என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெதன்யாகு"

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.
    • விமான நிலையத்தில் அதிபர் டிரம்ப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அதிபர் டிரம்ப்பை இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் வரவேற்றனர்.

    ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகள் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலுக்கு வந்துள்ளார்.

    ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்கும் டிரம்ப், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அங்கிருந்து எகிப்து செல்கிறார்.

    • காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து சென்னையில் போராட்டம் நடந்தது
    • காசாவில் நடக்கும் போருக்கு மவுனமாக இருக்கும் மோடியும் தான் காரணம்.

    கடந்த 2023 அக்டோபரில் போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 65,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.

    காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சென்னையில் போராட்டம் நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரகாஷ் ராஜ், "காசாவில் நடக்கும் போருக்கு இஸ்ரேல் மட்டும் காரணமில்லை. அதற்குத் துணையாக இருக்கும் அமெரிக்காவும் காரணம். மவுனமாக இருக்கும் மோடியும் தான் காரணம். இதை எதிர்த்துப் பேசாத ஒவ்வொரு மனிதரும் காரணம் தான்" என்று கூறினார்.

    இந்நிலையில், காச அமைதி ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை நண்பர் என அழைத்து பிரதமர் மோடி பதிவிட்ட பதிவை பகிர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார்.

    அவரது பதிவில், "உன் நண்பன் யார் என்று சொல்... நீ யார் என்று நான் உனக்குச் சொல்கிறேன்" என்று பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.

    • ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது.
    • இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

    பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர்.

    கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

    அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.

    இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

    இந்நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் நாடும் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இதனை அறிவித்தார்.

    உலக நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகினர்.
    • பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன.

    பாலஸ்தீனம் மேற்கு கரை, காசா முனை என 2 பகுதிகளாக உள்ளது. இதில் காசா முனை ஹமாஸ் ஆயுதக்குழுவினரும், மேற்கு கரையை முகமது அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசும் நிர்வகித்து வருகின்றனர்.

    கடந்த 2023-ம் ஆண்டில் ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதைத்தொடர்ந்து காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 2 ஆண்டாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

    அதேவேளை, பாலஸ்தீனத்தை தனிநாடாக 140-க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.

    இதற்கிடையே, பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இதற்காக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு பாலஸ்தீன அரசு நன்றி தெரிவித்துள்ளது.

    இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "பாலஸ்தீன நாடு இருக்காது. எங்கள் நாட்டின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை எங்கள் மீது திணிக்கும் சமீபத்திய முயற்சிக்கான பதில், நான் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு அளிக்கப்படும்.

    அக்டோபர் 7 அன்று நடந்த கொடூரமான படுகொலைக்குப் பிறகு பாலஸ்தீன அரசை அங்கீகரித்து வரும் தலைவர்களுக்கு நான் ஒன்றை கூறி கொள்கிறேன். நீங்கள் பயங்கரவாதத்திற்கு மகத்தான பரிசை வழங்குகிறீர்கள். ஆனால் அது நடக்கப்போவதில்லை. ஜோர்டான் நதிக்கு மேற்கே பாலஸ்தீன அரசு இருக்காது.

    பல ஆண்டுகளாக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து வரும் மிகப்பெரிய அழுத்தங்களுக்கு எதிராக, அந்தப் பயங்கரவாத அரசு உருவாவதை நான் தடுத்திருக்கிறேன். இதை நாங்கள் உறுதியுடனும், சாதுர்யமான அரசியல் திறமையுடனும் செய்துள்ளோம். மேலும், யூதேயா மற்றும் சமாரியாவில் யூதக் குடியேற்றத்தை இரட்டிப்பாக்கியுள்ளோம், மேலும் இந்தப் பாதையில் நாங்கள் தொடர்ந்து செல்வோம்" என்று தெரிவித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

    • நவம்பர் 4 ஆம் தேதி நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது.
    • இந்த தேர்தலில் மம்தானிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது செய்ய உத்தரவிடுவேன் என நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் சோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்.

    நவம்பர் 4 ஆம் தேதி நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மம்தானிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக, அமெரிக்க வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் உள்ளது, ஆகவே அவரை கைது செய்யவேண்டும் என்று மம்தானி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • ஜெருசலேம் தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மோடிக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் உள்ள ராமோத் சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் நேற்று 2 மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயமடைந்தனர்.

    சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்பு படை வீரரால் தாக்குதல் நடத்திய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் வெடிமருந்துகளை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜெருசலேமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்.

    பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா கண்டிக்கிறது. மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் உறுதியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "நம்மை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தை எதிர்த்து இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மோடிக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

    • நெதன்யாகு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் உள்ளது என்று மம்தானி தெரிவித்தார்.
    • மம்தானி ஒரு சோசலிஸ்ட் அல்ல, அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று டிரம்ப் தெரிவித்தார்.

    33 வயதான இந்திய -அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் ஜுஹ்ரான் மம்தானி, முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை தோற்கடித்து, நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் மீரா நாயர் மற்றும் இந்திய-உகாண்டா கல்வியாளர் மஹ்மூத் மம்தானியின் மகன் தான் சோஹ்ரான் மம்தானி ஆவார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தற்போது நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    மம்தானி மேயராக தேர்வானதில் இருந்து அவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இந்நிலையில் அமெரிக்க வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் உள்ளது, ஆகவே அவரை கைது செய்யவேண்டும் என்று நியூ யார்க் மேயர் மம்தானி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    மம்தானியின் இக்கருத்துக்கு கண்டனம் தெரிவித்த டிரம்ப், மம்தானி ஒரு சோசலிஸ்ட் அல்ல, அவர் ஒரு கம்யூனிஸ்ட். அவர் யூத மக்களைப் பற்றி சில மோசமான விஷயங்களைச் சொல்லியுள்ளார். மம்தானிக்கு வெள்ளை மாளிகை வழியாகதான் பணம் வருகிறது. அவருக்கு வெள்ளை மாளிகை வழியாக பணம் தேவை. அவர் இப்படி நடந்துகொள்வது அவருக்கு நல்லதல்ல. இல்லையெனில் அவருக்கு பெரிய பிரச்சினைகள் ஏற்படும்" என்று தெரிவித்தார். 

    • அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டது.
    • தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று டிரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.

    அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது. ஆனால் பல போர்களை நிறுத்த முயற்சி மேற்கொண்டாலும் தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று டிரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.

    இதனையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் டிரம்பின் பெயரை பரிந்துரை செய்தார்.

    இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரிந்துரை செய்துள்ளார்.

    நேற்று இரவு வெள்ளை மாளிகையில் நடந்த இரவு விருந்தின் போது, நோபல் பரிசுக் குழுவிற்கு அனுப்பிய நியமனக் கடிதத்தின் நகலை டிரம்மிடம் நெதன்யாகு வழங்கினார்.

    அப்போது டிரம்பிடம் பேசிய நெதன்யாகு, "நீங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு பிராந்தியத்திலும் அமைதியை ஏற்படுத்தி வருகிறீர்கள். நான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு உங்களை பரிந்துரைத்து நோபல் பரிசுக் குழுவிற்கு அனுப்பிய கடிதத்தை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். இதற்கு நீங்கள் மிகவும் தகுதியானவர், நீங்கள் அதைப் பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.

    2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று நோபல் குழு தெரிவித்துள்ளது.

     

    • ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது.
    • இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஈரானின் உச்சபட்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியை கொன்றால் மோதல் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

    • இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது
    • ஈரான் மூலம் உலகுக்கு ஏற்படும் அணு ஆயுத அச்சுறுத்தலை ஒழிக்கத் தேவையானதை செய்வோம்.

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அறிவித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கினால் ஈரானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப் படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை கொலை செய்ய ஈரான் திட்டம் போட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

    உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பேட்டியில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "ஈரான் அணு ஆயுதங்கள் வைத்து இருப்பதை டிரம்ப் விரும்பவில்லை என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளார். இதனால் அவர் ஈரானின் நம்பர் ஒன் எதிரியாக இருந்து வருகிறார். டிரம்ப் தங்களது அணு சக்தி திட்டத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்பதால் அவரை கொல்ல ஈரான் திட்டமிட்டு உள்ளது. அவர்களின் உளவுத்துறை மூலம் டிரம்பை கொல்ல விரும்புகிறது.

    ஈரானின் அணு சக்தி நடவடிக்கைக்கு இஸ்ரேலின் தாக்குதல் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது. ஈரானால் நாங்கள் உடனடி அச்சுறுத்தலை எதிர்கொண்டோம். ஈரான் உலகிற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அகற்ற தேவையான அனைத்தையும் செய்ய இஸ்ரேல் தயாராக இருக்கிறது." என்று தெரிவித்தார்.

    இதற்கிடையில் ஈரான் நாட்டின் ஆட்சியாளரும், மதத்தலைவருமான கமேனியை கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டு இருந்ததை டிரம்ப் தடுத்து நிறுத்தினார் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையே கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில் அமெரிக்கா வெளியிட்ட இந்த தகவல் பரபரப்பை எற்படுத்தி இருக்கிறது.

    • ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
    • =பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது.

    இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மேற்கொள்ளப்பட்ட குடலிறக்க அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து நாளை பிற்பகல் வீடு திரும்புவார் என மருத்துவர்களின் ஆலோசனையை மேற்கோள் காட்டி பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து தனது அன்றாட பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக, ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்," இன்று பிரதமர் நெதன்யாகுவிற்கு வெற்றிகரமாக குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு மேற்கொள்ளப்பட்டாகவும், பின்னர், நெதன்யாகு சுயநினைவுடன் இருப்பதாகவும், குடும்பத்துடன் உரையாடி வருவதாகவும், அவர் குணமடைந்து வருகிறார்" என குறிப்பிட்டுள்ளது.

    • கால்பந்து மைதானத் தாக்குதளுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் நேதனயாகு
    • இஸ்ரேலுக்குள் நுழைவோம் என்று எச்சரிக்கை விடுத்த துருக்கி அதிபர்

     கோலன் சிகரம் [Golan Heights]

    லெபனான் மற்றும் ஜோர்டான் நாட்டு எல்லையில் 1200 சதுர கிலோமீட்டர்களுக்குப் பரந்து விரிந்து கிடக்கும் பிரதேசம் கோலன் சிகரம் [Golan Heights] . இதன் பகுதிகளைக் கடந்த 1981 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அங்கு வாழ்ந்து வந்த சிரியன் மற்றும் பாலஸ்தீனிய மக்களை வெளியேற்றிவிட்டு, தங்களது மக்களை இஸ்ரேல் அரசு அங்கு குடியேற்றம் செய்தது. அங்கு வாழும் மக்கள் சிரிய நாட்டில் வசித்தாலும் இஸ்ரேலிய குடியுரிமை கொண்டவர்கள் ஆவர்.

    கால்பந்து மைதான தாக்குதல்

    லெபனான் இஸ்ரேல் எல்லையில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா தற்போது சிரியாவில் உள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலோன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தின் மீது வான் வழியாக ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் மைதானத்தில் இருந்த குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொந்தளிக்கும் இஸ்ரேல்

    இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பெரிய விலையை கொடுத்தாக வேண்டும் என்று கொந்தளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, தனது அமெரிக்க பயணத்தை அவரச அவசரமாக முடித்துக்கொண்டு இஸ்ரேல் திரும்பியுள்ளார். இதற்கிடையில் இந்த தாக்குதலுக்கு எதிரிவினையாற்றி தக்க பதிலடி கொடுப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்க பிரதமர் நேதன்யாகுவுக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் முழு அதிகாரத்தை தந்துள்ளது. எந்த நேரத்தில் எந்த வகையில் பதிலடி கொடுக்கலாம் என்று நெதன்யாகுவே முடிவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மற்றொரு போரை நேதனயாகு தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

    பின்வாங்கும் ஹிஸ்புல்லா

    இஸ்ரேல் பழிவாங்கும் தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் எல்லையிலிருந்து பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல்- லெபனான் எல்லையின் தெற்குப் பகுதிகள் மற்றும் அமைப்பு வலுவாக இருக்கும் பெக்கா பள்ளத்தாக்கில் இருந்தும் [Bekaa valley] ஹிஸ்புல்லா பின்வாங்கியுள்ளது என்று எல்லைப்புற செய்திகள் தெரிவிக்கின்றன.

    இரான் - துருக்கியே அறைகூவல்

    லெபனானுக்குள் இஸ்ரேல் நுழைந்தால் ஒரு முழுமையான போரில் இஸ்ரலை இரான் எதிர்த்து நிற்கும் என்று அந்நாட்டு சார்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மற்றொருமத்திய கிழக்கு நாடான துருக்கியே நாட்டின் அதிபர் தாயிப் எர்தோகான் நேற்று அந்நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் செய்து வரும் வெறுக்கத்தக்க நடவைக்கைகளை பார்த்து நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்.

    அவசியம் ஏற்பட்டால் இதற்கு முன்னதாக லிபியா மற்றும் அஜர்பைஜானின் நாகோர்னோ- காராபாக் [Nagorno-Karabakh] பகுதிகளில் நுழைந்ததுபோல் துருக்கியே இஸ்ரேலுக்குள்ளும் நுழையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

     பாலஸ்தீன இஸ்ரேல் போர்

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1200 க்கும் அதிகாமானோர் கொல்லப்பட்டனர். பலர் பிணைக் கைதிகளாக பிடித்துச்செல்ப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுப்பதாகக் கூறி பாலஸ்தீனத்தின் காசா, ரஃபா உள்ளிட்ட நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த 9 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 39,324 பேர் உயிரிழந்துள்ளனர். 90,830 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    போர் பதற்றம்

    ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஏமனில் இருந்து ஹவுதிகளும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாலஸ்தீனத்துடனான இந்த போர் மொத்த மத்திய கிழக்குக்கு எதிரான போராக மாறும் வாய்ப்புகள் தென்படத் தொடங்கியுள்ளது உலக அரசியலில் நடுக்கத்தை ஏற்படுத்தியள்ளது.

    தூங்கும் அமைதிப் பேச்சுவார்த்தை

    போரை நிறுத்த ஐநா மற்றும் அமெரிக்க நாடுகளின் முயற்சிகள் எதுவும் தற்போதுவரை பலனளிக்கவில்லை. ஒரு புறம் போரை நிறுத்தவும், மறுபுறம் இஸ்ரேலுக்கு நிதி வழங்கி வருகிறது. தற்போது நடந்துள்ள ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இஸ்ரலின் பாதுகாப்பை இரும்புக்கரம் கொண்டு உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார். 

    ×