என் மலர்
நீங்கள் தேடியது "Prashant Kishor"
- ஒரு அரசாங்கம் இவ்வளவு பெரிய அளவில் பீகாரிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்கும் பணத்தை விநியோகிப்பதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை.
- பெயரறியாத சில கட்சிகள் கூட லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன சூராஜ் கட்சி மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் போட்டியிட்டது.
ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்கு சதவீதம் வெறும் 2-3% மட்டுமே. அத்துடன் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையையும் இழந்தனர்.
இந்நிலையில் அங்கில தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய பிரசாந்த் கிஷோர், தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய அளவில் மோசடி செய்யப்பட்டதுபோல் தோன்றுகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தற்போது எந்தத் திடமான ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார்.
மாதக்கணக்கில் அவர் மேற்கொண்ட ஜன சூராஜ் யாத்திரையின்போது தனது குழு சேகரித்த கள ஆய்வுக் கருத்துகளுக்கும், உண்மையான வாக்குப் பதிவின் போக்குகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்த அவர், இதன் மூலம், தேர்தல் நடைமுறையில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்று சந்தேகம் தெரிவித்தார்.
சில வெல்ல முடியாத சக்திகள் தேர்தல் முடிவுகளைப் பாதித்ததாகவும், பெயரறியாத சில கட்சிகள் கூட லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளுதல் குறித்து சந்தேகம் இருந்தபோதும் தற்போது இவை ஆதாரம் இல்லாத வெறும் குற்றச்சாட்டுகளாகவே உள்ளன என்று தெரிவித்தார்.
மேலும் என்டிஏ அரசு சார்பில் தேர்தலுக்கு முன் ஒன்றரை கோடி பெண்கள் வங்கிக் கணக்குக்கு ரூ.10,000 விநியோகம் செய்யப்பட்டது குறித்து விமர்சித்த அவர், ஒரு அரசாங்கம் இவ்வளவு பெரிய அளவில் பீகாரிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்கும் பணத்தை விநியோகிப்பதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை என்று தெரிவித்தார்.
- இன்று பீகார் முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
- 4 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி பாஜக- ஜெடியு-வின் என்டிஏ கூட்டணி அபார வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ்-ஆஜேடி-யின் மகாபந்தன் கூட்டணி 35 இடங்களோடு மட்டுப்பட்டது. இன்று பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி நாளில் ஜன் சுராஜ் என்ற கட்சியை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கினார்.
பீகாரில் நிதிஷ் குமாரின் ஜெடியுவிக்கு தனது கட்சி தான் மாற்று என்று பிரசாரம் செய்த ஜன்சுராஜ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தெரிதலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 4 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட பின் என்டிஏ கூட்டணி பீகாரில் ஒன்றரை கோடி பெண்களுக்கு தொழில் தொடங்க நிதியுதவி என்ற பெயரில் ரூ.10,000 டெபாசிட் செய்ததே அதன் வெற்றிக்கு காரணம் என்றும் உலக வங்கி வழங்கிய ரூ.12,000 கோடி நிதியை தேர்தலில் வெல்ல என்டிஏ தவறாக பயன்படுத்தியதாகவும் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டினார்.
அதேநேரம் ஜன் சுராஜ் தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்பதாகவும், பீகாரில் வெற்றி பெறும் வரை ஓயமாட்டேன் எனவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
இந்த சூழலில் தோல்விக்கு பிராயச்சித்தமாக பிரசாந்த் கிஷோர் ஒருநாள் மெளன விரதம் மேற்கொண்டுள்ளார்.
பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மெளன விரதம் இருக்கும் அவருடன் ஜன் சுராஜ் லத் தலைவர் மனோஜ் பாரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
பிரசாந்த் கிஷோர் இன்று மெளன விரதம் இருக்கும் இதே இடத்தில்தான், நூற்றாண்டுகளுக்கு முன் மகாத்மா காந்தி மெளன விரதம் மேற்கொண்டார். முன்னதாக ஜன் சுராஜ் கட்சியை தொடங்கும் முன் இதே இடத்தில் இருந்து 3,500 கி.மீ நடைப்பயணத்தை பிரசாத் கிஷோர் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற என்னுடைய முடிவு தவறாக கருதலாம்.
- திருப்திகரமான முடிவுக்கு இன்னும அதிகப்படியாக பணியாற்ற வேண்டும்.
பீகார் சட்டசபை தேர்தலில் அரசியல் வியூகம் வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கட்சி ஜன் சுராஜ் போட்டியிட்டது. தனித்து போட்டியிட்ட அக்கட்சி 4 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளே பெற்றது.
தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் குமார் கட்சி 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது. அப்படி வெற்றி பெற்றால் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த முடிவடை தவறாக கருதலாம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:-
தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்ற என்னுடைய முடிவு தவறாக கருதலாம். திருப்திகரமான முடிவுக்கு இன்னும அதிகப்படியாக பணியாற்ற வேண்டும். எங்கள் கட்சி 4 சதவீதத்திற்கு கீழ் வாக்குகள் பெறும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. பீகாரில் வெற்றி பெறாமல் பின் வாங்க மாட்டேன். அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று எனக்குத் தெரியாது.
இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
ஒவ்வொரு தொகுதிகளுக்கும் 60 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதிஷ் குமார் அரசு வழங்காமல் இருந்திருந்தால், ஐக்கிய ஜனதா தளம் 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருக்காது.
- நாங்கள் நேர்மையான முயற்சியை மேற்கொண்டோம். ஆனால் முற்றிலும் அது தோல்வியடைந்தது.
- நான் பீகாரை விட்டு வெளியேறுவேன் என நினைப்பவர்களுக்கு, அது முற்றிலும் தவறு என்றார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது. வரும் 20-ம் தேதி நிதிஷ்குமார் முதல் மந்திரியாக பதவி ஏற்கிறார்.
இந்நிலையில், தேர்தலில் ஏற்படட் தோல்வி குறித்து ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாங்கள் நேர்மையான முயற்சியை மேற்கொண்டோம். ஆனால் அது முற்றிலும் தோல்வியடைந்தது என்பதை ஒப்புக்கொள்வதில் எந்த தவறும் இல்லை.
பீகாரின் அரசியலை மாற்றுவதில் நாங்கள் நிச்சயமாக சில பங்கைக் கொண்டிருந்தோம். பொதுமக்கள் எங்களை தேர்ந்தெடுக்க வில்லை என்பதை நாங்கள் விளக்கிய விதத்தில் ஏதோ தவறு இருந்திருக்க வேண்டும். பொதுமக்கள் எங்கள்மீது நம்பிக்கை காட்டவில்லை என்றால் அதற்கான பொறுப்பு முற்றிலும் என்னுடையது. நாங்கள் மீண்டும் அதே சக்தியுடன் நிற்போம்.
நான் பீகாரை விட்டு வெளியேறுவேன் என நினைப்பவர்களுக்கு, அது முற்றிலும் தவறு. ஐக்கிய ஜனதா தளம் 25 இடத்தை வென்றால் என்ற எனது கருத்து பற்றி மக்கள் நிறைய பேசுகிறார்கள் - நான் இன்னும் அதை ஆதரிக்கிறேன். நிதிஷ்குமார் 1.5 கோடி பெண்களுக்கு தான் உறுதியளித்த ரூ.2 லட்சத்தை மாற்றி, வாக்குகளை வாங்கி வெற்றி பெறவில்லை என்பதை நிரூபித்தால் நான் எந்த ஒரு குறையும் இல்லாமல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என தெரிவித்தார்.
- புதிதாக களம் கண்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளானது.
- பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக உள்ளது.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளை கைப்பற்றி பாஜகவின் -ஜேடியுவின் என்டிஏ கூட்டணி பெரு வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட இந்தியா கூட்டணி 35 இடங்கள் மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்தது.
இதற்கிடையே புதிதாக களம் கண்ட அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் எந்த இடத்திலும் வெற்றி பெறாமல் டெபாசிட் இழக்கும் நிலைக்கு ஆளானது.
இதற்கிடையே தேர்தலுக்கு முன் என்டிஏ அரசு சுமார் ஒன்றரை கோடி பீகார் பெண்களின் வங்கிக்கணக்கில் தொழில் தொடங்கும் நிதிக்கான முன்பணம் என்ற பெயரில் ரூ.10,000 டெபாசிட் செய்ததே அக்கூட்டணியில் வெற்றிக்கு காரணம் என ஜன் சுராஜ் குற்றம்சாட்டியது.
இந்நிலையில் இன்று, ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் செய்தி தொடர்பாளர் உதய் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பீகாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக உள்ளது. அரசு கஜானா காலியாக இருக்கிறது. பொதுப் பணத்தைப் பயன்படுத்தி, அவர்கள் மக்களின் ஓட்டுக்களை வாங்கினார்கள்.
ஜூன் மாதம் முதல் தேர்தல் அறிவிப்பு வரையில் மக்களின் வாக்குகளை வாங்குவதற்காக நிதிஷ் குமார் அரசால் ரூ.40 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பணம், உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டது.
தேர்தல் ஒழுக்க நெறிகள் அமலுக்கு வருவதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பாகத்தான் ரூ. 21,000 கோடியில் ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு, 1.25 கோடி பெண்களுக்கு ரூ. 10,000 தொகை விநியோகிக்கப்பட்டது. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பொது நலனுக்காக செலவிட இப்போது பணம் இல்லை" என்று கூறினார்.
- பீகாரின் கர்கஹார் சட்டசபைத் தொகுதியில் பிரசாந்த் கிஷோர் பெயர் இடம்பெற்றிருக்கிறது.
- மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் சட்டசபை தொகுதியான பபானிபூரிலும் இவரது பெயர் உள்ளது.
புதுடெல்லி:
இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக வாக்காளர் திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பீகாரைத் தொடர்ந்து 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறவுள்ளது.
சிறப்பு தீவிர திருத்தத்திற்கு முக்கியக் காரணமாக தேர்தல் ஆணையம் குறிப்பிடுவது, சில வாக்காளர்கள் ஒரு இடத்தில் பதிவு செய்து, பின்னர் தங்கள் வசிப்பிடத்தை மாற்றினால், தங்கள் பெயர்களை அந்த வசிப்பிடத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்காமல் வேறு இடத்தில் தங்களைப் பதிவு செய்துகொள்கிறார்கள். இது வாக்காளர் பட்டியலில் மீண்டும் மீண்டும் உள்ளீடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது என தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, ஜன் சுராஜ் கட்சியின் தலைவரான பிரசாந்த் கிஷோரின் பெயர் பீகார் மற்றும் மேற்கு வங்கம் என இரு மாநிலங்களின் வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் சட்டசபை தொகுதியான பபானிபூர் மற்றும் பீகாரின் கர்கஹார் சட்டசபைத் தொகுதியிலும் உள்ள வாக்காளர் பட்டியல்களில் பிரசாந்த் கிஷோர் பெயர் இடம்பெற்றிருக்கிறது.
இந்நிலையில், பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரு மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளது குறித்து விளக்கம் அளிக்கும்படி ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது. அதில், அடுத்த 3 நாட்களுக்குள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
- ஊழல்வாதிகளுக்கு வாக்களித்ததால் பீகாரில் ஊழல் இருப்பதாகச் சொல்லாதீர்கள்.
- எந்த சூழ்நிலையிலும், ஊழல் செய்தவர்களை நீக்க வேண்டும் என்றார்.
பாட்னா:
ஜன் சுராஜ் கட்சி நிறுவனரான பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் ரகோபூரிலிருந்து போட்டியிட வேண்டுமானால், ரகோபூரின் மக்கள் என்னுடன் நிற்க வேண்டும். இன்று நான் பார்த்ததையும் புரிந்து கொண்டதையும் நாளை கட்சிக் கூட்டத்தில் முன்வைப்பேன். ஓரிரு நாட்களில், யார் போட்டியிடுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.
பீகார் மக்கள் இதைப் பார்க்கிறார்கள். இது இருக்கை பகிர்வு அல்ல. இது ஊழலைப் பகிர்ந்து கொள்வது - யார் அதிகமாக கொள்ளை அடிப்பார்கள், யார் அமைச்சராக வருவார்கள், யார் அதிக ஒப்பந்தங்களைப் பெறுவார்கள், யார் கொள்ளையில் அதிக பங்கைப் பெறுவார்கள் - இது அதற்கான போராட்டம்.
இது நீண்ட காலத்திற்கு தொடரும். ஏனென்றால் நாம் கூட்டணி அமைத்தவுடன் பொதுமக்களை மீண்டும் முட்டாளாக்குவோம் என்பது அவர்களுக்குத் தெரியும்.
சிலர் சாதியின் பெயரால் தங்களை விற்றுவிடுவார்கள். சிலர் இந்துக்களாகவோ அல்லது முஸ்லிம்களாகவோ மாறுவார்கள். சிலர் ஐந்து கிலோ தானியத்திற்கு, சிலர் ஐநூறு ரூபாய்க்கு வாக்களிப்பார்கள். ஆனால் இது நடந்தால், உங்கள் மூலம் பீகார் மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்: அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த அமைப்பின் கீழ் வாழத் தயாராக இருங்கள். பிறகு யாரையும் குறை சொல்லாதீர்கள்.
ஊழல்வாதிகளுக்கு வாக்களித்ததால் பீகாரில் நிறைய ஊழல் இருப்பதாகச் சொல்லாதீர்கள். எனவே, எந்த சூழ்நிலையிலும், ஊழல் செய்தவர்களை நீக்க வேண்டும். நீங்கள் இல்லையென்றால், இந்த பரிதாபகரமான நிலையில் வாழத் தயாராக இருங்கள்.
நாம் அவரை நம்பினால், அவர்கள் (ராஷ்டிரிய ஜனதா தளம்) 18 ஆண்டுகளில் 4-5 லட்சம் வேலைகளை வழங்கினர். இப்போது அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 3 கோடி வேலைகளை வழங்குவதாகச் சொல்கிறார். இதன் பொருள் ஒன்றுதான்: நீங்கள் ஒரு முட்டாள் அல்லது நீங்கள் அனைவரையும் முட்டாளாக்க முயற்சிக்கிறீர்கள் என தெரிவித்தார்.
- ஜிஎஸ்டி சீர்திருத்தம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும்.
- பீகார் மாநில மக்கள் நாட்டின் மிக ஏழைகள் என்றார்.
பாட்னா:
பீகாரின் நாலந்தாவில் ஜன் சுராஜ் கட்சி நிறுவனரான பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடியின் உரைகளை நாங்கள் 15 ஆண்டுகளாகக் கேட்டு வருகிறோம்.
நாளை மாற்றம் வரப்போகிறது, நாளை இந்தியா உலகத் தலைவராக மாறும், நாளை நமது பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்பதை நாங்கள் கேட்டு வருகிறோம். இதுவரை இதைத்தான் நாங்கள் கேட்டு வருகிறோம்.
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் பீகார் மக்கள் கணிசமாக பயனடைவார்கள் என்று அர்த்தமல்ல.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே பயனளிக்கும். பீகார் மக்கள் நாட்டின் மிக ஏழைகள்.
நீங்கள் கார்கள் மீதான வரியைக் குறைத்தீர்கள். பீகாரில் ஒவ்வொரு 100 பேரில் 2 பேர் கார்களை வைத்திருக்கிறார்கள்.
எனவே, வாகனங்களுக்கான ஜிஎஸ்டியைக் குறைத்தால், பீகாரில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு அது பயனளிக்காது என தெரிவித்தார்.
- பிரதமர் மோடி பீகார் வரும்போது ராகுல் காந்தியை திட்டுவார்.
- காங்கிரசின் ராகுல் காந்தி பீகாரில் பிரதமர் மோடியை திட்டுவார்.
பாட்னா:
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும்
தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி பீகார் வரும்போது, ராகுல் காந்தியை திட்டுவார். ராகுல் காந்தி பிரதமர் மோடியை திட்டுவார்.
பீகாரில் இருந்து இடம்பெயர்வு எப்படி நிறுத்தப்படும் என்பது பற்றி இரு தலைவர்களும் பேசவில்லை.
பீகார் மக்கள் வெள்ளத்தில் இருந்து எப்படி நிவாரணம் பெறுவார்கள் என்பது பற்றி இருவருமே பேசவில்லை.
பீகாரில் தொழிற்சாலைகள் இல்லாததற்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும் என தெரிவித்தார்.
- வாக்காளர் வாக்குரிமையை உறுதிசெய்ய வலியுறுத்தி ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
- இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்க ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பீகார் செல்கிறார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பீகாரில் வாக்காளர் வாக்குரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
ராகுல் காந்தியின் யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பீகார் செல்கிறார்.
இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனரும், பிரபல தேர்தல் உத்தி வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஒருவேளை பீகார் வருகிறார் என்றால் அதனால் என்ன மாற்றம் இங்கு நிகழ்ந்துவிட போகிறது? அவரின் வருகையால் பீகார் முன்னேறிவிடுமா?
பீகாரின் பிரச்சனைகளுக்கு பீகாரிலேயே தான் தீர்வு காணப்பட வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இங்கு வருவதாக இருந்தாலும் சரி அல்லது கர்நாடகா முதல்வர் வருவதாக இருந்தாலும் சரி, அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
பீகாருக்கு வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கவேண்டும் என்ற ஒரு யாத்திரை தான் தற்போது வேண்டும். பிரயோஜனம் இல்லாத மற்ற யாத்திரையால் என்ன ஆதாயம் கிடைத்துவிடப் போகிறது?
காங்கிரசை குற்றம் சுமத்துகிறார் பிரதமர் மோடி. காங்கிரஸ் பிரதமர் மோடியை குற்றம் சுமத்துகிறது. ஆனால் பீகார் இளைஞர்கள் கேட்பது எல்லாம், இங்கு வேலைவாய்ப்புகள் எப்போது கிடைக்கும், புலம்பெயர்ந்து செல்வோரை எப்போது தடுப்பீர்கள் என்பதுதான் என தெரிவித்தார்.
- மக்களவையில் யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025 உள்பட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
- பிரதமர், முதல் மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை எதிர்க்கட்சிகள் கிழித்தெறிந்தனர்.
பாட்னா:
பாராளுமன்ற மக்களவையில் யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025 உள்பட 3 மசோதாக்களை உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அறிமுகம் செய்தார். இந்த மசோதாக்கள் பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் அமித்ஷா.
அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த மசோதாக்களின் நகல்களைக் கிழித்து அமித்ஷாவை நோக்கி எறிந்தனர். தொடர் அமளியால் மக்களவை அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பீகாரில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதை உருவாக்கியவர்களும், நாட்டின் நிறுவனர்களும், அதிகாரத்தில் இருப்பவர்கள் ஊழல்வாதிகளாகவும், குற்றவாளிகளாகவும் மாறி சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறைத்தண்டனைக்குப் பிறகும் அவர்கள் தங்கள் பதவிகளை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
ஒரு தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் அவர்களால் சிறையில் இருந்து அரசாங்கத்தை தொடர்ந்து நடத்த முடியாது என்பதால் இந்த மசோதா நல்லதென்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
- பீகார் மாநிலத்தின் ஆராவில் ரோடு ஷோ நடத்தப்பட்டது.
- வாகனம் மோதியதில் பிரசாந்த் கிஷோரின் விலா எலும்பில் லேசான காயம் ஏற்பட்டது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பிரசாந்த் கிஷோர் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், ஆரா மாவட்டத்தில் இன்று ரோடு ஷோ நடந்தது. அதில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றார். அவர் ஒரு கூட்டத்தின் வழியாக நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக ஒரு வாகனம் மோதியதில் அவருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, பிரசாந்த் கிஷோர் மருத்துவ சிகிச்சைக்காக பாட்னா சென்றார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






