என் மலர்tooltip icon

    துருக்கி

    • இந்த கைது வாரண்ட் குறித்து ஹமாஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
    • ஆனால் இது வெறும் விளம்பரம் என இஸ்ரேல் விமர்சித்துள்ளது.

    அங்காரா:

    பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தாக்குதல் நடத்தியது. 2 ஆண்டுகளாக நீடித்த இந்தப் போர் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. இருப்பினும், அங்கு அவ்வப்போது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்தப் போரில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த 66,000 பே்ா கொல்லப்பட்டனர். சுமார் 20,000 பேர் பசி, பட்டினியால் தவிக்கவிடப்பட்டனர்.

    இந்நிலையில், காசாவில் இனப்படுகொலை நடத்தியதற்காக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு துருக்கி கோர்ட் பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    காசா மீதான இரக்கமற்ற தாக்குதல் மற்றும் இனப்படுகொலை தொடர்பாக இஸ்தான்புல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இதில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, ராணுவ மந்திரி காட்ஸ், ராணுவ தளபதி இயால் ஜமீர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    விசாரணை இறுதியில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கைது வாரண்ட் குறித்து ஹமாஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் இது வெறும் விளம்பரம் என இஸ்ரேல் விமர்சித்துள்ளது.

    ஏற்கனவே காசா மீதான இனப்படுகொலை காரணமாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு சர்வதேச கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

    • அந்த தாக்குதலில் 206 பேர் பலியாகினர்.
    • பாகிஸ்தானின் பொறுப்பற்ற அணுகுமுறையே இத்தோல்விக்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அண்டை நாடான பாகிஸ்தானுடன் மோதல் போக்கை கொண்டுள்ளனர்.

    பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் 'தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான்' என்ற அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

    கடந்த மாதம், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத கும்பலை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் 206 பேர் பலியாகினர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தலிபான் நடத்திய தாக்குதலில் 23 வீரர்கள் உயிரிழந்தனர்.

    பதிலுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தெஹ்ரிக்-இ-தாலிபான் பாகிஸ்தான் அமைப்பின் தலைவர்கள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது.

    இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல்காளில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த மாத இறுதியில் கத்தார் மத்யஸ்தத்தில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    தொடர்ந்து துருக்கியில் பல கட்டங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் போர் நிறுத்தத்தை மீறி நேற்று பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 ஆப்கன் பொதுமக்கள் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

    பாகிஸ்தானின் பொறுப்பற்ற அணுகுமுறையே இத்தோல்விக்கு காரணம் என்றும், ஆப்கான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் உரிய பதிலடி கொடுப்போம் எனவும் ஆப்கான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.  

    • நிலநடுக்கத்தால் அப்பகுதியில் 3 கட்டிடங்கள் பயங்கர சேதம் அடைந்தன.
    • உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

    துருக்கியின் மேற்குப் பகுதியான பாலிகெசிர் மாகாணம் சிந்திர்கி நகரில் நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக தேசிய நில நடுக்கவியல் மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் சிந்திர்கியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியது.

    நள்ளிரவில் திடீரென கட்டிடங்கள் குலுங்கியதால் தூக்கத்திலிருந்து பதறி அடித்து எழுந்து வெளியே ஓடி வந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    அந்த நேரத்தில் மழை பெய்ததால், மசூதிகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் வீடு திரும்ப விரும்பாதவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

    நிலநடுக்கத்தால் அப்பகுதியில் 3 கட்டிடங்கள் பயங்கர சேதம் அடைந்தன. 22 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இஸ்தான் புல் நகரம், புர்சா, மணிசா மற்றும் இஜ்மீர் உள்ளிட்ட மாகாணங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    • இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டித்து வான்வெளியை மூடுவதாக துருக்கி தெரிவித்தது.
    • இஸ்ரேலின் கப்பல்கள் துருக்கி துறைமுகத்திற்கு வருவதற்கு கடந்த வாரம் தடை விதித்தது.

    அங்காரா:

    இஸ்ரேல்-காசா இடையிலான போர் தொடங்கியது முதலே துருக்கி மற்றும் இஸ்ரேல் இடையிலான உறவு மோசமடைந்து வருகிறது.

    காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல அனுமதிக்கும் வரை இஸ்ரேல் உடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக கடந்த ஆண்டு மே மாதம் துருக்கி கூறியது.

    இந்நிலையில், இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி முற்றிலும் துண்டிக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அந்நாட்டின் வெளியுறவு மந்திரி ஹக்கன் ஃபிடன் கூறுகையில், இஸ்ரேலுடனான அனைத்து பொருளாதார மற்றும் வணிக உறவுகளையும் துண்டித்து, இஸ்ரேலிய விமானங்களுக்கு அதன் வான்வெளியை துருக்கி மூடும் என தெரிவித்தார்.

    மேலும், பாராளுமன்றத்தின் அமர்வில் பேசிய அவர், காசா, லெபனான், ஏமன், சிரியா, ஈரான் மீதான இஸ்ரேலின் பொறுப்பற்ற தாக்குதல்கள் சர்வதேச ஒழுங்கை மீறும் ஒரு பயங்கரவாத அரசு மனநிலையின் தெளிவான அறிகுறி என தெரிவித்தார்.

    ஏற்கனவே கடந்த வாரம் இஸ்ரேலின் கப்பல்கள் துருக்கி துறைமுகத்திற்கு வருவதற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

    • துருக்கியில் அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லவே அனுமதி உள்ளது.
    • சாலை விதிகளை மதிக்காத போக்குவரத்து மந்திரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    அங்காரா:

    துருக்கி நாட்டின் போக்குவரத்து துறை மந்திரியாக இருப்பவர் அப்துல் காதீர் உரலோக்லு. சொகுசு கார் ஒன்றை அங்காரா சாலையில் அவர் ஓட்டிக்கொண்டு சென்றார்.

    அப்போது அவர் கார் ஒலிபெருக்கியில் பாடல் கேட்டபடியும், நாட்டின் அதிபர் எரோடகனின் பிரசாரத்தைக் கேட்டபடி சென்றார். மேலும், காரை மணிக்கு 180 முதல் 200 கி.மீட்டர் வேகத்தில் இயக்கினார். இதுதொடர்பான வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    இந்நிலையில், நாட்டின் போக்குவரத்துத்துறை மந்திரியே சாலை விதிகளை மதிக்காமல் காரை இயக்கியதற்கு விமர்சனங்கள் எழுந்தன.

    அங்கு அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்லவே அனுமதி உள்ள நிலையில் அவர் அந்த வீடியோவை உடனடியாக நீக்கினார். தொடர்ந்து அப்துல் காதீருக்கு ரூ.20 ஆயிரம் (9 ஆயிரம் லிராக்கள்) அபராதம் விதிக்கப்பட்டது.

    • அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா ரஷிய அதிபர் புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
    • அதில், உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்.

    அங்காரா:

    அமெரிக்கா அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா உக்ரைன்-ரஷியா இடையே போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷிய அதிபர் புதினுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

    அதில் போரால் ஏற்பட்டுள்ள துன்பங்கள் மற்றும் பிரிவினால் வாடும் குழந்தைகளை காரணம் காட்டி உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்நிலையில், துருக்கி அதிபர் தாயீப் எரோடகனின் மனைவி எமினே, அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், உக்ரைன்-ரஷியா போர் நிறுத்தம் ஏற்பட புதினுக்கு கடிதம் எழுதியிருந்ததைப் பாராட்டினார்.

    தொடர்ந்து, நீண்ட நாட்களாக நீடித்து வரும் காசா போரை உடனடியாக நிறுத்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • துருக்கியில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.
    • காட்டு தீயில் சிக்கி பல ஏக்கர் எரிந்து நாசமாகி உள்ளன.

    அங்காரா:

    துருக்கியின் எஸ்கிசெஹிர் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. இந்தக் காட்டு தீயில் சிக்கி இதுவரை பல ஏக்கர் எரிந்து நாசமாகி உள்ளன. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து அதனை அணைக்க முயன்று வருகின்றனர்.

    இதில் பல ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. எனினும் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

    இந்நிலையில், பலத்த சூறாவளி காற்று வீசியதால் காட்டுத் தீயின் திசை மாறியது. தீயணைப்புப் பணியில் இருந்த மீட்புப்படையினர் அதில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 10 பேர் உடல் கருகி பலியாகினர்.

    படுகாயம் அடைந்த 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காட்டுத் தீயில் சிக்கி கருகி பலியான தீயணைப்பு வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் எர்டோகன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • அங்காராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் திடீரென தீப்பிடித்தது.
    • தீ விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

    அங்காரா:

    துருக்கி தலைநகர் அங்காராவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.

    இந்நிலையில், இந்தக் குடியிருப்பின் 4-வது தளத்தில் திடீரென தீப்பிடித்தது. அதன்பின் மளமளவென அந்தக் கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது. இதனால் அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது.

    தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    ஆனாலும், இந்த தீ விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மீட்புப் படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • வடக்கு ஈராக்கில் அடையாள விழா நடைபெற்றது.
    • 75 வயதான ஓகலன், 1999 முதல் துருக்கிய சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    துருக்கியுடனான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈராக்கிய குர்திஷ் பிரிவினைவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட தொடங்கியுள்ளனர்.

    இதற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) வடக்கு ஈராக்கில் ஒரு அடையாள விழா நடைபெற்றது. அதில் போராளிகள் தங்கள் ஆயுந்தங்களை மொத்தமாக போட்டு எரித்தனர். 

    கடந்த பிப்ரவரியில், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) நிறுவனத் தலைவர் அப்துல்லா ஓகலன், ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அமைப்பைக் கலைக்க சிறையில் இருந்தபடி அழைப்பு விடுத்தார்.

    Abdullah ocalan

     75 வயதான ஓகலன், 1999 முதல் துருக்கிய சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அவரது விடுதலையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடத்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் நாற்பதாயிரம் மக்கள் உயிரிழந்த துருக்கிய-குர்திஷ் மோதல் இந்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

    • இந்த குற்றச்சாட்டு தவறானது என்று துருக்கியின் தகவல்தொடர்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
    • துருக்கிய நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டது.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வியாழக்கிழமை (ஜூன் 12) விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் பராமரிப்பில் துருக்கிய நிறுவனம் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை துருக்கி மறுத்துள்ளது. இந்த விபத்தில் 274 பேர் உயிரிழந்த நிலையில் துருக்கி மீதான குற்றசாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு தவறானது என்று துருக்கியின் தகவல்தொடர்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

    துருக்கிய டெக்னிக் நிறுவனம் B777 ரக விமானங்களுக்கு மட்டுமே பராமரிப்பு சேவைகளை வழங்குகிறது என்றும், விபத்துக்குள்ளான Boeing 787-8 ரக விமானம் இந்த ஒப்பந்தத்தின் கீழ் வராது என்றும் துருக்கி குறிப்பிட்டுள்ளது.

    முன்னதாக, ஒரு மாதத்திற்கு முன்பு ஆபரேஷன் சிந்துரின் போது பாகிஸ்தானுக்கு துருக்கியின் ஆதரவு காரணமாக, இந்தியாவில் ஒன்பது முக்கிய விமான நிலையங்களில் சேவைகளை நிர்வகித்து வந்த துருக்கிய நிறுவனத்தின் பாதுகாப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உடன் இஸ்தான்புல்லில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • எர்டோகனின் வலுவான ஆதரவிற்கு ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார்.

    இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டங்கள் நீடிப்பதால், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் துருக்கி சென்றுள்ளார். அங்கு துருக்கிய அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் உடன் இஸ்தான்புல்லில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றி இந்த சந்திப்பில் முதன்மையாக  கவனம் செலுத்தப்பட்டது.

    குறிப்பாக எரிசக்தி, வர்த்தகம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியாவுடனான மோதலின் போது எர்டோகனின் வலுவான ஆதரவிற்கு ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்தார்.

     சந்திப்புக்குப் பிறகு, ஷெபாஸ் ஷெரீப் 'எக்ஸ்' மேடையில் பதிலளித்து, "இன்று இஸ்தான்புல்லில் எனது அன்பு சகோதரர் அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனைச் சந்தித்தது ஒரு மரியாதை.

    சமீபத்திய பாகிஸ்தான்-இந்தியா மோதலின் போது எங்களுக்கு அவர் அளித்த உறுதியான ஆதரவிற்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன்" என்று கூறினார். 

    • ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது.
    • 3 ஆண்டுக்கு மேலாக சண்டை நடந்துவரும் நிலையில் தற்போது நேரடி பேச்சுவார்த்தை நடக்கிறது.

    டிரானா:

    ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் சம்மதம் தெரிவித்தார்.

    இரு நாட்டு பிரதிநிதிகளும் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைக்காக நேற்று துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கூடினர். பாதுகாப்பு மந்திரி ருஸ்டெம் உமரோவ் தலைமையிலான உக்ரைன் தூதுக்குழு, அதிபரின் உதவியாளர் மெடின்ஸ்கி தலைமையிலான ரஷிய குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. துருக்கி நாட்டின் அதிகாரிகள் நடுநிலை வகித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய தலைவர்களுடன் தொடர் சந்திப்புகளை நடத்தினார். ஐரோப்பிய கவுன்சில் தலைவர், ஐரோப்பிய ஆணைய தலைவர் மற்றும் நெதர்லாந்து, டென்மார்க், ஸ்வீடன் பிரதமர்களுடன் கலந்துரையாடினார்.

    இந்நிலையில், அதிபர் ஜெலன்ஸ்கி பேசுகையில், அமைதியை அடைவதற்கான முதல் படி போர் நிறுத்தம் என்றார். ரஷியா மீதான சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்திய ஜெலன்ஸ்கி, ராணுவ ஆதரவை வலுப்படுத்துதல், உக்ரைனின் வான் பாதுகாப்பு, பாதுகாப்பு உற்பத்தி திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

    ×