என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"

    • இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விவாதித்தார்.
    • ஈரான் நடத்தும் தாக்குதல்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக கண்டித்துள்ளது.

    ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டாக கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஈரான் உச்சந்தலைவர் காமேனி கொல்லப்பட்டார். பதிலடியாக இஸ்ரேல் மீதும் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது

    துபாய், குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. விமான சேவைகள் அனைத்தும் முடங்கியது.

    இதற்கிடையே வளைகுடா நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் மோடி தொடர்ந்து பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாகப் பேசி வருகிறார்.

    அந்த வகையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் பிரதமர் மோடி பேசினார். அப்போது சவுதி அரேபியா மீது ஈரான் நடத்திய தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்த பிரதமர், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விவாதித்தார்.

    பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் ஈசா அல் கலீபாவுடன் பேசிய பிரதமர் மோடி, பஹ்ரைன் மீதான ஈரான் தாக்குதல் நிலைமை குறித்தும் இந்தியர்கள் பாதுகாப்பு குறித்தும் பேசினார்.

    ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானுடன் பேசிய பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

    முன்னதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசித்தார்.

    இதற்கிடையே வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச் சூழலை ஆய்வு செய்ய, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவைக் குழுவின் அவசரக் கூட்டமும் நடைபெற்றது.

    போர் நடைபெறும் பகுதிகளில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவது மற்றும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை உறுதி செய்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    வளைகுடா நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக ஈரான் நடத்தும் தாக்குதல்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக  கண்டித்துள்ளது.

    • நான் எங்களுடைய சிறந்த நண்பர் இந்திய பிரதமர் மோடியுடன் பேசினேன்.
    • இஸ்ரேலுடன் அவர் காட்டிய நிலைப்பாட்டிற்கும், உண்மைக்காக நின்றதற்கும் நன்றி தெரிவித்தேன்.

    இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆங்கில செய்தி சேனல் என்.டி.டி.வி.க்கு பிரத்யேக பேட்டி அளித்தார். ஈரான் தாக்குதலால் சேதம் அடைந்த கட்டிட இடிபாடுகளில் பலத்த பாதுகாப்பு காவலர்களுக்கு மத்தியில் நடந்தவாறு நெதன்யாகு கூறியதாவது:-

    நான் எங்களுடைய சிறந்த நண்பர் இந்திய பிரதமர் மோடியுடன் பேசினேன். நேற்று நீண்ட நேரம் அவரிடம் பேசினேன். ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுடன் அவர் காட்டிய நிலைப்பாட்டிற்கும், உண்மைக்காக நின்றதற்கும், இந்திய மக்களின் மகத்தான நட்புக்கும் அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

    அவர்கள் இஸ்ரேலில் மிகவும் போற்றப்படுகிறார்கள், நேசிக்கப்படுகிறார்கள். உரையாடலின் விவரங்களுக்குள் நான் செல்லமாட்டேன். ஆனால் நான் அவருடன் பேசியுள்ளேன், மேலும் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள பல தலைவர்களுடன் பேசியுள்ளேன்.

    இவ்வாறு நெதன்யாகு தெரிவித்தார்.

    • ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.
    • மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.

    இதனிடையே,பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் ஸயத் அல்நஹ்யானிடம் தொலைபேசி வாயிலாக நேற்று பேசினாா்.

    அப்போது யுஇஏ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தாா்.

    இந்நிலையில், பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசினார். போர் நடவடிக்கைகளை விரைவில் நிறுத்தவேண்டும் என்று பிரதமர் மோடி அவரிடம் வலியுறுத்தினார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தற்போதைய பிராந்திய நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த இந்தியாவின் கவலைகளைத் தெரிவித்ததோடு, பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்குமாறு வலியுறுத்தினேன். போர் நடவடிக்கைகளை விரைவில் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    • எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.
    • தங்கள் ஊடக இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே இப்படி செய்கின்றனர் என தெரிவித்தார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரில் பா.ஜ.க. எம்.பி. ஜகதம்பிகா பால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியைக் குறிவைத்து விளம்பரம் பெற விரும்புகிறார். இந்த ஊடக உத்தி பொதுமக்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சிகளின் முயற்சி ஆகும்.

    ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் போன்ற பிற எதிர்க்கட்சித் தலைவர்களும், தங்கள் ஊடக இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள பிரதமருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    • யுஇஏ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.
    • மேலும், தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தாா்.

    புதுடெல்லி:

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் ஸயத் அல்நஹ்யானிடம் தொலைபேசி வாயிலாக நேற்று பேசினாா்.

    அப்போது யுஇஏ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தாா்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தக் கடினமான சூழலில் யுஏஇயுடன் இந்தியா துணை நிற்கிறது. அங்கு வசிக்கும் இந்தியா்களுக்கு பாதுகாப்பு அளித்து வருவதற்கு நன்றி. மோதலை கைவிட்டு, பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இந்தியா ஆதரவு அளிக்கும் என பதிவிட்டுள்ளா.

    • அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தியது.
    • இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.

    புதுடெல்லி:

    அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார்.

    இதற்கு பதிலடியாக கத்தார், குவைத், பரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையில் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    அப்போது, மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு பற்றியும், தேவைப்பட்டால் அவர்களை சிறப்பு விமானங்களில் அழைத்து வருவது பற்றியும் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

    • திமுகவின் சில்லறை அரிசயலால் ஏழை மக்கள் ஏன் அவதிப்பட வேண்டும்?
    • மத்திய அரசு நிதி கொடுத்தாலும் திமுக அரசு நல்லது செய்யாது, நல்லது செய்யவும் விடாது.

    மதுரையில் இன்று மாலை நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை சொந்தங்களே நீங்கள் என் மீது பொழியும் பேரன்பு மலேசியாவில் இந்தியர்கள் என் மீது பொழிந்த பேரன்மை நினைவுபடுத்துகிறது.

    நாவில் இனிக்கும் தமிழுக்கும், நாசியில் இனிக்கும் மல்லிகைக்கும் பெயர்போனது மதுரை மண்.

    தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என சிலர் கனவு காண்கிறார்கள். ஆனால், அவர்களின் கனவு பலிக்காது.

    திமுகவின் கனவுக்கோட்டை கானல் நீராக மாறிவிடும், இந்த தேர்தல் மாற்றத்தை கொண்டுவரும் தேர்தல்.

    வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

    திமுக ஆட்சியை வழியனுப்பி வைப்பதற்கு தமிழ்நாடு மக்கள் தயாராகிவிட்டனர்.

    வரும் தேர்தல் திருப்புமுனையாக அமையும். திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். தமிழ்நாட்டை திராவிட முன்னேற்றக் கழகம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

    மாஃபியா போல் தமிழ்நாட்டை திமுக கொள்ளை அடிக்கிறது.

    மோசமான சாலை, அசுத்தமான குடிநீர் இதைத்தான் திமுக அரசு கொடுத்தது.

    ஊழல் காரணமாக மதுரை மாநகர் மேயரின் பதவியே பறிபோய் உள்ளது. இதுதான் திமுகவின் ஆட்சி.

    25 ஆண்டுகளுக்கு பின் முழு மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சிக்கு வந்தும் கூட தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை.

    மதுரை மக்கள் எம்ஜிஆருடன் நின்றார்கள் அதனால் மதுரையை திமுகவிற்கு பிடிக்கவில்லை. ஊழல் ஆட்சியா? என்டிஏ கூட்டணி ஆட்சியா? என்ன வேண்டும் என மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

    திமுக அரசின் ஊழல் ஆட்சியால் லட்சக்கணக்கான ஏழைக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    திமுக அரசால் ஏழைகளுக்கான 3 லட்சம் வீடுகள் கட்டும் பணி முடங்கி உள்ளது. திமுகவின் சில்லறை அரிசயலால் ஏழை மக்கள் ஏன் அவதிப்பட வேண்டும்?

    மத்திய அரசு நிதி கொடுத்தாலும் திமுக அரசு நல்லது செய்யாது, நல்லது செய்யவும் விடாது.

    பணம் நமக்கு, பிரச்சனை மக்களுக்கு என்பது தான் திமுகவின் மாடல்.

    தமிழ்நாட்டின் உரிமைக்காக வாய் கிழிய பேசும் திமுக மாநில மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இது பாண்டிய நாடு, வீரம் விளைந்த பூமி, புண்ணிய பூமி.
    • திருப்பரங்குன்றம் முருகனிடம் அவர்களுக்காக பிரார்த்தித்தேன்.

    என்டிஏ பொதுக்கூட்டத்தில் அனைவருக்கும் வணக்கம் எனத் தமிழில் பிரதமர் மோடி பேசினார்.

    பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், கட்டபொம்மன், அழகுமுத்துகோன், மருது சகோதரர்கள் பெயர்களை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    நீதிக்கும் கண்ணியத்திற்கும் போராடிய இமானுவேல் சேகரனாரை நினைவு கூர்கிறேன்.

    இது பாண்டிய நாடு, வீரம் விளைந்த பூமி, புண்ணிய பூமி.

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றவில்லை என்பதற்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞருக்கு அஞ்சலி.

    திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்காக உயிர் தியாகம் செய்த பூரணச்சந்திரனை நினைவு கூர்கிறேன். இளைஞர் பூரண சந்திரன் செய்த உயிர் தியாகத்தை எண்ணி மனம் கனக்கிறது. அவரது குடும்பத்தினருகு்கு இரங்கல்.

    பூரணச்சந்திரன் மனைவி, குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறினேன். திருப்பரங்குன்றம் முருகனிடம் அவர்களுக்காக பிரார்த்தித்தேன்.

    திமுக என்ன சதி செய்தாலும் இறுதியில் திருப்பரங்குன்றம் முருகனை வணங்கும் எம் மக்களே வெல்வார்கள்.

    திமுக என்ன செய்தாலும் இறுதியில் வாய்மையே வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரவு 9.30க்கு டெல்லியில் தரையிரங்குகிறார்.
    • பிரதமர் மோடி பிப்ரவரி 25-26 தேதிகளில் இஸ்ரேலில் இருந்தார்.

    மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஈரான் மீதான தாக்குதல்கள் குறித்து ஆலோசிக்க, பிரதமர் மோடி இன்று இரவு டெல்லி திரும்பியதும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இன்று இரவு 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர், வெளியுறவு அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை நேரடியாகப் பாதிக்கக்கூடும். மேலும், இந்த போர்பதற்றத்தால் அங்கு வாழும் மில்லியன்கணக்கான இந்திய குடிமக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த CCS கூட்டம் இந்த அம்சங்களையும், வளர்ந்து வரும் இராணுவ சூழ்நிலையையும் முழுமையாக விவாதித்து, எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்க இந்தியாவின் தயார்நிலையை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • அனைத்து நிலை மக்களும் தெருவுக்கு வந்து போராடும் நிலை தமிழகத்தில் உள்ளது.
    • தமிழ்நாட்டில் இருந்து திமுக என்ற இருண்ட ஆட்சியை அகற்றுவோம்.

    மதுரை மண்டேலா நகரில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உரையாற்றினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    சித்திரை திருவிழா போல மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

    அனைத்து நிலை மக்களும் தெருவுக்கு வந்து போராடும் நிலை தமிழகத்தில் உள்ளது.

    பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி உறுதுணையாக இருக்கிறார்.

    தமிழ்நாட்டில் இருந்து திமுக என்ற இருண்ட ஆட்சியை அகற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
    • பிரதமர் மோடி எதனை முறை இங்கு வந்தாலும் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் இடமில்லை.

    மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

    இதனுடைய செய்தியாளர்களை சந்தித்தா காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, "மத கலவரங்களை ஏற்படுத்துவது, அணைத்து மக்களும் அமைதியாக வாழ்வதை அனுமதிக்க முடியாது என்று கங்கணம் கட்டி கொண்டிடுக்கும் ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் முகமாக பிரதமர் மோடி உள்ளார்.

    பிரதமர் மோடி எதனை முறை இங்கு வந்தாலும் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் இடமில்லை. திருப்பரங்குன்றம் என்றில்லை ஆறுபடை கோயிலுக்கு சென்றாலும் கூட பிரதமர் மோடியை முருகன் மன்னிக்க மாட்டார்" என்று தெரிவித்தார்.

    • பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • பிரதமர் வருகையை ஒட்டி திருப்பரங்குன்றம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க. மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க தேர்தல் களப்பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    அதேபோல் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் ஆட்சியை கைப்பற்ற கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு போன்றவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன.

    அதுமட்டுமின்றி புதிய வரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தேர்தல் பணிகளை முன்னெடுத்து உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க. (அன்புமணி), தமிழ் மாநில காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    தமிழகத்தில் இந்த கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    அதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 2-வது கட்டமாக தமிழகத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அதன்படி, புதுச்சேரியை தொடர்ந்து, மதுரைக்கு வருகை தந்தார். பல்வேறு அரசு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    இதைத்தொடர்ந்து, கார் மூலம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    பிரதமர் வருகையை ஒட்டி திருப்பரங்குன்றம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம் கோவில், மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளான நிலையில் பிரதமர் மோடி வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×