் கருணாநிதியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டத்தில் கருணாநிதியின் பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 7,000 சதுர அடியில், 12 கோடி ரூபாய் மதிப்பில் கலைஞர் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் கலைஞர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார். பீகார் மாநில துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் முத்துவேலர் நூலகத்தை திறந்து வைக்கிறார். கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
- தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
- முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல் -மந்திரி தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. அதில் கருணாநிதியின் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.
தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கோட்டத்தில் கருணாநிதியின் பொதுவாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 10 மணி முதல் நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம், 11 மணிக்கு சாலமன் பாப்பையா பட்டிமன்றம் நடை பெறுகிறது.
மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது முத்தமிழறிஞர் கலைஞரின் பேச்சே-எழுத்தே என்ற தலைப்பில் நடைபெறும் பட்டிமன்றத்தில் புலவர் சண்முக வடிவேல், கவிதா ஜவகர், எஸ்.ராஜா, எம்.ராமலிங்கம், மாது, பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசுகிறார்கள்.
மதியம் 3.30 மணிக்கு பாட்டரங்கம் நடைபெறுகிறது. அதன் பிறகு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி சிலையை திறந்து வைத்து தலைமை உரை நிகழ்த்துகிறார்.
கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்-மந்திாி நிதிஷ் குமார் திறந்து வைத்து பேசுகிறார். முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல் -மந்திரி தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவே திருவாரூர் சென்று தங்கியிருக்கிறார்.
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் நாளை காலை ஐதராபாத் வழியாக திருச்சி விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து திருவாரூருக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார். மதியம் சுமார் 2.30 மணிக்கு சென்றடைந்ததும் விழா நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளன.
நாளை மாலை 4.30 மணிக்குள் விழா முடிந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருச்சி சென்று அதன் பிறகு விமானம் மூலம் பீகார் சென்றடைகிறார்.
இதையொட்டி விழா நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் நகரமும் விழாக் கோலம் பூண்டுள்ளது.
- பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
- பீகார் மாநிலத்தில் ரூ.6,680 கோடி மதிப்பிலான 5,061 சாலைகள் மற்றும் பாலங்கள் திட்டப்பணிகளை நிதிஷ் குமார் தொடங்கி வைத்தார்.
பாட்னா:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதில் 3-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.
அதே நேரம், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக பாட்னாவில் வருகிற 23-ந்தேதி எதிர்கட்சிகளின் பிரம்மாண்ட கூட்டத்தை கூட்ட அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் ரூ.6,680 கோடி மதிப்பிலான 5,061 சாலைகள் மற்றும் பாலங்கள் திட்டப்பணிகளை நிதிஷ் குமார் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் நிதிஷ்குமார் பேசியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும் என்று யாருக்கு தெரியும்? அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.
தேர்தல் முன்கூட்டியே (இந்த ஆண்டு) நடைபெறக்கூடும் என்பதால் பணிகளை விரைவாக செய்ய வேண்டும். திட்டங்களை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், பிரதம மந்திரியின் கிராம் சதக் யோஜனா திட்டத்தில் மத்திய அரசின் பங்கை 100 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைத்ததற்காக மத்திய அரசை நிதிஷ்குமார் தாக்கி பேசினார்.
பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று நிதிஷ் குமார் வலியுறுத்தி வந்த நிலையில், இந்த ஆண்டே தேர்தல் நடத்தப்படலாம் என அவர் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இதுவரை யார் ஜனாதிபதி வேட்பாளர், எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பதே தெளிவாகவில்லை.
- வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன்பு, கட்சிகள், கூட்டணி சார்பில் அவர்களுக்குள் வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படும்.
பாட்னா:
பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து முடிவு செய்ய இது சரியான நேரம் அல்ல. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியோ அல்லது எதிர்க்கட்சியோ இதுவரை நாட்டின் உயர் பதவிக்கான வேட்பாளரை தேர்ந்தெடுப்பது குறித்து எந்த விவாதத்தையும் நடத்தவில்லை. அப்படி இருக்கும்போது முன்கூட்டியே அதுகுறித்து முடிவு செய்ய முடியாது.
2012-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அளித்தோம். 2017-ல் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகித்தபோது அதன் வேட்பாளருக்கு ஆதரவு அளித்தோம். இதுவரை எங்கள் விருப்பப்படி ஆதரவு அளித்தோம். இந்த முறை இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதுவரை யார் ஜனாதிபதி வேட்பாளர், எத்தனை பேர் போட்டியிடுகிறார்கள் என்பதே தெளிவாகவில்லை.
வேட்பாளரை தேர்வு செய்வதற்கு முன்பு, கட்சிகள், கூட்டணி சார்பில் அவர்களுக்குள் வேட்பாளர் குறித்து ஆலோசிக்கப்படும். தற்போதுவரை அதுபோன்ற ஆலோசனையும் நடத்தப்படவில்லை. ஊடகங்களில் நான் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக வந்த தகவல்களிலும் உண்மையில்லை. எனக்கு போட்டியிடும் விருப்பம் சிறிதும் இல்லை" என்று அவர் கூறினார்.