search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Qatar"

    • விரிவான மற்றும் முழுமையான போர் நிறுத்தம் தேவை என்கிறது ஹமாஸ்
    • ஹமாஸின் இந்த கோரிக்கையை நிராகித்து வருகிறது இஸ்ரேல்

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் காசாவில் போரினால் கொல்லப்படும் பாலஸ்தீன மக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் உலக நாடுகள் போர் நிறுத்தம் தேவை என வலியுறுத்தி வருகின்றன.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட கத்தார் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகிறது. கத்தாரின் தீவிர முயற்சி காரணமாக ஏழு நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் அமைப்பினர் சுமார் 100 பிணைக்கைதிகளை விடுவித்தனர். ஒரு பிணைக்கைதிக்க மூன்று பேர் என்ற அடிப்படையில் இஸ்ரேல், ஜெயிலில் இருந்து பாலஸ்தீனர்களை விடுதலை செய்தது.

    அதன்பின் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. கத்தார், அமெரிக்கா போன்ற நாடுகள் முயற்சி மேற்கொண்டும் இருதரப்பும் சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்பட்டு வந்தது.

    போர் நிறுத்தம், பிணைக்கைதிகளை விடுவித்தல் ஆகிவற்றில் ஹமாஸ் அமைப்பு சாதகமான பதிலை கொண்டிருப்பதாக கத்தார் பிரதமர் தெரிவித்துள்ளார்.

    கத்தார் பிரதமர், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்தார். அப்போது இந்த கருத்தை அவரிடம் தெரிவித்துள்ளார்.

    கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான், ஹமாஸின் பதில் குறித்து விரிவாக ஏதும் தெரிவிக்கவில்லை.

    இன்று இஸ்ரேல் செல்ல இருக்கும் நிலையில் ஆண்டனி பிளிங்கன், அதிகாரிகள் ஹமாஸின் பதிலை பெற்றுள்ளனர். இது தொடர்பாக இஸ்ரேல் தலைவர்களிடம் விளக்கம் அளிப்பதாக கூறினார்.

    இது தொடர்பாக ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மத்தியஸ்தர்களிடம் இருந்து வரப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் நேர்மறையான உணர்வில் பதில் அளிக்கப்பட்டது" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேவேளையில் எங்களுடைய மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வர விரிவான மற்றும் முழுமையான போர் நிறுத்தத்தை நாடுகிறது ஹமாஸ் அமைப்பு. ஆனால் இஸ்ரேல் இந்த கோரிக்கை நிராகரித்து வருகிறது.

    • இந்த பிரச்சினையில் இந்தியா தனது நிலைப்பாட்டை முறையாக வைத்துள்ளது.
    • 8 இந்தியர்களை அங்கிருந்து மீட்டெடுப்பதில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்.

    கத்தாரில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு நேற்று அங்குள்ள நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    தனியார் நிறுவனமான அல் தஹ்ராவில் பணிபுரிந்த இந்திய பிரஜைகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உளவு பார்த்ததாகக் கூறப்படும் வழக்கில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை கத்தார் அதிகாரிகளோ அல்லது புது டெல்லியோ பகிரங்கப்படுத்தவில்லை.

    கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்தியக் கடற்படை வீரர்களையும் இந்தியா திரும்பக் கொண்டுவர சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

    கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக், வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே இந்த விஷயத்தை ஆராய்ந்து வருகிவதாகவும் கூறினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    இந்த பிரச்சினையில் இந்தியா தனது நிலைப்பாட்டை முறையாக வைத்துள்ளது.

    இதுபோன்ற சம்பவங்களும் நடப்பதை கண்டு நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். இந்த விவகாரத்தில் நாங்கள் சட்டப் போராட்டம் நடத்துவோம். சர்வதேச நீதிமன்றம் உள்ளது.

    இந்திய அரசு தனது நிலைப்பாட்டை எடுக்கும் என்று நான் நம்புகிறேன். அவர்களை அங்கிருந்து மீட்டெடுப்பதில் நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எந்த மேற்கத்திய நாடும் தலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை
    • மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டை விளக்கினர்

    2021-ம் வருடம் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டது.

    இதனையடுத்து மத அடிப்படைவாத தலிபான் அமைப்பினர் அங்கு ஆட்சியை கைப்பற்றினர். அப்போதிலிருந்தே தலிபான் அரசாங்கம் அந்நாட்டில் மனித உரிமைகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

    குறிப்பாக மத ரீதியான காரணங்களை வலியுறுத்தி பெண்களின் அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றை தடை செய்திருக்கிறது. இதுவரை எந்த மேற்கத்திய நாடும் தலிபான் அரசாங்கத்தை முறையாக அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆட்சியமைத்த 2 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக அமெரிக்க பிரதிநிதிகள், தலிபான் அமைப்பை சேர்ந்தவர்களை கத்தார் நாட்டில் சந்தித்தனர்.

    தலிபான் தரப்பில் இருந்து அவர்கள் நாட்டிற்கு அமெரிக்கர்கள் வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள சுற்றுபயண தடை உட்பட பல தடைகளை நீக்குவது குறித்தும், வெளிநாடுகளில் உள்ள ஆப்கானிஸ்தானின் மத்திய வங்கிக்கு சொந்தமான சொத்துக்களை திரும்ப பெறுவது குறித்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

    அமெரிக்க தரப்பில் ஆப்கானிஸ்தானில் நிலவும் மனித உரிமைகள் பிரச்சனை குறித்து முக்கியமாக அலசப்பட்டது.

    இந்த சந்திப்பில் சிறப்பு அமெரிக்க பிரதிநிதி தாமஸ் வெஸ்ட் மற்றும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் மனித உரிமைகளுக்கான தூதர் ரீனா அமிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் தலிபானின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளுக்கு எதிரான அமெரிக்காவின் கடுமையான நிலைப்பாட்டை விளக்கினர். ஆப்கானிஸ்தானின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக வேண்டிய உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    பெண் குழந்தைகளின் கல்வி தடை, பெண்கள் வேலைக்கு செல்வதற்கான தடை, ஊடகங்களுக்கான தடை மற்றும் பிற மத வழிபாட்டு தடை உட்பட தாலிபான் விதித்திருக்கும் பல தடைகளை நீக்க கோரும் அமெரிக்க நிலைப்பாடு விளக்கப்பட்டது.

    உலகின் மிகப்பெரிய ஓபியம் பயிரிடும் நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு வந்ததும், ஓபியம் பயிரிடுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. இதுகுறித்தும் இந்த சந்திப்பில் பேசப்பட்டது.

    தலிபான் அரசு ஆட்சியை கைப்பற்றிய உடன் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானுக்கு மத்திய வங்கியின் பணம் ரூ.57 ஆயிரம் கோடியை ($7 பில்லியன்) நியூயார்க் வங்கியில் முடக்கி வைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    • கொட்டும் பனியில் மக்கள் குளிரில் தவித்து வருகின்றனர்.
    • முதல் கட்டமாக துருக்கி, சிரியாவுக்கு 350 கேரவன்கள் கத்தார் அரசு அனுப்பி வைத்திருக்கிறது.

    நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கிக்கு கத்தார் 10 ஆயிரம் சொகுசு கேரவன்களை அனுப்பி வைக்கிறது.

    நிலநடுக்கத்தால் சிதையுண்டு கிடக்கும் துருக்கி, சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துச் செல்கிறது. குடியிருந்த வீடுகள் எல்லாம் குப்பையாக கிடக்க கொட்டும் பனியில் மக்கள் குளிரில் தவிக்கும் சூழல் நிலவுகிறது.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் கேரவன்களை கத்தார் அரசு அனுப்புகிறது. உலககோப்பை கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் தங்குவதற்கு சுற்றுசூழல் மாசுபடாத வகையில் கண்டெய்னர்களில் சொகுசு கேரவன்களை உருவாக்கியிருந்தது.

    இப்போது, முதல் கட்டமாக துருக்கி, சிரியாவுக்கு 350 கேரவன்கள் கத்தார் அரசு அனுப்பி வைத்திருக்கிறது

    • பாடல்களுக்கும் கிடைக்காத சிறப்பு நம் தமிழர்கள் உருவாக்கிய இந்த பாடலுக்கு கிடைத்திருப்பது கத்தார் வாழ் தமிழர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
    • தீம் பாடல் மட்டுமில்லாமல் கத்தாரில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த ரசிகர்களும் தங்கள் சார்பாக தீம் பாடல்களை வெளியிட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சம்சூதீன்சாதிக்பாஷா தலைமையில் சாம்ஜோசப் பாடலை எழுதி இசை அமைத்து உலக அளவில் நல் வரவேற்பை பெற்றுள்ளது. மத்திய கிழக்கு நாடான கத்தார் உலகளாவிய கால் பந்து போட்டியை மிக நேர்த்தியாகவும் அனைவரும் பிரமிக்கும் அளவிலும் நடத்திக்கொண்டு வருகிறது.

    உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கத்தார் தோகாவை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.கத்தாரில் அனைத்து நாட்டின் மக்களும் வசித்துவரிக்கின்றனர், பெரும்பான்மையாக தமிழர்களும், மலையா ளிகளும் உள்ளனர். அவர்கள் கால்பந்து போட்டியை மிக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

    கால்பந்து போட்டிக்கான பீபா அங்கீகரிக்கப்பட்ட தீம் பாடல் மட்டுமில்லாமல் கத்தாரில் வசிக்கும் பல்வேறு நாட்டை சேர்ந்த ரசிகர்களும் தங்கள் சார்பாக தீம் பாடல்களை வெளியிட்டனர்.

    கத்தார்-உலக கால் பந்து போட்டி க்காக கத்தார் தமிழர்கள் கலாச்சார பேரவை சார்பாக வெளியிடப்பட்ட குன் ஷாகிரான் என்ற ஆங்கில தீம் பாடலை கத்தார் அரசு ஆதரித்து இசைவெளிட்டு விழா நடைபெற்றது.

    அனைத்து நாட்டை சேர்ந்தவர்களும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அனைத்து பாடல்களுக்கும் கிடைக்காத சிறப்பு நம் தமிழர்கள் உருவாக்கிய இந்த பாடலுக்கு கிடைத்திருப்பது கத்தார் வாழ் தமிழர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இந்தப்பாடலை தமிழ் மகன் அவார்ட்ஸ்-ன் நிறுவனர் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை சேர்ந்த சாதிக் பாட்ஷா இயக்கி உள்ளார். சாம் ஜோசப் இசை அமைக்க, பாடகர்.ஆனந்த் அரவிந்தாக்சன் பாடலுக்கு உயிரோட்டம் கொடுத்துள்ளார்.

    தமிழர்கள் உருவாக்கிய குன் ஷாகிரான் பாடலை அங்கீகரிக்கும் விதமாக கத்தார் மீடியா கார்பரேஷன் கத்தார் நாட்டின் பெருமைக்குரிய தேசிய கத்தார் தொலைக்காட்சி மற்றும் பிரெஞ்சு, ஆங்கில, ஸ்பானிஷ் மற்றும் உருது மொழி வானொலிகளிலும் ஒளிபரப்பி வருவது தமிழர்களை பெருமை படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கத்தார் நாட்டுடனான வர்த்தகத்திற்கு இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடு
    • ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் காணொலி வாயிலாக பங்கேற்பு

     தோஹா:

    இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கத்தார் நாட்டுடனான வர்த்தகம் குறித்து தோஹாவில் உள்ள இந்திய தூதரகமும் மற்றும் இந்திய வர்த்தக தொழில்துறை குழுமம் இணைந்து இந்திய ஏற்றுமதியாளர்கள் சந்திப்பை நடத்தியது.

    புவிசார் குறியீடு பெற்றுள்ள வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி குறித்து காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை குழுமத்தைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள் உள்பட 80-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்திய தூதரக மற்றும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு, ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

    இந்த சந்திப்பின்போது பாசுமதி அரிசி, மாம்பழம், மாதுளம்பழம், வழகிழக்கு பிராந்தியப் பொருட்கள் மற்றும் பல்வேறு பதப்படுத்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி வாய்ப்புக் குறித்து ஏற்றுமதியாளர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டல், இந்தியா- கத்தார் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து விவரித்தார்.

    தொடர்ந்து பேசிய மத்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணைய தலைவர் அங்கமுத்து, புவிசார் குறியீடு உடைய பொருட்கள் மற்றும் இயற்கை தயாரிப்புகளை ஊக்கப்படுத்துவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

    • உலகக்கோப்பைக்கான லோகோவை சிலர் அனுமதியின்றி தங்களது காரின் நம்பர் பிளேட்டில் பதித்து வருவதாக குற்றம் எழுந்தது.
    • லோகோவை உரிய அனுமதியின்றி வாகன நம்பர் பிளேட்டுகளில் பயன்படுத்தக் கூடாது என கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கத்தார்:

    உலகக்கோப்பை கால்பந்து போட்டியானது கத்தாரில் நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பைக்கான லோகோவை சிலர் அனுமதியின்றி தங்களது காரின் நம்பர் பிளேட்டில் பதித்து வருவதாக குற்றம் எழுந்தது. இந்த நிலையில், உரிய அனுமதியின்றி உலகக்கோப்பை லோகோவை கார் நம்பர் பிளேட்டில் வைத்திருக்கக்கூடாது என்று கத்தார் பொதுமக்களை எச்சர்க்கை விடுத்துள்ளது.

    இந்த லோகோவானது சர்வதேச கால்பந்து சம்மேளனத்தால் (பிபா) அங்கீகரிக்கப்பட்ட பிராண்டட் நம்பர் பிளேட்டுகளில் சிறப்பு பதிப்புகள் ஏலம் விடப்பட்டு பதிவு செய்யப்பட்டவை என்று கத்தார் கூறுகிறது.

    பதிவு செய்யப்படாத வாகனங்களில் லோகோவை நகலெடுத்து அமைப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. மீறினால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு அந்நாட்டு அமைச்சகம் கடுமையாக எச்சரித்துள்ளது.

    ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அமீரகத்தை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. #AFCAsianCup #Qatar #UAE
    அபுதாபி:

    17-வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்று நடந்த அரைஇறுதியில் கத்தார் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த ஐக்கிய அரபு அமீரகம் அணி எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய கத்தார் அணி 4-0 என்ற கோல் கணக்கில் அமீரகத்தை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது. அந்த அணியில் போலெம் கோகி (22-வது நிமிடம்), அல்மோஸ் அலி (37-வது நிமிடம்), ஹசன் அலி ஹைடோஸ் (80-வது நிமிடம்), ஹமித் இஸ்மாயில் (90-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.



    முன்னதாக கத்தார் அணி கோல் அடித்த போது, ஆத்திரமடைந்த உள்ளூர் ரசிகர்களில் சிலர் மைதானத்திற்குள் செருப்புகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்னொரு முறை தண்ணீர் பாட்டில்களை எறிந்தனர். இதனால் இரண்டு முறை ஆட்டம் பாதிக்கப்பட்டது. கத்தாருக்கு எதிராக ரசிகர்கள் அவ்வப்போது கோஷங்கள் எழுப்பியதால் ஆட்டம் முழுவதும் பரபரப்பாகவே காணப்பட்டது. வருகிற 1-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் கத்தார் அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. #AFCAsianCup #Qatar #UAE 
    சிரியா அகதிகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் மறுவாழ்வுக்காக கத்தார் நாட்டு மன்னர் 50 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். #Qatar #SyrianRefugees #UNChiefAntonioGuterres
    நியூயார்க்:

    சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களின் படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

    இந்தப் போரினால் கடந்த ஆண்டு நிலவரப்படி சுமார் 5 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி சுமார் 24 லட்சம் பேர் அகதிகளாக பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர்.

    சிரியா அகதிகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் மறுவாழ்வுக்காக கத்தார் நாட்டு மன்னர் 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.355 கோடி) நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    இந்த தாராள நிதி உதவியை ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார்.

    இதுபற்றி அவர் சார்பில் ஐ.நா. சபை துணை செய்தி தொடர்பாளர் பர்கான் ஹக் கூறும்போது, “இந்த நிதி உதவிக்காக கத்தார் நாட்டு மன்னருக்கும், அந்த நாட்டு மக்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் தெரிவித்தார்” என குறிப்பிட்டார். #Qatar #SyrianRefugees #UNChiefAntonioGuterres
    பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இந்த ஆண்டுடன் விலக கத்தார் தீர்மானித்துள்ளது. #QatarWithdraw #OPEC #QatarEnergyMinister
    தோஹா:

    சர்வதேச சந்தையில் பெட்ரோலிய  கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலியப் பொருட்களுக்கான கிராக்கியை அதிகரித்து, விலையை உயர்த்துவதற்கு வசதியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க எண்ணெய் வளம்மிக்க அரபு நாடுகள் முடிவு செய்து வருகின்றன.
     
    இந்த முடிவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, உலகின் பெட்ரோலிய தேவையில் 73 சதவீதம் அளவுக்கு உற்பத்தி செய்யும் 18 முக்கிய நாடுகளுக்கு  சவுதி அரேபியா நாட்டின் எரிபொருள்துறை மந்திரி காலித் அல் ஃபலி கடந்த மாதம் ஆலோசனை தெரிவித்திருந்தார்.

    நாளொன்றுக்கு உற்பத்தியில் 10 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொண்டால் பெட்ரோல் விலையை சமநிலையில் இருக்குமாறு செய்யலாம் என அவர் குறிப்பிட்டார்.



    சவுதி அரேபியாவும் தனது கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினந்தோறும் 5 லட்சம் பீப்பாய்களை குறைத்து கொள்ளும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்

    இந்நிலையில், பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து 1-1-2019 முதல் விலகப்போவதாக கத்தார் நாடு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பான அறிவிப்பை தோஹாவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று வெளியிட்ட கத்தார் நாட்டு எரிசக்தி துறை மந்திரி சாத் அல்-காபி, ‘நாங்கள் தொடர்ந்து கச்சா எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுவோம்.

    ஆனால், எங்கள் நாட்டில் இயற்கை எரிவாயு உற்பத்திக்கான அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதால் இனி இயற்கை எரிவாயு உற்பத்தியில் அதிக கவனம் செலுத்திவோம் என்று குறிப்பிட்டுள்ளார். #QatarWithdraw  #OPEC  #QatarEnergyMinister
    பக்ரைன் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷேக் அலி சல்மான், கத்தார் நாட்டுக்காக உளவு பார்த்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்றுள்ளார். #Bahrain #Qatar #AlWefaqMovement #SheikhAliSalman
    துபாய்:

    பக்ரைன் நாட்டில் முடியரசராக இருப்பவர் மன்னர் ஹமது. இவரது ஆட்சியை எதிர்த்து சியா பிரிவைச் சேர்ந்த அல் வெஃபாக் இயக்கத்தின் தலைவர் ஷேக் அலி சல்மான் உள்ளிட்ட பலரும் போராடி வருகின்றனர். இதனால் இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    மன்னரின் முடியாட்சியை கடுமையாக எதிர்த்தும், ஜனநாயக முறையிலான தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பல்வேறு போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தி வருகின்றனர்.  இதனால், அல் வெஃபாக் இயக்கம் உள்ளிட்ட சில இயக்கங்களை மன்னர் ஹமது தடை செய்துள்ளார். மேலும், அரசுக்கு எதிராக போராடிய பலரையும் கைது செய்துள்ளார்.



    இந்த நிலையில், பக்ரைன் நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான ஷேக் அலி சல்மான், ஆளும் அரசை கவிழ்ப்பதற்காக கத்தார் நாட்டுடன் இணைந்து சதி செய்வதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், ஷேக் அலி சல்மானுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

    கத்தார் நாடு, ஐ.எஸ் பயங்கரவாதிகளுடனும், ஈரானுடனும் தொடர்பு வைத்து இருப்பதாக குற்றம்சாட்டி, கடந்த 2017-ம் ஆண்டு பக்ரைன், சவூதி அரேபியா போன்ற நாடுகள் கத்தார் நாட்டுடனான உறவை முற்றிலுமாக முறித்து கொள்ள முடிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  #Bahrain #Qatar #AlWefaqMovement #SheikhAliSalman
    வெளிநாட்டு தொழிலாளர்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல தாங்கள் பணியாற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுமதி தேவை இல்லை என்ற சட்ட திருத்தத்தை கத்தார் அரசு கொண்டு வந்துள்ளது. #Qatar
    தோஹா:

    வளைகுடா நாடான கத்தாரில் இந்தியர்கள் உள்பட அதிக அளவிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சொந்த காரணங்களுக்காக தொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கு, எளிதில் விசா அனுமதி கிடைக்காத வண்ணம் சட்டங்கள் அங்கு இருந்தது.

    இதனால் கத்தாரில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டவர்கள், சொந்த நாடு திரும்புவது கடினமாக இருந்தது. இந்நிலையில், கத்தாரின் குடி அமர்வு விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பல நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

    அதன்படி கத்தாரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் கத்தாரை விட்டு வெளியேற , அவர்கள் பணியாற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை என்ற சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    கத்தார் நாட்டில் வரும் 2022-ம் ஆண்டு நடக்க இருக்கும் கால்பந்து உலகக் கோப்பை தொடருக்காக, அதிகளவிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    ×