என் மலர்
நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"
- அமெரிக்காவிற்கு இந்தியாவை விட முக்கியமான கூட்டாளி நாடு வேறு ஏதுமில்லை
- அடுத்த ஓரிரு ஆண்டுகளில் டிரம்ப் மீண்டும் இந்தியாவிற்கு வருவார்.
இந்தியாவிற்கான புதிய அமெரிக்கத் தூதராக செர்ஜியோ கோர் அண்மையில் நியமிக்கப்பட்டார். இன்று, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அவர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்புக்குப் பின் பேசிய கோர், "அதிபர் டிரம்ப் உடன் நான் உலகம் முழுவதும் பயணம் செய்திருக்கிறேன். பிரதமர் மோடி மீது அவர் வைத்திருக்கும் நட்பு மிகவும் உண்மையானது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.
இரு நாடுகளுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த நட்பு மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கு இந்தியாவை விட முக்கியமான கூட்டாளி நாடு வேறு ஏதுமில்லை என்று குறிப்பிட்ட அவர், வர்த்தகம், பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சமீபத்தில் டிரம்ப் உடன் உணவு அருந்தியபோது, அவர் தனது முந்தைய இந்தியப் பயணம் குறித்தும், பிரதமர் மோடியுடனான தனது சிறந்த உறவு குறித்தும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்ததாகக் கோர் கூறினார்.
அடுத்த ஓரிரு ஆண்டுகளில் டிரம்ப் மீண்டும் இந்தியாவிற்கு வருவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய மீது 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
- பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
- வாரணாசி மாவட்ட கல்வி ஆய்வாளரும் தமிழ் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
வாரணாசி என அழைக்கப்படும் காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக கலாசார, நாகரிக, கல்வி உறவு இருந்து வருகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் மோடி உத்தரவின்பேரில், காசி தமிழ் சங்கமம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
அதன் காரணமாக வாரணாசியில் தமிழ் கற்கும் ஆர்வம், இந்தி மாணவர்களிடம் எழுந்திருப்பதாக கடந்த மாதம் 28-ந் தேதி நடந்த 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதமாக கூறினார். வாரணாசியில் உள்ள அரசு குயின் கல்லூரி மாணவர் பாயல் படேல், குறுகிய காலத்தில் தமிழ் கற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து, பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அரசு குயின் கல்லூரி, தினந்தோறும் மாலைநேர தமிழ் வகுப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் சுமித் குமார் கூறியதாவது:-
தமிழ்நாட்டை சேர்ந்த சந்தியா குமார் சாய் இதற்கு முன்பு மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். அவரிடம் பேசினோம். அவரும் ஆன்லைன் வகுப்பு எடுக்க சம்மதித்துள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
வாரணாசி மாவட்ட கல்வி ஆய்வாளரும் தமிழ் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளார். எனவே, மாலை நேர தமிழ் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை அறிந்து, அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளியில் முறையான தமிழ் பாட வகுப்பு அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக பள்ளி முதல்வர் பிரியங்கா திவாரி தெரிவித்தார்.
இதுதவிர, கலாசாரத்தை பரிமாறிக் கொள்ளும்வகையில், இந்தி கற்றுக்கொடுப்பதற்காக வாரணாசியில் இருந்து 50 ஆசிரியர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
- ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் இன்று அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தார்.
- ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் பயணம் இதுவாகும்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜெர்மனிஅதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் ஜனவரி 12 மற்றும் 13-ம் தேதிகளில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இது ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் அதிகாரப்பூர்வ பயணமாகும்.
12-ம் தேதி அகமதாபாத்தில் பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, திறன் மற்றும் இயக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு, அறிவியல், புதுமை மற்றும் ஆராய்ச்சி, பசுமை, நிலையான மேம்பாடு, மக்களிடையேயான உறவுகள் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதிப்பார்கள் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வந்தடைந்தார்.
ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- கோவிலை அழித்துவிட்டதால் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்தார்கள்.
- 1,000 ஆண்டுக்குப் பிறகும் சோமநாதரின் கொடி இன்றும் உயரமாகப் பறக்கிறது என்றார்.
அகமதாபாத்:
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். பிரதமர் மோடி நேற்று பிரசித்தி பெற்ற சோமநாத் கோவிலுக்குச் சென்றார்.
இந்தக் கோவில் முதல் முறையாக தாக்கப்பட்டு 1000 ஆண்டுக்குப் பிறகும் நிலைத்து நிற்பதை கொண்டாடும் வகையில் சோமநாத் சுயமரியாதை திருவிழா நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழாவின் சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
கோவில் தாக்கப்பட்டபோது அதை எதிர்த்து உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவு கூரும் வகையில் சவுரியா யாத்திரையிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் 108 குதிரைகள் ஊர்வலத்தை மேளம் அடித்து மோடி தொடங்கி வைத்தார். அதன்பின், பிரதமர் மோடி பேசியதாவது:
சோமநாதரின் வரலாறுதான் இந்தியாவின் வரலாறு. இந்த கோயிலைப் போலவே, அந்நியப் படையெடுப்பாளர்கள் இந்தியாவை பலமுறை அழிக்க முயன்றனர்.
கோவிலை அழித்துவிட்டதால் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்தார்கள். ஆனால் 1,000 ஆண்டுக்குப் பிறகும் சோமநாதரின் கொடி இன்றும் உயரமாகப் பறக்கிறது.
வெறுப்பு, அட்டூழியம் மற்றும் பயங்கரவாதத்தின் உண்மையான வரலாறு நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது.
வெறும் பொருளுக்காக நடந்த தாக்குதல் என்றால் ஒருமுறை நடத்தியிருந்தால் போதும். ஆனால் சோமநாத் கோவில் மீது வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தத் தாக்குதல் கோவிலைக் கொள்ளையடிக்கும் முயற்சி என நமக்கு கற்பிக்கப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு, சர்தார் வல்லபாய் படேல் சோமநாதர் கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றபோது அவருக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
சோமநாதர் கோயிலை மீண்டும் கட்டியெழுப்புவதைத் தடுக்க முயன்ற அந்த சக்திகள் இன்றும் நம்மிடம் உள்ளன. அத்தகைய சக்திகளைத் தோற்கடிக்க நாம் விழிப்புடனும், ஒற்றுமையுடனும், வலிமையுடனும் இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
- இலங்கை தமிழ்ச் சமூகத்திற்கு பாதிப்புகள் ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்
- இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தேசத்தை அங்கீகரிக்க வலியுறுத்தல்
இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்று கோரி, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் நலன் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஆழ்ந்த கவலைக்குரிய ஒரு விஷயம் குறித்து மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் உணர்வுப் பூர்வமான பிணைப்புகளின் காரணமாக, இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளையும், எண்ணங்களையும் நிலைநிறுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது என்றும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மரியாதைக்குரிய தமிழ்த் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருவது தனது கடமை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை எடுத்துரைக்கும் விரிவான கோரிக்கைகளை தாம் பெற்றுள்ளதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் 77 ஆண்டுகளுக்கும் மேலாக, திட்டமிட்ட பாகுபாடு, வன்முறை மற்றும் அவர்களின் உண்மையான உரிமைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சகித்து வந்துள்ளனர் என்றும், பலர், இதனைதங்கள் சமூகத்திற்கு எதிரான இனப்படுகொலை என்று விவரிக்கும் ஒரு நிலைக்கு வழிவகுத்துள்ளது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வருத்தத்தோடு சுட்டிக்காட்டியுள்ளார். சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் அரசியலமைப்புகள் (1947, 1972, மற்றும் 1978 ஆம் ஆண்டுகளின் அரசியலமைப்புகள்) அனைத்தும் ஒரு ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் வேரூன்றியிருந்தன என்றும், இது திட்டமிட்ட இன வன்முறை, கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறை மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு வழிவகுத்தது என்றும் தெரிவித்துள்ள அவர், உள்நாட்டுப் போர் முடிவடைந்த கடந்த 16 ஆண்டுகளாக, இந்த ஒற்றையாட்சிக் கட்டமைப்பு, பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் மக்கள்தொகை மாற்றங்கள், நில அபகரிப்புகள் மற்றும் தமிழ் அடையாளத்தின் சிதைவு ஆகியவற்றிற்கு தொடர்ந்து வழிவகுத்து வருவதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான, பாராளுமன்றத்தில் முழுப்பெரும்பான்மையைக் கொண்ட தற்போதைய இலங்கை அரசாங்கம், இனப்பிரச்சினைகளைத் தீர்க்கும் போர்வையில் ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகளைத் துரிதப்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. .க.ஸ்டாலின் அவர்கள், இந்த முன்மொழியப்பட்ட கட்டமைப்பு மீண்டும் ஒரு ஒற்றையாட்சி "எக்கியராஜ்ய" (ஒற்றையாட்சி அரசு) மாதிரியை வலுப்படுத்துவதாகத் தெரிகிறது என்றும், இது அரசியல் சுயாட்சிக்கான தமிழர்களின் நியாயமான எண்ணங்களைப் புறக்கணித்து, அதன்மூலம் அவர்களை மேலும் ஓரங்கட்டி, அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், இந்திய அரசால் பூட்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட 1985 அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட திம்பு கோட்பாடுகளில் (Thimpu Principles) குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளையே, தற்போது பெறப்பட்டுள்ள கோரிக்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த வகையில்,
* இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தேசத்தை அங்கீகரித்தல் (தமிழர் தேசியம்);
* வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்வது(தமிழர் தாயகம்);
* தமிழ் தேசத்திற்கான தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதல் (தமிழர் தன்னாட்சி உரிமை); மற்றும்
* மலையகத் தமிழர்களுக்கான முழு குடியுரிமை உரிமைகள் உட்பட, அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும், பாகுபாடின்மையையும் உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை நிறுவுதல்;
போன்றவற்றையே இந்தக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இந்தக் கூறுகளை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும்எந்தவொரு புதிய அரசியலமைப்பும், அநீதி மற்றும் நிலையற்ற தன்மை தொடர வழிவகுக்கும் என்றும், இது மீண்டும் மோதல்களுக்கும், மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் உட்பட, வரலாற்று ரீதியாக இலங்கையுடன் கொண்டுள்ள நட்புறவின் காரணமாக இலங்கையில் அமைதி மற்றும் நீதிக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் அவல நிலை, தமிழ்நாட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், இலட்சக்கணக்கான மக்கள், அங்குள்ளவர்களைத் தங்கள் உறவினர்களாகக் கருதுகின்றனர் என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையில் ஏற்படும் எந்தவொரு சரிவும் இருதரப்பு உறவுகளுக்கும், இரு நாடுகளுக்கிடையேயான உறுதிப்பாட்டிற்கும் பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், தமிழ் மக்களின் குறைகளை உண்மையாக நிவர்த்தி செய்யும் ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசாங்கம் இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், குறிப்பாக, மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யும்; இனச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும்; மற்றும் பன்முகத்தன்மை, சமத்துவக் கோட்பாடுகளை நிலைநிறுத்தும் கூட்டாட்சி முறையை உருவாக்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய அணுகுமுறை, பிராந்திய அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்தியாவின் பங்கை மதிப்பது மட்டுமல்லாமல், கூட்டாட்சி மற்றும் மொழி மற்றும் இனச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது குறித்த நமது அரசியலமைப்பு விழுமியங்களுடனும் ஒத்துப்போகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்கு அது பங்களிக்கும் என உறுதியாக தான் நம்புவதாகவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தான் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
- சோம்நாத் கோவிலின் 1,000 ஆண்டு கால மீட்சியைக் குறிக்கும் வகையில் சுயமரியாதை திருவிழா நடந்து வருகிறது.
- வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள்-வழிபாடுகளுடன் இந்தத் திருவிழா 4 நாட்கள் நடக்கிறது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சோம்நாத் கோவிலின் 1,000 ஆண்டு கால மீட்சியைக் குறிக்கும் வகையில் சுயமரியாதை திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.
வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள்-வழிபாடுகளுடன் சுயமரியாதை திருவிழா 4 நாட்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு சோம்நாத் கோவிலுக்குச் சென்றார். அங்கு திரண்டிருந்த பாஜகவினர் உற்சாகமாக அவரை வரவேற்றனர்.
இரவு 8 மணியளவில் கோவிலில் நடைபெற்ற தெய்வீக ஓம்கார மந்திர உச்சரிப்பில் பங்கேற்றார். அதன்பிறகு அவர் சோமநாதர் கோவிலில் நடைபெறும் டிரோன் நிகழ்ச்சியைக் கண்டு களித்தார்.

நாளை நடைபெற உள்ள சவுரிய யாத்திரை நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். வீரத்தையும் தியாகத்தையும் பிரதிபலிக்கும் வகையில் யாத்திரையில் 108 குதிரைகளின் அடையாள ஊர்வலம் இடம்பெறுகிறது. அதன்பின், சோமநாதர் நகரில் நடைபெறும் பொது நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் கலந்துகொள்கிறார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலை தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சோமநாதர் சுயமரியாதை விழா நமது ஆன்மீக பாரம்பரியத்தின் ஒரு சக்திவாய்ந்த சின்னமாகும். இது நாடு முழுவதும் முழுமையான பக்தி, நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப் படுகிறது. சோம்நாத் சுய மரியாதை திருவிழா, தனது கோட்பாடுகள் மற்றும் நெறிமுறைகளில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாத பாரதத் தாயின் எண்ணற்ற குழந்தைகளை நினைவு கூரும் தருணமாகும். காலங்கள் எவ்வளவு கடினமாக இருந்தபோதும், நெறிமுறைகளுக்கான அவா்களின் உறுதிப்பாட்டை எள்ளளவும் அசைக்க முடியவில்லை. இந்திய நாகரிக மீட்சியின் கொண்டாட்டம் இது.
கடந்த 1951-ல் சோம்நாத் கோவில் மீண்டும் கட்டமைக்கப்பட்டதில் சா்தாா் படேல், கே.எம்.முன்ஷி உள்ளிட்டோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2001-ல் கோவிலின் 50-ம் ஆண்டு விழாவில் அப்போதைய பிரதமா் வாஜ்பாய், மூத்த தலைவா் எல்.கே.அத்வானி உள்ளிட்டோா் பங்கேற்றுச் சிறப்பித்தனா். நடப்பாண்டில் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாட உள்ளோம் என பதிவிட்டுள்ளார்.
- ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
- ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசிப்பது அவசியமானதாகும்.
தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தத் திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசின் முடிவினை வரவேற்றும், இதனைத் திறம்பட மேற்கொள்ள மாநில முதலமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய
ஒரு ஆலோசனைக் குழுவை அமைத்திட வேண்டுமென்று வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன், சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தத் திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசின் முடிவின் மூலமாக, விரிவான, நம்பகமான தரவுகளைப் பெற்று, சமூக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்திடவும், நலத்திட்டங்கள் உரியவர்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்திடவும் இயலும் என்று தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இது தமிழ்நாடு அரசின் நீண்டகால கோரிக்கையுடன் ஒத்துப்போவதால், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன், சாதிவாரிக் கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்திட வேண்டுமென்று ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானங்களை ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி, இந்தக் கோரிக்கையில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒன்றிய அரசின் இந்த முடிவானது, ஆதாரங்களின் அடிப்படையிலான சமூகநீதிக்கான தமிழ்நாட்டின் நிலைப்பாட்டினை உறுதி செய்வதாகவும் உள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இருப்பினும், சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது ஆழமாக வேரூன்றிய சமூக இயக்கவியல், பல்வேறு மாநிலங்களில் சாதிய கட்டமைப்புகளிலுள்ள வேறுபாடுகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மிகுந்த கவனத்துடன் கையாளப்படாவிட்டால், எதிர்பாராத சமூகப் பதட்டங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தக்கூடிய உணர்வுபூர்வமான விஷயமாக உள்ளதால், இக்கணக்கெடுப்பினை மேற்கொள்வதற்கான கேள்விகள், பிரிவுகள், துணைப்பிரிவுகள் மற்றும் தரவு சேகரிப்பு வழிமுறைகள் துல்லியமாகவும், தெளிவானதாகவும் இருக்கும்பட்சத்தில் மட்டுமே, பொது நம்பிக்கையை உறுதி செய்திட முடியுமென்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், இல்லாவிடில், இந்த அம்சங்களில் ஏதேனும் குறைபாடுகள், சர்ச்சைகள், துல்லியமின்மை அல்லது பிளவுபட்ட கருத்துக்களை அதிகரிக்கக்கூடும் எனவும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பட்டியலில் இருந்தாலும், அதன் முடிவுகள் கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு மற்றும் நலத்திட்டங்கள் குறித்த மாநில அளவிலான கொள்கைகளை ஆழமாகப் பாதிக்கும் என்பதால் இப்பணி தொடர்பான வினாப் படிவங்கள் மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை முடிவு செய்வதற்கு முன்பாக ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுடன் கலந்தாலோசிப்பது அவசியமானதாகும் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இத்தகைய ஆலோசனை, இந்த முக்கியமான செயல்பாட்டில், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களின் பல்வேறு கண்ணோட்டங்களை இணைக்கவும், குறிப்பிட்ட நுணுக்கங்களைக் கணக்கிடவும், கூட்டாட்சியை வளர்க்கவும் உகந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே,
1. சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான வழிகாட்டுதல்கள் குறித்து விவாதித்து மேம்படுத்திட மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு ஆலோசனைக் குழுவை உருவாக்கவும்.
2. இப்பணி தொடர்பான செயல்முறையின் உணர்திறனைப் பாதுகாக்கவும், சமூக நீதியை மேம்படுத்துவதற்கான தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், தேவைப்படும் இடங்களில் முன்னோடி சோதனை ( pilot study) உட்பட, கட்டமைப்பை வடிவமைப்பதில் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமரின் தலைமையின்கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தவும், கூட்டாட்சிக் கொள்கைகளை நிலைநிறுத்தவும் பயன்படுத்தப்படும் என்று தான் நம்புவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
- பிரதமரிடம் 10 கருப்பொருள் பிரிவுகளில் தங்களின் இறுதி விளக்க காட்சிகளை வழங்குவார்கள்.
- தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கியப் பகுதிகளில் இளைஞர்களின் தலைமையிலான கண்ணோட்டங்களையும் செயல்படுத்தக்கூடிய யோசனைகளையும் அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.
புதுடெல்லி:
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு விக்சித் பாரத் (வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று (9-ந்தேதி) தொடங்கியது. 12-ந்தேதி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
12-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று நடைபெறும் விக்சித் பாரத் (வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் அவர் கலந்துரையாட உள்ளார். பிரதமர் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2026 பதிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் பிரதமரிடம் 10 கருப்பொருள் பிரிவுகளில் தங்களின் இறுதி விளக்க காட்சிகளை வழங்குவார்கள்.
அப்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கியப் பகுதிகளில் இளைஞர்களின் தலைமையிலான கண்ணோட்டங்களையும் செயல்படுத்தக்கூடிய யோசனைகளையும் அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் நீண்டகால தேசத்தைக் கட்டியெழுப்பும் இலக்குகள் குறித்து இளைஞர்களால் எழுதப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பையும் அவர் வெளியிட உள்ளார்.
- ஒப்பந்தத்திற்கான அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிக்கப்பட்டு, கோப்புகள் தயாராக இருந்தன.
- கடந்த ஆண்டு மோடியும், டிரம்பும் பல்வேறு விவகாரங்கள் சம்பந்தமாக பேசி உள்ளனர்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி அதிபர் டிரம்புக்கு போன் செய்து பேசாததே அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் தடைபட காரணம் என அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் தெரிவித்தார்.
அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒப்பந்தத்திற்கான அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் முடிக்கப்பட்டு, கோப்புகள் தயாராக இருந்தன.
அதிபர் டிரம்ப் தான் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்பவர். மோடி அவரை அழைக்க வேண்டும் எனக்கூறினோம். ஆனால் இந்தியா அதற்கு தயக்கம் காட்டியது. இறுதிக்கட்டத்தில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்பை தொலைபேசியில் அழைத்து பேசத் தயங்கியதே ஒப்பந்தம் தள்ளிப்போகக் காரணம் என தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்தக் கருத்துக்கு மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளரான ரன்தீர் ஜெய்ஸ்வால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், இந்தியாவும், அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் சம்பந்தமாக பலமுறை பேசி உள்ளது. ஆனால், இதில் முடிவு எட்டப்படவில்லை. கடந்த ஆண்டு மோடியும், டிரம்பும் பல்வேறு விவகாரங்கள் சம்பந்தமாக பேசி உள்ளனர். இதில், வர்த்தக ஒப்பந்தமும் உள்ளடங்கும். எனவே, வர்த்தக ஒப்பந்தம் சம்பந்தமாக மோடி பேசவில்லை என்பது தவறானது என தெரிவித்தார்.
- பஸ் திடீரென சாலையை விட்டு விலகி அருகில் உள்ள 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
- இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 14 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
சிம்லா:
இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் இருந்து குப்வி என்ற இடத்திற்கு ராஜ்கார் வழியாக தனியார் பஸ் நேற்று சென்றது.
இந்த பஸ் சிர்மோர் மாவட்டம், ஹரிபுர்தார் கிராமத்திற்கு அருகே நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் திடீரென சாலையை விட்டு விலகி அருகில் உள்ள 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் 14 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு 50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
மாநில முதல் மந்திரி சுக்விந்தர் சிங் சுகுவும் பலியானோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
- பிரதமர் மோடி-ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
- முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதம்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி அழைப்பின் பேரில் ஜெர்மனிஅதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் வருகிற 12, 13-ந் தேதிகளில் இந்தியா விற்கு பயணம் மேற்கொள்கிறார்.
இது ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் அதிகாரப்பூர்வ பயணமாகும். 12-ந்தேதி அகமதாபாத்தில் பிரதமர் மோடி-ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
வர்த்தகம், முதலீடு, தொழில் நுட்பம், கல்வி, திறன் மற்றும் இயக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு, அறிவியல், புதுமை மற்றும் ஆராய்ச்சி, பசுமை, நிலையான மேம்பாடு, மக்களிடையேயான உறவுகள் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ஒப்பந்தத்திற்கான அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிக்கப்பட்டு, கோப்புகள் தயாராக இருந்தன.
- இந்தியாவுக்கான வரியை 500% வரை உயர்த்தும் மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
பிரதமர் மோடி டிரம்ப்புக்கு போன் செய்து பேசாததே அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் தடைபட காரணம் என அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக் தெரிவித்துள்ளார்.
ஹோவர்ட் லட்னிக் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "ஒப்பந்தத்திற்கான அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிக்கப்பட்டு, கோப்புகள் தயாராக இருந்தன.
அதிபர் டிரம்ப் தான் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்பவர். மோடி அவரை அழைக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் இந்தியா அதற்குத் தயக்கம் காட்டியது. இறுதி கட்டத்தில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்பை தொலைபேசியில் அழைத்து பேசத் தயங்கியதே ஒப்பந்தம் தள்ளிப்போகக் காரணம்." என்று தெரிவித்தார்.
தற்போது இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரை வரி விதிக்கிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகாததால், இந்திய ஏற்றுமதியாளர்கள் தொடர்ந்து இந்த அதிக வரியைச் சுமக்க வேண்டியுள்ளது.
இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கான வரியை 500% வரை உயர்த்தும் மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.






