என் மலர்
நீங்கள் தேடியது "JNU"
- மத்திய குழுவில் உள்ள மொத்தம் நான்கு இடங்களையும் இடதுசாரி கூட்டணி வென்றது.
- கடந்த ஆண்டு கையில் வைத்திருந்த இணை செயலாளர் பதவியையும் ஏபிவிபி இந்த ஆண்டு பறிகொடுத்தது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர் சங்கத் தேர்தலில் மத்திய குழுவில் உள்ள மொத்தம் நான்கு இடங்களையும் இடதுசாரி கூட்டணி வென்றது. நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இடதுசாரி கூட்டணியிலிருந்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் மத்திய குழு தலைவராக AISA வேட்பாளர் அதிதி மிஸ்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
DSF வேட்பாளர் சுனில் யாதவ் பொதுச் செயலாளர் பதவியையும், AISA வேட்பாளர் டேனிஷ் அலி இணைச் செயலாளர் பதவியையும் வென்றார்.
SFI அமைப்பின் வேட்பாளர் கே. கோபிகா பாபு துணைத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு, இடதுசாரி மாணவர் அமைப்புகள் மூன்று இடங்களை வென்றிருந்த நிலையில் இந்த ஆண்டு 4 இடங்களையும் வென்றடுள்ளன.
எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி அமைப்பான ஆர்எஸ்எஸ்-இன் மாணவர் அணியான ஏபிவிபி படுதோல்வியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு கையில் வைத்திருந்த இணை செயலாளர் பதவியையும் ஏபிவிபி இந்த ஆண்டு பறிகொடுத்தது.
- பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியது.
- பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்ததற்கு இந்திய மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்தது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய துருக்கி அதிபர் எர்டோகன், "பாகிஸ்தான் எங்களின் உண்மையான நண்பன் என்றும், எதிர்காலத்தில் அந்த நாட்டிற்கு நாங்கள் தொடர்ந்து துணை நிற்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்ததற்கு இந்திய மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதனால் துருக்கியில் உள்ள இனோனு பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தங்களை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முறித்துக் கொண்டது.
இந்நிலையில், துருக்கிய பல்கலைக்கழகங்களுடனான தனது ஒப்பந்தங்களை ஐஐடி பாம்பே முறித்து கொண்டுள்ளது.
இது தொடர்பாக ஐஐடி பாம்பே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "துருக்கி சம்பந்தப்பட்ட தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை துருக்கிய பல்கலைக்கழகங்களுடனான ஒப்பந்தங்களை ஐஐடி பாம்பே நிறுத்தி வைக்கிறது" என்று பதிவிட்டுள்ளது.
- பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியது.
- இந்தியாவின் தேசிய நலன்களுக்கு மாறாக, துருக்கி பாகிஸ்தானை ஆதரிக்கிறது.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகத் துருக்கியில் உள்ள இனோனு பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தங்களை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முறித்துக் கொண்டுள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியதால் அந்நாட்டின் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த சூழலில் அந்நாட்டு பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது பற்றிய தகவல் JNUவின் X கணக்கில் அறிவிக்கப்பட்டது.
இரு பல்கலைக்கழகங்களுக்கிடையேயான கல்வி ஒத்துழைப்பை குறிக்கோளாக கொண்டு பிப்ரவரி 3, 2025 அன்று கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 2, 2028 அன்று காலாவதியாக இருந்தது.
ஆனால் தற்போது இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள JNU பல்கலை., பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்கள் எந்த சிரமங்களையும் சந்திக்காமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்தியாவின் தேசிய நலன்களுக்கு மாறாக, துருக்கி பாகிஸ்தானை ஆதரிப்பதால் 'துருக்கி புறக்கணிப்பு' என்ற பதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஆல் இந்தியா மாணவர்கள் சங்கம் சார்பில் போட்டியிட்ட தனஞ்ஜெய் 2598 வாக்குகள் பெற்றார்.
- ஏபிவிபி சார்பில் போட்டியிட்ட உமேஷ் சி அஜ்மீரா 1676 வாக்குகள் பெற்றார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்லைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைந்த இடதுசாரி குழு, அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷாத் (ABVP) ஆகிய இரண்டு அணிகள் போட்டியிட்ட ஒருங்கிணைந்த இடதுசாரி குழு ஆல் இந்தியா மாணவர்கள் சங்கம் (AISA) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்த அணி சார்பில் தனஞ்ஜெய் போட்டியிட்டார். ஏபிவிபி சார்பில் உமேஷ் சி அஜ்மீரா போட்டியிட்டார்.
இதில் தனஞ்ஜெயா 2598 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். உமேஷ் சி அஜ்மீரா 1676 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
தனஞ்ஜெயா பீகார் மாநிலம் கயாவைச் சேர்ந்தவர். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். கடந்த 1996-97-ல் பட்டி லால் பைர்வா என்பவர் மாணவர்கள் சங்கம் தேர்தல் வெற்றி பெற்றிருந்தார். இவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தார். அதன்பின் சுமார் 27 வருடங்கள் கழித்து தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் ஜேஎன்யு மாணவர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற தனஞ்ஜெய் கூறுகையில் "இந்த வெற்றியின் மூலம் மாணவர்கள் வெறுப்பு அரசியல், வன்முறையை நிராகரித்துள்ளனர். மாணவர்கள் மீண்டும் ஒருமுறை எங்கள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். நாங்கள் மாணவர்களுடைய உரிமைக்காக தொடர்ந்து போராடுவோம்" என்றார்.
- டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்லைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் தேர்தல் நடைபெற்றது
- தமிழ் நாட்டில் NOTA வுக்கு கிடைக்கும் வாக்குதான் BJP க்கு கிடைக்க போகிறது
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரி மாணவர் அமைப்புகளை சேர்ந்த இளைஞர்களுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்,
"டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை தேர்தலுக்கு முன்பு அத்தனை வட இந்திய ஊடகங்களும் சங்க பரிவாரின் மாணவர் அமைப்பான ABVP பெரும் வெற்றியை ஈட்டும் என திட்டவட்டமாக கூறினர். வாக்கு எண்ணிக்கையின் போதும் அப்படியே ஒரு பிம்பத்தை உருவாக்கினர். கடைசியில் ABVP இருந்த இடமே தெரியாமல் சென்றுள்ளது.
இதுதான் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கான டிரெய்லர். ஊடகங்கள் "பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும், தமிழ்நாட்டில் 25% வாக்குகளை பெறும்" என நிர்பந்தத்தால் மிகை படுத்தி பேசுகின்றன. ஆனால் தேர்தலில் பாஜக படுதோல்வி அடையத்தான் போகிறது. அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் NOTA வுக்கு கிடைக்கும் வாக்குதான் BJP க்கு கிடைக்க போகிறது என்று பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்லைக்கழகத்தின் மாணவர்கள் சங்கம் தேர்தல் நடைபெற்றது. அதில், ஏ.பி.வி.பி வேட்பாளரான உமேஷ் சி அஜ்மீராவை வீழ்த்தி, ஆல் இந்தியா மாணவர்கள் சங்க வேட்பாளர் தனஞ்ஜெயா வெற்றி பெற்றார்.






