என் மலர்
நீங்கள் தேடியது "Jan Suraj Party"
- ஒரு அரசாங்கம் இவ்வளவு பெரிய அளவில் பீகாரிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்கும் பணத்தை விநியோகிப்பதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை.
- பெயரறியாத சில கட்சிகள் கூட லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன சூராஜ் கட்சி மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் போட்டியிட்டது.
ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்கு சதவீதம் வெறும் 2-3% மட்டுமே. அத்துடன் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்கள் டெபாசிட் தொகையையும் இழந்தனர்.
இந்நிலையில் அங்கில தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய பிரசாந்த் கிஷோர், தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய அளவில் மோசடி செய்யப்பட்டதுபோல் தோன்றுகிறது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தற்போது எந்தத் திடமான ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார்.
மாதக்கணக்கில் அவர் மேற்கொண்ட ஜன சூராஜ் யாத்திரையின்போது தனது குழு சேகரித்த கள ஆய்வுக் கருத்துகளுக்கும், உண்மையான வாக்குப் பதிவின் போக்குகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்த அவர், இதன் மூலம், தேர்தல் நடைமுறையில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்று சந்தேகம் தெரிவித்தார்.
சில வெல்ல முடியாத சக்திகள் தேர்தல் முடிவுகளைப் பாதித்ததாகவும், பெயரறியாத சில கட்சிகள் கூட லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாளுதல் குறித்து சந்தேகம் இருந்தபோதும் தற்போது இவை ஆதாரம் இல்லாத வெறும் குற்றச்சாட்டுகளாகவே உள்ளன என்று தெரிவித்தார்.
மேலும் என்டிஏ அரசு சார்பில் தேர்தலுக்கு முன் ஒன்றரை கோடி பெண்கள் வங்கிக் கணக்குக்கு ரூ.10,000 விநியோகம் செய்யப்பட்டது குறித்து விமர்சித்த அவர், ஒரு அரசாங்கம் இவ்வளவு பெரிய அளவில் பீகாரிலோ அல்லது இந்தியாவில் வேறு எங்கும் பணத்தை விநியோகிப்பதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை என்று தெரிவித்தார்.
- இன்று பீகார் முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
- 4 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களை கைப்பற்றி பாஜக- ஜெடியு-வின் என்டிஏ கூட்டணி அபார வெற்றி பெற்றது. எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ்-ஆஜேடி-யின் மகாபந்தன் கூட்டணி 35 இடங்களோடு மட்டுப்பட்டது. இன்று பீகார் முதல்வராக 10 வது முறையாக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார்.
இதற்கிடையே கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி நாளில் ஜன் சுராஜ் என்ற கட்சியை பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தொடங்கினார்.
பீகாரில் நிதிஷ் குமாரின் ஜெடியுவிக்கு தனது கட்சி தான் மாற்று என்று பிரசாரம் செய்த ஜன்சுராஜ் கட்சி நடந்து முடிந்த சட்டமன்றத் தெரிதலில் 238 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 4 தொகுதிகளைத் தவிர, மற்ற இடங்களில் டெபாசிட்டை இழந்து படுதோல்வியைச் சந்தித்தது.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட பின் என்டிஏ கூட்டணி பீகாரில் ஒன்றரை கோடி பெண்களுக்கு தொழில் தொடங்க நிதியுதவி என்ற பெயரில் ரூ.10,000 டெபாசிட் செய்ததே அதன் வெற்றிக்கு காரணம் என்றும் உலக வங்கி வழங்கிய ரூ.12,000 கோடி நிதியை தேர்தலில் வெல்ல என்டிஏ தவறாக பயன்படுத்தியதாகவும் பிரசாந்த் கிஷோர் குற்றம்சாட்டினார்.
அதேநேரம் ஜன் சுராஜ் தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பேற்பதாகவும், பீகாரில் வெற்றி பெறும் வரை ஓயமாட்டேன் எனவும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
இந்த சூழலில் தோல்விக்கு பிராயச்சித்தமாக பிரசாந்த் கிஷோர் ஒருநாள் மெளன விரதம் மேற்கொண்டுள்ளார்.
பீகாரின் மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பிதிஹர்வா காந்தி ஆசிரமத்தில் மெளன விரதம் இருக்கும் அவருடன் ஜன் சுராஜ் லத் தலைவர் மனோஜ் பாரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
பிரசாந்த் கிஷோர் இன்று மெளன விரதம் இருக்கும் இதே இடத்தில்தான், நூற்றாண்டுகளுக்கு முன் மகாத்மா காந்தி மெளன விரதம் மேற்கொண்டார். முன்னதாக ஜன் சுராஜ் கட்சியை தொடங்கும் முன் இதே இடத்தில் இருந்து 3,500 கி.மீ நடைப்பயணத்தை பிரசாத் கிஷோர் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.
- நாளை வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பீகார் மாநிலத்தில் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. தலா 101 தொகுதிகள், லோக் ஜனசக்தி - ராம் விலாஸ் - 29, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 6, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 6 தொகுதிகளில் போட்டியிட்டன.
இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 143, காங்கிரஸ் 61, இந்திய கம்யூனிஸ்ட் - எம்எல் 20, விஐபி 15, இந்திய கம்யூனிஸ்ட் 9, மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.
தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன.
121 தொகுதிகளுக்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் 65 சதவீத வாக்குகளும், 122 தொகுதிகளுக்கு நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 68.8 சதவீத வாக்குகளும் பதிவாகி வரலாற்று சாதனை படைத்தது. இந்தத் தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்கும் என கூறப்படுகிறது. நாளை வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றுவிட்டால் அரசியலை விட்டே விலகுவதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகத்தின் நேர்காணலில் கருத்துக்கணிப்பு முடிவுகள் பற்றி பிரசாந்த் கிஷோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், `தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 25 இடங்களுக்கு மேல் வென்றிருந்தால் என்னிடம் வந்து கூறுங்கள். நான் உறுதியாகச் சொல்கிறேன் 25 இடங்களுக்கு மேல் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெறாது.
இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இதுவொரு சாவல், இந்தத் தேர்தலோடு ஐக்கிய ஜனதா தளம் முடிந்துவிட்டது என்றுதான் பார்க்கிறேன்" என்று தெரிவித்தார்.
- ஜன் சுராஜ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் 13 சதவீதம் முஸ்லிம் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- 17 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முடிவுகள் நவம்பர் 18 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
ஆளும் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த வருடம் காந்தி ஜெயந்தி தினத்தில் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கி இருந்தார்.
ஜன் சுராஜ் கட்சியும் வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்து களம் காண உள்ளது.
இந்நிலையில் பீகார் தேர்தலுக்கான 51 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜன் சுராஜ் கட்சி வெளியிட்டுள்ளது.
பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட இந்த பட்டியலில் கணிதவியலாளர், மருத்துவர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இடமம்பெற்றுள்ளது கவனம் ஈர்த்து வருகிறது.
ஜன் சுராஜ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் 13 சதவீதம் முஸ்லிம் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 17 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
வேட்பாளர்களில் 16% முஸ்லிம்கள் மற்றும் 17% மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வேட்பாளர்களில், பாடப் புத்தகங்கள் தயாரிக்கும், பாட்னா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான கணிதவியலாளர் கே.சி. சின்ஹா (குமஹ்ரார் தொகுதி) மற்றும் பாட்னா உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஒய்.பி. கிரி (மஞ்ஜி தொகுதி) ஆகியோர் அடங்குவர்.
முசாபர்பூர் தொகுதியில், கிராமப்புற சுகாதார விழிப்புணர்வில் பணியாற்றிய மருத்துவர் அமித் குமார் தாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆர்கே மிஸ்ரா, போஜ்புரி நடிகர் ரிதேஷ் பாண்டே உள்ளிட்டோரும் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
முதல் பட்டியலில் பிரசாந்த் கிஷோரின் பெயர் இடம்பெறவில்லை. அவரது சொந்தத் தொகுதியான கார்கஹரில் ரித்தேஷ் ரஞ்சன் என்பவர் ஜன் சுராஜ் போட்டியிட உள்ளார்.
எனவே லாலு பிரசாத் உடைய ஆர்ஜேடி கட்சியின் கோட்டையான ராகோபூரில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
- மக்களவையில் யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025 உள்பட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
- பிரதமர், முதல் மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை எதிர்க்கட்சிகள் கிழித்தெறிந்தனர்.
பாட்னா:
பாராளுமன்ற மக்களவையில் யூனியன் பிரதேசங்களுக்கான (திருத்த) மசோதா 2025 உள்பட 3 மசோதாக்களை உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அறிமுகம் செய்தார். இந்த மசோதாக்கள் பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் அமித்ஷா.
அவையில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த மசோதாக்களின் நகல்களைக் கிழித்து அமித்ஷாவை நோக்கி எறிந்தனர். தொடர் அமளியால் மக்களவை அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பீகாரில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அதை உருவாக்கியவர்களும், நாட்டின் நிறுவனர்களும், அதிகாரத்தில் இருப்பவர்கள் ஊழல்வாதிகளாகவும், குற்றவாளிகளாகவும் மாறி சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதால் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறைத்தண்டனைக்குப் பிறகும் அவர்கள் தங்கள் பதவிகளை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
ஒரு தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டால் அவர்களால் சிறையில் இருந்து அரசாங்கத்தை தொடர்ந்து நடத்த முடியாது என்பதால் இந்த மசோதா நல்லதென்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
- பீகார் மாநிலத்தின் ஆராவில் ரோடு ஷோ நடத்தப்பட்டது.
- வாகனம் மோதியதில் பிரசாந்த் கிஷோரின் விலா எலும்பில் லேசான காயம் ஏற்பட்டது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பிரசாந்த் கிஷோர் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், ஆரா மாவட்டத்தில் இன்று ரோடு ஷோ நடந்தது. அதில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றார். அவர் ஒரு கூட்டத்தின் வழியாக நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக ஒரு வாகனம் மோதியதில் அவருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, பிரசாந்த் கிஷோர் மருத்துவ சிகிச்சைக்காக பாட்னா சென்றார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- நான் 10 முதல் மந்திரிகளை உருவாக்க முயற்சி செய்துள்ளேன்.
- என் கனவை நிறைவேற்றுவதற்காக இந்த கடின உழைப்பைச் செய்கிறேன்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அம்மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. கூட்டணியும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணியும் தீவிரமாக உள்ளன. இதனால் தேர்தல் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பீகாரில் மக்களைச் சந்தித்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:
சிலர் நான் முதல் மந்திரியாக வேண்டும் என சொல்கிறார்கள். ஆனால் நீங்கள் என்னை அறிய மாட்டீர்கள். நான் 10 முதல் மந்திரிகளை உருவாக்க முயற்சித்தேன். இன்று நான் முதல் மந்திரியாக வேண்டும் என்பதற்காக அல்ல, என் கனவை நிறைவேற்றுவதற்காக இந்த கடின உழைப்பைச் செய்கிறேன்.
எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வேலைக்காக பீகாருக்கு வரும்போது பீகார் வளர்ச்சி அடைந்ததாக நான் கருதுவேன் என தெரிவித்தார்.
- நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை என தெரிவித்திருந்தார்.
- இனிமேல் எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என சீட் எண்ணிக்கை குறித்து பேசமாட்டேன் என்றார்.
பாட்னா:
நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கடைசி கட்ட தேர்தலுக்கு பிறகு கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன அதில் பா.ஜ.க. மீண்டும் 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என கூறப்பட்டது.
பிரபல அரசியல் ஆலோசகரும், வியூகங்கள் வகுத்துக் கொடுப்பவருமான பிரசாந்த் கிஷோர் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 300 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். பாராளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் காங்கிரசால் வெற்றி பெறமுடியாது. காங்கிரசால் 3 இலக்க எண்களில் வெற்றி பெறமுடியாது. நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எதுவும் கூறவில்லை என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 290-க்கும் மேற்பட்ட இடங்களில் பெற்றி வெற்றது. இதில் பா.ஜ.க. மட்டும் 240 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டி பெறமுடியாமல் போனது. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றது.
இதுதொடர்பாக கிஷோர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது. பா.ஜ.க.வுக்கு 300 சீட்கள் வரை கிடைக்கும் என நாங்கள் கணித்தோம். ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் எண்ணிக்கை குறித்து பேசியிருக்கக் கூடாது. இனிமேல் எந்தக் கட்சி எத்தனை இடங்களைப் பெறும் என சீட் எண்ணிக்கை குறித்து பேச மாட்டேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், வரும் அக்டோபர் 2-ம் தேதி தனது ஜன் சுராஜ் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலில் களமிறங்க பிரசாந்த் கிஷோர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
- 2014 மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வியூகம் வகுத்துக்கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்
- பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வமும் குஜராத் பக்கம் திரும்பியது.
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது சொந்த மாநிலமான பீகாரில் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி அன்று ஜென் சுராஜ் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். பீகாரில் ஆளும் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மீது கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வரும் பிரசாந்த் கிஷோர் பிரதமர் மோடி மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

2014 மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வியூகம் அமைத்து குஜராத் முதல்வராக இருந்த மோடி இந்தியப் பிரதமர் ஆவதில் முக்கிய பங்காற்றிய பிரசாந்த் கிஷோர் தற்போது மோடி குறித்து கூறியுள்ள கருத்துக்கள் கவனம் பெற்று வருகிறது.
கட்சி தொடக்க விழாவின்போது அவர் பேசியதாவது, குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடி நிறைய செய்திருக்கிறார் என்ற எண்ணத்தில்தான் அவரது பேச்சுகளைக் கேட்டு என்னைப் போன்றவர்கள் பாஜகவுக்கு வாக்களித்தோம்.

ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வமும் குஜராத் பக்கம் திரும்பியது. பீகார் மக்கள் வேலை வேறு மாநிலங்களுக்குப் படையெடுத்துச் செல்கின்றனர். குஜராத்தின் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களித்தால் பீகார் மக்கள் எப்படி வளர்ச்சி பெற முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- இந்தியாவில் 10 மாநிலங்களில் எனது ஆலோசனைகளை கேட்ட கட்சிகள் ஆட்சியில் இருக்கிறது.
- எனக்கு நிதி என்பது ஒரு பிரச்சினை இல்லை.
பாட்னா:
அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் வெற்றி பெறுவதற்கான யுக்திகளை தாங்களே வகுத்துக்கொண்டு இருந்தன. தற்போது தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் வந்துவிட்டன. அதுபோன்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருபவர்தான் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர்.
பல்வேறு மாநிலங்களில் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்றியுள்ளார். அந்த கட்சிகளையும் வெற்றி பெறவைத்துள்ளார். அதற்காக அவர் பெறும் கட்டணம் குறித்து பல்வேறு தகவல்கள் கசிந்து வந்தன.
இந்தநிலையில் பிரசாந்த் கிஷோர் தனது கட்டணம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
ஆரம்பத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் பயணித்து வந்த பிரசாந்த் கிஷோர் பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகினார். தற்போது ஜன சுராஜ் (மக்கள் நல்லாட்சி) என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
பீகாரில் வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர், தராரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். பெலகஞ்ச் தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள உங்களுக்கு (பிரசாந்த் கிஷோர்) நிதி எப்படி கிடைக்கிறது என்று நினைக்கிறீர்களா. நான் தேர்தல் வியூக வகுப்பாளர். அரசியல் கட்சிக்கு தேர்தல் ஆலோசனைகளை வகுத்து கொடுத்தால் அந்த கட்சியிடம் இருந்து கட்டணமாக ரூ.100 கோடிக்கும் அதிகமாக பெற்று இருக்கிறேன்.
இந்தியாவில் 10 மாநிலங்களில் எனது ஆலோசனைகளை கேட்ட கட்சிகள் ஆட்சியில் இருக்கிறது. எனவே எனக்கு நிதி என்பது ஒரு பிரச்சினை இல்லை. இந்த இடைத்தேர்தலில் இரண்டு பெரிய கட்சிகளுக்கு எதிராக (ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம்) வேட்பாளர்களை நிறுத்தியுள்ளேன். அவர்களை வெற்றிபெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாந்த் கிஷோர் தனது கட்டணம் குறித்து வெளிப்படையாக தெரிவித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- தேர்வை ரத்துசெய்து புதிய தேர்வு நடத்தவேண்டும் என கோரிக்கை எழுந்தது.
- ஆனால் இந்தக் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை.
பாட்னா:
பீகார் மாநிலத்தின் அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசுப் பணிகளுக்கு ஆட்களை தேர்வுசெய்ய டிசம்பர் 13-ம் தேதி தேர்வு நடைபெற்றது.
இந்தத் தேர்வில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை, வினாத்தாள் கசிந்தது என தேர்வர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள்மீது போலீசார் தடியடி நடத்தினர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மாநில அரசு மறுத்தது. இந்தத் தேர்வை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்தவேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கடந்த 3 நாளுக்கு முன் முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான அரசுக்கு பிரசாந்த் கிஷோர் 48 மணி நேரம் கெடு விதித்திருந்தார். ஆனால் அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை.
இந்நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரசாந்த் கிஷோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், டிசம்பர் 13-ல் நடந்த தேர்வை ரத்துசெய்து புதிதாக தேர்வு நடத்தவேண்டும் என்பதே எங்களது ஆரம்ப கட்ட கோரிக்கை. தேர்வு மூலம் நிரப்பவேண்டிய தேர்வை விற்பனை செய்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். அத்தகைய ஊழல் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.






