என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பந்தம்"

    • இரு நாடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.
    • அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    மலேசியா கோலாலம்பூரில் 19-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் உச்சி மாநாடு நாளை (1-ந்தேதி) நடக்கிறது. அதற்கு முன்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஆகியோர் கோலாலம்பூரில் சந்தித்து இரு நாடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த சந்திப்பின்போது அமெரிக்கா- இந்தியா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

    இது தொடர்பாக பீட் ஹெக் செத் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    இந்தியா- அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தகவல் பகிர்வு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துதல், பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் தடுப்புக்கான ஒரு மூலக்கல்லாக இந்த கட்டமைப்பு கருதப்படுகிறது.

    இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் படைகளுக்கும் ஒரு முக்கியமான படிக்கல்லாகும். இது பாதுகாப்பு மற்றும் நமது வலுவான கூட்டாண்மைக்கான அமெரிக்காவின் நீண்ட கால உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டு காட்டுகிறது என தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும் போது,"இந்த கட்டமைப்பில் கையெழுத்திட்டது இந்தியா- அமெரிக்கா உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. ஹெக்செத் தலைமையின் கீழ் உறவுகள் மேலும் வலுப்பெறும்" என தெரிவித்தார்.

    • இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் பேருந்து நிறுத்தத்தில் திங்களன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு இரங்கல் தெரிவித்தார்.
    • காசாவில் தொடர் தாக்குதல்கள் மற்றும் பட்டினி மரணங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருக்கும் நேரத்தில் பெசலெல் ஸ்மோட்ரிச் இந்தியா வந்துள்ளார்.

    இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இஸ்ரேலிய தீவிர வலதுசாரி தலைவரும் நிதியமைச்சருமான பெசலெல் ஸ்மோட்ரிச், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் .

    இந்த சந்திப்பின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான ஒற்றுமையை வெளிப்படுத்தி, இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒப்பந்தம், பரஸ்பர முதலீடு மற்றும் வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கும், இவை தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க ஒரு சுயாதீனமான நடுவர் மன்றத்தை நிறுவுவதற்கும் வழிவகுக்கிறது,

    சந்திப்பின்போது, இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் பேருந்து நிறுத்தத்தில் திங்களன்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

    காசாவில் தொடர் தாக்குதல்கள் மற்றும் பட்டினி மரணங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருக்கும் நேரத்தில் பெசலெல் ஸ்மோட்ரிச் இந்தியா வந்துள்ளார்.

    • அதிபர் டிரம்ப் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கைகுலுக்கிக்கொண்டனர்.
    • ஈரான் இது அமெரிக்காவின் ஆதிக்கத்தை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளது.

    ரஷியாவின் தெற்கே தெற்கு காகசஸில் உள்ள ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரு நாடுகள் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வந்தது.

    இந்நிலையில் 35 ஆண்டுகால மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வைத்து இரு நாட்டு தலைவர்களும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    அமெரிக்கா சென்றுள்ள அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் மற்றும் ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியன் ஆகியோர் அதிபர் டிரம்ப் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு கைகுலுக்கிக்கொண்டனர்.

    எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்த அமெரிக்காவுடன் ஆர்மீனியாவும் அஜர்பைஜானும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக அஜர்பைஜானை நக்சிவானுடன் இணைக்கும் ஒரு பெரிய போக்குவரத்து வழித்தடத்தை உருவாக்குவதற்கான திட்டம் உள்ளது.

    ஒப்பந்தத்தின்படி இந்த வழித்தடத்தின் உரிமைகளை அமெரிக்கா சொந்தமாக்கிக் கொள்ளும்.

    இது சர்வதேச அமைதி மற்றும் செழிப்புக்கான "டிரம்ப் பாதை" என்று அழைக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    இந்தப் பாதை இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், எரிசக்தி துறைகளில் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்று கூறப்படுகிறது.

    இதை ஐரோப்பிய நாடுகள் வரவேற்றாலும், இரு நாடுகளுடனும் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஈரான் இது அமெரிக்காவின் ஆதிக்கத்தை உருவாக்கும் என்று எச்சரித்துள்ளது.  

    • வடக்கு ஈராக்கில் அடையாள விழா நடைபெற்றது.
    • 75 வயதான ஓகலன், 1999 முதல் துருக்கிய சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    துருக்கியுடனான சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈராக்கிய குர்திஷ் பிரிவினைவாதிகள் தங்கள் ஆயுதங்களை கைவிட தொடங்கியுள்ளனர்.

    இதற்காக நேற்று (வெள்ளிக்கிழமை) வடக்கு ஈராக்கில் ஒரு அடையாள விழா நடைபெற்றது. அதில் போராளிகள் தங்கள் ஆயுந்தங்களை மொத்தமாக போட்டு எரித்தனர். 

    கடந்த பிப்ரவரியில், குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் (PKK) நிறுவனத் தலைவர் அப்துல்லா ஓகலன், ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அமைப்பைக் கலைக்க சிறையில் இருந்தபடி அழைப்பு விடுத்தார்.

    Abdullah ocalan

     75 வயதான ஓகலன், 1999 முதல் துருக்கிய சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அவரது விடுதலையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடத்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் நாற்பதாயிரம் மக்கள் உயிரிழந்த துருக்கிய-குர்திஷ் மோதல் இந்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

    • பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியது.
    • இந்தியாவின் தேசிய நலன்களுக்கு மாறாக, துருக்கி பாகிஸ்தானை ஆதரிக்கிறது.

    தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகத் துருக்கியில் உள்ள இனோனு பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தங்களை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முறித்துக் கொண்டுள்ளது.

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியதால் அந்நாட்டின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    இந்த சூழலில் அந்நாட்டு பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது பற்றிய தகவல் JNUவின் X கணக்கில் அறிவிக்கப்பட்டது.

    இரு பல்கலைக்கழகங்களுக்கிடையேயான கல்வி ஒத்துழைப்பை குறிக்கோளாக கொண்டு பிப்ரவரி 3, 2025 அன்று கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 2, 2028 அன்று காலாவதியாக இருந்தது.

    ஆனால் தற்போது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள JNU பல்கலை., பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள் எந்த சிரமங்களையும் சந்திக்காமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.

    இந்தியாவின் தேசிய நலன்களுக்கு மாறாக, துருக்கி பாகிஸ்தானை ஆதரிப்பதால் 'துருக்கி புறக்கணிப்பு' என்ற பதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

    • டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விகாஸ் குமாரிடம் இன்று (02.04.2005) வழங்கினார்.
    • 2ம் கட்டத்தில் பயணிகளின் சேவை தொடங்கும் தேதியிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம் 2-ல் வழித்தடம் 3 (மாதவரம் பால்பண்னை முதல் சிறுசேரி சிப்காட் மெட்ரோ வரை).

    வழித்தடம் 4 (கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை) மற்றும் வழித்தடம் 5 மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை) ஆகிய முன்று வழித்தடங்கள் மற்றும் மாதவரம் பூந்தமல்லி மற்றும் செம்மஞ்சேரியில் உள்ள பராமரிப்பு பணிமனைகள் உட்பட 1,189 கி.மீ நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் (Letter of Acceptance) டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு ரூ. 5,870 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பு கடிதத்தை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் விகாஸ் குமாரிடம் இன்று (02.04.2005) வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரெரயில் நிறுவனத்தின் நிதி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர் அபித் குமார் ஜெயின் (இயக்கம் மற்றும் சேவைகள்), சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

    ஒப்பந்தத்தின் கீழ் உள்ள பணியின் நோக்கம் இரண்டாம் கட்டத்தில் உள்ள 3 வழித்தடங்கள் மூன்று பராமரிப்பு பணிமனைகள் மற்றும் பயணிகளுக்கு சேவைகளை வழங்குதல் உட்பட இயக்கம் மற்றும் பராமரிப்பு தொடர்பான அனைத்து பணிகளும் இதில் அடங்கும்.

    இதற்கான ஒப்பந்த காலம். இரண்டாம் கட்டத்தில் பயணிகளின் சேவை தொடங்கும் தேதியிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும். டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பணிகள் திருப்திகரமாக இருப்பின் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மருத்துவம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி.
    • முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மற்றும் அதனை சுற்றியுள்ள முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மீனாட்சி மருத்துவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மருத்துவமனையில் மருத்துவம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் விங் கமாண்டர் ஜெயகுமார் துணை தலைவர், விமான படை வீரர்கள் சங்கம், தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர். பாலமுருகன், மேஜர். சரவணன், துணை இயக்குநர் முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம், ஜி.பி. கேப்டன் கென்னடி அலுவலக பொறுப்பாளர் இ.சி.எச்.எஸ்.

    தஞ்சாவூர் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து மேலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் செய்தனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மனு
    • ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் வளாகத்தில் திங்கள்கிழமைகளில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

    அந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் மனு அளிக்க திரண்டு வருகிறார்கள். திங்கள் கிழமையான இன்றும் மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். பொதுமக்களை போலீசார் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர்.

    குமரி மாவட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தங்கமோகன், பொன்ராஜா, இளங்கோ, முத்துகிருஷ்ணன் உள்பட பலர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழி லாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் காலவதியானது. இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் தலைமையில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஏற்படுத்தப்பட்ட ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அரசு ரப்பர் கழக நிர்வா கம் இதுவரை அமல்படுத்த வில்லை.

    எனவே ஊதிய உயர்வை நிலுவை தொகை யுடன் உடனே வழங்க வலியுறுத்தி ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் கடந்த 7-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். ஆனால் தற்போது வரை எந்த தீர்வும் கிடைக்க வில்லை.

    எனவே தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஆரல்வாய்மொழி கூட்டு றவு நூற்பாலையில் வெளி ஒப்பந்ததாரர்கள் மூலம் தொழிலாளர்களை பணியில் அமர்த்த ஆலை நிர்வாக முடிவு செய் துள்ளது. அந்த முடிவை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் குறித்து நிகழ்வில் கூறப்பட்டது.
    • காப்பீட்டு நிறுவனம் மற்றும் மீன்வள பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நன்னீர் மீன் மற்றும் இறால் வளர்ப்பு மீனவர்களுக்கு காப்பீடு திட்டம் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    நன்னீர் மீன் இறால் வளர்ப்பில் ஏற்படும் நன்மைகள் குறித்து நிகழ்வில் கூறப்பட்டது.

    நிகழ்வில் காப்பீட்டு நிறுவனம் மற்றும் மீன்வள பல்கலைகழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடபட்டது.

    நிகழ்ச்சியில் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • புதிதாக பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக ஒப்பந்தம் விடப்பட்டு அதற்காக ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
    • தனி நபர் ஒருவர் அந்த இடத்தில் நிழற்குடை அமைக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர் அருகே உள்ள சிராங்குடி கிராமத்தில் உள்ள பழைய பயணிகள் நிழற்குடை ஒன்று சேதமானதை அடுத்து அதே இடத்தில் புதிதாக பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக ஒப்பந்தம் விடப்பட்டு அதற்காக ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் அந்த இடத்தில் நிழற்குடை அமைக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து நிதியை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிரங்குடி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சிராங்குடி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரதீப் ராஜ் சவுக்கான், அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை.செந்தில், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் பட்டுக்கோட்டை- மன்னார்குடி போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    • காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
    • 14-வது ஊதிய ஒப்பந்தத்தில் உள்ள முரண்பாடுகள் சரி செய்யப்பட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பிட வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஓய்வூதியர்களின் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்.

    அரசு மேல் முறையீடு சென்றதை திரும்ப பெற வேண்டும்.

    14-வது ஊதிய ஒப்பந்தத்தில் உள்ள முரண்பாடுகள் சரி செய்யப்பட வேண்டும், 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மண்டலங்களிலும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    அதன்படி கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஜெபமாலைபுரம் தஞ்சாவூர் நகர் கிளை முன்பு நடந்த போராட்டத்துக்கு கும்பகோணம் அரசு போக்குவரத்து ஏ.ஐ.டி.யூ.சி மத்திய சங்கத் தலைவர்சேகர் தலைமை வகித்தார் .

    ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாதுரை, தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் தில்லைவனம் தொடக்கி வைத்தார். சம்மேளன துணைத்தலைவர் துரை.மதிவாணன் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

    இதில் ஏ.ஐ.டி.யூ.சி ஓய்வு பெற்றோர் சங்கத் தலைவர் மல்லி தியாகராஜன், பொருளாளர் பாலசுப்பிர மணியன், துணைத்த லைவர்கள்சுப்பிரமணியன், பொறியாளர் ஓய்வு முருகையன், போக்குவரத்து சங்க நிர்வாகிகள் கஸ்தூரி, சுந்தபாண்டியன், தங்கராசு, இருதயராஜ், கலியமூர்த்தி, தமிழ் மன்னன், சண்முகம், சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மத்திய சங்க பொருளாளர் ராஜமன்னன் நன்றி கூறினார். 

    • கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
    • விவசாயிகள் கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து தர வேண்டுமென மனுக்கள் வழங்கினார்,

    கடலூர்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் இன்று காலை நடைபெற்றது குஞ்சிதபாதம் - என்.எல்.சி. சார்பாக விருத்தாச்சலம்,புவனகிரி,ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் உள்ள 30 ஏரிகளை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்   த்துறையூர் காந்தி: -அரசூர் தென்பெண்ணை ஆற்றில் உள்ள மலட்டாறு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மற்றும் அதே பகுதியில் உள்ள வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் வீராணம் ஏரி விவசாயிகள் சங்கத் தலைவர் பாலு: - மத்திய கனிம வள நிறுவனம் சார்பில் வீராணம் ஏரியை சுற்றியும் 2017 முதல் ஆய்வு செய்து வருகிறார்கள். அப்பகுதி கிராம மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் 2020 பாதுகாத்த வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த ஆய்வு தொடரப்படுவதால் இந்த ஆய்வை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த நிலையில் என்.எல்.சி.க்கு வீடு , நிலம் கொடுத்த பாதிக்கப்பட்டோர் கூட்டமைப்பு சேர்ந்தவர்கள் திடீரென்று கூட்டத்தில் திரண்டு மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது- 2000 ஆம் ஆண்டு முதல் நிலம் வீடு எடுத்த அனைவருக்கும் நிரந்தர வேலை கொடுக்க வேண்டும். வேலை வாய்ப்புக்கு பதில் ரு 1, 09, 500 கொடுத்ததை ஏற்க முடியாது. அத்தொகையை வாங்கிய அனைவருக்கும் நிரந்தரவேலை கொடுக்க வேண்டும்.வேலை வேண்டாம் என்பவருகளுக்கு இன்றைய வாழ்வாதார தொகை கொடுக்க வேண்டும்.  2000-ம் ஆண்டு முதல் நிலம் கொடுத்த அனைவருக்கும் 01.01.2014 முதல் கொடுக்க கூடிய இழப்பீடுத் தொகையை வழங்க வேண்டும். நிலத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதில் உள்ள மின் இணைப்பை என்எல்சி செலவில் மாற்றம் செய்து கொடுக்க வேண்டும் தன்னிச்சையாக செயல்படாமல் விவசாயிகள் கோரிக்கை மீது பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்து தர வேண்டும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வழங்கினர். இதனை தொடர்ந்து விவசாய குறை கேட்பு கூட்டம் நடந்தது.

    ×