என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Qatar"

    • அந்த தாக்குதலில் 206 பேர் பலியாகினர்.
    • பாகிஸ்தானின் பொறுப்பற்ற அணுகுமுறையே இத்தோல்விக்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அண்டை நாடான பாகிஸ்தானுடன் மோதல் போக்கை கொண்டுள்ளனர்.

    பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் 'தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான்' என்ற அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

    கடந்த மாதம், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத கும்பலை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் 206 பேர் பலியாகினர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தலிபான் நடத்திய தாக்குதலில் 23 வீரர்கள் உயிரிழந்தனர்.

    பதிலுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர்கள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல்காளில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த மாத இறுதியில் கத்தார் மத்யஸ்தத்தில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    தொடர்ந்து துருக்கியில் பல கட்டங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் போர் நிறுத்தத்தை மீறி நேற்று பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 ஆப்கன் பொதுமக்கள் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

    பாகிஸ்தானின் பொறுப்பற்ற அணுகுமுறையே இத்தோல்விக்கு காரணம் என்றும், ஆப்கான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் உரிய பதிலடி கொடுப்போம் எனவும் ஆப்கான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.  

    • அர்குன் மற்றும் பர்மல் மாவட்டங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
    • பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்றன.

    பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர கத்தாரும் துருக்கியும் மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டு வந்தன.

    ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட 48 மணி நேர போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த பின் நேற்று முன் தினம் ஆப்கானிஸ்தானில் பாக்டிகா மாகாணத்தின் அர்குன் மற்றும் பர்மல் மாவட்டங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் கிரிக்கெட் வீரர்கள் 3 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என கத்தார் அழைப்பு விடுத்து இருந்தது.

    இதன்படி கத்தார் தலைநகர் தோஹாவில் இரு தரப்புக்கும் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் முல்லா முஹம்மது யாக்கூப் தலைமையிலான குழுவும், பாகிஸ்தான் தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிப் தலைமையிலான குழுவும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றன.

    இந்நிலையில் பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டதாக கத்தார் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

    சண்டை நிறுத்தத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் நீடிக்கசெய்வதற்கும் வரும் நாட்களில் தொடர் கூட்டங்களில் பேசி முடிவுக்கு வரவும் இரு தரப்பினரும் சம்மதித்துள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதை உறுதி செய்யும் வகையில், பாகிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மண்ணில் இருந்து வரும் எல்லை கடந்த பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் எல்லையில் அமைதி, ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது குறித்து பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டதாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. 

    • இங்கிலாந்து அணி 17-வது முறையாக உலக கோப்பைக்கு முன்னேறியுள்ளது.
    • ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியா 7-வது தடவையாகவும், கத்தார் 2-வது முறையாகவும் தகுதி பெற்றுள்ளன.

    ரிகா (லாத்வியா):

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. இது 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

    ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ, துனிசியா, எகிப்து. அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.

    இந்த நிலையில் இங்கிலாந்து, கத்தார், தென்ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல் ஆகிய 6 நாடுகள் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

    ஐரோப்பிய கண்டங்களான குரூப் 'கே' பிரிவுக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து-லாத்வியா அணிகள் மோதின. லாத்வியாவில் உள்ள ரிகா நகரில் நடந்த இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 18 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

    இங்கிலாந்து அணி 17-வது முறையாக உலக கோப்பைக்கு முன்னேறியுள்ளது. தொடர்ச்சியாக 8-வது தடவையாக தகுதி பெற்றது. ஐரோப்பிய கண்டத்தில் இருந்து தகுதி பெற்ற முதல் அணி இங்கிலாந்து ஆகும்.

    ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியா 7-வது தடவையாகவும், கத்தார் 2-வது முறையாகவும் தகுதி பெற்றுள்ளன. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள தென் ஆப்பிரிக்கா, ஐவேரி கோஸ்ட், செனகல் ஆகிய 3 நாடுகளும் 4-வது தடவையாக உலக கோப்பைக்கு முன்னேறியுள்ளன.

    3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றுக்கு செல்லும் 25 நாடுகள் என இதுவரை 28 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரிய வந்துள்ளது. இன்னும் 20 நாடுகள் தகுதி பெற வேண்டும்.

    • ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள்
    • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.

    இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த நாளை உலகத் தலைவர்கள் எகிப்தில் கூடுகின்றனர்.

    இந்த சர்ம் எல்-ஷேக் அமைதி உச்சி மாநாடு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோரால் இணைந்து நடத்தப்பட உள்ளது.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த உச்சி மாநாட்டில் போர்நிறுத்ததை உறுதிப்படுத்துதல், காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்தல் மற்றும் போருக்குப் பிந்தைய மறுசீரமைப்புக்கான திட்டமிடல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

    காசா போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் கத்தார் மிக முக்கியமான மத்தியஸ்தர்களில் ஒன்றாகச் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று, எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில் கத்தார் நாட்டைச் சேர்ந்த மூன்று தூதர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்

    காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான உச்சி மாநாட்டின் ஏற்பாடுகளில் பங்கேற்க இந்தத் தூதர்கள் சர்ம் எல்-ஷேக்கிற்குப் பயணித்துக்கொண்டிருந்தனர்.

    அவர்கள் பயணித்த வாகனம், நகரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கூர்மையான வளைவில் கவிழ்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    • வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • தோஹாவில் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்காக வந்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

    காசாவில் புதிய போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வாஷிங்டனில் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் நேதன்யாகு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதன் போது கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அலுவலகத்தை தாக்கியது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு நேதன்யாகு மன்னிப்பு கேட்டுள்ளார்.

    வெள்ளை மாளிகையில் இருந்தபடி கத்தார் பிரதமர் ஜாசிம் அல் தானியை தொலைபேசியில் அழைத்து நேதன்யாகு மன்னிப்பு கேட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    மேலும் வருங்காலங்களில் கத்தார் மீது இதுபோன்ற தாக்குதல்களை நடத்த மாட்டோம் என அவர் உறுதியளித்ததாக கூறியுள்ளது. இந்த போன் காலில் டிரம்ப்பும் உடன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

     இந்த மாதம் 9 ஆம் தேதி, தோஹாவில் மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்காக வந்த ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கத்தார் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.  

    • பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும்.

    பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் NATO அமைப்பு போன்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

    கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதன் விளைவாக இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது.

    அண்மையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இருநாடுகளும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இனிமேல் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு இந்தியா மீது சவூதி அரேபியா தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    • மத்தியஸ்தம் செய்த நாடு மீதே இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஐ.நா, இந்தியா, ஈரான், சவுதி அரேபியா ஆகியவை கண்டித்தன.
    • ஒட்டுமொத்த வளைகுடாவும் அபாயத்தில் இருக்கிறது.

    காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஹமாஸ் அரசியல் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த செப்டம்பர் 9 அன்று கூடியிருந்தனர்.

    அப்போது, இஸ்ரேல் போர் விமானங்கள் திடீரென கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தின.

    இதில், ஹமாஸ் தலைவர்கள் உயிர் தப்பினர். ஆனால், 5 ஹமாஸ் உறுப்பினர்களும், ஒரு கத்தார் பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.

    அமைதி திரும்ப மத்தியஸ்தம் செய்த நாடு மீதே இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஐ.நா, இந்தியா, ஈரான், சவுதி அரேபியா ஆகியவை கண்டித்தன.

    இந்த தாக்குதல் கோழைத்தனமானது என கத்தார் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முன்னதாக கண்டித்திருந்தார்.

    இந்நிலையில் தாக்குதல் குறித்து அந்நாட்டு பிரதமர் அப்துல் ரஹ்மான் அல் தானி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது பேசிய அவர், தாக்குதல் நடைபெற்ற அன்று காலை நான் பிணைக் கைதி ஒருவரது குடும்பத்தினருடன் பேசினேன். அவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கவனிக்கின்றனர். ஆனால், தாக்குதலின் மூலம் நேதன்யாகு அந்த பிணைக் கைதிகளுக்கான அனைத்து நம்பிக்கையையும் கொன்றுவிட்டார்.

    இஸ்ரேலால் ஒட்டுமொத்த வளைகுடாவும் அபாயத்தில் இருக்கிறது. இஸ்ரேலின் அட்டூழியம் மற்றும் காட்டுமிராண்டித்தனம் தொடர்வதைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க அரபு - இஸ்லாமிய உச்சி மாநாடு நடைபெறும். அதில் இஸ்ரேல் மீதான பதிலடி தாக்குதல் குறித்து முடிவெடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.  

    • காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஹமாஸ் அரசியல் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் கூடியிருந்தனர்.
    • 5 ஹமாஸ் உறுப்பினர்களும், ஒரு கத்தார் பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.

    காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஹமாஸ் அரசியல் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில்  கூடியிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று இஸ்ரேல் போர் விமானங்கள் திடீரென நேற்று, கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தின.

    இதில், ஹமாஸ் தலைவர்கள் உயிர் தப்பினர். ஆனால், 5 ஹமாஸ் உறுப்பினர்களும், ஒரு கத்தார் பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.

    அமைதி திரும்ப மத்தியஸ்தம் செய்த நாடு மீதே இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டித்தன.

    இந்நிலையில் பிரதமர் மோடி கத்தார் அமீருடன் தொலைபேசியில் பேசி தனது ஆறுதலை தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "தோஹாவில் நடந்த தாக்குதல்கள் குறித்து கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்-தானியிடம் பேசி, ஆழ்ந்த கவலை தெரிவித்தேன்.

    சகோதரத்துவ நாடான கத்தாரின் இறையாண்மையை மீறுவதை இந்தியா கண்டிக்கிறது.

    பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மோதல் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம்.

    பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாகவும், அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் இந்தியா உறுதியாக நிற்கிறது" என்று தெரிவித்தார்.    

    • டிரம்ப் கத்தாருக்குச் சென்றபோது, அவருக்கு 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொகுசு விமானம் பரிசாகக் கொடுக்கப்பட்டது.
    • "இந்தத் தாக்குதலை நடத்தியது நான் அல்ல, பெஞ்சமின் நேதன்யாகு" என்று ட்ரம்ப் மழுப்பியுள்ளார்.

    காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஹமாஸ் அரசியல் தலைவர்கள் கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று கூடியிருந்தனர்.

    இந்நிலையில் நேற்று இஸ்ரேல் போர் விமானங்கள் திடீரென கத்தாரில் ஹமாஸ் அலுவலகம் மீது வான்வழித் தாக்குதல் நடத்தின.

    இதில், ஹமாஸ் தலைவர்கள் உயிர் தப்பினர். ஆனால், 5 ஹமாஸ் உறுப்பினர்களும், ஒரு கத்தார் பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டனர்.

    அமைதி திரும்ப மத்தியஸ்தம் செய்த நாடு மீதே இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ஈரான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் கண்டித்தன.

    அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாக கத்தார் திகழ்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல் அதிபர் டொனால்டு டிரம்பின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

    இஸ்ரேல் தாக்குதல் குறித்து முன்கூட்டியே தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரி உறுதிப்படுத்தினார்.

    இருப்பினும் "துரதிர்ஷ்டவசமாக, தாக்குதலைத் தடுக்கத் தாமதமாகிவிட்டது," என்று தாக்குதல் குறித்து டிரம்ப் அலட்சியமாக பதிலளித்துள்ளார்.

    மேலும், "இந்தத் தாக்குதலை நடத்தியது நான் அல்ல, பெஞ்சமின் நேதன்யாகு," என்று டிரம்ப் மழுப்பியுள்ளார்.

    அதேவேளை "ஒரு இறையாண்மை கொண்ட நாட்டில், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாட்டில் தன்னிச்சையாக குண்டுவீசுவது இஸ்ரேல் அல்லது அமெரிக்காவின் நோக்கங்களை அடைய உதவாது" என்றும் டிரம்ப் கூறினார்.

    கத்தார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், தாக்குதல் தொடங்கிய 10 நிமிடங்களுக்குப் பிறகுதான் அமெரிக்காவிடமிருந்து அழைப்பு வந்ததாகத் தெரிவித்தார்.

    நான்கு மாதங்களுக்கு முன்புதான் டிரம்ப் கத்தாருக்குச் சென்றபோது, அவருக்கு  400 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொகுசு விமானம் பரிசாகக் கொடுக்கப்பட்டது. கத்தாரில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளமும் செயல்பட்டு வருகிறது.   

    • சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
    • முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    கத்தார் நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், பக்கிரிபாளையம் கிராமம், ரஹமான்பேட்டையைச் சேர்ந்த நவாஸ் (35 வயது) த/பெ.அன்வர் என்பவர் கத்தார் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கார் டிரைவராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த 25.8.2025 அன்று நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    கத்தார் நாட்டில் சாலை விபத்தில் உயிரிழந்த நவாசின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த நவாசின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
    • இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன.

    ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கத்தாரில் தோஹாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானப்படை தளம் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

    அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

    இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன.

    இந்நிலையில், கத்தாரில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரானின் தாக்குதல் எதிரொலியாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பதிவில், "கத்தாரில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், வீட்டிலேயே இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கத்தார் அதிகாரிகளிடமிருந்து வரும் உள்ளூர் செய்திகள், அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்" என்று தெரிவித்துள்ளது. 

    • கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தை ஈரான் தாக்கியது.
    • முன்னெச்சரிக்கையாக வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன.

    ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கத்தாரில் தோஹாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானப்படை தளம் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

    அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

    இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன.

    இதனால், சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தோகா, அபுதாபி, குவைத், துபாய் உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    தாய்லாந்து நாட்டிலிருந்து தோகா சென்று கொண்டிருந்த, 3 கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள், தோகா செல்ல முடியாமல், சென்னையில் வந்து தரை இறங்கின.

    ×