என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகாரில் ரோடு ஷோ சென்றபோது விபத்து: பிரசாந்த் கிஷோர் காயம்
    X

    பீகாரில் ரோடு ஷோ சென்றபோது விபத்து: பிரசாந்த் கிஷோர் காயம்

    • பீகார் மாநிலத்தின் ஆராவில் ரோடு ஷோ நடத்தப்பட்டது.
    • வாகனம் மோதியதில் பிரசாந்த் கிஷோரின் விலா எலும்பில் லேசான காயம் ஏற்பட்டது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என தேர்தல் வியூக நிபுணரும், ஜன் சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோர் முனைப்புடன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

    சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பிரசாந்த் கிஷோர் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்நிலையில், ஆரா மாவட்டத்தில் இன்று ரோடு ஷோ நடந்தது. அதில் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றார். அவர் ஒரு கூட்டத்தின் வழியாக நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக ஒரு வாகனம் மோதியதில் அவருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து, பிரசாந்த் கிஷோர் மருத்துவ சிகிச்சைக்காக பாட்னா சென்றார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    Next Story
    ×