என் மலர்
நீங்கள் தேடியது "Asim Munir"
- எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது.
- இம்ரான் கான் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும், அவர் இந்தியாவுடன் நட்பு கொள்ள முயற்சித்தார், பாஜகவுடன் கூட.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல் பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2 ஆண்டுகளாக சிறையில் உள்ள இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் அவர் சிறையில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து இம்ரான்கானின் சகோதரிகள் மற்றும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இம்ரான் கான் நலமுடன் இருப்பதாக சிறைத்துறை தெரிவித்தது.
இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க அவரது சகோதரி உஸ்மாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறைக்கு சென்று இம்ரான்கானை சந்தித்தார்.
பின்னர் வெளியே வந்த உஸ்மா கூறும்போது,"இம்ரான்கான் நலமுடன் உள்ளார். ஆனால் அவருக்கு மனரீதியான துன்புறுத்தல் அளிக்கப்படுகிறது" என்றார்.
இதற்கிடையே தனது சகோதரியை சந்தித்த பிறகு இம்ரான் கான் அளித்த அறிக்கையை அவரது கட்சி வெளியிட்டது.
அதில், எனக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது. அவர்களுக்கு தற்போது என்னைக் கொலை செய்வதுதான் பாக்கி இருக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. என்று அவர் தெரிவித்தார்.
இந்த சூழலில் இம்ரான் கான் சகோதரி அலீமா கானும் 'ஸ்கை நியூஸ்' சேனலுக்கு அளித்த பேட்டியில், "அசீம் முனீர் ஒரு அடிப்படைவாத இஸ்லாமியர். அதனால்தான் அவர் இஸ்லாத்தை நம்பாதவர்களுடன் சண்டையிட விரும்புகிறார்.
இம்ரான் கான் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும், அவர் இந்தியாவுடன் நட்பு கொள்ள முயற்சித்தார், பாஜகவுடன் கூட.
ஆனால் முனீர் போன்ற ஒருவர் இருக்கும்போது, இந்தியாவுடன் போர் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. அவர் இந்தியாவுடன் போருக்காக ஏங்குகிறார்" என்று அலீமா தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரில் 26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்காரவாத தாக்குதலுக்கு பிறகு மே மாத தொடக்கத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்ட 3 நாட்களில் அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
- இம்மாத இறுதியுடன் அந்நாட்டு ராணுவ தளபதியான அசிம் முனீரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
- பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீரின் பதவி நீட்டிப்புக்கு ஏதுவாக அந்நாட்டு அரசியலமைப்பு திருத்தம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியுடன் அந்நாட்டு ராணுவ தளபதியான அசிம் முனீரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. பீல்டு மார்ஷல் உச்சபட்ச பதவி என்பதால் அதில் உள்ளவருக்கு பதவி நீட்டிப்பு செய்ய அந்நாட்டு அரசியலமைப்பில் இடமில்லை.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசியலமைப்பு 243 பிரிவில் 27வது திருத்தத்தை மேற்கொள்ளும் மசோதா நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் , பாதுகாப்பு படைகளின் தலைவர் என்ற புதிய பதவி ஒன்று உருவாக்கப்பட உள்ளது.
முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் தலைமை பதவியாக இது அமையும். நேற்று தாக்கலான அரசியலமைப்பு திருத்த மசோதாவில் ராணுவ தளபதியே, பாதுகாப்பு படைகளின் தலைவராகவும் பதவி வகிப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படைகளின் தலைவர் பதவிக்கு யாரை நியமிக்க வேண்டும் என்று அதிபருக்கு பிரதமர் ஆலோசனை வழங்குவார் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
- மொசாட் மற்றும் அமெரிக்க சிஐஏவின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார்.
- ஹமாஸை நிராயுதபாணியாக்குவதிலும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் இந்த இராணுவம் முக்கிய பங்கு வகிக்கும்.
காசாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதி ஒப்பந்தம் மூலம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமைதியை உறுதி செய்ய சர்வதேச படை உருவாக்கப்பட்டு காசாவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த சர்வதேச படையில் இணைய பாகிஸ்தான் தங்களின் ராணுவ வீரர்களை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில், எகிப்தில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனமான மொசாட் மற்றும் அமெரிக்க சிஐஏவின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார். இதன்போது இதற்கான முடிவு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் சுமார் 20,000 வீரர்களை காசாவிற்கு அனுப்பும். காசாவில் பாதுகாப்பைக் கண்காணித்தல், மனிதாபிமான உதவிகளை வழங்குதல் மற்றும் மறுகட்டமைப்பு திட்டங்களில் பங்கேற்பது இந்தப் படைகளின் பொறுப்பாகும்.
மேலும் ஹமாஸை நிராயுதபாணியாக்குவதிலும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் இந்த இராணுவம் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்த படையில் இடம்பெறுவதற்கு ஈடாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடமிருந்து பாகிஸ்தானுக்கு பெரும் நிதி ஊக்கத்தொகையாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.
- இதனால் மே 10-ம் தேதி இருதரப்பு மோதல் முடிவுக்கு வந்தது.
இஸ்லாமாபாத்:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகரில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து, மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அதன்பின் இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இதனால் மே 10-ம் தேதி இருதரப்பு மோதல் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், கைபர் பக்துன்வா மாகாணம் அபோட்டாபாத் நகரில் ராணுவ கேடட் பயிற்சி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் சையத் அசிம் முனீர் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது இந்தியாவுடனான மோதல் குறித்து அவர் கூறுகையில், அணுசக்திமயமான சூழலில் தற்போது போருக்கு இடமில்லை. அதே சமயம் தங்கள் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.
- வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசிர்த்துள்ளார்.
- நரேந்திர மோடி... தைரியமாக இருங்கள், டிரம்பின் அறிக்கையை எதிர்க்கவும்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை வியாழக்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசிர்த்துள்ளார்.
இதன்போது இருநாட்டு உறவுகள்,வருங்கால திட்டங்கள் குருத்து பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.
2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.
50 சதவீத வரி உள்ளிட்ட நடவ்டிக்கைகளால் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் டிரம்ப் அண்மை காலங்களாக பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்புக்கு பின் அளித்த பேட்டியில் இருவரையும் சிறந்த மனிதர்கள் என டிரம்ப் விவரித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
காங்கிரசின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட விமர்சன பதிவில்,
மோடியின் "அன்பான நண்பர்" டிரம்ப், பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிரை ஒரு சிறந்த மனிதர் என்று வர்ணித்துள்ளார்.
இந்திய குடிமக்களின் கொலைகளைத் திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கிய அதே அசிம் முனிர் இவர்தான்.
நரேந்திர மோடி... தைரியமாக இருங்கள், டிரம்பின் அறிக்கையை எதிர்க்கவும்.
நாடுதான் முதலில் முக்கியம், நட்பு அல்ல." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசரித்துள்ளார்.
- 2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.
80வது ஐ.நா. பொதுச்சபை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூடியது. கடந்த 21ஆம் தேதி தொடங்கிய கூட்டம் 29 சாம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கிடையே காசா பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்வர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் ஒருவர் ஆவார்.
இந்த சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை வியாழக்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசிர்த்துள்ளார்.
இதன்போது இருநாட்டு உறவுகள்,வருங்கால திட்டங்கள் குருத்து பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. சந்திப்புக்கு முன் அவர்கள் இருவரையும் டிரம்ப் ஒரு மணி நேரம் காக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.
50 சதவீத வரி உள்ளிட்ட நடவ்டிக்கைகளால் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் டிரம்ப் அண்மை காலங்களாக பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்புக்கு பின், இருவரையும் சிறந்த மனிதர்கள் என டிரம்ப் விவரித்துள்ளார்.
- பாகிஸ்தான் நாட்டில் ஹைபிரிட் சிஸ்டம் இல்லை. இருப்பது அசிம் முனீரின் சர்வாதிகாரம்.
- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-க்கு பதிலாக அசிம் முனீரை அழைத்தது ஏன்?.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான இம்ரான் கான், பல்வேறு குற்றச்சாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சிறையில் உள்ளார். பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சித் தலைவரான இம்ரான் கான், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், கடும் பதவி வெறி பிடித்தவர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக இம்ரான் கான் கூறியதாவது:-
ராணுவ தளபதி அசிம் முனீர் அதிகார வெறி பிடித்தவர். பாகிஸ்தானில் மிகவும் மோசமான வகையிலான சர்வாதிகாரத்தை அமல்படுத்தியுள்ளார். அவர் ஒழுக்கும் அல்லது இஸ்லாமை புரிந்து கொள்ளவில்லை.
நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துவதை விட, 2023 மே 9ஆம் தேதி வன்முறைக்காக அவர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மே 9 வன்முறை அவரால் கட்டமைக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் திருடப்பட்டன.
பாகிஸ்தான் நாட்டில் ஹைபிரிட் சிஸ்டம் இல்லை. இருப்பது அசிம் முனீரின் சர்வாதிகாரம். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-க்கு பதிலாக அசிம் முனீரை அழைத்தது ஏன்?.
நான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். மூன்று மாதங்களில் மூன்று முறை மட்டுமே ஆலோசனை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஒரு மாதங்களாக வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினரை சந்திக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் என்னை நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
கடந்த 8 மாதங்களான என்னுடைய மனைவி புஷாரா பேகமும் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டு, உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. பயன்படுத்த அசுத்தமான தண்ணீர் வழங்கப்படுகிறது. எல்லா வகையான கொடுமைகளும் அவள் மீது திணிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் அசிம் முனீரால் செய்யப்படுகின்றன.
இவை அனைத்தும் என்னை விட்டு விலகிச் செல்வதற்காக செய்யப்படுகிறது. ஆனால், அவர் எனது பக்க நியாயத்தை புரிந்து கொண்டுள்ளார். எனக்கு எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும், எனது குடும்பத்தினரை சிறையில் அடைத்தாலும் பெரிய விசயமில்லை. நான் ஒருபோதும் அடிய பணியமாட்டேன். உங்களுடைய அடக்குமுறையை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இதுதான் அசிம் முனீருக்கான என்னுடைய செய்தி. என்ன விலை கொடுத்தாவது உண்மையான சுதந்திரத்திற்காக என்னுடைய போராட்டத்தை நான் தொடர்வேன்.
நீதித்துறை அழிக்கப்பட்டுள்ளது, ஊடகங்கள் மவுனமாக்கப்பட்டுள்ளன, காவல்துறை அவர்களை குற்றவாளிகளாக மாற்றும் வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு இம்ரான் கான் தன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
- கடந்த ஜூன் மாதம் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றபோது, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அவருக்கு விருந்தளித்தார்.
- பாகிஸ்தானுக்கு வர்த்தக முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்தார்.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மீண்டும் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் செல்ல தயாராகி வருகிறார்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி, ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக இந்த வாரம் அமெரிக்காவிற்கு செல்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றபோது, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அவருக்கு விருந்தளித்தார்.
அந்த பயணத்தின் போது, பாகிஸ்தானுக்கு வர்த்தக முன்னுரிமை அளிப்பதாகவும், அதன் எண்ணெய் இருப்புக்களை பிரித்தெடுப்பது குறித்து ஆராய்வதாகவும் டிரம்ப் உறுதியளித்தார். இந்நிலையில் இந்த முறை அமெரிக்க பயணத்தின்போது அசிம் முனீர் அரசின் உயர்மட்ட தலைவர்களை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
- காஷ்மீர் மக்களின் விருப்பத்தை நசுக்கி, மோதலைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தீவிரப்படுத்துகிறது.
- காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும்
ஜம்மு காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதம் ஒரு சட்டபூர்வமான போராட்டம் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் தெரிவித்துள்ளார்.
கராச்சியில் உள்ள கடற்படை அகாடமியில் நடந்த விழாவில் பேசிய முனீர் "இந்தியா பயங்கரவாதம் என்று அழைப்பது உண்மையில் ஒரு சட்டபூர்வமான சுதந்திரப் போராட்டமாகும்.
சர்வதேச சட்டம் அதை அங்கீகரிக்கிறது. காஷ்மீர் மக்களின் விருப்பத்தை நசுக்கி, மோதலைத் தீர்ப்பதற்குப் பதிலாகத் தீவிரப்படுத்தும் முயற்சிகள் இந்த இயக்கத்தை மேலும் முக்கியத்துவப்படுத்த மட்டுமே உதவும்" என்று கூறினார்.
காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும் என்றும் முனீர் கூறினார். இந்திய இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்ப்பதன் மூலம் பாகிஸ்தான் தன்னை நிரூபித்துள்ளதாகவும் முனீர் தனது உரையில் கூறினார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு 2019 பாலகோட் தாக்குதலையும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆபரேஷன் சிந்தூரையும் முனீர் குறிப்பிட்டார்.
- பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்புடன் மதிய உணவு அருந்தினார்.
- எனக்குப் பாகிஸ்தானைப் பிடிக்கும்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரில் தான் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
இன்று (ஜூன் 18), பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் தனது ஐந்து நாள் அமெரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்புடன் மதிய உணவு அருந்தினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரைத் தான் நிறுத்தியதாக மீண்டும் கூறினார்.
டிரம்ப் தனது உரையில், "இந்தியா-பாகிஸ்தான் போரை நான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தினேன். எனக்குப் பாகிஸ்தானைப் பிடிக்கும். மோடி சிறந்த மனிதர் என நினைக்கிறேன். அவருடன் நேற்று இரவு நான் பேசினேன்.
மோடியுடன் நாங்கள் வணிக ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம். பாகிஸ்தான் போரை நிறுத்துவதற்கு அசீம் முனீர் முக்கிய காரணம். இதேபோன்று இந்தியா தரப்பில் போரை நிறுத்த மோடி முக்கியமானவர். போரை நிறுத்த இவர்கள் இருவருமே செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தனர். இரு முக்கிய அணு ஆயுத நாடுகளுக்கு இடையே நான் போரை நிறுத்தியுள்ளேன்," என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, 'ஆபரேஷன் சிந்தூர்' விவகாரத்தில் எந்தவித மத்தியஸ்தமும் நடைபெறவில்லை என்றும், பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதாலேயே போர் நிறுத்தம் செய்யப்பட்டது, இதில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி டிரம்ப்பிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக ஆசிம் முனீர் கடந்த 24-ம் தேதி பொறுப்பேற்றார்.
- ஜம்மு காஷ்மீர் குறித்து இந்திய தலைமையிடமிருந்து பொறுப்பற்ற கருத்துக்கள் வருகின்றன என கூறினார்.
லாகூர்:
பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக ஆசிம் முனீர் கடந்த 24-ம் தேதி பொறுப்பேற்றார். ராணுவ தளபதியாக பொறுப்பேற்றதை அடுத்து ஆசிம் முனீர் முதல் முறையாக இந்தியாவுடனான எல்லைப் பகுதியை நேற்று பார்வையிட்டார்.
இந்நிலையில், ரக்ஷிக்ரி பகுதி இந்தியாவுடனான எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுடன் உரையாடினார். அதன் பின் ஆசிம் முனீர் பேசியதாவது:
கில்கித் பல்கிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் குறித்து சமீபத்தில் இந்திய தலைமையிடமிருந்து பொறுப்பற்ற கருத்துகள் வருவதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.
எங்கள்மீது போர் திணிக்கப்பட்டால் தாய்நாட்டின் ஒவ்வொரு இன்ச் பகுதியையும் பாதுகாக்க மட்டுமின்றி எதிரிகளை எதிர்த்துப் போரிடவும் பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் தலைவராக முன்னாள் ராணுவ உளவுத்துறை தலைவர் அசிம் முனிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியா மீது நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்ரவாதத்தை அந்நாட்டின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தாரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது.
இதைதொடர்ந்து, அந்த பதவியில் ராணுவ உளவுத்துறை தலைவராக பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் அசிம் முனிர் நியமிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் இன்று அறிவித்துள்ளது. #LtGenAsimMunir #PakistanISI #ISIhead






