என் மலர்
நீங்கள் தேடியது "Indian Army"
- பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் இந்திய முப்படையினரின் புகழை பாட உள்ளார்.
- பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி இருக்கும்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
இந்நிலையில், ஐ.பி.எல். இறுதிப்போட் டிக்கு முன்பு மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிது.
இதில், பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் இந்திய முப்படையினரின் புகழை பாட உள்ளார். ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் இடம் பெற்றிருந்த ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாகவும், பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இசை நிகழ்ச்சி இருக்கும் என்று கூறப்படுகிறது.
- பயங்கரவாதிகள் நடத்திய பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்
- பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ராணுவத்தின் நடமாட்டம் தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தானில் உளவு அமைப்புக்கு பகிர்ந்தாக பஞ்சாபை சேர்ந்த ககன்தீப் சிங் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகளிடம் அவர் தகவல்களை பகிர்ந்து கொண்ட மொபைல் போனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் ராணுவத்தின் முக்கிய தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி பணம் பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.
- டிரோன்களை சுட்டு வீழ்த்தும் பணியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வந்தனர்.
- சம்பா பகுதியில் ஒரு நிலைக்கு 'சிந்தூர்' என பெயர் சூட்டப்படவுள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியாவின் முப்படைகள் கடந்த 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தாக்குதல் நடத்தின. இதனால் ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே மிகக் கடுமையான சண்டை நடைபெற்றது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தியது.
இதுகுறித்து ஜம்மு பிராந்திய பி.எஸ்.எப். ஐ.ஜி. சுஷாங்க் ஆனந்த் ஜம்முவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிரான தாக்குதலின்போது அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தினோம். குறிப்பாக பி.எஸ்.எப். வீரர்கள் வித்வன்ஸக் துப்பாக்கிகளை பயன்படுத்தினர். இதன்மூலம் 1,800 கி.மீ. தொலைவு இலக்குகளை துல்லியமாக குறிவைத்து சுட முடியும்.
தானியங்கி ராக்கெட் லாஞ்சர் மூலம் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன. இதன்மூலம் 2,100 தொலைவு வரையிலான இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தோம். மேலும் 2.7 எம்எம் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும் பயன்படுத்தினோம்.
இந்த துப்பாக்கிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவ டாங்கிகள் மற்றும் டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்த துப்பாக்கிகள் மூலம் ஒரு நிமிடத்தில் 600 முதல் 1000 குண்டுகளை சுட முடியும். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 72 ராணுவ நிலைகள் முழுமையாக தகர்க்கப்பட்டன.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து எல்லையில் உள்ள கண்காணிப்பு நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் கடந்த 10-ந் தேதி டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன்களை சுட்டு வீழ்த்தும் பணியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். ஆனால், அப்போது ஒரு டிரோனில் இருந்து குண்டு வெடித்தது.
இதனால் எல்லை பாது காப்புபடை சப்-இன்ஸ் பெக்டர் முகமது இம்தியாஸ், காவலர் தீபக்குமார், ராணுவ வீரர் நாயக்சுனில் குமார் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர்.
மறைந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் பெயரை, எல்லையில் உள்ள இரண்டு நிலைகளுக்கு சூட்ட முடிவு செய்துள்ளோம். சம்பா பகுதியில் ஒரு நிலைக்கு 'சிந்தூர்' என பெயர் சூட்டப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமான விஜய் ஷா ராஜினாமாவை பாஜக ஏற்குமா?.
- விஜய் ஷா இந்த மோசமான சிந்தனைக்காக பதவி உயர்வு பெறுவார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்து கவனம் ஈர்த்தவர் கர்னல் சோபியா குரேஷி. இந்நிலையில் அவரின் இஸ்லாமிய மத அடையாளத்தை வைத்து மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா தரம் தாழ்ந்த கருத்து ஒன்றை தெரிவித்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் குன்வார் விஜய் ஷா, "பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களை அழிக்க, அவர்களது சகோதரியை அனுப்பி வைத்தோம். எங்களின் விமானத்தில் அவர்களின் சகோதரியை அனுப்பி வைத்து, அவர்களை அழிக்க வைத்தார் மோடி. எங்கள் சகோதரிகளை நீங்கள் விதவைகளாக்கினால், உங்களின் சகோதரிகளை கொண்டு உங்களை அழிக்க வைப்போம்" என்று பேசினார்.
அவர் பேசிய வீடியோ வைரலான நிலையில் பாஜக அமைச்சர் ஆயுதப்படைகளை அவமதித்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பீகார் காங்கிரஸ் எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்தியப் பிரதேச பாஜக அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷி பயங்கரவாதிகளின் மகள் என்று அவமானகரமான கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மகள் கர்னல் சோபியா குரேஷி நமது பெருமை, ஆனாலும் அவரைப் பற்றி இதுபோன்ற ஒரு அவமானகரமான கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நமது துணிச்சலான ஆயுதப் படைகளுக்கு அவமானம்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் விஜய் ஷா, ராஜினாமாவை பாஜக ஏற்குமா?.
இந்த அற்ப சிந்தனைக்கு பிரதமர் மோடியும் பாஜக தலைவர்களும் மன்னிப்பு கேட்பார்களா?. அல்லது, எப்போதும் போல, விஜய் ஷாவும் இந்த மோசமான சிந்தனைக்காக பதவி உயர்வு பெற்று, அவருக்கு ஆதரவாக பேரணிகள் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
- பயங்கரவாதத்தை ஆதரிப்பதால் ஏற்படும் வலயை பாகிஸ்தான் உணரச் செய்துள்ளோம்.
- பாகிஸ்தான் ராணுவத்தினரை கொல்வது நமது நோக்கமாக இருக்கவில்லை.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக டெல்லியில் ராணுவம் உள்ளிட்ட முப்பபை அதிகாரிகள் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதில், இந்திய ராணுவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர்.
ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெரனல் ஷர்தா ஆகியோர் உள்ளனர்.
அப்போது, அபேரஷன் சிந்தூர் குறித்து லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் கூறியதாவது:-
எனது ஐந்து சகாக்கள் மற்றும் ஆயுதப்படைகளைச் சேர்ந்த சகோதரர்கள் மற்றும் ஆபரேஷன் சிந்தூரில் துயரகரமாக உயிரிழந்த பொதுமக்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
துயரமடைந்த குடும்பங்களுக்கு எங்கள் இதயங்கனிந்த அஞ்சலி செலுத்துகின்றன. அவர்களின் தியாகங்கள் எப்போதும் நினைவுகூரப்படும்.
இதுவரை நாங்கள் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடித்துள்ளோம், எங்கள் நடவடிக்கைகள் கவனம் செலுத்தி, அளவிடப்பட்டு, தீவிரமடையாமல் உள்ளன. இருப்பினும், நம் குடிமக்களின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் தீர்க்கமான சக்தியுடன் எதிர்கொள்ளப்படும்.
பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் தரைவழி, வான்வழி தடுப்பு தொழில்நுட்பங்கள் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டன. பயங்கரவாதத்தை ஆதரிப்பதால் ஏற்படும் வலயை பாகிஸ்தான் உணரச் செய்துள்ளோம்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தின் சார்பில் நீதி நிலைநாட்டப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தினரை கொல்வது நமது நோக்கமாக இருக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கேரளாவிற்கு ஷூட்டிங் செல்வதற்காக சென்னை வி்மான நிலையத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார்.
- போரை வலிமையாக, திறமையாக கையாண்ட பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்.
பாகிஸ்தானிற்குள் சென்று தாக்குதல் நடத்தியஇந்திய ராணுவத்திற்கு வாழ்த்துகள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கேரளாவிற்கு ஷூட்டிங் செல்வதற்காக சென்னை வி்மான நிலையத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்," பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு பாராட்டுகள்.
போரை வலிமையாக, திறமையாக கையாண்ட பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருக்கும் எனது வாழ்த்துகள்" என்றார்.
- நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெறுகிறது.
- பேரணியில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் இன்று மாலை 5 மணியளவில் பேரணி நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், பயங்கரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும், ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பேரணி நடைபெற உள்ளதாக கூறப்பட்டது.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கியது.
இந்த பேரணி தீவுத்திடலில் உள்ள போர் நினைவுச்சின்னம் அருகே வரை நடைபெறுகிறது.
இந்தப் பேரணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள் எம்பிக்கள், பொது மக்கள் கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி பங்கேற்றுள்ளனர்.
பேரணி செல்லும் சாலையில் மருத்துவ முகாம்கள், ஆம்புலன்ஸ்கள், குடிநீர் தொட்டிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- காந்திபாகிய மசூதியில் நேற்று இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
- ராணுவ வீரர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவது இந்தியர்களாகிய நம் அனைவரின் பொறுப்பாகும்.
இந்தியாவுக்கு ஆதரவாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உப்பினங்கடி அருகே உள்ள காந்திபாகிய மசூதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
இதில் பள்ளிவாசல் தலைவர் எஸ்.அப்துல் ரஹிமான், துணைத் தலைவர் முகமது ரபீக், செயலாளர் நசீர் பூரிங்கா, பொருளாளர் ஹசைனார், கதீப் அப்துல் ரசாக் சுல்தான் தாரிமி, ஜமாத் உறுப்பினர் அப்பாஸ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் அவர்கள் கூறுகையில், "நமது இந்திய ராணுவ வீரர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குவது இந்தியர்களாகிய நம் அனைவரின் பொறுப்பாகும்.
இந்திய வீரர்களுக்கு கடவுள் அதிக பலத்தை அளிப்பார் என்றும், எதிரி நாடான பாகிஸ்தான் அழிக்கப்பட வேண்டும் எனவும்" கூறினர்.
இதேபோல், கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல்வேறு மசூதிகளிலும் காஷ்மீர் மக்களின் நலன் வேண்டியும், அங்கு அமைதி நிலவவும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
- 9 பயங்கரவாத முகாம்களில் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல்களை நடத்தியது.
- பஹவல்பூரில் உள்ள ஜாமியா மசூதி தாக்குதலுக்கு பின்னர் பெரும் சேதமடைந்துள்ளது.
'ஆபரேசன் சிந்தூர்' என்ற திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களில் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்குதல்களை நடத்தியது.
இதன் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் நிலைகள் செயற்கை கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
மாக்சர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட ஒப்பீட்டு செயற்கைக்கோள் படங்கள் முக்கியமான இடங்களில் கணிசமான கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள சேதத்தை காட்டுகிறது.
குறிப்பாக பஹவல்பூரில் உள்ள ஜாமியா மசூதி மற்றும் பாகிஸ்தானின் முரிட்கே நகரத்திற்குள் குறிவைக்கப்பட்டன.
82 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்த இந்த வளாகம், பாகிஸ்தானின் பஞ்சாப், ஷேக்குபுராவின் முரிட்கே, நங்கல் சஹ்தானில் அமைந்துள்ள 'அல்மா மேட்டர்' மற்றும் லஷ்கர் இ-தொய்பாவின் மிக முக்கியமான பயிற்சி மையமாக இருந்தது.
இதேபோல், பஹவல்பூரில் உள்ள ஜாமியா மசூதியும் தாக்குதலுக்கு பின்னர் பெரும் சேதமடைந்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பஹவல்பூர் மாவட்டத்தில் உள்ள கராச்சி மோரில் பஹவல்பூரின் புறநகரில் உள்ள என்.எச்.-5 (கராச்சி-டோர்காம் நெடுஞ்சாலை) இல் சுப்ஹான் அல்லா மர்கஸ் அமைந்துள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இங்கு இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு போதனைகள் செய்யப்பட்டுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமதுவின் முக்கிய மையமாக இந்த இடம் இருந்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 9 பயங்கரவாத தளங்களை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி அழித்தது.
பாகிஸ்தான் எல்லைக் குள் உள்ள 4 இடங்களில் இந்திய விமானப்படை துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. அதே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5 இடங்கள் குறி வைக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
சிந்தூர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்களின் படங்கள் அனைத்தும் செயற்கைகோள் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- பாகிஸ்தான் எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றபட்டு வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தியது. சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையில் சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட எல்லைப் பாதுகாப்புப் படைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எல்லை முழுவதும் சீல் வைக்கப்பட்ட நிலையில் அதனை ஒட்டிய பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றபட்டு வருகின்றனர். இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல்
- பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து இந்திய ராணுவம் தாக்கி அழித்தது
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தப்பட்டது. சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து இந்திய ராணுவம் தாக்கி அழித்தது என்று தகவல் வெளியாகியுள்ளது.
- பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
- இந்திய ராணுவம் தொடர்பான பல்வேறு இணையதளங்களை பாகிஸ்தான் ஹேக் செய்துள்ளது.
காஷ்மீரில் கடந்த மாதம் 22-ந்தேதி பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவ வாகனங்களுக்கான இணையதளம் மீது பாகிஸ்தான் சைபர் தாக்குதல் நடத்துகிறது.
இந்திய ராணுவம் தொடர்பான பல்வேறு இணையதளங்களை பாகிஸ்தான் ஹேக் செய்துள்ளது.
பாரிக்கர் பாதுகாப்பு கல்வி நிறுவனத்தின் இணையதளத்தையும் பாகிஸ்தான் ஹேக் செய்துள்ளது.
சைபர் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ஆய்வு நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.