ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படும்: இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான்

இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இதனால் மே 10-ம் தேதி இருதரப்பு மோதல் முடிவுக்கு வந்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படும்: இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான்
Published on

இஸ்லாமாபாத்:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகரில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் அப்பாவி மக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து, மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

அதன்பின் இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இதனால் மே 10-ம் தேதி இருதரப்பு மோதல் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், கைபர் பக்துன்வா மாகாணம் அபோட்டாபாத் நகரில் ராணுவ கேடட் பயிற்சி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் ராணுவ தளபதி பீல்டு மார்ஷல் சையத் அசிம் முனீர் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது இந்தியாவுடனான மோதல் குறித்து அவர் கூறுகையில், அணுசக்திமயமான சூழலில் தற்போது போருக்கு இடமில்லை. அதே சமயம் தங்கள் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com