என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹமாஸ்"

    • காசாவில் பாதுகாப்பை வழங்க சர்வதேச நிலைப்படுத்தல் படையை அங்கீகரித்தல்.
    • டிரம்பால் மேற்பார்வையிடப்படும் அமைதி வாரியம் என்ற இடைக்கால அதிகாரத்தை அங்கீகரித்தல்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு பல்வேறு அம்சங்கள் அடங்கிய திட்டத்தை அறிவித்தார். இதை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

    காசாவின் திட்டத்தில் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது முதற்கட்ட கோரிக்கையாகும். இதை இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்L உயிரோடு இருந்த 20 இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.

    இந்த நிலையில் காசாவின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால திட்டத்திற்கான டொனால்டு டிரம்பின் திட்டத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பான ஐ.நா, தீர்மானத்தை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஏற்றுக் கொண்ட நிலையில், ஹமாஸ் நிராகரித்துள்ளது.

    போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் பாதுகாப்பை வழங்க சர்வதேச நிலைப்படுத்தல் படையை அங்கீகரித்தல், டொனால்டு டிரம்பால் மேற்பார்வையிடப்படும் அமைதி வாரியம் என்ற இடைக்கால அதிகாரத்தை அங்கீகரித்தல் மற்றும் ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசிற்கான சாத்தியமான எதிர்கால பாதையை திட்டமிடல் ஆகியவற்றை உள்ளடக்கிய தீர்மானத்திற்கு ஐ.நா. பாதுகாப்பு சபை ஒப்பதல் அளித்துள்ளது.

    இது தொடர்பாக நேதன்யாகு கருத்து தெரிவிக்கையில் "டிரம்பின் திட்டம் அமைதி மற்றும் செழிப்புக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில் அது காசாவை முழுமையாக ராணுவ மயமாக்குதல், ஆயுதக் குறைப்பு மற்றும் தீவிரமயமாக்கலை வலியுறுத்துகிறது" என்றார்.

    அரசு சாரா ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களை நிரந்தரமாக நீக்குதலை சர்வதேச நிலைப்படுத்தல் படை உறுதிப்படுத்தும். இது சர்வதேச சட்டத்திற்கு இணங்க தனது ஆணையை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பயன்படுத்த படைக்கு அதிகாரம் அளிக்கிறது. ஐ.நா. மொழியில் இது ராணுவ சக்தியைப் பயன்படுத்துவதாகும். இந்த தீர்மானம் பாலஸ்தீன மக்களின் அரசியல் மற்றும் மனிதாபிமான கோரிக்கைகள் மற்றும் உரிமைகளின் அளவைப் பூர்த்தி செய்யவில்லை.

    எந்தவொரு சர்வதேசப் படையும் ஐ.நா.வின் மேற்பார்வையின் கீழ் இருக்க வேண்டும் என்றும், போர் நிறுத்தத்தை கண்காணிக்க காசாவின் எல்லைகளில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும் என்றும், பாலஸ்தீன அமைப்புகளுடன் (institutions) பிரத்தியேகமாக செயல்பட வேண்டும் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    பாலஸ்தீன ஆணையம் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளது. உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஐ.நா. மற்ற அரசு நாடுகளுடன் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஜோர்டான், துருக்கி இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.

    • ஹமாஸ் அமைப்பு இதுவரை 21 உடல்களை ஒப்படைத்துள்ளது.
    • இஸ்ரேல் 285 பாலஸ்தீனர்களின் உடல்களை காசாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

    இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே கடந்த மாதம் 10ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதன் முதற்கட்டமாக பிணைக்கைதிகள்- சிறைக்கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தற்போது வரை உயிரிழந்தவர்கள் உடல்கள் இருதரப்பிலும் இருந்து ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

    ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உயிருடன் இருந்த 20 பிணைக்கைதிகளை விடுவித்தினர். அதற்குப்பதிலாக இஸ்ரேலில் சிறையில் உள்ள பாலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    பின்னர், 2023 அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் உள்பட பலர் உயிரிழந்தனர். அவர்களது உடல்களை ஹமாஸ் அமைப்பினர் காசா முனைக்கு எடுத்துச் சென்றனர். அந்த உடல்களை தற்போது ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்து வருகின்றனர். ஆனால், இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஒன்று அல்லது இரண்டு உடல்களை ஒப்படைத்து வருகிறது.

    அதன்படி உயிரிழந்த இஸ்ரேலின் ராணுவ வீரர் உடலை ஹமாஸ் நேற்று ஒப்படைத்தது. அதற்கு இணையாக 15 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது. கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை இந்த உடல்களை பெற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் இதுவரை 21 உடல்களை ஒப்படைத்துள்ளது. அதற்கு பதிலாக 285 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் ஒப்படைத்துள்ளது.

    ஹமாஸ் அமைப்பினர் ஒரு பிணைக்கைதியின் உடல்களை ஒப்படைப்பதற்கு இணையாக இஸ்ரேல் 15 உடல்களை ஒப்படைத்து வருகிறது.

    2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது போர் பிரகடனம் செய்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 68,800 பேர் கொல்லப்பட்டனர்.

    • அக்டோபர் 10 ஆம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
    • காசா மீதான இந்தத் தாக்குதல் நியாயமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

    காசாவில் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. இருந்தபோதிலும் இஸ்ரேல் காசா மீது போர் நிறுத்தத்தை மீறி தொடந்து தாக்குதல் நடந்து வருகிறது.

    இந்நிலையில் காசா மீது நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 46 குழந்தைகள் மற்றும் 20 பெண்கள் உட்பட 104 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்த வெறியாட்டத்தின் பின்னர் காசாவில் இன்று முதல் மீண்டும் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

    ராஃபா பகுதியில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு வஞ்சம் தீர்க்க இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

    இஸ்ரேலின் ராணுவ வீரர் கொல்லப்பட்டதால், காசா மீதான இந்தத் தாக்குதல் நியாயமானது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

    ஆனால், ஹமாஸ் இந்த சம்பவத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என ஹமாஸ் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.  

     

    • மொசாட் மற்றும் அமெரிக்க சிஐஏவின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார்.
    • ஹமாஸை நிராயுதபாணியாக்குவதிலும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் இந்த இராணுவம் முக்கிய பங்கு வகிக்கும்.

    காசாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதி ஒப்பந்தம் மூலம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமைதியை உறுதி செய்ய சர்வதேச படை உருவாக்கப்பட்டு காசாவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த சர்வதேச படையில் இணைய பாகிஸ்தான் தங்களின் ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சமீபத்தில், எகிப்தில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனமான மொசாட் மற்றும் அமெரிக்க சிஐஏவின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார். இதன்போது இதற்கான முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் சுமார் 20,000 வீரர்களை காசாவிற்கு அனுப்பும். காசாவில் பாதுகாப்பைக் கண்காணித்தல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல் மற்றும் மறுகட்டமைப்பு திட்டங்களில் பங்கேற்பது இந்தப் படைகளின் பொறுப்பாகும்.

    மேலும் ஹமாஸை நிராயுதபாணியாக்குவதிலும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் இந்த இராணுவம் முக்கிய பங்கு வகிக்கும்.

    இந்த படையில் இடம்பெறுவதற்கு ஈடாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து பாகிஸ்தானுக்கு பெரும் நிதி ஊக்கத்தொகையாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

    • இஸ்ரேல் இதுவரை போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை கடைபிடித்துள்ளது.
    • ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட வேண்டும்.

    இஸ்ரேல்- காசா இடையிலான டொனால்டு டிரம்பின் முயற்சியால் அமைதிக்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முதற்கட்டாக உயிருடன் உள்ள 20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.

    தாக்குதலின்போது உயிரிழந்தவர்களின் உடலையும் ஹமாஸ் அமைப்பினர் எடுத்துச் சென்றனர். அந்த உடல்களை இன்னும் முழுமையாக ஒப்படைக்கவில்லை என இஸ்ரேல் கூறுகிறது. அதேவேளையில், அதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, ஹமாஸ் விதிமுறையை மீறியதாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்துள்ளது.

    இதனால் அமைதி ஒப்பந்தத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால, அமைதி ஒப்பந்தத்தை வலிமையாக அமெரிக்காவின் முன்னிணி அதிகாரிகள், அமைச்சர்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு பயணம் செய்தவாறு உள்ளனர்.

    இன்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா, இஸ்ரேல் வந்தடைந்துள்ளார். அவர் "காசாவில் நிரந்தரமான அமைதியை உருவாக்குவதற்காக, டொனால்டு டிரம்ப் தயார் செய்த ஒரு திட்டத்தை தவிர்த்து வேறு எந்த திட்டமும் இல்லை. இது சிறந்த திட்டம். ஒரே திட்டம்தான்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், இஸ்ரேல் இதுவரை போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை கடைபிடித்துள்ளது. ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட வேண்டும். ஹமாஸ் அமைப்பு மிரட்டல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டால், அவர்கள் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்க, அமெரிக்காவின் அனுமதி இஸ்ரேலுக்கு தேவையில்லை" என்றார்.

    • இஸ்ரேல்- ஹமாஸ் இடையே இரண்டு வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்றது.
    • இஸ்ரேல்- ஹமாஸ் சண்டை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்ற சண்டை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாட்டின் தலைவர்கள் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    இந்நிலையில், காசாவில் பிறந்த பெண் குழந்தைக்கு 'சிங்கப்பூர்' என அவரின் தந்தை ஹம்தன் பெயர் சூட்டியுள்ளார்.

    போர் காலத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த அறக்கட்டளை ஒன்று மனிதாபிமான அடிப்படையில் செய்த உதவிகளுக்காக அவர்களை கௌரவிக்கும் விதமாக அந்நாட்டின் பெயரை அவர் சூட்டியுள்ளார்.

    • காசாவுக்கு சென்று ஹமாஸை ஒழிக்க கூட்டாளி நாடுகள் தயாராக உள்ளன.
    • ஹமாஸ் சரியானதை செய்வார்கள் என்று நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார் டிரம்ப்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்ற சண்டை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    பல நாட்டின் தலைவர்கள் முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதற்கிடையே நேற்று முன்னதிம், டிரம்ப் ஏற்படுத்திய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி, காசா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆனால், இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் திட்டவட்டாக மறுத்துள்ளது.

    இந்த நிலையில், அமைதி ஒப்பந்தத்தை மீறினால் ஹமாஸின் முடிவு மிக வேகமாகவும், சீற்றத்துடனும், கொடூரமாகவும் இருக்கும் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறுகையில் "நம்முடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் தொடர்ந்து மோசமாக கடந்து கொண்டால், எனது வேண்டுகோளின்படி கடுமையான படையுடன் காசாவுக்கு சென்று ஹமாஸை அழிக்கும் வாய்ப்பை வரவேற்பதாக மத்திய கிழக்கிலும், அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள நம்முடைய தற்போது சிறந்த கூட்டாளிகள் வெளிப்படையாக, வலுவாக, மிகுந்த உற்சாகத்துடன் என்னிடம் தெரிவித்தனர்.

    நான் அந்த நாடுகளிடமும், இஸ்ரேலிடமும், இதுவரை இல்லை. ஹமாஸ் சரியானதை செய்வார்கள் என்று நம்புவதாக சொல்லியுள்ளேன். அவர்கள் கடைபிடிக்கவில்லை என்றால் ஹமாஸின் முடிவு விரைவாகவும், கொடூரமாகவும் இருக்கும். உதவிக்கு அழைத்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    • டிரம்ப் முயற்சியால் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
    • 20 பிணைக்கைதிகள் உயிரோடு விடுவிக்கப்பட்டனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முயற்சியால் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (9 நாட்களுக்கு முன்) போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த போர் நிறுத்தத்தை உலக நாடுகள் வரவேற்றன.

    ஹமாஸ் அமைப்பினர் உயிரோடு இருந்த 20 பிணைக்கைதிகளையும் விடுவித்தனர். அதற்குப்பதிலாக இஸ்ரேல், சிறையில் இருந்து பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.

    நேற்று உயிரிழந்த இரண்டு பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது. இந்த நிலையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு குற்றம்சாட்டி, "காசா முனையில் பயங்கரவாத இலக்குகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பாதுகாப்பு படைகளை கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் 9 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    எனினும் தாங்கள் போர் நிறுத்தத்தை கடைபிடித்து வருவதாககும், சொந்த தாக்குதலை மீண்டும் தொடங்க இஸ்ரேல் சாக்குபோக்கில் ஈடுபடுவதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இன்று அதிகாலை, ஒப்பந்தத்தின் விதிமுறைகளின்படி ரஃபா பகுதியில் பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிக்க செயல்படும் இஸ்ரேல் படைகள் மீது பயங்கரவாதிகள் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வீசியும், துப்பாக்கிச் சூடும் நடத்தினர் என இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில்தான் நேதன்யாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

    • அவர்களை உள்ளே சென்று கொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை என்று எச்சரித்தார்.
    • அருகில் உள்ள பிற நாடுகள் எங்கள் ஆதரவின் கீழ் அந்த வேலையை எளிதாகச் செய்யும்

    காசாவில் தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு மீறி காசா மக்களின் மீதே தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பத்தகுந்த உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

    அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், பாலஸ்தீன பொதுமக்கள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தலாம் என்று நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னின்று ஏற்படுத்திய அமைதி ஒப்பந்தத்தை நேரடியாக மீறுவதாகும் என்றும் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் தாக்குதல் மேற்கொண்டால், காசா மக்களைப் பாதுகாக்கவும், போர் நிறுத்தத்தை பேணவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில், "ஹமாஸ் காசாவில் மக்களைக் கொல்வதைத் தொடர்ந்தால், அது ஒப்பந்தத்திற்கு எதிரானது, அவர்களை உள்ளே சென்று கொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று எச்சரித்தார்.

    எனினும், காசாவிற்கு அமெரிக்கப் படைகளை அனுப்பப் போவதில்லை என்றும், அருகில் உள்ள பிற நாடுகள் எங்கள் ஆதரவின் கீழ் அந்த வேலையை எளிதாகச் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். காசவில் இஸ்ரேல் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் உடன் ஹமாஸ் மோதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில் 68,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
    • இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை என்பதை இந்த தாக்குதல் உணர்த்துவதாக தெரிவித்தார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை 20 உயிருள்ள இஸ்ரேலிய பிணை கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இஸ்ரேல் தன் வசம் இருந்த பால்ஸ்தீன கைதிகளை விடுத்துவித்து வருகிறது. கடந்த 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை காசாவில்  68,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த எட்டு நாட்களுக்குப் பிறகு, அமைதி ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் காசாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டனர்.

    நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, காசா நகரத்தின் ஸைதூன் பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அபு ஷாபான் என்பவர் தனது குடும்பத்தினருடன் பயணித்த வாகனத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் பீரங்கி குண்டை வீசியுள்ளன.

    இந்த தாக்குதலில் அவருடன் சேர்த்து ஏழு குழந்தைகள் மற்றும் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். அவர்கள் தங்கள் வீட்டைப் பார்வையிடச் சென்றபோது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  

    தாக்குவதற்கு முன் அவர்களை எச்சரித்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களின் ரத்த வெறி இன்னும் அடங்கவில்லை என்பதை இந்த தாக்குதல் உணர்த்துவதாக காசா சிவில் பாதுகாப்புப் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பசல் தெரிவித்தார்.

    இந்தத் தாக்குதலை படுகொலை என்று கண்டித்துள்ள ஹமாஸ், போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மதிக்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மத்தியஸ்தர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.  

    • காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2-ம் கட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
    • ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழ போட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமெரிக்க அதி பர் டிரம்ப் மற்றும் கத்தார், எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்த்தால் ஏற்பட்டு உள்ளது.

    ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் ஹமாஸ் அமைப் பினர் தங்கள் வசம் இருந்த 20 இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்தனர். மேலும் உயிரிழந்த 4 பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்தனர்.

    இதற்கு ஈடாக 1968 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது. ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் பிணைக் கைதிகளின் உடல்கள் உள்ளன. அவற்றை விரைவாக ஒப்படைக்கவில்லை என்றால் காசாவுக்குள் அனுப்பப்படும் நிவாரண பொருட்களை தடுப்போம் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.

    இதையடுத்து நேற்று மேலும் 4 பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்தனர். இன்னும் அவர்களிடம் 20 பிணைக்கைதிகளின் உடல்கள் உள்ளன.

    காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2-ம் கட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழ போட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை ஹமாஸ் இன்னும் ஏற்கவில்லை.

    இதைதொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினருக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்," நான் ஹமாசிடம் பேசினேன். அப்போது நீங்கள் ஆயுதங்களை களையப் போகிறீர்கள் என்று சொன்னேன். அதற்கு அவர்கள் நாங்கள் ஆயுதங்களை களையப் போகிறோம் என்று சொன்னார்கள்.

    அவர்கள் ஆயுதங்களை களையவில்லை என்றால், நாங்கள் அவர்களை நிராயுதபாணியாக்குவோம். அது விரைவாகவும் வன்முறையாகவும் நடக்கும். ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட வேண்டும். இதுபற்றி ஹமாசுக்கு தகவல் அனுப்பப் பட்டுள்ளது. அவர்களிடம் உள்ள பிணைக்கைதிகளின் உடல்களை உடனடியாக ஒப் படைக்க வேண்டும். போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2-ம் கட்டம் தொடங்குகிறது" என்றார்.

    இந்த நிலையில் காசாவில் 6 பாலஸ்தீனியர்களை ஹமாஸ் அமைப்பினர் பொதுவெளியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். தங்களுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டி 6 பேரையும் கொன்றுள்ளனர். அவர்களை சுட்டு கொல்லும் வீடியோ வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. இதற்கிடையே 30-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் அமைப்பினர் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    ஆயுதங்களை கைவிட டிரம்ப் எச்சரித்த நிலையில், பொதுவெளியில் 6 பேரை ஹமாஸ் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜோஷி நேபாளத்திலிருந்து இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.
    • சடலத்தை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கு முன் இஸ்ரேல் அரசு முறைப்படி இறுதி சடங்குகளை நடத்தும்.

    காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில் இஸ்ரேல் பணய கைதிகள் 20 பேரை ஹமாஸ் நேற்று முன்தினம் விடுவித்தது.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பால் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்தவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த பிபின் ஜோஷி உட்பட நான்கு பேரின் சடலங்களை இஸ்ரேலிய அதிகாரிகளிடம் ஹமாஸ் ஒப்படைத்தது.

    பிபின் ஜோஷியின் சடலம் நேற்று முன் தினம் நள்ளிரவு டெல் அவிவ் விமான நிலையத்தை அடைந்தது என்று இஸ்ரேலுக்கான நேபாள தூதர் தனபிரசாத் பண்டிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    ஜோஷியின் அடையாளத்தை உறுதிப்படுத்த இஸ்ரேலிய அதிகாரிகள் மரபணு (DNA) பரிசோதனை செய்ய உள்ளனர். அதன்பிறகு, நேபாள தூதரகத்துடன் ஒருங்கிணைந்து, சடலத்தை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கு முன் இஸ்ரேல் அரசு முறைப்படி இறுதி சடங்குகளை நடத்தும் என்று தூதர் பண்டிட் கூறினார்.

    அக்டோபர் 7 , 2023, இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜோஷி நேபாளத்திலிருந்து இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.

    ஸ்டுடென்ட் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தின் கீழ், காசா எல்லைக்கு அருகிலுள்ள கிப்புட்ஸ் அலிமிம் என்ற இடத்தில் விவசாயம் குறித்து ஆராய்ச்சி படிப்புக்காக சென்ற 17 நேபாள மாணவர்களில் ஜோஷியும் ஒருவர் ஆவார்.

    ஹமாஸ் தாக்குதல் நடந்த நாளில், துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்புச் சத்தங்களுக்கு மத்தியில் சைரன் ஒலித்தபோது, அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெடிபொருள் தாக்குதலில் இருந்து தப்பிக்கப் பாதுகாப்பான இடத்தில் பதுங்கினர்.

    ஆனால், அவர்கள் மறைந்திருந்த இடத்திற்குள் ஹமாஸ் போராளிகள் வெடிகுண்டு ஒன்றை வீசினர். இதனால் பலர் காயமடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட பிபின் ஜோஷி, இரண்டாவதாக வீசப்பட்ட வெடிகுண்டைப் லாவகமாகப் பிடித்து, மீண்டும் வெளியே வீசினார்.

    ஜோஷியின் இந்தத் துரிதச் செயலால் அங்கிருந்த பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் ஜோஷியை ஹமாஸ் படையினர் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    இஸ்ரேலியர்கள் அல்லாத பிணைக்கைதிகளில் கஸாவில் உயிருடன் இருப்பதாக நம்பப்பட்ட ஒரே நபர் இவர்தான்.

    2023 இல் கடத்தப்பட்டதில் இருந்து ஜோஷியைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் இஸ்ரேலிய இராணுவம் கஸாவில் இருந்து ஜோஷி உயிருடன் இருந்ததைக் காட்டும் ஒரு வீடியோவை மீட்டது. இருப்பினும் அவர் தற்போது சடலமாக திரும்பியுள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.   

    ×