என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான தளம்"

    • அயினி தளத்தில் 2002 முதல் இந்தியா செயல்பட்டு வந்தது.
    • 2022ல் இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது.

    இந்தியாவின் ஒரே தனித்துவமான வெளிநாட்டு விமான தளமாக விளங்கிய தஜிகிஸ்தானில் உள்ள அயினி விமான தளத்தை விட்டு இந்திய ராணுவம் வெளியேறியது.

    மத்திய ஆசியாவின் மூலோபாய மூக்கியத்துவம் வாய்ந்த பகுதியான அயினி தளத்தில் 2002 முதல் இந்தியா செயல்பட்டு வந்த நிலையில், 2022ல் ஒப்பந்தத்தை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சீனா மற்றும் ரஷ்யாவின் அழுத்தம் காரணமாக இந்தியா உடனான இருதரப்பு ஒப்பந்தத்தை நீட்டிக்க தஜிகிஸ்தான் மறுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    தஜிகிஸ்தானின் இந்த முடிவு புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

    • பக்ராம் விமான தளத்தில் அமெரிக்க படைகளை குவிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்
    • சீனாவின் அணு ஆயுத தயாரிப்பு மையத்திற்கு அருகே பக்ராம் தளம் அமைந்துள்ளது.

    ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்ததையடுத்து ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர்.

    இதையடுத்து அமெரிக்காவிற்கும் தாலிபானுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் மூலம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அந்த விமானப்படை தளம் சீனாவுக்கு அருகில் இருப்பதால் அங்கு படைகளை குவிக்க விரும்புகிறார். ஆனால் அதற்கு தாலிபான்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தாலிபான்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    பாக்ராம் விமான தளத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஆப்கானிஸ்தான் "விரைவில்" திருப்பித் தர வேண்டும். அந்த விமான தளத்தை அமெரிக்காவிற்கு ஆப்கானிஸ்தான் திருப்பித் தரவில்லை என்றால், மோசமான விஷயங்கள் நடக்கும்" என்றார்.

    நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும்.

    திருப்பூர்:

    கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில், பாதுகாப்பு தொழில்துறை பூங்கா அமைய உள்ளது. இதற்காக கூடுதல் நிலம் தேவைப்படுவதால் நில எடுப்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் துறை வளர்ச்சி கழகம் சார்பில் இதற்கான பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    விண்வெளி பாதுகாப்பு மற்றும் தொழில்துறை பூங்கா ஏற்படுத்துவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இத்துடன் விமானப்படை ஓடுதளமும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், திருப்பூர் மாவட்டம் பருவாய் கிராமத்துக்கு உட்பட்ட 86.38 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த இடங்களை கையகப்படுத்த ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். முதல் கட்டமாக வீட்டு மனைகள், விளை நிலங்களின் அளவீடு, மரங்கள், கிணறு எண்ணிக்கை விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் நிலம் கையகப்படுத்தப்பட்டு தமிழ்நாடு தொழில் துறை வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×