என் மலர்
நீங்கள் தேடியது "Air Force Base"
- கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை ஈரான் தாக்கியது.
- சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கத்தாரில் தோஹாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானப்படை தளம் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கத்தாரைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளும் தங்கள் வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன.
நேற்று (திங்கள்கிழமை முதல்) தனது வான்வெளியை மறு அறிவிப்பு வரும் வரை மூடியுள்ளதாக குவைத் அறிவித்தது. குவைத் ஏர்வேஸ் அனைத்து விமான சேவைகளையும் நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கப்பற்படைப் பிரிவு அமைந்துள்ள பஹ்ரைன் நாடு, பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக வான்வெளி மூடலை அறிவித்தது.
அதிகரிக்கும் பதட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி கத்தாரும் தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகமும் தனது வான்வெளியை மூடியதாக FlightRadar24 தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் வான்வெளி மூடப்பட்டதால், சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரான், ஈராக், சிரியா மற்றும் இஸ்ரேல் வான்வெளிகள் பெரும்பாலும் காலியாக இருப்பதாக FlightRadar24 தரவுகள் தெரிவிக்கின்றன.
"சேஃப் ஏர்ஸ்பேஸ்" என்ற உலகளாவிய விமானப் பாதுகாப்பு அமைப்பு, ஏவுகணை மற்றும் ட்ரோன் செயல்பாடுகள் வர்த்தக விமானங்களுக்கு, குறிப்பாக அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக எச்சரித்துள்ளது.
- டிரோனை நடுவானில் வெற்றிகரமாக அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் மோதலை நிறுத்தும் விதமாக நேற்று சண்டையை நிறுத்தும் இருதரப்பு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறி டிரோன் தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள விமானப்படை நிலையத்தையும் குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், இந்திய இராணுவமும் பாதுகாப்பு அமைப்பும் டிரோனை வானிலேயே சுட்டு வீழ்த்தின. இந்த நேரத்தில், விமானப்படை நிலையத்தில் பணியில் இருந்த ஒரு சிப்பாய் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலால் வீரமரணம் அடைந்தார்.
வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் பெயர் சுரேந்திர சிங் மோகா. 2 குழந்தைகளுக்கு தந்தையான இவர் ராஜஸ்தானின் ஜுன்ஜுனுவை சேர்ந்தவர். தற்போது உதம்பூர் விமானப்படை நிலையத்தில் மருத்துவ உதவியாளராக பணியில் இருந்தார். அங்கு பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு, டிரோனை நடுவானில் வெற்றிகரமாக அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இடிபாடுகளில் டிரோன் தாக்குதல் ஏற்படுத்திய இடிபாடுகளுக்குள் சிக்கி சுரேந்திர சிங் மோகா பலத்த காயமடைந்த நிலையில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவரின் மறைவுக்கு ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
- விமானப்படை தளத்தில் சீனாவின் டிரோன்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் உள்ளன.
- பாகிஸ்தானும் சுரண்டுவதாக பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் குற்றம்சாட்டி வருகிறது.
பாகிஸ்தானின் துர்பத்தில் அந்நாட்டின் 2-வது பெரிய கடற்படை, விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு ராணுவத்தினர் விரைந்து சென்றனர். இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தின் மஜீத் ராணுவப்பிரிவு பொறுப்பேற்றுள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கம் கூறும்போது, விமானப்படை தளத்துக்குள் போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பலர் பலியானதாக தெரிவித்துள்ளது.
இந்த விமானப்படை தளத்தில் சீனாவின் டிரோன்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் உள்ளன. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள இயற்கை வளங்களை சீனாவும், பாகிஸ்தானும் சுரண்டுவதாக பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் குற்றம்சாட்டி வருகிறது. சீன முதலீடுகளை கடுமையாக எதிர்த்து வரும் அந்த இயக்கம் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் குவாதர் துறைமுகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்:
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில், பாதுகாப்பு தொழில்துறை பூங்கா அமைய உள்ளது. இதற்காக கூடுதல் நிலம் தேவைப்படுவதால் நில எடுப்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் துறை வளர்ச்சி கழகம் சார்பில் இதற்கான பணி மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
விண்வெளி பாதுகாப்பு மற்றும் தொழில்துறை பூங்கா ஏற்படுத்துவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இத்துடன் விமானப்படை ஓடுதளமும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், திருப்பூர் மாவட்டம் பருவாய் கிராமத்துக்கு உட்பட்ட 86.38 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இந்த இடங்களை கையகப்படுத்த ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். முதல் கட்டமாக வீட்டு மனைகள், விளை நிலங்களின் அளவீடு, மரங்கள், கிணறு எண்ணிக்கை விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் நிலம் கையகப்படுத்தப்பட்டு தமிழ்நாடு தொழில் துறை வளர்ச்சிக் கழகத்திடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






