என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபரேஷன் சிந்தூர்"

    • காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது.
    • இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர்கள் (DGMO) மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஒப்புதல்.

    இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இந்திய ராணுவ அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.

    ஆனால் சில மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியில் இறங்கி, மீண்டும் டிரோன்களை ஏவி வாலாட்டியது. அதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அதன் பின் எல்லையில் வெடிகுண்டு சத்தங்கள் ஓய்ந்தன.

    4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது. மின்வினியோகமும் வழங்கப்பட்டது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் நடைபெற்றது.

    தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக்கட்டமாக, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை இன்று மாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது,

    இந்நிலையில், இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை தொடங்கியது.

    இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே 2வது முறையாக ராணுவ இயக்குனர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    அப்போது, இந்திய - பாக். எல்லையில் வீரர்களைக் குறைப்பதை உறுதி செய்ய, உடனடி நடவடிக்கைகளை பரிசீலிக்க இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநர்கள் (DGMO) மட்டத்திலான பேச்சுவார்த்தையில் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இரு தரப்பிலும், ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படக் கூடாது என்ற நிலைப்பாட்டை தொடர்வது குறித்தும் இன்றைய பேச்சுவார்த்தையில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • அணு ஆயுதங்களை வைத்து இந்தியாவை மிரட்ட முடியாது என்றார் பிரதமர் மோடி.
    • எதிர்காலத்தில் பாகிஸ்தான் வாலாட்டினால் இந்தியாவின் பதிலடி இன்னும் பயங்கரமாக இருக்கும் என்றார் பிரதமர் மோடி.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ஆபரேஷன் சிந்தூர் என்பது பயங்கரவாத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கை.

    இந்தியாவின் ஏவுகணைகளில் இருந்து தப்பிக்க வழிபார்த்த பாகிஸ்தான் தோற்றுவிட்டது.

    பயங்கரவாதிகளும், பயங்கரவாதிகளுக்கும் உதவி செய்பவர்களும் எங்களைப் பொறுத்தவரை ஒன்றுதான்.

    தாக்குதல் நிறுத்தப்பட்டாலும், எதிர்காலத்தில் பாகிஸ்தான் நடவடிக்கையை பொறுத்து அடுத்த கட்ட முடிவு.

    எதிர்காலத்தில் பாகிஸ்தான் வாலாட்டினால் இந்தியாவின் பதிலடி இன்னும் பயங்கரமாக இருக்கும்.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் எதிரிக்கு பதிலடி கொடுப்பதில் முக்கிய பங்காற்றின. இந்தியாவின் ஏவுகணைகளில் இருந்து தப்பிக்க வழிபார்த்த பாகிஸ்தான் தோற்றுவிட்டது.

    போர் தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதம் தொடர்ந்தால் பதிலடி தொடரும்.

    நம்மைப் பொறுத்தவரை ஒற்றுமையே பலம், ஒற்றுமையே முக்கியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் உலகின் முன் அம்பலப்பட்டுள்ளது என்றார். பிரதமர் மோடி.
    • பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்றார் பிரதமர் மோடி.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் ஏவுகணைகள் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கு தகர்த்தன. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தலைமையங்கள் தகர்க்கப்பட்டுள்ளது.

    தாக்குதல் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்று அழித்துள்ளோம். ஒரே தாக்குதலில் பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். கோவில்கள், குருத்வாராக்கள், பள்ளிகளை குறிவைத்து கோழைத்தனமாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

    பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை ஆதரிக்காமல், இந்தியாவை பாகிஸ்தான் தாக்கியுள்ளது.

    10ம் தேதி நம் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குநரை தொடர்புகொண்ட பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தை கோரியது. இனி ராணுவ சேட்டைகள், பயங்கரவாத செயல்கள் இருக்காது எனக் கூறியது. இந்தியா அதனை பரிசீலித்து தற்போதைக்கு நாம் தாக்குதலை நிறுத்தியுள்ளோம்.

    ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் உலகின் முன் அம்பலப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், தப்பிக்கப் பார்த்த பாகிஸ்தான், உலக நாடுகள் தலையிட கெஞ்சியது.

    பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் விதத்தை பார்க்கும்போது, ஒருநாள் அந்த நாட்டையே அது அழித்துவிடும். பாகிஸ்தான் இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்தால், பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும்.

    பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. பயங்கரவாதமும் வணிகமும் கூட ஒரே நேரத்தில் இருக்க முடியாது.

    பல தசாப்தங்களாக இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டங்களை தீட்டும் பயங்கரவாத இயக்க தலைவர்கள் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி வந்தனர். ஒரே தாக்குதலில் அவர்களை இந்தியா அகற்றியுள்ளது. இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிருப்தி, விரக்தி அடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவின் முப்டைகளுக்கும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் சல்யூட் என்றார் பிரதமர் மோடி.
    • ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது வீரர்கள் அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தினர்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

    அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் முப்டைகளுக்கும் உளவுத்துறை அமைப்புகளுக்கும் சல்யூட். ஆபரேஷன் சிந்தூரை நமது வீரர்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர்.

    பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்தது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றி பெறச் செய்த ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்.

    ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவின் வலிமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நமது தேசத்தின் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

    ஆபரேஷன் சிந்தூர் மூலம் நமது வீரர்கள் அசாதாரண துணிச்சலை வெளிப்படுத்தினர்.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.

    இந்தியாவின் நடவடிக்கையை பயங்கரவாதிகள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எப்போதும் உறுதியாக இருக்கும்.

    இந்தியாவின் ஏவுகணைகள் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி தகர்த்தன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
    • இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை.

    காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

    தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக்கட்டமாக, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலைக்கு ஒத்திவைப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார். அதன்படி, இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

    • பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படை தளம் தாக்கி அழிக்கப்பட்ட காட்சி வெளியிட்டு இயக்குனர் ஜெனரல் ராஜீவ் காய் விளக்கம்.
    • பாகிஸ்தான் ஏவிய சீனாவின் பிஎல் 15 ரக ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்துள்ளோம்.

    இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், முப்பபை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, ஏர் மார்ஷல் பார்தி, வைஸ் அட்மிரல் பிரமோத், லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் விளக்கம் அளித்தனர்.

    பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படை தளம் தாக்கி அழிக்கப்பட்ட காட்சி வெளியிட்டு இயக்குனர் ஜெனரல் ராஜீவ் காய் விளக்கம் அளித்துள்ளார்.

    இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பு மூலமாக பாகிஸ்தானின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ராஜீவ் காய் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர்,"பயங்கரவாதிகள் பிரச்சனையை பாகிஸ்தான் ராணுவம் தனது பிரச்சனையாக கருதுகிறது" என்றார்.

    பாகிஸ்தான் ராணுவத்தை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை, பயங்கரவாதிகளை தான் குறிவைத்தது என்று ஏ.கே. பார்தி கூறியுள்ளார்.

    மேலும் அவர்," நமது சண்டை பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரானதல்ல, பயங்கரவாதிகளுக்கு எதிரானது.

    பாகிஸ்தான் ஏவிய சீனாவின் பிஎல் 15 ரக ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்துள்ளோம்" என்றார்.

    3 மணி நேரத்தில் பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்கள் மீது அதிரடியாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

    பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்களையும் மே 9ம் தேதி இரவு தாக்குதல் நடத்தி தகர்த்ததாக இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

    பாகிஸ்தானின் நூர்கான், ரபீக்கி, முரிட்கே, சக்கர், சியால்கோட், பஸ்ரூட், சர்கோடா உள்ளிட்ட தளங்கள் தகர்க்கப்பட்டன.

    பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் தகர்க்கப்பட்டது தொடர்பான புகைப்பட ஆதாரங்கள் வெளியிட்டு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

    பயங்கரவாதிகளின் நிலைகள்தான் நமது இலக்கு. ஆனால், பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் நம் மீது தாக்குதல் நடத்தியது.

    பாகிஸ்தான் ராணுவம் ஏவிய டிரோன்கள் அனைத்தையும் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு அழித்தொழித்தது.

    இந்திய ராணுவத்தின் ஆகாஷ் வான் பாதுகாப்பு தளவாடம் பாகிஸ்தான் டிரோன்கள் அழிப்பில் முக்கிய பங்காற்றியதாக ஏ.கே.பாரதி தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானில் விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்ட சேதங்களுக்கு பாகிஸ்தான் மட்டுமே பொறுப்பு. எல்லையை பாதுகாக்கும் பணியில் இந்திய ராணுவம் அனைத்து வகையிலும் உறுதி பூண்டிருந்தது" என்றார்.

    • ஆகாஷ் திட்​டத்​தில் மிக குறைந்த வயதுள்ள இயக்​குந​ராக பிரகலாத் பணி​யாற்​றி​னார்.
    • ஆகாஷ் ஏவுகணைகளை டிஆர்​டிஓ மற்​றும் பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனங்​கள் இணைந்து தயாரித்​தன.

    இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து கடந்த 8 மற்றும் 9-ம் தேதிகளில் டிரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான் வீசிய போது அவை அனைத்தையும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணைகள் வானத்திலேயே தவிடு பொடியாக்கின.

    இந்த ஆகாஷ் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (டி.ஆர்.டி.ஒ.) விஞ்ஞானி டாக்டர் பிரகலாத் ராமாராவ்தான் உருவாக்கி உள்ளார்.

    இந்தியாவின் ஏவுகணை விஞ்ஞானி என்று புகழப்படும் டாக்டர் அப்துல் கலாம்தான், ஆகாஷ் ஏவுகணை திட்டத்தின் இயக்குநராக டாக்டர் பிரகலாத் ராமாராவை தேர்ந்தெடுத்துள்ளார்.

    கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட ஆகாஷ் திட்டத்தில் மிக குறைந்த வயதுள்ள இயக்குநராக பிரகலாத் பணியாற்றினார்.

    இதுகுறித்து விஞ்ஞானி பிரகலாத் கூறுகையில்,"வான் வழியாக எதிரிகள் நடத்தும் தாக்குதலை எதிர்கொள்ள ஆகாஷ் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன. அதை உருவாக்குவதில் நானும் உதவியிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது பெருமிதமாக உள்ளது.

    பாகிஸ்தான் டிரோன்கள், ஏவுகணைகளை ஆகாஷ் தாக்கி அழித்த அந்த நாள்தான் எனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாள். ஆகாஷ் ஏவுகணை மிகவும் வேகமானது, ஆபத்தானது. பாகிஸ்தானுடனான மோதலின் போது நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் அற்புதமாக ஆகாஷ் ஏவுகணை செயலாற்றி உள்ளது" என்றார்.

    மிக வேகமாக வரும் எதிரிகளின் டிரோன்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள், இன்னும் சொல்லப் போனால் எப்16 போன்ற போர் விமானங்களையும் கூட வானிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கும் வகையில் ஆகாஷ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆகாஷ் ஏவுகணைகளை டிஆர்டிஓ மற்றும் பாரத் டைனமிக் லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன.

    இதுதான் இந்தியாவின் வான் பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாக மாறி இருக்கிறது. இந்த ஏவுகணையை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும். மிக வேகமானது, பயங்கரமானது. 80 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை இடைமறித்து தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது. ஆகாஷ் ஏவுகணை இந்தியாவின் முப்படைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த ஏவுகணைகளை வாங்க அர்மீனியா ஆர்டர் வழங்கி உள்ளது. இதன் விலை மிகவும் குறைவு. பயன்படுத்துவது எளிமையானது, சிறந்த செயல்பாடு கொண்டது. இதனால் இந்த ஏவுகணைகளை வாங்க உலகளவில் பல நாடுகள் முயற்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • 4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது.
    • இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை மாலைக்கு ஒத்திவைப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

    காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில், இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் சிறு பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்தியா மீது டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலையும் நடத்தியது. அவற்றை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

    இந்திய தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இந்திய ராணுவ அதிகாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தாக்குதல் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.

    ஆனால் சில மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடியில் இறங்கி, மீண்டும் டிரோன்களை ஏவி வாலாட்டியது. அதற்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அதன் பின் எல்லையில் வெடிகுண்டு சத்தங்கள் ஓய்ந்தன.

    4 நாட்கள் நடந்த தாக்குதல் ஓய்ந்ததால் காஷ்மீர் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களில் நேற்று முதல் இயல்புநிலை திரும்பியது. மின்வினியோகமும் வழங்கப்பட்டது. கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் நடைபெற்றது.

    தாக்குதல் நிறுத்தத்தின் அடுத்தக்கட்டமாக, இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பகல் 12 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர்கள் இடையேயான 2-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலைக்கு ஒத்திவைப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

    3-வது கட்ட பேச்சுவார்த்தை அடுத்த 3 நாட்களில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 4 நாட்கள் போரில் பாகிஸ்தான் 140 பேரை பலி கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது.
    • அமெரிக்கா கேட்டுக் கொண்டதால் இந்தியா சமரசமாக செல்ல சம்மதம் தெரிவித்தது.

    புதுடெல்லி:

    காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டது என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து கடந்த 7-ந்தேதி இரவு இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை மேற்கொண்டன. இதில் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வந்த 9 முகாம்கள் அழிக்கப்பட்டன.

    இதைத் தொடர்ந்து பாகிஸ்தானும் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்தியாவை தாக்க முயற்சி செய்தது. ஆனால் இந்தியாவின் வலிமையான வான் பாதுகாப்பு அமைப்பு அந்த ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் நடுவானில் தடுத்து அழித்தன. இதனால் இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த இயலவில்லை.

    அதே சமயத்தில் 8, 9, 10-ந்தேதிகளில் 3 நாட்கள் பாகிஸ்தானிலும், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் இந்தியாவின் முப்படைகள் மிகப்பெரிய தாக்குதலை மேற்கொண்டன. 4 நாட்கள் நடந்த தொடர் தாக்குதலில் பாகிஸ்தான் நிலைக்குலைந்தது.

    நூறுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், 35-க்கும் மேற்பட்ட ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். இதனால் 4 நாட்கள் போரில் பாகிஸ்தான் 140 பேரை பலி கொடுத்தது உறுதிப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் நேற்றும், இன்றும் போரில் தாங்கள் வெற்றி பெற்றது போல தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். இதையடுத்து இந்திய ராணுவம் தரப்பில் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக ஆதாரப்பூர்வ செய்திகள் இன்று வெளியிடப்பட்டன.

    அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் ராணுவ நிலைகள், விமானப்படை நிலையங்கள், ரேடார் சாதனங்கள் இருந்த பகுதிகள், முன்பு எப்படி இருந்தன? இந்தியா தாக்குதல் நடத்திய பிறகு அவை எப்படி உருக்குலைந்து கிடக்கின்றன என்பதை செயற்கை கோள் படங்களை வெளியிட்டு இந்திய ராணுவம் இன்று உறுதிப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானுக்கு 11 ராணுவ தளங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெள்ள தெளிவாக தெரிய வந்தது.

    அது மட்டுமின்றி பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் அழிக்கப்பட்ட செயற்கைகோள் படங்களையும் இந்திய ராணுவம் வெளியிட்டு இருக்கிறது. குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளின் தலைமை பயிற்சி முகாம் தரைமட்டமாக்கப்பட்ட படம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    இதன் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த அடி கொடுத்து இருப்பதும் சந்தேகத்துக்கு இடம் இல்லாமல் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்திய விமானப்படை நேற்று முன்தினம் பாகிஸ்தானின் ராவல்பிண்டி வரை ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகே உள்ள ராணுவ தலைமையகத்தின் ரேடார் நிலையம், வெடிப்பொருள் சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை அழித்து இருப்பதற்கு இந்திய விமானப்படைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    மேலும் பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களில் முக்கிய ஒன்றாக கருதப்படும் போலாரி விமானப்படை தளம் இந்திய ஏவுகணைகளால் துவம்சம் செய்யப்பட்டது. செயற்கைகோள் படங்கள் மூலம் துல்லியமாக தெரிய வந்துள்ளன. அந்த விமானப்படை தளத்தில் கட்டிடங்கள் நொறுக்கப்பட்டு இருப்பது தெள்ள தெளிவாக பாதுகாப்பு அமைச்சகம் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது.

    சீன செயற்கைகோள் படங்களும் பாகிஸ்தானில் விமானப்படை தளங்கள் நொறுக்கப்பட்டு இருப்பதை துல்லியமாக காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமாபாத் அருகே சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நூகான் விமானப்படை தளம் பெரும்பகுதி அழிக்கப்பட்டு இருக்கிறது.

    இதற்கான செயற்கைக் கோள் படத்தையும் இந்தியா வெளியிட்டு இருக்கிறது. இந்த விமானப்படை தளத்தில் ஓடும் தளங்கள் முற்றிலும் சேதம் ஆக்கப்பட்டுள்ளன. இந்த விமானப்படை தளத்தை இனி பயன்படுத்த இயலாது என்ற நிலை உருவாக்கப்பட்டதன் எதிரொலியாகத் தான் பாகிஸ்தான் பயந்து பணிந்து அமெரிக்காவுடன் கெஞ்சி இந்தியாவுடன் சமரசம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    அமெரிக்கா கேட்டுக் கொண்டதால் இந்தியா சமரசமாக செல்ல சம்மதம் தெரிவித்தது. அதோடு இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தவும் ஒத்துக்கொண்டது.

    இதற்கிடையே பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 19 நாட்களாக பீரங்கி தாக்குதல் நடத்தி வந்தனர். நேற்று பீரங்கி தாக்குதல் முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் எல்லையில் அமைதி நிலவியது.

    மீண்டும் பீரங்கி தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா பாகிஸ்தானை எச்சரித்து இருக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. இருநாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது.

    • இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.
    • தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.

    இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.

    இந்நிலையில், ஆபரேசன் சிந்தூர் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முப்படை தளபதிகள் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு செய்தியாளர்களை விளக்கம் அளிக்கவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    • BSF வீரரின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார்.
    • ரஜனியிடம் தொலைபேசியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசி ஆறுதல் கூறினார்.

    கடந்த மாதம் 23 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) வீரர் பூர்ணம் சாஹு என்பவர் தவறுதலாக சென்று மாட்டிக்கொண்டார்.

    பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் இருந்து BSF கான்ஸ்டபிள் சாஹுவை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்தனர்.

    எல்லைக்கு அருகே விவசாயிகள் குழுவை அழைத்துச் சென்ற சாஹு, ஒரு மரத்தின் கீழ் ஓய்வெடுக்கச் சென்று, தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக BSF அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பாகிஸ்தான் சிறைபிடித்துள்ள BSF வீரரை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

    பூர்ணம் சாஹு மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர். இந்நிலையில், பூர்ணம் சாஹுவின் மனைவி ரஜனியிடம் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவரது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    பூர்ணம் சாஹுவின் மனைவி ரஜனி தற்போது 7 மாத கர்ப்பமாக உள்ளார். தனது கணவரின் நிலை குறித்து பேசிய ரஜனி, "என் கணவர் பாகிஸ்தான் ராணுவத்தால் கடத்தப்பட்டுள்ளார். அவர் அவர்களின் காவலில் உள்ளார். அவரது கண்கள் கட்டப்பட்ட புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

    BSF அதிகாரிகள் எங்கள் வீட்டிற்கு வந்து என் கணவரை மீண்டும் அழைத்து வர முயற்சிப்பதாக எங்களிடம் சொன்னார்கள். ஆனால் இப்போது நிலைமை ஒரு போர் போல் உள்ளது. அடுத்து என்ன செய்தி வரும் என்று எனக்குத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

    ஆபரேசன் சிந்தூர் குறித்து கேள்வி எழுப்பியபோது மனம் உடைந்த ரஜனி, "எனது சிந்தூரைத் திருப்பிக் கொடுங்கள்" என்று அழுதார்.

    • பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
    • இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது.

    இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை இன்று பகல் 12 மணிக்கு நடைபெற உள்ளது.

    கடந்த சனிக்கிழமை இரவு 11 மணிக்கு பிறகு எல்லைப்பகுதிகளில் எந்த தாக்குதலும் நடைபெறாததால் மெல்ல மெல்ல அமைதி திரும்பி வருகிறது.

    ×