என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"

    • தற்போதைய சிஸ்டம் மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்தினரின் நலனுக்காக செயல்படுகிறது.
    • தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசாங்கம் உள்ளிட்டவைகளில் எந்தப் பங்கும் இல்லை.

    மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி இன்று பீகார் மாநிலம் சென்றார். மிதிலா பல்கலைக்கழகத்தில் மாணவர்களை சந்தித்து பேசினார். ராகுல் காந்தி கார் வாசலில் நிறுத்தப்பட்டது. பின்னர் நடந்து சென்று மாணவர்களை சந்தித்தார்.

    மாணவர்களுடன் உரையாடும்போது அவர் கூறியதாவது:-

    அரசியலமைப்பு உங்களுடைய தலையால் தொட்டு வணங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் நாங்கள் கூறினோம். இறுதியில் அதைச் செய்தார். அதேபோல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறினோம். இரண்டிலும், மக்களிடம் இருந்து எதிர்வினை ஏற்படும் என பயந்து பிரதமர் மோடி, ஏற்றுக்கொண்டார்.

    ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அம்பானி, அதானி மற்றும் அவர்களைப் போன்றவர்களின் நலன்களுக்கு சேவை செய்கிறது என்பது உண்மைதான்.

    தற்போதைய சிஸ்டம் மக்கள் தொகையில் ஐந்து சதவீதத்தினரின் நலனுக்காக செயல்படுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசாங்கம் உள்ளிட்டவைகளில் எந்தப் பங்கும் இல்லை.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    சாதிவாரி கணக்கெடுப்பை தொடர்ந்து மறுத்து வந்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

    • இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்தது.
    • இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏன் அறிவித்தார் என கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சி கேட்டு வருகிறது.

    இது முதல் முறையாக நடக்கிறது. பிரதமர் மோடி இது குறித்து எதுவும் கூறவில்லை.

    அமெரிக்காவின் பங்கு மிகவும் முக்கியமானது, அவர்களால்தான் இந்தப் போர் நின்றது என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகிறார். வெளியுறவு மந்திரி டாக்டர் ஜெய்சங்கர் இதற்குப் பதிலளிக்கவில்லை.

    அமெரிக்காவின் பங்கு என்ன என்பது குறித்து பிரதமர் மோடியும், வெளியுறவு மந்திரியும் இதுவரை ஏன் பதிலளிக்கவில்லை என நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம் என தெரிவித்தார்.

    • பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது
    • இந்தக் கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக ஆலோசனை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

    உத்தர பிரதேசத்தின் ஜீவர் பகுதியில் ரூ.3,706 கோடி செலவில் 6வது செமிகண்டக்டர் தொழிற்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

    இந்த தொழிற்சாலையை எச்.சி.எல்-பிக்ஸ்கான் இணைந்து அமைக்கின்றன. இந்தத் தொழிற்சாலையில் மொபைல் போன், லேப்டாப், ஆட்டோமொபைல் உள்ளிட்ட சாதனங்களுக்கு தேவையான டிஸ்ப்ளே டிரைவர் சிப்கள் தயாரிக்கப்படும். இந்த தொழிற்சாலை 2027 ம் ஆண்டு செயல்பட தொடங்கும். ஆண்டுக்கு 3.6 கோடி சிப்கள் தயாரிக்கப்படும் என தெரிவித்தார்.

    • இந்தியா மீது கண் வைக்கும் பயங்கரவாதிகள் அழித்தொழிக்கப்படுவார்கள்.
    • எதிரிகள் மீண்டும் மீண்டும் முயன்றும் நமது பாதுகாப்பு அரணை தகர்க்க முடியவில்லை

    இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தில், நமது ராணுவ வீரர்கள் பணியாற்றிய விதம் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. போர் பதற்றம் ஓய்ந்ததை தொடர்ந்து இன்று ஜலந்தரில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

    அங்கு விமான படை வீரர்களிடம் பேசிய பிரதமர் மோடி, "நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை நீங்கள் பழிவாங்கிவிட்டீர்கள். இந்தியா மீது கண் வைக்கும் பயங்கரவாதிகள் அழித்தொழிக்கப்படுவார்கள். எதிரிகள் மீண்டும் மீண்டும் முயன்றும் நமது பாதுகாப்பு அரணை தகர்க்க முடியவில்லை

    வெறும் 20 நிமிடங்களில், பாகிஸ்தானில் இருந்த 9 தீவிரவாத முகாம்களை தகர்த்தெறிந்து விட்டோம். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பதுங்கி கொள்ள இடம் இல்லாத அளவுக்கு தாக்கியுள்ளோம்.

    தீவிரவாத முகாம்களை தாக்க வேண்டும் என்பதே இலக்கு, பாகிஸ்தான் அல்ல. இந்தியாவுடன் மோதினால் அழிவு மட்டுமே கிடைக்கும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்

    இனி பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருக்க முடியும் என பயங்கரவாதிகள் கனவிலும் நினைக்க முடியாது. பயங்கரவாதிகளை அவர்களுடைய சொந்த மண்ணிலேயே தாக்கி அழிப்போம் என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது.

    விமானப்படை வீரர்களும் அதிகாரிகளும் வரலாறு படைத்துவிட்டனர்; முப்படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு எனது சல்யூட். பாரத் மாதா கீ ஜெய் என்ற முழக்கத்தின் வீரியத்தை உலகமே உணர்ந்துள்ளது.

    சக்திவாய்ந்த நமது ஏவுகணைகள் சத்தத்துடன் எதிரி நாட்டு இலக்குகளை அடையும்போது, அவர்களுக்கு அந்த சத்தம் 'பாரத் மாதா கீ ஜெய்' என்றுதான் கேட்கும்" என்று தெரிவித்தார்

    பிரதமர் மோடியின் உரையில் இடையே விமான படை வீரர்கள் பாரத் மாதா கீ ஜே என்று கூச்சலிட்டனர்.

    பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது செயல்பட்ட விமானப்படை தளங்களில் ஒன்று ஆதம்பூர் விமானப்படை தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விமான படை வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்
    • ஆதம்பூருக்கு சென்று நமது துணிச்சலான விமானப்படை வீரர்களை சந்தித்தேன்

    இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தில், நமது ராணுவ வீரர்கள் பணியாற்றிய விதம் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. போர் பதற்றம் ஓய்ந்ததை தொடர்ந்து இன்று ஜலந்தரில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார்.

    அங்கு விமான படை வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "ஆதம்பூருக்கு சென்று நமது துணிச்சலான விமானப்படை வீரர்களை சந்தித்தேன். தைரியம், உறுதிப்பாடு மற்றும் அச்சமின்மை ஆகியவற்றின் உருவமாக இருப்பவர்களுடன் இருப்பது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. நமது ஆயுதப்படைகள், நமது தேசத்திற்காகச் செய்யும் அனைத்திற்கும் இந்தியா என்றென்றும் நன்றியுடன் உள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது செயல்பட்ட விமானப்படை தளங்களில் ஒன்று ஆதம்பூர் விமானப்படை தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நீங்கள் பாகிஸ்தான் பிரதமரைச் சந்திக்கப் போகிறீர்களா?
    • 19 நாட்களாக பாகிஸ்தானின் காவலில் இருக்கும் நமது BSF ஜவான் பூர்ணம் சாஹுவை எப்போது திரும்ப அழைத்து வருவோம்?

    26 பொதுமக்கள் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்திய ராணுவம் மேற்கொண்ட  ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்று இரவு உரையாற்றினார்.

    இதில்," இந்தியாவின் தாக்குதலை தாங்க முடியாமல் உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் பதிலடி நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் அணுகுமுறையைப் பொறுத்து அடுத்த முடிவு இருக்கும். பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக இருக்க முடியாது, இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது" என்று மோடி பேசினார்.

    இந்நிலையில் மோடியின் உரையில் இன்னும் பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    மோடியின் உரை குறித்து காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் தனது எக்ஸ் பதவில், "பிரதமர் மோடி தனது 22 நிமிட உரையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது விவாதிக்காத விஷயங்கள் இவைதான்.

    ▪️அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு உத்தரவிட்டதாக டிரம்ப் ஏன் திரும்பத் திரும்பக் கூறுகிறார்; இன்று அவர் வர்த்தகத்தை காரணம் காட்டி உங்களை மிரட்டியதாகக் கூடச் சொன்னார். இது உண்மையா?

    ▪️இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்துக் கொண்டிருந்தபோது, நமது ராணுவத்தின் ஆக்ரோஷமான நடவடிக்கையால் பாகிஸ்தான் பதறிப்போனதாக நீங்களே சொன்னீர்கள், பிறகு ஏன் போர் நிறுத்தத்துக்கு உடன்பட்டீர்கள்?

    ▪️காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தது குறித்து நீங்கள் எதுவும் கூறவில்லை. அமெரிக்க தலையீட்டை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

    ▪️இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களின் சந்திப்பு, பேச்சுவார்த்தை மூன்றாவது நாட்டில் நிகழும் என்ற அமெரிக்க அறிக்கை குறித்தும் நீங்கள் அமைதியாக இருந்தீர்கள். நீங்கள் பாகிஸ்தான் பிரதமரைச் சந்திக்கப் போகிறீர்களா? பாகிஸ்தானுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தப் போகிறீர்களா?

    ▪️பாகிஸ்தானில் அமைந்துள்ள பயங்கரவாத முகாம்களை நமது இராணுவம் நிச்சயமாக அழித்துவிட்டது. ஆனால் பஹல்காமில் கொடூரமான கொலையைச் செய்த பயங்கரவாதிகள் எங்கே?

    ▪️முழு நாடும் எதிர்க்கட்சியும் உங்களுடன் இருந்தபோது, நீங்கள் ஏன் பாகிஸ்தானை ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (POK) இருந்து விரட்டவில்லை?

    ▪️ 19 நாட்களாக பாகிஸ்தானின் காவலில் இருக்கும் நமது BSF ஜவான் பூர்ணம் சாஹுவை எப்போது திரும்ப அழைத்து வருவோம்?

    ▪️கடைசியாக ஒரு கேள்வி, பஹல்காமில் இவ்வளவு பெரிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை குறைபாடு எப்படி ஏற்பட்டது? இதற்கு நீங்க பொறுப்பா அல்லது உள்துறை அமைச்சரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    மேலும் பிரதமர் உரையில் இடம்பெற்ற மற்ற அனைத்தும் அர்த்தமற்றவை என்றும் தெரிவித்துள்ளார். 

    • ஜம்மு- காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற ட்ரோன்கள் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • ட்ரோன்கள் ஊடுருவ முயன்ற நிலையில் ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் குறித்து இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர் (DGMO) இடையேயான பேச்சுவார்த்தை இன்று மாலை நடந்தது.

    அதில், இரு தரப்பிலும் இருந்து ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை தொடர்வது குறித்து பேசப்பட்டு, இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

    எல்லைகளில் படை வீரர்களைக் குறைப்பதை உறுதி செய்வதற்கான உடனடி நடவடிக்கைகளை பரிசீலிப்பது என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் ஜம்மு- காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற ட்ரோன்கள் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ட்ரோன்கள் ஊடுருவ முயன்ற நிலையில் ஜம்மு காஷ்மீர் சம்பா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் வெடிச் சத்தம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நிலையில் ட்ரோன்கள் ஊடுவருவல் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம் என டிரம்ப் கூறினார்.
    • பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை நிறுத்தப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.

    இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய பல கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரதமர் மோடி தனது இன்றைய உரையில் அது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை.

    இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

    இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுதான் சண்டை நிறுத்தப்பட்டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    மேலும் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவின் தலையீடு, காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என ட்ரம்ப் கூறியது தொடர்பாக பிரதமர் தனது உரையில் எதுவும் பேசவில்லை.

    மூன்றாம் தரப்பின் தலையீடு கூடாது என்ற இந்தியாவின் நீண்ட கால நிலைப்பாட்டை மோடி வெளிப்படையாக தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக மூச்சு கூட காட்டவில்லை. 

    • அணு ஆயுதங்களை வைத்து இந்தியாவை மிரட்ட முடியாது என்றார் பிரதமர் மோடி.
    • எதிர்காலத்தில் பாகிஸ்தான் வாலாட்டினால் இந்தியாவின் பதிலடி இன்னும் பயங்கரமாக இருக்கும் என்றார் பிரதமர் மோடி.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ஆபரேஷன் சிந்தூர் என்பது பயங்கரவாத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கை.

    இந்தியாவின் ஏவுகணைகளில் இருந்து தப்பிக்க வழிபார்த்த பாகிஸ்தான் தோற்றுவிட்டது.

    பயங்கரவாதிகளும், பயங்கரவாதிகளுக்கும் உதவி செய்பவர்களும் எங்களைப் பொறுத்தவரை ஒன்றுதான்.

    தாக்குதல் நிறுத்தப்பட்டாலும், எதிர்காலத்தில் பாகிஸ்தான் நடவடிக்கையை பொறுத்து அடுத்த கட்ட முடிவு.

    எதிர்காலத்தில் பாகிஸ்தான் வாலாட்டினால் இந்தியாவின் பதிலடி இன்னும் பயங்கரமாக இருக்கும்.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் எதிரிக்கு பதிலடி கொடுப்பதில் முக்கிய பங்காற்றின. இந்தியாவின் ஏவுகணைகளில் இருந்து தப்பிக்க வழிபார்த்த பாகிஸ்தான் தோற்றுவிட்டது.

    போர் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதம் தொடர்ந்தால் பதிலடி தொடரும்.

    நம்மைப் பொறுத்தவரை ஒற்றுமையே பலம், ஒற்றுமையே முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் உலகின் முன் அம்பலப்பட்டுள்ளது என்றார். பிரதமர் மோடி.
    • பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்றார் பிரதமர் மோடி.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் ஏவுகணைகள் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கு தகர்த்தன. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தலைமையங்கள் தகர்க்கப்பட்டுள்ளது.

    தாக்குதல் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்று அழித்துள்ளோம். ஒரே தாக்குதலில் பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். கோவில்கள், குருத்வாராக்கள், பள்ளிகளை குறிவைத்து கோழைத்தனமாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

    பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை ஆதரிக்காமல், இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியுள்ளது.

    10ம் தேதி நம் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரை தொடர்புகொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது. இனி ராணுவ சேட்டைகள், பயங்கரவாத செயல்கள் இருக்காது எனக் கூறியது. இந்தியா அதனை பரிசீலித்து தற்போதைக்கு நாம் தாக்குதலை நிறுத்தியுள்ளோம்.

    ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் உலகின் முன் அம்பலப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த பாகிஸ்தான், உலக நாடுகள் தலையிட கெஞ்சியது.

    பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் விதத்தை பார்க்கும்போது, ஒருநாள் அந்த நாட்டையே அது அழித்துவிடும். பாகிஸ்தான் இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்தால், பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும்.

    பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. பயங்கரவாதமும் வணிகமும் கூட ஒரே நேரத்தில் இருக்க முடியாது.

    பல தசாப்தங்களாக இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டும் பயங்கரவாத இயக்க தலைவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வந்தனர். ஒரே தாக்குதலில் அவர்களை இந்தியா அகற்றியுள்ளது. இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிருப்தி, விரக்தி அடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவின் முப்டைகளுக்கும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் சல்யூட் என்றார் பிரதமர் மோடி.
    • ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது வீரர்கள் அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தினர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

    அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் முப்டைகளுக்கும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் சல்யூட். ஆபரேஷன் சிந்தூரை நமது வீரர்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர்.

    பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்தது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றி பெறச் செய்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்.

    ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவின் வலிமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நமது தேசத்தின் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

    ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது வீரர்கள் அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தினர்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.

    இந்தியாவின் நடவடிக்கையை பயங்கரவாதிகள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் உறுதியாக இருக்கும்.

    இந்தியாவின் ஏவுகணைகள் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி தகர்த்தன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
    • இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை.

    காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

    தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக்கட்டமாக, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலைக்கு ஒத்திவைப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார். அதன்படி, இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

    ×