என் மலர்
நீங்கள் தேடியது "Hezbollah"
- தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள சாலையில் கட்டிட இடிபாடுகள் சிதறிக்கிடந்தன.
- பலியானவர்களின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் 2 ஆண்டு களுக்கும் மேலாக போர் நடந்தது. இந்த போரின் போது காசா நகரம் மீது இஸ்ரேல் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இந்த போரின் போது ஹமாஸ் படையை லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படை ஆதரித்தது. இதையடுத்து இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா படைக்கும் இடையே மோதல் நடைபெற்று வந்தது. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், ஹிஸ்புல்லா படையை குறிவைத்து லெபனானில் அவ்வப்போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடைசியாக கடந்த ஜூன் மாதம் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதன் பிறகு எந்த தாக்குதலும் நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள புகா் பகுதிகளில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. மூத்த ஹிஸ்புல்லா படை தலைவரான அலி தப்தாவை குறிவைத்து அங்குள்ள கட்டிடம் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. 9 மாடி கட்டிடத்தின் 3-வது மற்றும் 4-வது தளங்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் பொது மக்களில் 5 பேர் கொல்லப் பட்டனர். 28 போ் படுகாயம் அடைந்தனா். இதை லெபனான் சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது. பலியானவர்களின் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
தாக்குதல் நடந்த பகுதியில் உள்ள சாலையில் கட்டிட இடிபாடுகள் சிதறிக்கிடந்தன. தெருவில் நிறுத்தப்பட்டு இருந்த ஒரு கார் சேதம் அடைந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் மீட்பு படையினர் உயிர் பிழைத்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கட்டிடத்தில் இருந்து புகை வெளிவந்து கொண்டிருந்தது.
சம்பவ இடத்துக்கு ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மீட்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பாதுகாப்புக்காக அந்த இடத்தில் லெபனான் வீரர்கள் குவிக்கப்பட்டனர். கட்டிடத்தின் மீது 3 ஏவுகணைகள் வீசப்பட்டதாக லெபனானின் அதிகாரப்பூர்வ தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் உள்ள ஹரேத் ஹிரீக் பகுதியில் இந்த தாக்குதல் நடந்தது. இது ஹிஸ்புல்லா படையினர் ஆதிக்கம் செலுத்தும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் இந்த தாக்குதலுக்கான உத்தரவை வழங்கியதாக கூறியுள்ளது. 'பெய்ரூட்டின் மையப்பகுதியில் பயங்கரவாத அமைப்பின் கட்டமைப்பையும், மறுசீரமைப்பையும் வழி நடத்தி வந்த ஹிஸ்புல்லா தலைமை தளபதியை இஸ்ரேல் ராணுவம் தாக்கியது' என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 'இஸ்ரேல் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் தனது நோக்கங்களை அடைவதற்கான செயல்பாட்டில் உறுதியாக உள்ளது' என்றும் கூறியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி இஸ்ரேல் கட்ஸ் கூறுகையில், 'இஸ்ரேலுக்கு எதிராக கையை உயர்த்தும் எவரின் கையும் வெட்டப்படும், இஸ்ரேலின் அதிகபட்ச அமலாக்க கொள்கை தொடரும்' என்று எச்சரித்தார்.
ஹிஸ்புல்லா படையினர் மீண்டும் ஆயுதங்களை ஏந்தக்கூடாது, அந்த படை மீண்டும் கட்டமைக்கப்படக்கூடாது என்று இஸ்ரேல் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது. மேலும் இஸ்ரேலுக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு லெபனான் அதிபா் ஜோசப் ஓன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- கடந்த ஜூன் மாதத்திற்குப் பின் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
- துல்லியமான தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு இன்று லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் கடுமையான வகையில் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
துல்லியமான தாக்குதல் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஹிஸ்புல்லா இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கீழே போடுமாறு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. லெபனான அரசு, ஹிஸ்புல்லா அமைப்பினரை ஆயுதமில்லா அமைப்பினராக்க ராணுவத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதேவேளையில் ராணுவ திறனை மீண்டும் கட்டமைக்க ஹிஸ்புல்லா முயற்சி செய்து வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், லெபனான் அரசு அதை மறுத்துள்ளது.
- ஜோர்டான், லெபனான், சிரியா போன்ற நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய 'கிரேட்டர் இஸ்ரேல்' திட்டத்தை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும்
- ஒப்பந்தத்தில் உள்ள ஆயுதங்களை கைவிடுதல், காசா நிர்வாகத்திலிருந்து விலகுதல் ஆகியவற்றை ஹமாஸ் ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காசாவில் போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்வைத்த திட்டத்தில் பல அபாயங்கள் நிறைந்துள்ளதாக லெபனானின் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிம் குற்றம் சாட்டியுள்ளார்.
போரில் அடைய முடியாததை அரசியல் ரீதியாக இந்த ஒப்பந்தம் மூலம் இஸ்ரேல் அடைய முயல்வதாகவும், இது பாலஸ்தீனியர்களின் நிலத்தைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜோர்டான், லெபனான், சிரியா போன்ற நாடுகளின் பகுதிகளை உள்ளடக்கிய 'கிரேட்டர் இஸ்ரேல்' திட்டத்தை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும் என நயீம் காசிம் வலியுறுத்தினார்.
ஒப்பந்தத்தை ஏற்பதா, வேண்டாமா என்ற இறுதி முடிவு ஹமாஸின் கையில் தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
டிரம்ப்பின் திட்டத்தின்படி இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுக்க ஹமாஸ் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ஹிஸ்புல்லாவின் இந்தக் கருத்து வந்துள்ளது.
இருப்பினும், ஒப்பந்தத்தில் உள்ள ஆயுதங்களை கைவிடுதல், காசா நிர்வாகத்திலிருந்து விலகுதல் ஆகியவற்றை ஹமாஸ் ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ISYF) போன்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் கனடாவில் நிதி திரட்டுகின்றன.
- பயங்கரவாதம் நாட்டிற்குள்ளேயே ஆதரவைப் பெறுகிறது என்பதை கனடா வெளிப்படையாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை.
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் உட்பட பல பயங்கரவாத அமைப்புகள் கனடாவில் நிதி உதவி பெறுவது அம்பலமாகி உள்ளது.
கனடா நிதி அமைச்சகம் 'கனடாவில் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவி மதிப்பீடு-2025' என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், "கனடிய குற்றவியல் சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லா, பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு (ISYF) போன்ற காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் கனடாவில் நிதி திரட்டுவதாக உளவுத்துறை மற்றும் காவல்துறை வட்டாரங்கள் அடையாளம் கண்டுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி மற்றும் வங்கிகள் மூலம் இந்த நிதி திரட்டல் நடத்தப்படுகிறது. இந்திய மாநிலமான பஞ்சாபில் ஒரு சுதந்திர அரசை நிறுவுவதற்காக காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை கூறுகிறது.
மேலும், பயங்கரவாத குழுக்கள் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு பெறப்பட்ட நிதியை பயன்படுத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது.
பயங்கரவாதம் நாட்டிற்குள்ளேயே ஆதரவைப் பெறுகிறது என்பதை கனடா வெளிப்படையாக ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறை.
முன்னதாக, இந்திய அரசாங்கம் கனேடிய அரசாங்கம் காலிஸ்தானியர்களை ஊக்குவிப்பதாகவும், இந்தியாவைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவும் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- லெபனான் ஐந்து மலைப் பகுதிகளை இஸ்ரேல் தன் கைவசம் வைத்துள்ளது.
- ஹிஸ்புல்லாவை ஆயுதமில்லாத நிராயுதபாணியாக்க லெபனான் அமைச்சரவை ஒப்புதல்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு லெபனானில் உள்ள ஆயுதமேந்திய குழு இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தை குவித்துள்ளது. ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் லெபனானை சேர்ந்த பலன் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் இந்த மாதம் தொடக்கத்தில் ஹிஸ்புல்லாவை ஆயுதம் இல்லாத குழுவாக்க லெபனான் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையை லெபனான் ராணுவம் மேற்கொள்ள வேண்டும் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ராணுவம் ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களை பறிமுதல் செய்து வருகிறது. இந்த நிலையில் லெபனான் அமைச்சரவை முடிவை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் ஹிஸ்புல்லா ஆயுதங்களை ஏந்தவில்லை என்றால், இஸ்ரேல் ராணுவம் லெபனானில் இருந்து வெளியேறும் எனத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் லெபனானில் உள்ள ஐந்து மலைப் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தின் காசா முனையில் உள்ள ஹமாஸ்க்கு உதவி செய்து வந்த ஹிஸ்புல்லா உறுப்பினரை குறிவைத்து தாக்குதல்.
- 3 பேர் உயிரிழந்த நிலையில், 7-க்கும் அதிகமானோர் காயம் அடைந்ததாக லெபனான் அறிவிப்பு.
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனால் இருதரப்பில் இருந்தும் ஏவுகணை, ராக்கெட் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
ஆனால் கடந்த மாதம் இறுதியில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடி கொடுப்போம் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தத்திற்கு பிறகு முதன்முறையாக தாக்குல் நடத்தியது.
இந்த நிலையில் இன்று காலை தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஒரு கட்டிடம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 7-க்கும் அதிகமானோர் பேர் காயம் அடைந்துள்ளனர் என லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்தின் காசா முனையில் உள்ள ஹமாஸ்க்கு உதவி செய்து வந்த ஹிஸ்புல்லா உறுப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இருதரப்பு எல்லைகளில் உள்ள மக்கள் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
- இஸ்ரேல் வடக்குப் பகுதியில் ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதா இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
- இதற்குப் பதிலடியாக இன்று பெய்ரூட் புறநகர் பகுதி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல்- லெபனான் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்போது இந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் முதன்முறையாக லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.
மிகப்பெரிய அளவில் வெடிகுண்டு சத்தம் கேட்டதாகவும், மிகப்பெரிய அளவில் புகை மண்டலம் வெளிப்பட்டதாகவும் நேரில் பார்த்த பத்திரிகை நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹிஸ்புல்லா ஆதிக்கம் செலுத்தி வரும் தஹியே பகுதியில் ஹிஸ்புல்லா டிரோன்களை மறைத்து வைத்திருந்த இடத்தை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பெய்ரூட் புறநகர்ப் பகுதியில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் "இஸ்ரேல் வடக்குப் பகுதியில் அமைதி இல்லாதவரை, பெய்ரூட்டிற்கும் அமைதி இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் வடக்குப்பதியில் நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என ஹிஸ்புல்லா தெரிவித்து, லெபனானை தாக்குவதற்கு ஒரு சாக்குப்போக்கை தேடுகிறது என இஸ்ரேல் மீது குற்றம்சாட்டியுள்ளது.
லெபனான் பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் ஜனவரி மாதம் இறுதிக்குள் வெளியேற வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் காலக்கெடு பிப்ரவரி 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. வடக்கு இஸ்ரேலில் இருந்து லெபனான் பகுதி வரை ஐந்து இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது.
இஸ்ரேல்- காசா இடையிலான போர் நிறுத்தம் பிப்ரவரி 2-வது வாரத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படாத நிலையில் காசா மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதன்பின் ஹிஸ்புல்லா- இஸ்ரேல் இடையே தாக்குதல் தொடங்கியுள்ளது.
- கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 41 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 50,021 ஆக உள்ளது.
- பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஐநாவின் அறிக்கை மேற்கொள் காட்டுகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1 ஆம் தேதி முடிவுக்கு வந்ததை அடுத்து மீண்டும் போர் தொடங்கியுள்ளது.
கடந்த 5 நாட்களில் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், லெபனானில் மீதும் இஸ்ரேலின் சமீபத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்ததாக காசா சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் பதிவான 41 உயிரிழப்புகளையும் சேர்த்து தற்போது மொத்த பலி எண்ணிக்கை 50,021 ஆக உள்ளது. மேலும் அதன் அறிக்கையில் இதுவரை 113,000 க்கும் மேற்பட்டோர் போரில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் எத்தனை பேர் ஹமாஸ் அமைப்பினர், எத்தனை பேர் பொதுமக்கள் என அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்ற ஐநாவின் அறிக்கை மேற்கொள் காட்டுகிறது.


காசா மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏமனின் ஹவுதிகள் தொடர்ந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளைத் ஏவி தாக்கி வருகின்றனர்.
இதில் ஈரானின் தொடர்பு இருப்பதாக இஸ்ரேல் சந்தேகிக்கிறது. இதன் காரணமாக, இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாவினர் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் ஏவி வருகின்றனர்.
ஹமாஸ் அமைப்பும் ஏவுகணை தாக்குதலைகளை தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட போர் நிறுத்தத்தின்படி பணய கைதிகள் பரிமாற்றம் நடந்தது. ஆனால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் காசாவில் நிலவிய தற்காலிக அமைதி தற்போது வெடிகுண்டுகளால் மீண்டும் முற்றாக சீர்குலைந்து வருகிறது.


கடந்த 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் இருந்து இஸ்ரேல், காசா, ராஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் பக்கம் 1200 பேர் வரை உயிரிழந்தனர். அதற்கு விலையாக காசாவில் தற்போது 50,021 உயிர்களை இஸ்ரேல் குடித்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றே தற்போதைய தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

- காசா மீது தாக்குதலை அதிகப்படுத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
- இதனைத் தொடர்ந்து லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஏழு வார போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், போர் நிறுத்தம் நீட்டிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறவில்லை.
இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் இன்னும் அதிகரிக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் லெபனானில் இருந்து இஸ்ரேலின் மெடுலா நகரை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை வானில் இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்திருந்தது. எச்சரிக்கை விடுத்த நிலையில் லெபனான் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் 2023ஆம் அண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனான்- இஸ்ரேல் எல்லையில் உள்ள இஸ்ரேல் நகரங்கள் மீது லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட், ஏவுகணை, டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா சண்டையில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலைச் சேர்ந்த 60 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.
லெபனான்- இஸ்ரேல் இடையே கடந்த நவம்பர் மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அப்போது ஜனவரி மாதம் இறுதிக்குள் லெபனான் பகுதியில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது, பின்னர் பிப்ரவரி 18-ந்தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. தங்கள் நாட்டில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற உத்தரவிடக்கோரி லெபனான் ஐ.நா. உதவியை நாடியுள்ளது.
- ஹிஸ்புல்லாவினர் சிரியாவிற்குள் நுழைந்து மூன்று ராணுவ வீரர்களைக் கடத்தினர்.
- மக்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் இணையத்திலும் உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது.
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாவினர் கடந்த சனிக்கிழமை சிரியாவிற்குள் நுழைந்து மூன்று ராணுவ வீரர்களைக் கடத்தி லெபனான் எல்லையில் அவர்களைக் கொன்றதாக சிரிய இடைக்கால அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது.
ஆனால் ஹிஸ்புல்லா தங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிக்கை வெளியிட்டது. இதற்கிடையே இந்த சம்பவத்தால் லெபனான் - சிரியா இல்லையில் தற்போது மோதல் வெடித்தது.
எல்லையில் சிரிய வீரர்களைக் கொன்ற ஹிஸ்புல்லா கூட்டங்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக சிரிய ராணுவம் வட்டாரங்ககள் தெரிவிக்கின்றன.

எல்லையில் உள்ள சிரிய கிராமமான ஹெர்மல் மீது பீரங்கிகள் மூலம் ஷெல் தாக்குதல் நடந்துள்ளது. இதில் இருந்து மக்கள் தப்பிச் செல்லும் காட்சிகள் இணையத்திலும் உள்ளூர் ஊடகங்களிலும் வெளியானது.
பதிலாக வடகிழக்கு லெபனானில் உள்ள எல்லை நகரமான அல்-காசர் மீது சிரியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக லெபனானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மூத்த ஹிஸ்புல்லா சட்டமன்ற உறுப்பினர் ஹுசைன் ஹாஜ் ஹசன் பேட்டி ஒன்றில், சிரியாவை சேர்ந்த போராளிகள் லெபனான் எல்லைக்குள் நுழைந்து அங்குள்ள எல்லை கிராமங்களைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டினார்.
லெபனானின் அல்-காசர் எல்லைக் கிராமத்தில் நிலைகொண்டுள்ள, சிரிய இராணுவத்திற்கும், முன்னாள் சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத்துடைய ஆதரவு குழுக்களுக்கும், ஆயுதமேந்திய லெபனான் ஷியா குழுக்களுக்கும் இடையேய சமீப காலமாக வன்முறை அதிகரித்த வண்ணம் உள்ளது. சிரியாவும், லெபனானும் எல்லையில் தங்கள் படையினரை அதிகம் நிலைநிறுத்தி வருகின்றன.
இதற்கிடைய சிரியாவின் லடாகியாவில் உள்ள ஒரு ஆயுதப் பிரிவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டனர் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சிரியாவின் சிவில் பாதுகாப்புத் துறை அறிவித்தது. நான்கு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் உலோகத் துகள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் வெடிப்புவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- அக்டோபர் 7 அன்று, இஸ்ரேலில் ஹமாஸ் 1400க்கும் மேற்பட்டவர்களை கொன்றது
- எங்கள் கவனத்தை திசை திருப்ப ஈரான் முயல்கிறது என இஸ்ரேல் கூறியுள்ளது
லெபனான் நாட்டை மையமாக கொண்டு செயல்படும் அமைப்பு, ஹிஸ்புல்லா (Hezbollah).
1992ல் தொடங்கப்பட்ட இந்த அமைப்பிற்கு அந்நாட்டு அரசாங்கத்தின் ஆதரவு இருந்து வருகிறது. அந்நாட்டில் அது ஒரு அரசியல் கட்சியாகவும் தன்னை முன்னிறுத்தி கொண்டுள்ளது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் தீவிரமாக எதிர்த்து வரும் இந்த அமைப்பு, மத்திய தரைகடல் பகுதியில் அந்த இரு நாடுகளின் ஆதிக்கத்தை ஒழிக்க போராடி வருகிறது.
கடந்த அக்டோபர் 7 அன்று தன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி 1400க்கும் மேற்பட்ட மக்களை கொன்று, 150க்கும் மேற்பட்டவர்களை சிறை பிடித்து சென்ற ஹமாஸ் அமைப்பின் மீது போர் அறிவித்த இஸ்ரேல், அந்த அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதியெடுத்துள்ளது. இஸ்ரேலி ராணுவ படையினர் (IDF) பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் மீது வான்வழியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இது மட்டுமின்றி தரைவழி தாக்குதலை தொடங்க போவதாக அறிவித்திருக்கும் இஸ்ரேல், மும்முரமாக போரிட்டு வரும் வேளையில் இஸ்ரேல்-லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதை எதிர் கொண்டு பதில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் வந்தால் எதிர் கொள்ளவும் தயார் நிலையில் உள்ளது.
இத்தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் (Rear Admiral) டேனியல் ஹகரி (Daniel Hagari) கருத்து தெரிவித்தார்.
அவர் இது குறித்து தெரிவித்ததாவது:
நாங்கள் காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போரிட்டு வருகிறோம். எங்கள் கவனத்தை திசை திருப்ப லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பினர் எல்லையில் தொடர் துப்பாக்கி சூட்டை நடத்தி வருகின்றனர். இது ஈரான் நாட்டின் தூண்டுதலால் ஈரானின் துணையுடன் நடைபெறுகிறது.
இவ்வாறு ரியர் அட்மிரல் குற்றம் சாட்டி பேசினார்.
- ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
- லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த வருகின்றனர்.
இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் மீது போர் பிரகடன் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது.
யாரும் எதிர்பார்க்காத வகையில் மூர்க்கத்தனமான வகையில் தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவின் வடக்குப்பகுதி சீர்குலைந்துள்ளது. தற்போது தெற்கு பகுதியிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் பாலஸ்தீன மக்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தங்குவதற்கு இடமின்றி அல்லாடும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியபோது, லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டு முனைகளில் இருந்து வரும் தாக்குதலை எதிர்கொண்டு இஸ்ரேல் காசாவை துவம்சம் செய்தது.
இதனால் ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போர் பிராந்திய போராக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால் எகிப்து, ஈரான் மற்றும் அரபு நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை.
இருந்த போதிலும் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் ஹிஸ்புல்லாவிற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் "ஹிஸ்புல்லா முழு அளவில் போரை தொடங்க முடிவு செய்தால், அதன் சொந்த கைகளால் பெய்ரூட்டை காசாவாகவும், தெற்கு லெபனானை கான் யூனிஸ் நகராகவும் மாற்றும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே ஹமாஸ்- இஸ்ரேல் மோதலை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. நேற்று அதிபர் ஜோ பைடன் நேதன்யாகு மற்றும் ஜோர்டான் அதிபர் அப்துல்லா ஆகியோரிடம் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
நேதன்யாகுவிடம் ஜோ பைடன் பேசும்போது, காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக்கைதிகள் மற்றும் மேற்கு கரையில் பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது குறித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நேதன்யாகு ஹிஸ்புல்லாவிற்கு எச்சரிக்கை விடுத்தது குறித்து தெரிவிக்கப்படவில்லை.
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.






