search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Israel Army"

    • இறுதிக்கட்ட போருக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது.
    • கடந்த 2 வாரமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாவில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரில் 38 ஆயிரம் பேர் வரை பலியாகி விட்டனர்.

    இந்த நிலையில் காசாவில் இறுதிக்கட்ட போருக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. கடந்த 2 வாரமாக தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    இதையடுத்து காசாவில் இருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட பாதை வழியாக உடனே வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    போர் நடவடிக்கையை அதிகப்படுத்த இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் தற்போது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இஸ்ரேல் ராணுவம் எச்ரிக்கையால் அவர்கள் பீதி அடைந்துள்ளனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கை மிகவும் கவலை அளிப்பதாக ஐ.நா. தெரிவித்து இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஹமாஸை அழிக்கும் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.
    • ஹமாஸ் மீண்டும் அச்சுறுத்தலாக உருவாகலாம்.

    ஹமாஸ் அமைப்பை அகற்றுவது செய்ய முடியாத காரியம் என்று இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த செய்தி தொடர்பாளர் தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசு வெளியிட்ட அறிவிப்பில், ஹமாஸ் அமைப்பை அழிக்கும் முடிவில் உறுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் சார்பில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது. இதன் விளைவாக பேரழிவு ஏற்பட்டுள்ள போதிலும், ஹமாஸை அழிக்கும் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.

    ஹமாஸ் உடனான போர் குறித்து பேசிய இஸ்ரேல் மூத்த செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி, "ஹமாஸ் அமைப்பை அழிப்பது, மக்களின் கண்களில் மண் வீசுவதற்கு சமம். இறுதியில் சரியான மாற்று வழியை வழங்காத பட்சத்தில், ஹமாஸ் மீண்டும் அச்சுறுத்தலாக உருவாகலாம். ஹமாஸ் ஒரு சித்தாந்தம். அதனை ஒழிக்கவே முடியாது," என்று தெரிவித்தார்.

    இவரது கருத்துக்கள் பெரும் பேசுபொருளாக மாறியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஹமாஸ்-ஐ முழுமையாக ஒழித்துக் கட்டும் வரை எங்களின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று தெரிவித்தார்.

    "பிரதமர் நேதன்யாகு தலைமையில் கூடிய அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மந்திரிசபை கூட்டத்தில் ஹமாஸ் ராணுவம் மற்றும் நிர்வாக அமைப்பு கொண்ட கட்டமைப்பை முழுமையாக ஒழித்துக் கட்டுவது தான் இந்த போரின் மிகமுக்கிய குறிக்கோள்களில் ஒன்று. இஸ்ரேலிய பாதுகாப்பு படை இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கும்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும், ஹமாஸ் அமைப்பை சித்தாந்த முறையில்தான் ஹகாரி குறிப்பிட்டார், அவர் தெரிவித்த கருத்துக்கள் தெளிவாகவே இருந்தது என்று இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

    • காசா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேலுக்கும், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே பல மாதமாக போர் நடந்து வருகிறது. ரபாவிலும் இருதரப்புக்கும் இடையே மோதல் நடக்கிறது.

    ஹமாஸ் பயங்கரவாதிகளை முற்றிலும் அழிக்கும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய காசாவில் உள்ள நுசி ராட்டில் பள்ளிக்கூடத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கூறி இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தரப்பும் உறுதிசெய்துள்ளது.

    இதுதொடர்பாக ஹமாஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அப்பாவி மக்கள்மீது தாக்குதல் நடத்திவிட்டு அதை சமாளிக்கப் பொய்க் கதைகளை இஸ்ரேல் சொல்லி வருகிறது என தெரிவித்தார்.

    • ரஃபாவின் மத்திய பகுதியில் ஹமாஸ் சுரங்கங்களை அழிக்கப்பட்டது.
    • ஹமாஸ் ஆயுத கிடங்கு நகர் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது.

    ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா முனையில் இஸ்ரேல் எல்லையில் உள்ள காசாவின் வடக்குப் பகுதியில் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல் நடத்தியது.

    கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நோக்கி படைகளை நகர்த்தி வந்தது. தற்போது ரஃபா நகரை தவிர்த்து மற்ற பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் சீர்குலைத்துள்ளது.

    ஹமாஸ்க்கு எதிராக போர் தொடுத்ததன் நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால் ரஃபா மீது தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்தது.

    எகிப்து எல்லையில் உள்ள ரஃபா நகரில் காசாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் (சுமார் 10 லட்சம் பேர்) வசித்து வருகிறார்கள். இதனால் இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்தினால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என உலக நாடுகள் ரஃபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    மேலும், ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றமும் ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த தடைவிதித்தது, ஆனால் முழு அளவில் தரைவழி தாக்குதல் நடத்தமாட்டோம் ஒரு குறிப்பிட்ட அளவில் தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் தெரிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே கடந்த வார இறுதியில் தற்காலிக முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 40-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். இது துரதிருஷ்டவசமான தவறு என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்திருந்தார்.

    இதனால் ரஃபா நகர் மீது தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் யோசிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஃபாவின் மத்திய பகுதியில் ராணுவம் உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ரஃபாவின் மத்திய பகுதியில் ராக்கெட் லாஞ்சர்களை கண்டுபிடித்தோம். ஹமாஸ் அமைப்பின் சுரங்கங்கள் மற்றும் ஆயுத கிடங்கு நகரை அகற்றியுள்ளோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் ராணுவம் கடந்த 6-ந்தேதி ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. எகிப்து எல்லையுடன் உள்ள கிழக்கு மாவட்டங்கள் மீது தங்களது தாக்குதலை அதிகரித்து வருகின்றன. தற்போது மேற்கு மாவட்டமான டெல் அல்-சுல்தானில் இஸ்ரேல் ராணுவம் நுழைந்துள்ளது.

    இங்கு இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ்க்கும் இடையில் கடுமையான சண்டை நீடித்து வருவதாக தகவல் வெளியாகியள்ளது.

    மத்திய ரஃபாவின் எந்த பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.

    • நிவாரணப் பொருட்கள் வாங்க கூடியிருந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு.
    • இந்த துப்பாக்கிச்சூட்டில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா மிகப்பெரிய பாதிப்பை அடைந்துள்ளது. அங்குள்ள பொதுமக்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். வடக்கு காசாவில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பட்டினியால் உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இதனால் அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தால் மட்டுமே மனிதாபிமான அடிப்படையிலான் உதவிப் பொருட்கள் அங்குள்ள மக்களுக்க சென்றடையும் நிலை உள்ளது.

    இந்த நிலையில்தான் காசாவின் மேற்கு பகுதியில் நிவாரணப் பொருட்கள் வழங்க இஸ்ரேல் ராணுவம் சம்மதம் தெரிவித்தது. லாரிகளில் நிவாரணப் பொருட்கள் சென்றது. அப்போது லாரிகளை முற்றுகையிட்டு உணவுப் பொருட்களை வாங்க மக்கள் முண்டியடித்தனர்.

    அப்போது பாதுகாப்பிற்கான நின்றிருந்த இஸ்ரேல் ராணுவத்தை நோக்கி மக்கள் வந்ததாகவும், தங்களுக்கு எதிராக தாக்குதல் மிரட்டல் என நம்பியதாகவும் கூறி கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதா இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இதனால் 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இச்சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்தது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உடனடியாக போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் காசாவில் அமெரிக்க ராணுவம வான்வழியாக உதவிப் பொருட்களை காசா மக்களுக்கு வழங்கும். மேலும் என்னென்ன வழிகள் இருக்கிறது. அவைகள் அனைத்தும் ஆராயப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜோர்டான் மற்றும் சில நாடுகளுடன் இணைந்து இந்த பணியில் ஈடுபடப்போவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    • ஒரு வாரம் இடைக்கால போர் நிறுத்தம் காரணமாக சுமார் 100 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
    • 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் சுமார் 23 லட்சம் பாலஸ்தீனர்கள் வசித்து வருகிறார்கள். இஸ்ரேல் தாக்குதலால் சுமார் 85 சதவீத மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி முகாமில் தங்கியுள்ளனர்.

    வடக்கு காசா பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், தெற்கு பகுதிகளிலும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் தங்க இடமின்றி அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு வற்புறுத்திய போதிலும், போர் நிறுத்தப்படவில்லை.

    இந்த நிலையில் நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே இஸ்ரேல் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் அமைப்பினர் எச்சரித்துள்ளனர். அதேவேளையில் காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினரின் அச்சுறுத்தல் இஸ்ரேலுக்கு இல்லை என்பது உறுதி செய்யப்படும் வரை தாக்குதல் தொடரும். இன்னும் மாதம் கணக்கில் போர் நீடிக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    கடந்த அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.

      இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    சுமார் ஒரு வாரம் போர் இடைநிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் அமைப்பினர் சுமார் 100 பிணைக்கைதிகளை விடுவித்தனர். ஒரு பிணைக்கைதிக்கு 3 பாலஸ்தீனர்கள் என்ற அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களை இஸ்ரேல் விடுதலை செய்தது.

    • காசாவில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.
    • ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போர் பல மாதங்கள் நீடிக்கலாம் என இஸ்ரேல் சொல்கிறது.

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 2 மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது. போர் விமானங்கள் மூலம் குண்டுவீச்சு மற்றும் ஏவுகணை வீச்சு நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் காசாவுக்குள் இஸ்ரேல் தரைப்படையும் தாக்குதல் நடத்துகிறது. முதலில் வடக்கு காசாவில் தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், அதன்பின் தனது தாக்குதலை விரிவுபடுத்தியது. மத்திய, தெற்கு, காசாவிலும் குண்டுகள் வீசப்படுகிறது.

    இஸ்ரேல் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், அப்பாவி பொதுமக்கள் என பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. காசா முனை பகுதி முழுவதும் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதால் மக்கள் உயிர் பயத்தில் இருக்கிறார்கள்.

    காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் மத்திய காசாவிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. மத்திய காசா பகுதியில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகர்ப்புற அகதிகள் முகாம்களில் தரைவழி தாக்குதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் அங்கு தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வடக்கு, தெற்கு காசாவை தொடர்ந்து மத்திய காசாவிலும் தரைவழி தாக்குதல் விரிவுப்படுத்தப்பட்டுள்ளதால் போர் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

    இதற்கிடையே இஸ்ரேல் ராணுவ தலைவர் ஹெர்சி ஹலேவி கூறும்போது, ஹமாஸ் மீதான போர் இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கலாம். ஹமாஸ் அமைப்பை தகர்ப்பதில் குறுக்குவழிகள் எதுவும் இல்லை. உறுதியான மற்றும் தொடர்ச்சியான சண்டைகள் மட்டுமே நடக்கின்றன. நாங்கள் ஹமாசின் தலைமையை அழிப்போம். அதற்கு சில மாதங்கள் எடுக்கலாம் என்றார்.

    இந்த நிலையில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியிலும் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

    • கடந்த ஒரு வாரத்தில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 15 பேர் பலி.
    • பாலஸ்தீனத்தில் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்

    காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வடக்கு, தெற்கு, மத்தியப் பகுதி என காசாவின் அனைத்து பகுதியிலும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் சொல்கிறது.

    தற்போது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக நேருக்கு நேர் தரைவழியில் சண்டையிட்டு வருவதால் ராணுவ வீரர்களின் பலி எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இதுவரை 154 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

    கடந்த வாரத்தில் மட்டும் 15 வீரர்கள் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது. தெய்ர் அல்-பலாஹ் பகுதியில் உளள் மகாஜி அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக காசா சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதலில் குறைந்தது 60-க்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 15 வீரர்களை இழந்ததையடுத்து, மிகவும் அதிகப்படியான விலை என இஸ்ரேல் ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    மேற்கு கரையில் உள்ள பெத்லகேம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இன்றி களையிழந்து காணப்படுகிறது. இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்திற்கு எகிப்து தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், 240 பேர் பிணைக்கைதிகளை பிடித்துச் சென்றனர். தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர்.

    அதனைத் தொடர்ந்து ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசாவின் தெற்கு பகுதியை குறிவைத்து கண்மூடித்தனமாக வகையில் தாக்குதல் நடத்தியது. தற்போது காசா முழுவதும் தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 20,400 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    • இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தியதால் சுமார் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
    • ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது.

    இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. கடந்த இரண்டரை மாதங்களாக போர் நீடித்து வருகிறது.

    இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் வடக்கு காசா சீர்குலைந்துள்ளது. பழைய நிலைக்கு வர அது நீண்ட காலம் எடுக்கும். காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு உலகின் பெரும்பாலான நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    பாலஸ்தீன மக்களை காப்பாற்றுவதற்காக உடனடியான போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வருகின்றனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில எப்படியாவது போர் நிறுத்த தீர்மானத்தை நிறைவேற்றிட முயற்சி செய்து வருகிறது.

    இதற்கிடையே இஸ்ரேல் ராணுவம் காசாவை அழிக்க நினைக்கிறது. ஒரு இனத்திற்கு எதிராக இனப்படுகொலை செய்கிறது என போர்க்கொடி எழுந்துள்ளது.

    ஆனால், காசாவில் இருந்து இனிமேல் இஸ்ரேல் மண்ணுக்கு ஆபத்து இல்லை என்பதை உறுதி செய்யும்வரை போர் நீடிக்கும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    ஆயுத உதவி செய்து வரும் அமெரிக்காவும் போர் நிறுத்தம் தேவை என இஸ்ரேலை வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுறித்து இமானுவேல் மேக்ரான் கூறுகையில் "பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதை, காசாவை தரைமட்டமாக்குவது என பொருள் கொள்ளக்கூடாது" என்றார்.

    அதேவேளையில் "இஸ்ரேல் இந்த பதிலடி தாக்குதலை நிறுத்த வேண்டும். ஏனென்றால், இந்த தாக்குதல் பொருத்தமானது அல்ல. அனைத்து உயிர்களும் ஒரே மதிப்பிலானவை. அவர்களை நாங்கள் பாதுகாக்கிறோம். தன்னை பாதுகாத்து கொள்வதும், பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுவதும் இஸ்ரேலுடைய உரிமை. பொதுமக்களை பாதுகாப்பதற்கு மனிதாபிமான போர் நிறுத்தம் வழிவக்கும்" என்றார்.

    இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் ஆவார்கள்.

    அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 240-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

    • சர்வதேச நாடுகள் போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வரும் நிலையில் இஸ்ரேல் கடும் தாக்குதல்.
    • ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தி வந்த மிகப்பெரிய சுரங்கபாதை கண்டுபிடிப்பு.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் காசாவில் கண்மூடித்தனமான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் வரை போர் நிறுத்தம் செய்யப்படாது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    உலக நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்த போதிலும், தாக்குதலை சிறிதும் குறைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவில் மூர்க்கத்தனமாக வகையில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

    அதோடு 1000 பேரை பிடித்து வைத்துள்ளது இஸ்ரேல் ராணுவம். ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, கைகளை தூக்கினால் நாங்கள் அவர்களை கைது செய்வோம். நாங்கள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தமாட்டோம் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

    உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சுரங்கப்பாதையை கண்டு பிடித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.

    எராஸ் எல்லைப் பகுதியில் இந்த சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்துள்ளது. சிறிய வகை வாகனம் செல்லும் வகையில் மிகப்பெரியதாக உள்ளது எனத் தெரியவந்துள்ளது. இந்த துரங்கப்பாதை பல கோடி ரூபாய் செலவில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டுள்ளது. அனைத்து வகை வசதிகளும் கொண்டதாக உள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    • ஹமாஸின் வலுவான பகுதியாக அறியப்படும் ஷெஜையா பகுதியில் கடும் சண்டை.
    • ஹமாஸ் அமைப்பினருக்கும்- இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே நேரடி சண்டை நடைபெற்று வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வடக்கு காசா மீது தாக்குதல் நடத்திய நிலையில் தெற்கு காசா பகுதிகளிலும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    ஹமாஸின் முக்கிய இடமாக கருதப்படும் ஷெஜையா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது. இந்த இடத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்தினற்கும் இடையே நேரடி சண்டை நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலியாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் சண்டையின்போது, இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய நபர்கள் எனக் தவறுதலாக கருதி மூன்று பிணைக்கைதிகளை சுட்டுக்கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    "இஸ்ரேல் ராணுவம் நேற்று தவறுதலாக மூன்று பிணைக்கைதிகளை சுட்டுக்கொலை செய்துள்ளது. அவர்கள் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல் தரக்கூடியவர்கள் என தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு, இந்த நிகழ்வில் இருந்து உடனடியாக பாடம் கற்றுக் கொள்ளப்பட்டு, போரிட்டு வரும் வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

    மேலும் சோகமான சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.

    சுட்டுக்கொலை செய்யப்பட்ட மூன்ற பேர்களில் இருவரின் பெயரை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று ஒருவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

    அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகள் 240-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். தாக்குதலை தீவிரப்படுத்தி அவர்கள் மீட்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் சண்டையிட்டு வருகிறது.

    • உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.
    • நிபந்தனைகளின்றி பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலில் தாக்குதலில் வடக்கு காசா முற்றிலும் சீர்குலைந்ததுள்ளது.

    பாலஸ்தீன மக்கள் மனிதாபிமான உதவிகள் கிடைகாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும். பிணைக்கைதிகள் விடுவிக்க வேண்டும் என ஐ.நா. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெரும்பாலான உலக நாடுகளும் இதை வலியுறுத்துகின்றன.

    அரபு நாடுகள் ஏற்கனவே இது தொடர்பான தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. அப்போது அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கப்படவில்லைஎன பெரும்பாலான நாடுகள் விமர்சனம் செய்திருந்தன.

    இந்த நிலையில்தான் தற்போது ஐ.நா.வில் உடனடியாக காசாவில் போர் நிறுத்தம் தேவை என மீண்டும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தில் உடனடியாக நிபந்தனையின்றி பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 153 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரியா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. அர்ஜென்டினா, உக்ரைன், ஜெர்மனி உள்ளிட்ட 23 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.

    ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்படும் அளவிற்கு சட்டப்பூர்வமாக எடுத்துக் கொள்ளப்படாது. உலக மக்களுக்கு ஒரு சம்பவத்தில் உலக நாடுகள் எடுக்கும் முடிவை இதன் மூலமாக வலியுறுத்த மட்டுமே செய்ய முடியும்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×