என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "militants"

    • பாகிஸ்தானில் தனித்தனியாக நடந்த தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    • பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 ராணுவ வீரர்களும் பலியாகினர்.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே இதற்கு முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.

    தலிபான்கள் அதனை மறுத்து வந்தாலும் தாக்குதல் தொடர் கதையாக உள்ளது. எனவே எல்லையோர மாகாணங்களில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் கடந்த 4 நாட்களாக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.

    இந்த நடவடிக்கையின்போது பஜவுர் மாவட்டத்தில் முகாமிட்டிருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 22 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

    அதேபோல், தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது 13 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த துப்பாக்கி, வெடிமருந்து போன்றவை கைப்பற்றப்பட்டன.

    இந்த இரு தாக்குதலிலும் கொல்லப்பட்டது தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் பயங்கரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் 12 ராணுவ வீரர்களும் பலியாகினர்.

    • காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
    • எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

    புதுடெல்லி:

    காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் 26 பேரை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்கு இந்திய முப்படைகளும் தயார் படுத்தப்பட்டு கொண்டு இருக்கின்றன.

    எந்த நேரத்திலும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பீதி அடைந்துள்ள பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லை பகுதிகளில் உள்ள பயிற்சி முகாம்களை மூடி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று பிரதமர் மோடியை விமானப்படை தளபதி சந்தித்து பேசினார். அப்போது ரபேல் போர் விமானங்கள் உள்பட தாக்குதலுக்கு தயார் நிலையில் இருக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர் பிரதமரிடம் விளக்கி கூறினார். இதனால் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் காஷ்மீரில் மீண்டும் கைவரிசை காட்டக்கூடும் என்று உளவுத்துறை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இன்று காலையிலும் ராணுவ உளவுத்துறை புதிய எச்சரிக்கை ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியது.

    அந்த எச்சரிக்கை தகவலில் காஷ்மீரில் உள்ள ஜெயில்களில் இருக்கும் தங்களது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதிகள் மற்றும் ஆதரவாளர்களை மீட்பதற்காக எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய ஜெயில்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் முக்கிய தீவிரவாதிகள் இருக்கும் ஜெயில்கள் முன்பு குவிக்கப்பட்டுள்ளனர். ஜம்முவில் உள்ள சிறையில் மிக முக்கியமான தீவிரவாதிகள் சிலர் வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீநகர் மத்திய ஜெயிலிலும் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த 2 ஜெயில்களிலும் இன்று காலை பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே காஷ்மீரில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை வேட்டையாடும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் குறிப்பிட்ட வனப்பகுதியில் தீவிரவாதிகள் முகாம் அமைத்து தங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இன்று அதிகாலை பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் போலீசாரும் ஒருங்கிணைந்து அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தீவிரவாதிகள் மறைவிடம் அமைத்து தங்கியிருந்தது தெரிய வந்தது.

    ஆனால் தீவிரவாதிகள் யாரும் அந்த முகாம்களில் இல்லை. அவர்கள் வைத்திருந்த குவியல் குவியிலான வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 4 கண்ணி வெடிகள் உள்பட ஏராளமான ஆயுதங்களும் மீட்கப்பட்டன.

    தீவிரவாதிகளின் அந்த பதுங்கு குழியில் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களும் இருந்தன. இதன் மூலம் அந்த பகுதியில் இருந்தவர்கள் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    இதற்கிடையே எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. நேற்று இரவு 11-வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்களில் ஈடுபட்டது. 8 இடங்களில் பாகிஸ்தான் வீரர்கள் விதிகளை மீறி இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

    அவர்களுக்கு இந்திய ராணுவ தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

    • பயங்கரவாதிகளின் மையமாக போர்னோ திகழ்கிறது
    • என் நண்பர்கள் 10 பேரின் பிணங்களை நான் கண்டேன்

    நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ளது போர்னோ நகரம். பயங்கரவாதிகளின் மையமாக போர்னோ திகழ்கிறது.

    ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நைஜீரியா நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கிளர்ச்சியில் கடந்த வாரம் பொது மக்களில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்நிலையில் அங்குள்ள கொண்டூகா பகுதியில் உள்ள கவூரி கிராமத்தில் போகா ஹராம் பயங்கரவாதிகள், வயலில் வேலை செய்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளை தாக்கி, அவர்களின் தலைகளை வெட்டி கொன்றுள்ளனர்.

    "நேற்று காலை அவர்கள் துப்பாக்கிகளை ஏந்தியபடி மோட்டார் பைக்கில் வந்தார்கள். வயல் வேலையில் இருந்த விவசாயிகளின் பண்ணைகளை நாசம் செய்தார்கள். பிறகு அவர்களை கொன்றார்கள். கொடூரமாக கொல்லப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட என் நண்பர்கள் 10 பேரின் பிணங்களை நான் கண்டேன்" என அவர்களிடம் இருந்து தப்பிய ஒரு விவசாயி அபுபக்கர் மஸ்தா கூறினார்.

    இந்த கொடூர கொலைகளின் பின்னணியில் போகோ ஹராம் எனும் தீவிரவாத இயக்கம் உள்ளது. நைஜீரியாவில் 2,000 ஆண்டிலிருந்தே செயல்பட்டு வரும் இந்த தீவிரவாத அமைப்பினால் அந்நாட்டில் பல ஆயிரக்காணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வன்முறை இயக்கம் அண்டை நாடுகளான சாட் மற்றும் கேமரூன் பகுதிகளுக்கும் பரவியிருக்கிறது.

    ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆப்பிரிக்க பிரிவான மேற்கு ஆப்பிரிக்காவின் ஐ.எஸ். (Islamic State of West Africa) எனும் அமைப்பும் அந்நாட்டில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    • பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
    • துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

    பந்திபோரா:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அங்குள்ள சிந்திபந்தி கிராமத்தில் பாதுகாப்பு படையினர் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, போலீசார் மற்றும் ராணுவத்தின் கூட்டுக் குழு பந்திபோராவில் சுற்றிவளைத்து பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

    • அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் குவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர்.
    • போலீசார் 4 பயங்கரவாதிகளிடமும் தொடர்ச்சியாக பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

    நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

    அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் செயல்பட்டு வரும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரும் பயங்கரவாத செயல்களை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் குஜராத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கடந்த 18-ந் தேதி அன்று தகவல் கிடைத்தது. ரெயில் அல்லது விமானம் மூலமாக குஜராத்துக்கு வந்து பயங்கரவாதிகள் அதிரடியாக தாக்குதல் நடத்துவதற்கு திட்டம் தீட்டி இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட ரகசிய விசாரணையில் இலங்கையில் இருந்து சென்னை வழியாக ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் விமானத்தில் குஜராத்துக்கு வர இருப்பது உறுதியானது.

    இதன்படி நேற்று முன்தினம் அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் குவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர். போலீசார் எதிர்பார்த்த படியே இலங்கையில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் குஜராத் செல்வதற்கு டிக்கெட் எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது பெயர் முகமது நஸ்ரத், முகமது நப்ரான், முகமது ரஸ்தீன், முகமது பரீஸ் என்பதும் தெரிய வந்தது. அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேரும் வந்து இறங்கியதும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    உடனடியாக 4 பேரையும் பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பில் 4 பேரும் உறுப்பினர்களாக செயல்பட்டு வந்தது உறுதியானது.

    இலங்கையை சேர்ந்த 4 பயங்கரவாதிகளும் தமிழ் மட்டுமே பேசியுள்ளனர். வேறு மொழிகள் எதுவும் தெரியவில்லை. இதையடுத்து தமிழ் தெரிந்த போலீசாரை வைத்து 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேரும் குஜராத்தில் மிகப்பெரிய தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியது அம்பலமானது.

    ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவராக திகழும் அபுபக்கர் அல் பாக்தாதி என்பவரோடு இவர்கள் நெருங்கிய தொடர்பில் இருந்ததும், குஜராத்தில் தாக்குதல் நடத்துவதற்கு அவரது கட்டளைக்காக காத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 4 பேரும் போலீசாரிடம் இதனை வாக்கு மூலமாக அளித்துள்ளனர்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் 4 பயங்கரவாதிகளிடமும் தொடர்ச்சியாக பல மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    ஐ.எஸ்.பயங்கரவாதிகள் 4 பேரும் குஜராத்தில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை கொல்ல சதி திட்டம் தீட்டியுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபுபக்கர் இது தொடர்பாக சில திட்டங்களை தீட்டி வைத்திருந்ததாகவும், 4 பேரும் கூறியுள்ளனர். குறிப்பிட்ட சில தலைவர்கள் மீது எப்போது எங்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை நீங்கள் குஜராத்துக்கு சென்று தங்கிய பிறகு சொல்கிறேன். அதுவரை காத்திருங்கள் என்றும் ஐ.எஸ். தலைவர் அபுபக்கர் 4 பேரிடமும் கூறி அனுப்பி வைத்து உள்ளார். ஆனால் அதற்குள் பயங்கரவாதிகள் 4 பேரும் போலீசில் சிக்கிக் கொண்டனர். பயங்கரவாத சதித் திட்டமும் முறியடிக்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து 4 பேரிடமும் குஜராத்தில் ஆயுதங்கள் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் அளித்த தகவலின் பேரில் அகமதாபாத்தில் நானா சிலோடா நகரில் ரகசிய இடத்தில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர். இதில் 3 துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவைகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என்று குஜராத் டி.ஜி.பி. விகாஸ் சகாய் தெரிவித்துள்ளார்.

    துப்பாக்கி மற்றும் தோட்டாக்களில் பாகிஸ்தான் பழங்குடியினரின் முத்திரை உள்ளது. இதன் மூலம் இந்த தாக்குதல் சதி திட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தலைவரான அபுபக்கரோடு இ-மெயில் மூலமாக 4 பேரும் உரையாடிய தகவல்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் தாக்குதலுக்கான நேரம் பற்றி பின்னர் தெரிவிக்கப்படும் என்பது பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன. குஜராத்தில் பா.ஜனதா தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களிலோ அல்லது அவர்கள் காரில் செல்லும்போதோ 4 பேரும் மனித வெடிகுண்டுகளாக மாறி நாட்டையே அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரிய தாக்குதலை அரங்கேற்றவும் சதித் திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.

    குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள முகமது நஸ்ரத், முகமது நப்ரான், முகமது ரஸ்தீன், முகமது பரீஸ் ஆகிய 4 பேரும் இலங்கையில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு ஒன்றில் இணைந்தே முதலில் செயல்பட்டுள்ளனர்.

    2019-ம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரும் கடந்த பிப்ரவரி மாதம் ஐ.எஸ். பயங்கரவாத தலைவரான அபுபக்கரை சந்தித்து ஐ.எஸ்.அமைப்பில் உறுப்பினராக சேர்ந்து உள்ளனர்.

    குஜராத்தில் நாச வேலையில் ஈடுபடுவதற்காக அபுபக்கர் ரூ.4 லட்சம் பணத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இது முன் பணமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கைதான 4 பேரில் முகமது நஸ்ரத்திடம் பாகிஸ்தான் விசா இருந்துள்ளது. அதையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இந்த விசாவை வைத்து நஸ்ரத் பாகிஸ்தான் சென்று வர திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது.

    4 பயங்கரவாதிகள் மீதும் கூட்டு சதி, நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தல், ஆயுத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். பாராளுமன்றத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதற்குள் 4 பேர் நாச வேலைக்கு திட்டம் தீட்டியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இதை தொடர்ந்து கடைசி கட்டத் தேர்தல் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.


    • குஜராத்தில் தற்கொலை படை தாக்குதலிலும் ஈடுபட திட்டமிட்டது அம்பலமானது.
    • கைதானவர்களில் முகமது நசரத் என்பவர் சென்னையில் குருவியாக வேலை பார்த்தது தெரிய வந்தது.

    இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமான நபர் சென்னையில் குருவியாக வேலை பார்த்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

    இலங்கையில் இருந்து சென்னை வழியாக கடந்த 20-ந்தேதி அகமதாபத்திற்கு சென்ற ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நான்கு பேரை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இவர்கள் குஜராத்தில் தற்கொலை படை தாக்குதலிலும் ஈடுபட திட்டமிட்டது அம்பலமானது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். கைதானவர்களில் முகமது நசரத் என்பவர் சென்னையில் குருவியாக வேலை பார்த்தது தெரிய வந்தது.

    சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத சதி செயலுக்கு நஸ்ரத் திட்டமிட்டாரா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ‘சாகர் கவாச் ஆப்ரேஷன்’ பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.
    • போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    கடலோர பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று தொடங்கியது.

    அதன்படி, நாகை மாவட்டம், வேதாரண்யம் கடலோர பகுதிகளான ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், நாலுவேதபதி, கோடியக்கரை, மணியன்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 'சாகர் கவாச் ஆப்ரேஷன்' பாதுகாப்பு ஒத்திகை இன்றும், நாளையும் நடக்கிறது.

    முதல் நாளான இன்று ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும டி.எஸ்.பி. சுந்தர் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வரலட்சுமி, எஸ். எஸ்.ஐ.சசிகுமார் உள்பட 40-க்கும் மேற்பட்ட போலீசார் 4 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    படகு மூலம் கடலுக்கு சென்று வழியில் தென்படும் மீனவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் யாரேனும் தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என முன்னெச்சரிக்கை விடுத்தனர்.

    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
    • தப்பி ஓடிய மற்ற பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீப காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநில மலைப்பகுதியில் நவீன ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

    அவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். குப்வாரா மாவட்டம் காம்காரி பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.

    பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.  இந்திய ராணுவ ஜவான் வீர மரணமடைந்தார்.

    ராணுவ மேஜர் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய மற்ற பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.

    • பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
    • சுட்டுக்கொன்ற 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் தேடி வருகிறார்கள்.

    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

    இதில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ கேப்டன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை சுட்டுக்கொன்ற 4 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்கள் தேடி வருகிறார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    • ‘உல்பா’ அமைப்பு குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.
    • வெடிபொருள்களின் தன்மையை அறிய தடயவியல் துறைக்கு வெடிமருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன.

    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தில் 78-வது சுதந்திர தின விழாவில் மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா தேசிய கொடியை ஏற்றி வைத்து தனது உரையை முடித்த சில நிமிடங்களில் 'உல்பா' அமைப்பு ஊடகங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், 'அசாம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை முதல் பிற்பகல் வரை குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடத்த திட்டமிடப்பட்டி ருந்ததது. ஆனால், சில தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடிக்கவில்லை' எனத் தெரிவித்தனா்.

    மேலும், அதனுடன் 19 குண்டுகள் வைக்கப்பட்ட சரியான இடங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய பட்டியலை 'உல்பா' அமைப்பு வெளியிட்டது. ஆனால், மீதமுள்ள 5 இடங்களை சுட்டிக்காட்ட முடியவில்லை என மின் அஞ்சலில் தெரிவித்தனா்.

    இதையடுத்து, ராணுவம் உள்பட பாதுகாப்புப் படையினா் மற்றும் வெடி குண்டு செயலிழப்பு படைகள் இணைந்து மாநிலம் முழுவதும் 'உல்பா' அமைப்பு குறிப்பிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

    அதில், குண்டு வெடிப்பு நடத்த திட்டமிடப்பட்ட 24 இடங்களில் கவுகாத்தியில் உள்ள 8 இடங்களில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன என போலீசாா் தெரிவித்தனா்.

    இதில், அசாம் முதல்வா், பிற அமைச்சர்களின் அதிகாரபூா்வ இல்லங்களுக்கு அருகில் உள்ள இடங்களிலும் வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைக்கும் சாதனங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் வெடிபொருள்களின் தன்மையை அறிய தடயவியல் துறைக்கு வெடிமருந்துகள் அனுப்பப்பட்டுள்ளன என்றும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

    தொழில்நுட்ப கோளாறால் வெடிகுண்டுகள் வெடிக்காததால் உல்பா அமைப்பே மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு தகவலை அளித்ததால், வெடிகுண்டுகளை காவல் துறையினா் கண்டெடுத்தனா். இதனால் பெரும் நாசவேலை தவிா்க்கப்பட்டது.

    • பயங்கரவாத இயக்கம் அங்கு பயிற்சி முகாம் நடத்த வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
    • 6 பயங்கரவாதிகள் கைது மூலம் மிகப்பெரிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலம் பிவாண்டி காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாக டெல்லி போலீசின் சிறப்பு படைக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பிவாண்டி வனப்பகுதிக்கு சென்று அவர்கள் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தீவிர முயற்சியால் அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் அங்கு பயிற்சி முகாம் நடத்த வந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

    விமானப்படை நிலையம் அருகே அல்கொய்தா இயக்கத்தினர் முகாம் அமைத்தல் பயங்கரவாத பயிற்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.

    இதை தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்ட 6 பயங்கரவாதிகளை சிறப்பு படை போலீசார் கைது செய்தார். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை டம்மி ஏ.கே.47, ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

    பிடிபட்டவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எவ்வளவு நாட்களாக பயிற்சி பெற்று வநதனர்? என்று அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    காட்டுப்பகுதியில் அவர்கள் ஆயுதங்களை மற்றும் தாக்குதல் பயிற்சிகளை பெற்று வந்தது தெரிய வந்துள்ளது.

    ஆயுதப்பயிற்சி எதற்காக நடத்தப்பட்டது, அந்த குறிப்பிட்ட காட்டுப்பகுதியை தேர்ந்தெடுத்தது ஏன்? என்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுத பயிற்சி நடைபெற்ற பகுதி அருகில் இந்திய விமானப்படையின் பயிற்சி மையம் உள்ளதால் வேறு ஏதேனும் சதி திட்டத்தை நடத்த திட்டமிட்டனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஆயுத பயிற்சி, 6 பயங்கரவாதிகள் கைது மூலம் மிகப்பெரிய சதி திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உதவியவர்கள் யார் என்றும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விவரங்களை அதிகாரிகள் வெளியிட மறுத்துவிட்டனர்.

    • ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் சண்டை நடந்தது.
    • இந்த என்கவுண்டரில் 2 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18 , 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ம் தேதி எண்ணப்பட உள்ளன.

    தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, கிஷ்ட்வாரின் சாட்ரோ பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர். அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

    ×