என் மலர்
நீங்கள் தேடியது "ஆபரேஷன் சிந்தூர்"
- ஒரு கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
- இரு தரப்பிலும் சேர்த்து சுமார் 10 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்
2025 மே மாதம் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் மோதலைத் தனது வரி அச்சுறுத்தல் மூலம் தடுத்து நிறுத்தியதாக மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்றுடன் 80-வது முறையாக தெரிவித்துள்ளார்.
பாக்ஸ் பிசினஸ்ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய டிரம்ப், "நீங்கள் போரை நிறுத்தவில்லை என்றால், உங்கள் மீது மிக அதிக வரி விதிக்கப்படும் என்று இரு நாடுகளையும் அச்சுறுத்தியே அமைதி ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு முழுமையான அணுஆயுதப் போர் மூளும் அபாயம் இருந்ததாகவும், தனது தலையீட்டால் ஒரு கோடி உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த மோதலின் போது இரு தரப்பிலும் சேர்த்து சுமார் 10 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார்
ஏப்ரல் 22, 2025 இல் ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
மே 7 ஆம் தேதி இதற்குப் பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. பதிலுக்குப் பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தியது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு மே 10 அன்று போர் நிறுத்தம் ஏற்பட்டது.
மோதலைத் தணிக்க எந்த ஒரு மூன்றாவது நாட்டின் தலையீடும் இல்லை என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.
- இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
- பாகிஸ்தான் விரும்புவது போல பயங்கரவாதத்தை ஒருபோதும் இயல்பாக்க முடியாது என்றார்.
நியூயார்க்:
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது நடந்த விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் தூதர் ஆசிம் இப்திகார் அகமது, இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் தூதரின் கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, இந்திய பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் ஐ.நா.சபையில் பேசியதாவது:
எனது நாட்டிற்கும் எனது மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதை ஒரே நோக்கமாகக் கொண்ட பாகிஸ்தானின் பிரதிநிதியின் கருத்துகளுக்கு பதிலளிக்கிறேன்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் ஒரு பொய்யான மற்றும் சுயநலமான விளக்கத்தை அளித்துள்ளார்.
மே 9-ம் தேதி வரை இந்தியாமீது மேலும் தாக்குதல்கள் நடத்த பாகிஸ்தான் அச்சுறுத்தி வந்த நிலையில், மே 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் எங்கள் ராணுவத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு சண்டையை நிறுத்துமாறு கெஞ்சியது.
இந்தியாவின் நடவடிக்கையால் பல பாகிஸ்தான் விமான தளங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள், அழிக்கப்பட்ட ஓடுபாதைகள் மற்றும் எரிந்துபோன விமான கட்டமைப்பு படங்கள் பொதுவெளியில் உள்ளன.
பாகிஸ்தான் விரும்புவது போல பயங்கரவாதத்தை ஒருபோதும் இயல்பாக்க முடியாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒரு அரச கொள்கைக் கருவியாகத் தொடர்ந்து பயன்படுத்துவதை சகித்துக்கொள்வது இயல்பானது அல்ல.
இந்த புனிதமான மன்றம், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை சட்டப்பூர்வம் ஆக்குவதற்கான ஒரு தளமாக மாறமுடியாது. இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்தத் தகுதியும் இல்லை. சட்டத்தின் ஆட்சி குறித்து பாகிஸ்தான் சுய பரிசோதனை செய்துகொள்வது நல்லது என தெரிவித்தார்.
- சக்திவாய்ந்த பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் அணிவகுத்தன.
- ராணுவத்தில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்கள், கருங்கழுகுகள், ஒட்டகங்கள் கடமைப்பாதையில் அணிவகுத்தன.
நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு கடமைப்பாதையில் 21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
குடியரசு தினத்தை ஒட்டி டெல்லி கடமைப்பாதையில் தேசியக் கொடி ஏற்றப்பட்டதை அடுத்து அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதில், ஆபரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் குடியரசு தின விழாவில் அணிவகுத்தன.
சக்திவாய்ந்த பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் அணிவகுத்தன.
ராணுவத்தில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்கள், கருங்கழுகுகள், ஒட்டகங்கள் கடமைப்பாதையில் அணிவகுத்தன.
குடியரசு தினவிழாவில் 4 பைரவா மற்றும் சீக்கியர் படைப்பிரிவினர் கூட்டாக அணிவகுத்து சென்றனர்.
- பகைமையை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்றும் ஒருவர் விரும்புவது எந்த விதத்திலும் தேசத்துரோகம் ஆகாது.
- மதப் பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், போர் வேண்டாம் என்று பேசுவது அமைதிக்கான குரலே தவிர, நாட்டைத் துண்டாடும் செயல் அல்ல.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பகைமை முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவது தேசத்துரோகமாகக் கருதப்படாது என இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பேஸ்புக்கில் பாகிஸ்தான் கொடி மற்றும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களின் படங்களை பதிவேற்றியதாகக் கூறி அபிஷேக் சிங் பரத்வாஜ் என்பவர் மீது இமாச்சலப் பிரதேச போலீசார் தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தனர்.
அவர் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை விமர்சித்ததாகவும், பாகிஸ்தான் நபருடன் உரையாடியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மே மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது அபிஷேக் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்போது பேசிய நீதிபதிகள், "இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் வீணானது என்றும், இரு நாடுகளும் பகைமையை மறந்து அமைதியாக வாழ வேண்டும் என்றும் ஒருவர் விரும்புவது எந்த விதத்திலும் தேசத்துரோகம் ஆகாது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோதமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை.
மேலும், அவரது சமூக வலைதளப் பதிவுகளில் இந்திய அரசுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் அல்லது வன்முறையைத் தூண்டும் கருத்துக்கள் எதுவும் இல்லை.
மதப் பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், போர் வேண்டாம் என்று பேசுவது அமைதிக்கான குரலே தவிர, நாட்டைத் துண்டாடும் செயல் அல்ல" என்று தெரிவித்தனர்.
- கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் பாகிஸ்தான் எல்லையில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன.
புதுடெல்லி:
பாரி என்றால் கொட்டு முழக்கத்துடன் செய்யும் இரவுக் காவலைக் குறிக்கும். காட்டு விலங்குகளின் தொல்லைகளில் இருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக இரவில் காவல் இருக்கும் பண்டைய பழக்கமே பாரி வேட்டையாக நிலவுகிறது. பாரி வேட்டை தற்போது தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் பிரான்மலையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விழாவாக நடைபெறுகிறது. மாசி மாதத்தில் சிவராத்திரிக்கு மறுநாள் பாரி வேட்டைக்குச் செல்வது வழக்கம்.
இந்தப் பாரி வேட்டையை நினைவுபடுத்துவதுபோல் பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த அதிரடி நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூர் ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து இந்திய வரலாற்றில் முதன்முறையாக, மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை குறித்து இரண்டு பெண் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது கடந்த மே மாதம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
இதுதொடர்பாக இந்திய அரசு சார்பில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தான்மீது தாக்குதல் நடத்தியது குறித்து விவரித்தார்.
அதன்பின், அவரைத் தொடர்ந்து இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷி, இந்திய விமானப் படையைச் சேர்ந்த விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது, முதலில் எந்த பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, என்ன நடந்தது, ராணுவம் என்ன செய்தது, விமானப்படை என்ன செய்தது என விரிவாக வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தனர்.
இதனால் கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரு பெண் அதிகாரிகள் மக்களின் கவனத்தை ஈர்த்தனர். இணைய தளங்களிலும் இருவரும் வைரலாகினர்.
யார் இந்த சோபியா குரேஷி?
கர்னல் சோபியா குரேஷி குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தின் சிக்னல்ஸ் படைப்பிரிவு அதிகாரியான கர்னல் சோபியா குரேஷி, வலுவான ராணுவப் பின்னணியை கொண்டவர். ஐ.நா. அமைதிப் பணிக்கான இந்தியப் படைக்கு தலைமையேற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமைக்கு உரியவர். புனேவில் நடந்த பன்னாட்டு ராணுவப் பயிற்சியில் இந்திய ராணுவப் பிரிவை வழிநடத்திய முதல் பெண் அதிகாரி.

பயோகெமிஸ்ட்ரி முதுகலை பட்டதாரியான இவர் கடந்த 1999-ல் அதிகாரிகள் பயிற்சி அகாடமி மூலம் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். படிப்படியாக பதவி உயர்வுகள் பெற்றார்.
யார் இந்த வியோமிகா சிங்?
'வியோமிகா' என்ற அவரது பெயரின் அர்த்தம் 'வானத்தில் வசிப்பவள்' என்பது. தனது 6 ஆம் வகுப்பு முதலே விமானப் படையில் சேரும் ஆர்வம் கொண்டவர். விமானப் படையில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்பதில் வியோமிகா தீர்மானமாக இருந்தார்.
இந்திய விமானப் படையில் கடந்த 2019 டிசம்பர் 18-ம் தேதி விமானியாக சேர்ந்தார். இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் உயரமான மற்றும் மிகவும் சவாலான நிலப்பரப்புகளில் சேட்டக், சீட்டா போன்ற ஹெலிகாப்டர்களை இயக்கியுள்ளார். 2500-க்கும் மேற்பட்ட மணி நேரங்களை பறக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளார். மேலும் பல்வேறு மீட்புப் பணிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.
பெண்களை சக்தியாகக் கொண்டாடும் நாடு இந்தியா என்பதை நிரூபிக்கும் வகையில், மகாசக்திகளாக தலைமை தாங்கி விங் கமாண்டர் வியோமிகா சிங், கர்னல் சோபியா குரேஷி ஆகியோர் பாகிஸ்தானில் நடத்திய ஆக்ரோஷ தாக்குதல் உலகையே வியக்க வைத்துள்ளது.
எனவே தான் சோபியா குரேஷியும் வியோமிகா சிங்கும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு பிறகு அதிகளவு பேசப்பட்டு வருகின்றனர்.
- ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
- பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் நியாயப்படுத்தியது.
ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். நாங்கள் பயங்கரவாதிகளை குறிவைத்துதான் தாக்குதல் நடத்தினோம் என பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நியாயப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஜமியாத் உலேமா-இ-இஸ்லாம்-எஃப் {Jamiat Ulema-e-Islam-F (JUI-F)} தலைவர் மவுலானா பஸ்லுர் ரஹ்மான், பாகிஸ்தான் லாஜிக் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை ஆப்கானிஸ்தான் தாக்குதலுடன் ஒப்பிட்டு பாகிஸ்தானின் பாசாங்குதனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மவுலானா பஸ்லுர் ரஹ்மான் கூறுகையில் "ஆப்கானிஸ்தானில் உள்ள நம்முடைய எதிரிகள் மீது நாம் தாக்குதல் நடத்தினோம் என்று சொல்லி, அதை நியாயப்படுத்தினால், பின்னர் காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்ற குழுக்களின் தலைமையகம் மற்றும் பஹவல்பூர், முரித்கே போன்ற இடங்களில் தாக்குதல் நடத்தியதற்கு, இந்தியாவும் இதேபோன்று நியாயப்படுத்த முடியும்.
அதன்பின் நீங்கள் எப்படி ஆட்சேபனை தெரிவிக்க முடியும்?. எப்படி இந்தியா பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது என்று நாம் குற்றம்சாட்டினோமோ, அதே குற்றச்சாட்டை தற்போது பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் சுமத்துகிறது. இரண்டை நீங்கள் எப்படி நியாயப்படுத்த முடியும்?.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா கடந்த மே மாதம் 7-ந்தேதி ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து 9 பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகள் வீசி தாக்கி அளித்தது.
- NIA 8 மாதம் கழித்து தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
- லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் ஆகும்.
ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காம் பள்ளாத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22 அன்று பயங்கரவாதிகள் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு உள்ளூர் குதிரை ஓட்டியை சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் செய்ததாக குற்றம்சாட்டிய இந்தியா, மே 7 ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பயங்கரவதாக தளங்களை தாக்கி அழித்தது.
மேலும் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 4இல் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர் செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வந்த தேசிய புலனாய்வு முகாமையான NIA 8 மாதம் கழித்து தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
1597 பக்க குற்றப்பத்திரிகை ஜம்மு NIA சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு பயங்கரவாத அமைப்புகள் மற்றும் ஆறு நபர்கள் மீது NIA குற்றம் சாட்டியுள்ளது.
அந்த அமைப்புகள் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் ஆகும். இந்த சம்பவத்திற்குப் பின்னால் உள்ள சதியில் பாகிஸ்தானின் பங்கு இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
பயங்கரவாதியாகக் கருதப்படும் சஜித் ஜாட்டைத் தவிர, ஜூலை 29 அன்று ஸ்ரீநகரின் டாச்சிகாமில் இராணுவத்தின் ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்ட மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக பர்வைஸ் அகமது மற்றும் பஷீர் அகமது ஜோதர் என்ற இருவரின் பெயர்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் ஜூன் 22 அன்று கைது செய்யப்பட்டனர்.
- விஜய் திவாஸ் விழாவை முன்னிட்டு டெல்லியில் ராணுவத் தலைவர்
- இதன் இறக்கைகள் சுமார் இரண்டு மீட்டர். இந்த டிரோன்கள் 170 சிசி இயந்திரங்களால் இயக்கப்படுகின்றன.
இந்த ஆண்டு ஏப்ரலில் 26 பேர் கொல்லப்பட்ட காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே மாதம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.
இதற்கு பதிலடியா இந்திய ராணுவ தளங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவியது.
இந்த டிரோன்களை இந்திய ராணுவம் திறம்பட சுட்டு வீழ்த்தியது. தற்போது, அவற்றில் ஒன்றை டெல்லியில் ராணுவத் தலைவர் ஜெனரல் உபேந்திர திவேதி காட்சிப்படுத்தியுள்ளார்.
துருக்கியில் தயாரிக்கப்பட்ட பாகிஸ்தானின் டிரோன்களைப் நடுவானில் சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் அதில் ஒரு டிரோனை துண்டுகளிலிருந்து மீண்டும் உருவாக்கியது.
இன்று நவம்பர் 15 விஜய் திவாஸ் விழாவை முன்னிட்டு டெல்லியில் ராணுவத் தலைவர் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் இது காட்சிப்படுத்தப்பட்டது.
பஞ்சாபில் உள்ள ஜலந்தரை குறிவைத்து லாகூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்த டிரோன் ஏவப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் இறக்கைகள் சுமார் இரண்டு மீட்டர். இந்த வகை டிரோன்கள் 170 சிசி இயந்திரங்களால் இயக்கப்படுகின்றன.
மே 10 அன்று விமானப் படையால் 2000 மீட்டர் உயரத்தில் இந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
- பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- இந்தத் தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுடெல்லி:
காலை நேரத்தில் அந்த அரசு கலை அறிவியல் கல்லூரி பரபரப்புடன் காணப்பட்டது. வகுப்புகள் ஆரம்பித்து புரொபசர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்தனர்.
பி.ஏ. வரலாறு வகுப்பில் புரொபசர் சண்முகம் போர்கள் குறித்து மாணவர்களுக்கு நடத்திக் கொண்டிருந்தார். அந்தக் காலத்திய போர் முறைகள் குறித்து விளக்கினார்.
அப்போது திடீரென எழுந்த பாலாஜி என்ற மாணவன், சார் இப்போதுள்ள நவீன கருவிகள் அப்போது இருந்தால் நீண்ட நாட்களாக போர் நடந்திருக்காது அல்லவா என கேட்டான். அதற்கு, ஆமாம் என சிரித்தவாறே சண்முகம் கூறினார்.
உடனே பாலாஜி, இப்போதுகூட உலக அளவில் உக்ரைன் ரஷியா இடையிலான போர் 3 ஆண்டைக் கடந்தும் நடந்து கொண்டு இருக்கிறதே என கேட்டான்.
அது ஆயுத விற்பனை அரசியல் எனக்கூறிய புரொபசர், இந்தியா பாகிஸ்தான் போர்கள் குறித்து பாடம் எடுத்தார்.
பாலாஜி உடனே எழுந்து, ஆமாம் சார் இந்தியா கூட ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை எடுத்ததே, உலக நாடுகளும் நமக்கு பாராட்டு தெரிவித்ததே என நினைவு கூர்ந்தான்.
ஆமாம், நீ கூறியது சரிதான் என்ற சண்முகம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஏன் நடந்தது என்பது குறித்து அளித்த விளக்கம் வருமாறு:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 26 பேர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ம் தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குள் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும், 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய விமானப்படை 5 பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இவற்றில் F-16 மற்றும் JF-17 போன்ற நவீன விமானங்களும் அடங்கும்.
இதையடுத்து, இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இதனால் மே 10-ம் தேதி இந்த மோதல் முடிவுக்கு வந்தது.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி இந்து பெண்கள் பலர் தங்கள் கணவனை இழந்தனர். சிந்தூர் என்றால் பொட்டுஅல்லது திலகம் என்று பொருள். பயங்கரவாத தாக்குதலில் கணவனை இழந்த இந்து பெண்கள் தங்கள் பொட்டினை இழந்ததால் அவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்கள் மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்டன.

அந்தக் குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள அமைச்சர்கள், எம்.பி.க்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தின் மக்களவையில் ஜூலை 28-ம் தேதியிலும், மாநிலங்களவையில் ஜூலை 29-ம் தேதியிலும் விவாதம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது என சொல்லி முடித்தார்.
புரொபசரின் விளக்கத்தைக் கேட்ட சண்முகம், வம்பு சண்டைக்குப் போகக்க் கூடாது, வந்த சண்டையை விடக் கூடாது என்பது இதுதானே சார் என கேட்டபடியே, பாடங்களுக்கான குறிப்புகளை எடுக்கத் தொடங்கினான்.
- கடந்த ஏழு மாதங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 61 முறை ஆபரேஷன் சிந்தூரை நிறுத்திவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.
- அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த உச்சிமாநாட்டிற்குள் மோடி தனது நல்ல நண்பருடனான இராஜதந்திர அரவணைப்பை மீண்டும் தொடங்குவாரா?
ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.
ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் மூன்று அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார்.
இதற்கிடையே தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டி இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டைப் புறக்கணித்துள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி அதில் தைரியமாக பங்கேற்கிறார் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் இல் பதிவிட்ட காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், "அடுத்த ஜி-20 உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெறும், அந்த நேரத்தில், இந்தியா அமெரிக்காவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம்.
ஆனால், கடந்த ஏழு மாதங்களில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 61 முறை ஆபரேஷன் சிந்தூரை நிறுத்திவிட்டதாக மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.
அடுத்த 12 மாதங்களில் அவர் இன்னும் எத்தனை முறை அதை மீண்டும் மீண்டும் சொல்ல முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
அமெரிக்காவில் நடைபெறும் அடுத்த உச்சிமாநாட்டிற்குள் மோடி தனது நல்ல நண்பருடனான இராஜதந்திர அரவணைப்பை மீண்டும் தொடங்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
- சீனா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போலி படங்களை உருவாக்கி போலி சமூக ஊடகக் கணக்குகள் மூலம் பரப்பி வருகிறது.
- கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதட்டங்களை சீனா பயன்படுத்திக் கொள்ள முயன்று வருகிறது.
கடந்த ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹ்லகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 26 பேர் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி இந்திய ராணுவம் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மோதல் மே 9 அன்று அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, சீனா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி இந்தியாவை குறிவைத்து தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக அமெரிக்க காங்கிரஸ் நிபுணர் குழு தனது ஆண்டறிகையில் தெரிவித்துள்ளது.
அறிக்கைப்படி, சீனா செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போலி படங்களை உருவாக்கி போலி சமூக ஊடகக் கணக்குகள் மூலம் தங்கள் ஏவுகணைகள் இந்தியாவிடம் இருக்கும் பிரான்சின் ரஃபேல் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறி வருகிறது.
இதற்குப் பின்னால் ஒரு உத்தி இருப்பதாகவும், இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் உலகளவில் ரஃபேல் போர் விமானங்கள் மீதான நம்பிக்கையை சேதப்படுத்துவதாகவும் அறிக்கை நம்புகிறது.
அதே நேரத்தில், சீனா தனது சொந்த J-35 போர் விமானங்களுக்கான தேவையை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதட்டங்களை சீனா பயன்படுத்திக் கொள்ள முயன்று வருவதாக அறிக்கை தெரிவித்துள்ளது. நேரடி இராணுவ மோதல் இல்லாமல் புவிசார் அரசியல் விவகாரங்களில் செல்வாக்கு செலுத்த சீனா உத்திகளை உருவாக்கி வருவதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.
- இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக இருந்தன.
- அமெரிக்காவில் இருந்து 93 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹ்லகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 26 பேர் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி இந்திய ராணுவம் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மோதல் மே 9 அன்று அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை தானே ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
இந்நிலையில் 60வது முறையாக டிரம்ப், வரி விதிப்பேன் என மிரட்டி இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கலந்து கொண்ட அமெரிக்க-சவுதி முதலீட்டு மாநாட்டில் பேசிய டிரம்ப், "மோதல்களை தீர்ப்பதில் நான் ஒரு நிபுணர். இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக இருந்தன.
நீங்கள் போருக்குச் செல்லலாம், ஆனால் இரு நாடுகளுக்கும் 350 சதவீத வரிகளை விதிப்பேன் என்று நான் சொன்னேன். உங்களுடன் அமெரிக்கா இனி எந்த வர்த்தகமும் செய்யாது என சொன்னேன்.
நீங்கள் ஒருவருக்கு ஒருவர் அணு ஆயுதத்தால் தாக்கி மில்லியன் கணக்கான மக்களை கொன்று, அந்த அணு ஆயுத தூசு லாஸ் ஏஞ்சல்ஸ் மேல் படிய நான் அனுமதிக்கப்போவதில்லை என்று சொன்னேன்.
350 சதவீத வரி விதிக்க எல்லாம் தயாராக இருந்தது. எந்த அதிபரும் போர்களை நிறுத்த வரிகளை பயன்படுத்தியதில்லை. ஆனால் நான் நிறுத்திய 8 போர்களில் 5 போர்களை இதன்மூலமே நிறுத்தினேன்" என்று கூறினார்.
போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறிய கருத்தை பாகிஸ்தான் ஆமோதித்த நிலையில் இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து 93 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.






