search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bihar CM"

    • எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.
    • நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் முதல்வர் நிதிஷ் குமாருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    அப்போது பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று நம்புவதாக தெரிவித்தார்.மேலும் இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    நிதிஷ் குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகாரின் முதலமைச்சராக பதவி வகிக்கும் நிதிஷ் குமார் கடந்த பிப்ரவரியில், ராஷ்டீரிய ஜனதாதள கட்சி தலைமையிலான மகா கூட்டணியில் இருந்து விலகி, பின்னர் பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்து மீண்டும் முதலமைச்சரானார். கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை அவர் கூட்டணி மாறியுள்ளார் என்பது குறியப்படத்தக்கது.

    பீகார் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவதை கண்டித்து முதல் மந்திரி நிதிஷ்குமார் வீட்டின் முன்னர் காங்கிரஸ் இளைஞர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #YouthCongress #BiharCM #NitishKumar
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் சமீபகாலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் பெருகி வருகின்றன.

    காவல்துறையை தனது முக்கிய இலாகாவாக வைத்திருக்கும் முதல் மந்திரி நிதிஷ்குமார், அதிகரித்துவரும் இந்த குற்றங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

    இந்நிலையில், அம்மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள முதல் மந்திரி நிதிஷ்குமார் வீட்டின் முன்னர் இன்று காங்கிரஸ் இளைஞர் அணியை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். முதல் மந்திரியை கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் நிதிஷ்குமார் வீட்டை நோக்கி முன்னேறி சென்றனர்.



    போலீசார் லேசான தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் அவர்களை கட்டுப்படுத்தி தடுக்க முயன்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது. #YouthCongress #BiharCM #NitishKumar
    ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் டெல்லியில் இன்று பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்து மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேசினார். #GeneralElections2019 #NitishKumar #AmitShah
    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்–பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிக்கிறது.

    பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் தான் பெரிய கட்சி என்பதால் மக்களவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் அதிக  தொகுதிகளை எதிர்பார்க்கிறது. அதேபோல் பாஜகவும் கணிசமான தொகுதிகளை பெறுவதில் உறுதியாக உள்ளது.

    இந்த சூழ்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் இன்று டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது மக்களவைத் தேர்தல் கூட்டணி செயல்பாடுகள் குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.  #GeneralElections2019 #NitishKumar #AmitShah
    ×