search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shot"

    • சேலம் மாவட்டம் ஏற்காடு அந்தியூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் -பாக்கி யலட்சுமி தம்பதியின் மகள் செல்வி இன்பத்தமிழ்.
    • மாற்றுத்திறனாளியான இவர் விளையாட்டு போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் குண்டு எறிதல் போட்டியில் பல்வேறு பரிசுகளை வென்று வருகிறார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு அந்தியூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் -பாக்கி யலட்சுமி தம்பதியின் மகள் செல்வி இன்பத்தமிழ். (வயது 17).

    இம்மாணவி நாகலூர் அரசு மாதிரி பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வருகிறார். உயரம் குறைந்த மாற்றுத்திறனாளியான இவர் விளையாட்டு போட்டியில் மிகுந்த ஆர்வம் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

    அந்த வகையில் குண்டு எறிதல் போட்டியில் பல்வேறு பரிசுகளை வென்று வருகிறார்.

    இந்திய அளவில் 2-ம் இடம்

    சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற குட்டை மனிதர்களுக்கான விளை யாட்டு போட்டியில் குண்டு எறிதலில் தன் திற மையால் இன்பத்தமிழ் இந்திய அளவில் 2-ம் இடம் பிடித்தார். அதே போட்டியில் சேலம் வலசை யூரை சேர்ந்த மாணவி வெண்ணிலா 3-ம் இடம் பிடித்தார்.

    இதன் மூலம் மாணவி இன்பத்தமிழ் , நாளை முதல் அடுத்த மாதம் 5-ந்தேதி வரை ஜெர்மனி நாட்டில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உலக அளவில் 8-ம் முறையாக நடைபெறும் குண்டு எறிதல் போட்டிக்கு தகுதி பெற்றார். இதில் பங்கேற்பதற்காக மாணவி இன்பத்தமிழ் இன்று காலை பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு ஜெர்மனிக்கு சென்றார்.

    அவருடன் அதே போட்டியில் 3-ம் இடம் பிடித்த மாணவி வெண்ணிலா, அவர்களது பயிற்சியாளர் உலகநாதன், உடற்கல்வி ஆசிரியர் ராேஜந்திரன் சென்றனர்.

    நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்

    இது பற்றி மாணவி இன்பத்தமிழ் கூறியதாவது:-

    என்னுடைய திறமைக்கு அடித்தளமாக இருந்த தாய்- தந்தை, ஆசிரியர்கள், நண்பர்கள், எனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.ஜெர்மன் நாட்டில் நடக்க இருக்கும் போட்டியில் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என்று தெரிவித்தார்.

    ஊக்கத் தொகை குவிகிறது

    போட்டியில் சாதனை படைத்த மாணவி இன்பத்தமிழை ஏற்காடு பகுதி கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

    கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.

    சிவலிங்கம், மாணவிக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மாணவிக்கு தேவைப்படும் உதவிகளை செய்து கொடுப்ப தாக உறுதி அளித்தார்.

    மேலும் ஏற்காடு ஒன்றிய தி.மு.க சார்பாக மாணவி இன்பத்தமிழுக்கு ஏற்காடு ஒன்றிய செயலாளர் கே.வி ராஜா வாழ்த்து தெரிவித்து ஊக்கத்தொகை வழங்கினார். அதுபோல் கிழக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் துணை அமைப்பாளர் எம்.வி.எஸ் பாபு வாழ்த்து கூறி ஊக்கத் தொகை வழங்கி உதவிகள் தேவைப்படும் போது விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் செய்து தரப்படும் என்ற உறுதி அளித்தார். மஞ்சகுட்டை ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா ராமசந்திரன் வாழ்த்து தெரிவித்து ஊக்கதொகை வழங்கினார்.

    துப்பாக்கிச்சூடு தாக்குதலில் முகம் சிதைந்து ரின்கூ சிங் தனது பார்வை மற்றும் செவிப்புலனை இழந்தார்.
    உத்தரப் பிரதேச மாநிலம் ஹபூரைச் சேர்ந்த மாகாண சிவில் சர்வீஸ் அதிகாரி ரின்கூ சிங் ரஹீ. மாநில சமூக நலத்துறையில் அதிகாரியாக உள்ள ரின்கூ சிங், கடந்த 2008-ம் ஆண்டு முசாபர்நகரில் ஸ்காலர்ஷிப்பில் நடந்த 83 கோடி மோசடியை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்.

    இந்த வழக்கில் 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு 4 பேருக்கு 10 ஆண்டுகளை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த மோசடி வெளியான உடனேயே, ரின்கூ தாக்கப்பட்டு ஏழு முறை சுடப்பட்டார். இதில் துப்பாக்கி குண்டு முகத்தில் பாய்ந்தது.  இந்த தாக்குதலில் அவரது முகம் சிதைந்து ரின்கூ சிங் தனது பார்வை மற்றும் செவிப்புலனை இழந்தார்.

    இதற்கிடையே, ரன்கூ சிங் அரசு நடத்தும் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் இயக்குனராக அவர் பல ஆண்டுகளாக சிவில் சர்வீஸ் ஆர்வலர்களுக்கு கற்பித்தும் வருகிறார்.

    இந்நிலையில், சக மாணவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க ரன்கூ 2021-ம் ஆண்டு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.

    இதுகுறித்து ரின்கூ சிங் ரஹீ கூறியதாவது:-

    எனது மாணவர்கள் தன்னிடம் யுபிஎஸ்சி தேர்வை எழுதச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். அவர்களின் தூண்டுதலால்தான் நான் தேர்வு எழுதினேன்.

    இதற்கு முன் 2004ம் ஆண்டில் நான் மாகாண சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.

    என்னைப் பொறுத்தவரை பொது நலன் முக்கியம். சுயநலத்திற்கும் பொது நலனுக்கும் இடையே எப்போதாவது மோதல் ஏற்பட்டால் நான் பொது நலனைத்தான் தேர்ந்தெடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. திருப்பதியில் கடந்த 4 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது
    காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை நமது விமானப்படை சுட்டு வீழ்த்தியதற்கு ஆதாரமான ரேடார் பதிவுகளை இந்தியா இன்று வெளியிட்டது. #PakistanF16 #IndianAirForce #IAFMIG21 #MIG21Bison
    புதுடெல்லி:

    பாகிஸ்தான் எல்லைப்பகுதியான பாலகோட்டில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இடையே மோதல் ஏற்பட்டது. 

    அப்போது பாகிஸ்தானின் எப்-16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்தது. அந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட அம்ரான் ஏவுகணையின் சிதைந்த பாகங்களையும் இந்தியா வெளியிட்டது. ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்தது. 

    நாங்கள் சுட்டு வீழ்த்தியது எப்-16 ரக போர் விமானம்தான் என்பதை உறுதியாக கூறிய இந்தியா, அமெரிக்காவிற்கும் ஆதாரங்களை அனுப்பி வைத்தது. எப்-16  ரக போர் விமானத்தை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் ஒப்பந்த விதிகளை மீறியது என இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. 

    இதற்கிடையில், அமெரிக்காவில் இருந்து வெளியாகும் “ஃபாரின் பாலிசி” என்ற செய்தி இதழ், அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் பாகிஸ்தானிடம் எத்தனை எப்-16 ரக விமானங்கள் உள்ளது? என்பதை எண்ணி பார்த்ததாகவும், இதில், அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையில் எதுவும் குறையவில்லை என செய்தி வெளியிட்டது. 

    இதற்கு இந்திய விமானப்படை மறுப்பு தெரிவித்திருந்தது. “இருதரப்பு வான்மோதலின்போது இந்திய விமானப்படையின் மிக் 21 பைசன் ரக விமானம், பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை நவ்ஷேரா செக்டாரில் சுட்டு வீழ்த்தியது,” என இந்திய விமானப்படை ஆணித்தரமாக கூறியுள்ளது. 

    மேலும், பாகிஸ்தான் விமானப்படையின் ரேடியோ தகவல் தொடர்பை இடைமறிப்பு செய்ததில் அந்நாட்டின் எப். 16 விமானம் ஒன்று பாகிஸ்தானில் உள்ள நிலைக்கு திரும்பவில்லை என்று பாகிஸ்தான் விமானப்படை தகவல் தொடர்புத்துறை உயரதிகாரி மைக் மூலம் தெரிவித்த கருத்தும் இதை உறுதிப்படுத்துவதாக இந்தியா சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

    இந்நிலையில், இந்தியாவின் கருத்துக்கு வலு சேர்க்கும் புதிய ஆதாரத்தை இந்திய விமானப்படையின் துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் இன்று வெளியிட்டுள்ளார்.

    பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை நமது விமானப்படை சுட்டு வீழ்த்திய ரேடார் பதிவுகளை செய்தியாளர்களுக்கு துணை தளபதி ஆர்.ஜி.கே.கபூர் காட்சிப்படுத்தினார். இதைவிட அதிக வலுவான ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஆனால், பாதுகாப்பு மற்றும் நாட்டின் அதிமுக்கிய ரகசியம் என்னும் வகையில் அந்த ஆதாரத்தை பொதுவெளியில் (ஊடகங்களுக்கு) பகிரங்கமாக தெரிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #PakistanF16 #IndianAirForce #IAFMIG21 #MIG21Bison 
    வான் மோதலின் போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. #PakistanF16 #IndianAirForce
    பாலகோட்டில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இடையே மோதல் நேரிட்டது. அப்போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என இந்திய விமானப்படை தெரிவித்தது. அந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்ட அம்ரான் ஏவுகணையின் சிதைவு பாகங்களையும் வெளியிட்டது. ஆனால் பாகிஸ்தான் மறுத்தது. 

    எப்.16 ரக போர் விமானம் என்பதை உறுதியாக கூறிய இந்தியா, அமெரிக்காவிற்கும் ஆதாரங்களை அனுப்பி வைத்தது. எப்16  ரக போர் விமானத்தை உள்நாட்டு பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், மற்ற நாடுகள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால் பாகிஸ்தான் ஒப்பந்த விதிகளை மீறியது என குற்றம் சாட்டப்பட்டது. 

    இந்நிலையில்  அமெரிக்காவில் இருந்து வெளியாகும் “ஃபாரீன் பாலிசி” என்ற செய்தி இதழ், அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்தில் பாகிஸ்தான் வசம் உள்ள எப். 16 ரக விமானங்கள் எத்தனை உள்ளது என்பதை எண்ணி பார்த்ததாகவும், இதில், அமெரிக்காவால் வழங்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையில் எதுவும் குறையவில்லை என செய்தி வெளியிட்டது. இதனை இந்திய விமானப்படை மறுத்துள்ளது.

    “இரு தரப்பு மோதலின் போது மிக் 21 விமானம், பாகிஸ்தானின் எப் 16 விமானத்தை நவ்சேகரா செக்டாரில் சுட்டு வீழ்த்தியது,” என இந்திய விமானப்படை ஸ்திரமாக கூறியுள்ளது. பாகிஸ்தான் விமானப்படையின் ரேடியோ தகவல் தொடர்பை இடைமறிப்பு செய்ததில் அந்நாட்டின் எப். 16 விமானம் ஒன்று நிலைக்கு திரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. #PakistanF16 #IndianAirForce
    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் கட்சி பிரமுகரான மொகமது இஸ்மாயில் வானி மீது பயங்கரவாதிகள் இன்று மாலை திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் வசித்து வருபவர் மொகமது இஸ்மாயில் வானி. தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்தவர்.

    இந்நிலையில், இன்று மாலை இஸ்மாயில் வானியை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த திடீர் தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீநகர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. #JammuKashmir
    ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாமிற்குள் நுழைய முயன்ற மனநிலை பாதிக்கப்பட்ட நபரை, காவல் பணியில் ஈடுபட்ட வீரர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #JKArmyFired #ArmyCamp
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் பஹ்னூ கிராமத்தில் உள்ள ராணுவ முகாமை நோக்கி இன்று அதிகாலை ஒரு நபர் வந்துள்ளார். முகாமின் சுற்றுப்புற வேலியை கடந்து வந்தபோது முகாமில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த வீரர், திரும்பி போகும்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்துள்ளார். ஆனாலும் அந்த நபர் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் முகாமின் காம்பவுண்டு சுவர் நோக்கி அந்த நபர் நடந்து வந்துள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த ராணுவ வீரர், அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டார்.  விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ரயீஸ் அகமது வானி என்பதும், அவர்  மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வானியின் உயிர் பறிபோனதாக ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது.

    வானியின் மரணத்திற்கு காரணமான பாதுகாப்பு படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வானியின் குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். #JKArmyFired #ArmyCamp
    பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் முன்னாள் நகர மேயர் இன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Muzaffarpurformermay #SamirKumar #Muzaffarpur
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் நகராட்சியின் முன்னாள் மேயராக பதவி வகித்தவர் சமிர் குமார். லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த இவர் இன்றிரவு முசாபர்பூர் நகருக்கு உட்பட்ட பனாரஸ் பங்க் சவுக் பகுதியில் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த காரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இயந்திர துப்பாக்கிகளால் சமிர் குமாரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் சமிர் குமார் மற்றும் அவரது கார் டிரைவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த துணிகர சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். #Muzaffarpurformermay #SamirKumar  #Muzaffarpur
    ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித்தை உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள டெல்லி அரசியல் சாசன சபையில் வைத்து மர்ம நபர் ஒருவர் சுட முயற்சி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #UmarKhalid #JNU
    புதுடெல்லி:

    டெல்லி அரசியல் சாசன சபையில் ‘வெறுப்புணர்வுகளுக்கு எதிரான ஒன்றினைவோம்’ என்ற நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், 
    சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், கோரக்பூர் முன்னாள் டாக்டர் கபீல் கான், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவரான உமர் காலித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், உமர் காலித்தை குறிவைத்து மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த தாக்குதலில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள இந்த பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சமீபத்தில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உமர் காலித் போலீசில் புகார் அளித்திருந்தார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தில் இருக்கும் உமர் காலித், மதவாத அரசியல்களை பலமுறை விமர்சித்து பேசியிருந்தார். இதனால், அவர் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மருத்துவமனை விவகாரத்தில் தொடர்புடைய டாக்டர் கபில் கானின் சகோதரர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். #GorakhpurHospital #DoctorKafeelKhan #KashifJameel
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 63 குழந்தைகள் உயிரிழந்தனர். தொடர்ந்து அந்த மருத்துவமனையில் குழந்தைகள் இறந்து வருவது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக உ.பி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, இந்த விவகாரத்தில் தொடர்புடைய டாக்டர் கபில் கானை உ.பி. மாநில சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்தனர். 

    இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் மருத்துவமனை விவகாரத்தில் தொடர்புடைய டாக்டர் கபில் கானின் சகோதரர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ஹுமாயுன்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்த காஷிப் ஜமீல் மீது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்த காஷிப் ஜமீலை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகின்றார். துப்பாக்கியால் சுட்ட நபர்களை தேடி வருகிறோம் என தெரிவித்தனர். #GorakhpurHospital #DoctorKafeelKhan #KashifJameel
    அமெரிக்காவில் டிரைவராக பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்பிரீத் சிங் என்ற சீக்கியர் துப்பாக்கியால் சுடப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #Sikhkilled
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஓகியோ மாநிலத்தின் மான்ரோ பகுதியில் கடந்த 8 ஆண்டுகளாக ஜஸ்பிரீத் சிங் என்ற சீக்கியர் வாழ்ந்து வந்துள்ளார், இவர் அப்பகுதியில் சரக்கு லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், மே 12-ம் தேதி புரோடெரிக் மாலிக் ஜோன்ஸ் ராபர்ட் என்ற வாலிபர் இவரிடம் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். அப்போது, ராபர்ட் வைத்திருந்த துப்பாக்கியால் சுடப்பட்ட ஜஸ்பிரீத் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

    இதையடுத்து கடந்த 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜஸ்பிரீத் சிங், சிகிச்சை பலனின்றி கடந்த 21-ம் தேதி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தற்போது தெரிவித்துள்ளனர்.

    இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள புரோடெரிக் மாலிக் ஜோன்ஸ் ராபர்ட் மீது கொடூரமான கொள்ளை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றபிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. #Sikhkilled
    ×