என் மலர்
நீங்கள் தேடியது "பாதுகாப்பு படை"
- சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா 8 நாட்களுக்கு முன்பு ஹித்மாவின் தாயாருடன் மதிய உணவு சாப்பிட்டார்.
- மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே கொல்லப்பட்டனர்.
ஆந்திரா, சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அல்லுரி சீதாராமராஜ் மாவட்ட காட்டுப்குதியில் மாவோயிஸ்டுகள் நேற்று காலை 6:30 மணி முதல் 7:00 மணி வரை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இந்த நடவடிக்கையில் மிகவும் தேடப்படும் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர் மத்வி ஹித்மா, அவரது மனைவி ராஜே மற்றும் நான்கு மாவோயிட்டுகள் கொல்லப்பட்டதாக ஆந்திரப் பிரதேச உளவுத்துறை கூடுதல் டிஜி மகேஷ் சந்திர லட்டா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்த என்கவுண்டருக்கு 8 நாட்களுக்கு முன்பு நவம்பர் 10 அன்று, சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா மாவோயிஸ்ட் கோட்டையான சுக்மா மாவட்டத்தில் உள்ள பூவர்த்தி கிராமத்திற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சென்றார்.
அங்கு, அவர் ஹித்மாவின் தாயாரைச் சந்தித்து அவருடன் மதிய உணவு சாப்பிட்டார். அவரது மகனை சரணடையச் செய்யுமாறு ஹித்மா தாயிடம் கேட்டுக் கொண்டார். மறுபுறம், ஹித்மாவின் நடமாட்டத்தை உளவுத்துறை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தது.
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரின் அழுத்தம் அதிகரித்து வருவதால், ஹித்மா உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் ஆந்திராவிற்குள் நுழைந்து அங்கு இயக்கத்தை மீண்டும் உருவாக்க முயற்சிப்பதாக தகவல் கிடைத்து வந்த நிலையில் இந்த என்கவுண்டர் நடந்துள்ளது.
என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக டிஜி மகேஷ் சந்திர லட்டா தெரிவித்தார்.
- பாகிஸ்தானில் தனித்தனியாக நடந்த தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
- பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 ராணுவ வீரர்களும் பலியாகினர்.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், எல்லையோர மாகாணங்களில் பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதே இதற்கு முக்கிய காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது.
தலிபான்கள் அதனை மறுத்து வந்தாலும் தாக்குதல் தொடர் கதையாக உள்ளது. எனவே எல்லையோர மாகாணங்களில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் கடந்த 4 நாட்களாக பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டது.
இந்த நடவடிக்கையின்போது பஜவுர் மாவட்டத்தில் முகாமிட்டிருந்த பயங்கரவாதிகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 22 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
அதேபோல், தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின்போது 13 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்த துப்பாக்கி, வெடிமருந்து போன்றவை கைப்பற்றப்பட்டன.
இந்த இரு தாக்குதலிலும் கொல்லப்பட்டது தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் பயங்கரவாதிகள் நடத்திய பதில் தாக்குதலில் 12 ராணுவ வீரர்களும் பலியாகினர்.
- இந்த பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அடர்ந்த காடுகளில் குகைகளில் ஒளிந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
- இந்த நடவடிக்கையில் இதுவரை 10 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி அகால் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு உளவுத்துறை தகவல் கிடைத்தது.
இந்த பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் அடர்ந்த காடுகளில் குகைகளில் ஒளிந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது.
இதையடுத்து ஆபரேஷன் அகால் என்ற பெயரில் ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இன்று (சனிக்கிழமை) ஆபரேஷன் அகாலின் ஒன்பதாவது நாள்.
இந்நிலையில் இன்று பயங்கரவாதிகள் உடனான சண்டையில் லான்ஸ் நாயக் பிரித்பால் சிங் மற்றும் சிப்பாய் ஹர்மிந்தர் சிங் என்ற 2 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.
இந்த நடவடிக்கையில் இதுவரை 10 பாதுகாப்புப் படையினர் காயமடைந்துள்ளனர். இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
- பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- உடல் மற்றும் மன நலனை முழுமையாக உங்களால் தீர்மானிக்க முடியும்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, கோவை ஆதியோகி வளாகத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு இன்று யோகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
நாடு முழுவதும் ஈஷா சார்பில் நடைபெற்ற 2500-க்கும் மேற்பட்ட இலவச பயிற்சி வகுப்புகளில், 10,000-க்கும் அதிகமான பாதுகாப்பு படை வீரர் உள்பட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இந்த யோக வகுப்புகள், 11,000-க்கும் மேற்பட்ட யோக வீரா எனும் ஈஷா தன்னார்வலர்களால் நடத்தப்பட்டது.
கோவை ஆதியோகி வளாகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் வெள்ளலூர் அதிவிரைவு படை வீரர்கள், மதுக்கரை 35-வது ரெஜிமெண்ட் மற்றும் சூலூர் 43-வது ரெஜிமெண்டை சேர்ந்த வீரர்கள் என 200-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அவர்களுக்கு சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டன.
மேலும் சென்னை ஐ ஐ டி (IIT) வளாகம் மற்றும் ஹெச் டி எப் சி வங்கி, ஐ பி எம் (IBM), கோத்ரேஜ் (Godrej) எச்.டி.எஃப்.சி லைஃப் இன்சூரன்ஸ், L&T, மற்றும் எஸ் பேங்க் (Yes Bank) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களிலும் பயிற்சிகள் நடத்தப்பட்டன.
அதே போன்று பெங்களூருவில் உள்ள சத்குரு சன்னிதியில் நடைபெற்ற யோகா தின நிகழ்வில், இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, எல்லை பாதுகாப்பு படை (BSF) மற்றும் தேசிய மாணவர் படை (NCC) ஆகியவற்றைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் அருகிலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் சில தனியார் நிறுவனங்கள் ஈஷா அறக்கட்டளையுடன் ஒன்றிணைந்து, தமிழகத்தில் கோவை, திருச்சி, தஞ்சாவூர், கடலூர், பாண்டி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 இடங்களில் பிரம்மாண்டமான முறையில் யோக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன. இதில் பள்ளி - கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
சத்குருவின் யோகா தின செய்தியில், "யோகா என்பது, கட்டாயமான எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் அடிமையாகாமல், விழிப்புணர்வுடன் கூடிய தேர்வுகளின் மூலம் ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரத்தை உங்களுக்கு வழங்கும் ஒரு அமைப்பு. நீங்கள் விழிப்புணர்வு பெற்று, அந்த கட்டாயத் தன்மையைக் கடந்து செல்லும்போது மட்டுமே, உங்கள் உடல் மற்றும் மன நலனை முழுமையாக உங்களால் தீர்மானிக்க முடியும்." எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை, அண்ணா சாலையில் உள்ள புல்மேன் ஹோட்டலில் "மிராக்கிள் ஆஃப் மைண்ட்" 7 நிமிட தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இலவசமாக வழங்கப்பட்ட ஆன்லைன் வகுப்புகளில், சத்குருவால் வடிவமைக்கப்பட்ட எளிய, சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. குறிப்பாக மூட்டுகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தும் 'யோக நமஸ்காரம்' எனும் பயிற்சி, உடல் மற்றும் உள்நிலையில் சமநிலை அதிகரிக்கும் 'நாடி சுத்தி' பயிற்சி மற்றும் மன அமைதி, தெளிவு, கவனத்தை மேம்படுத்தும் 'மிராக்கிள் ஆஃப் மைண்ட்' தியானப் பயிற்சியும் வழங்கப்பட்டன.
- ஆறு குகி சிவில் சமூக அமைப்புகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, உயர்மட்ட விசாரணைக்கு கோரிக்கை விடுத்தன.
- அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்தும் மூடப்பட்டன.
கடந்த வியாழக்கிழமை மத்திய பாதுகாப்புப் படையினருக்கும் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குக்கி இனப் பெண் கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்டவர் சுராசந்த்பூரின் லங்சிங்மன்பி கிராமத் தலைவரின் மனைவி ஹோய்கோல்ஹிங் என்று தெரிய வந்தது. இந்நிலையில் பாதுகாப்பு படையினரின் அலட்சியத்தை கண்டித்து குகி பழங்குடியினர் தலைவர்கள் மன்றம் (ITLF) காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
ஆறு குகி சிவில் சமூக அமைப்புகள் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து, உயர்மட்ட விசாரணைக்கு கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில் காலவரையற்ற முழு அடைப்பால் நேற்று முதல் மணிப்பூரின் சுராசந்த்பூர் மற்றும் குகி பெரும்பான்மைப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்தும் மூடப்பட்டன. மணிப்பூரில் 2023இல் மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கிடையே வெடித்த இனக்கலவரம், மோதல்கள் தீர்வு எட்டப்படாமல் தொடர்ந்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் மணிப்பூரில் பாஜக ஆட்சி கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமலானது குறிப்பிடத்தக்கது.
- தளபதி ஹிட்மா மற்றும் பட்டாலியன் தலைவர் தேவா உள்ளிட்ட உயர் நக்சல் தலைவர்கள் இருக்கும் இடம் குறித்து அறிந்தனர்.
- இப்பகுதியில் ஏராளமான IED வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.
மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் சத்தீஸ்கரின் பிஜாப்பூரில் 1,000க்கும் மேற்பட்ட நக்சல்களைச் சுற்றி வளைத்துள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் ஈடுபட்ட இந்த நடவடிக்கையில் இதுவரை குறைந்தது 5 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நக்சலிசத்தை ஒழிக்க மார்ச் 31, 2026 வரை காலக்கெடு நிர்ணயித்த நிலையில், இந்த மிகப்பெரிய நடவடிக்கையில் பாதுகாப்புப் படை இறங்கியுள்ளது.
சத்தீஸ்கர்-தெலுங்கானா எல்லையில் அமைந்துள்ள கர்ரேகுட்டா மலைகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து, நக்சல்கள் தப்பிக்கும் அனைத்து வழிகளையும் துண்டித்துள்ளனர்.
தலைமறைவான மற்றும் மிகவும் தேடப்படும் தளபதி ஹிட்மா மற்றும் பட்டாலியன் தலைவர் தேவா உள்ளிட்ட உயர் நக்சல் தலைவர்கள் இருக்கும் இடம் குறித்த உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுக் கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
அடர்ந்த காடுகள் மற்றும் தொடர் மலைகளால் சூழப்பட்ட இந்தப் பகுதி, மாவோயிஸ்டுகளின் பட்டாலியன் எண் 1 இன் தளமாகக் கருதப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு, நக்சல்கள் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டு, மலைப்பகுதிகளுக்குள் நுழைய வேண்டாம் என்று கிராம மக்களை எச்சரித்தனர். மேலும் இப்பகுதியில் ஏராளமான IED வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறினர் என்று கூறப்படுகிறது.
- மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழித்து விடுவோம்
ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தின் லால்பானியாவில் உள்ள லுகு மலைப் பகுதிகளில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுட்டனர் இதனால் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 8 நக்சலைட்டுகளை மத்திய பாதுகாப்பு படையி னர் சுட்டு கொன்றனர், பாதுகாப்புப் படையினருக்கு எந்த காயமும் ஏற்பட வில்லை.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் நக்சலைட்டுகளின் தலைவன் ஒருவனும் அடங்கும். அவனது தலைக்கு அரசு ரூ.1 கோடி அறிவித்து இருந்தது. என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து நக்சலைட்டுகளை தேடும் பணி நடைபெற்று வருகின்றன.
சமீபகாலமாக, சத்தீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நக்சலைட்டுகளை முற்றிலும் ஒழித்து விடுவோம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சமீபத்தில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதி, தனது வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில், பாதுகாப்பு படையினரின் வாகனமும் வெடித்து சிதறியது.
- பலுச் விடுதலை படை நடத்திய ரெயில் கடத்தலில் 90 வீரர்கள் கொல்லப்பட்டதாக அவ்வமைப்பு கூறியிருந்தது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த வாரம் ரெயிலை கடத்திய பிரிவினைவாத பலுச் விடுதலை படை, நேற்று பாதுகாப்புப் படையினர் சென்ற ராணுவ வாகனத்தின் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின் பரபரப்பூட்டும் வீடியோவை பலுச் விடுதலை படை தற்போது வெளியிட்டுள்ளது.

நேற்று காலையில் நோஷிகி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் துணை ராணுவப் படையினர் வாகனங்களில் சென்றபோது, கான்வாயில் புகுந்த ஒரு வாகனம் திடீரென வெடித்தது. தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதி, தனது வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில், பாதுகாப்பு படையினரின் வாகனமும் வெடித்து சிதறியது. 5 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக பலுச் விடுதலை படை நடத்திய ரெயில் கடத்தலில் 90 வீரர்கள் கொல்லப்பட்டதாக அவ்வமைப்பு கூறியிருந்தது.
கடந்த வாரம் இதே மாகாணத்தில், பலுச் விடுதலை படையினர், கூடலார் மற்றும் பிரு குன்ரி மலைப்பகுதிக்கு அருகே 440 பயணிகளை ஏற்றி சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது தாக்குதல் நடத்தி பயணிகளை சிறைபிடித்தனர்.
அதில் பெரும்பாலானோர் பாதுகாப்பு ஊழியர்கள் ஆவர். மறுநாள் ராணுவம் நடத்திய மீட்பு நடவடிக்கையில் 33 பயங்கரவாதிகளையும் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பு, 21 பயணிகளையும் நான்கு துணை ராணுவ வீரர்களையும் பயங்கரவாதிகள் கொன்றனர் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- நாகராஜா கோவில் திடலில் மேடை அமைப்பு பணியை பாதுகாப்பு படையினர் ஆய்வு
- புதிய மாநகராட்சி அலுவலகத்தையும் பார்வையிட்டனர்
நாகர்கோவில் :
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குமரி மாவட்டத்தில் வருகிற 6 மற்றும் 7-ந் ேததிகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
நாளை மறுநாள் (6-ந் தேதி) மாலை நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
இந்த கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் மற்றும் பலரும் பங்கேற்கின்றனர். மறுநாள் (7-ந் தேதி) நாகர்கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கி றார். தொடர்ந்து ஒழுகின சேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையையும் அவர் திறந்து வைக்கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் நேற்று ஆய்வு செய்தார்.
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை முதல்-அமைச்சரின் பாதுகாப்பு படையினர் குமரி மாவட்டம் வந்து ஆய்வு செய்தனர். அவர்கள் முதலில் நாகராஜா கோவில் திடலில் அமைக்கப்பட்டு வரும் மேடை அமைப்பு பணிகளை பார்வையிட்ட னர். அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் விழா நடைபெறும் இடங்களான மாநகராட்சி அலுவலகம், தி.மு.க. மாவட்ட அலுவல கம் பகுதிகளிலும் பாது காப்பு படையினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.வும் தி.மு.க. துணை அமைப்பு செயலாளருமான ஆஸ்டின் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- அக்னிபாத் திட்டம் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்டது.
- ரவி கிஷன் தனது மகள் குறித்த செய்திகளை ட்விட்டரில் பதிவிட்டு வருபவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
பாஜக எம்.பி ரவி கிஷானின் மகள் இஷிதா சுக்லா (21). இவர் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளார். பிரபலத்தின் மகளாக இருந்தாலும் வித்தியாசமான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்காக எம்.பி ரவி கிஷானுக்கும், அவரது மகள் இஷிதா சுக்லாவிற்கும் சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அக்னிபாத் திட்டம் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அன்று மத்திய அரசால் தொடங்கப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப காலத்தில் எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கிடையே, ஜூன் 16ம் தேதி அன்று, அக்னிபாத் திட்டத்தின் மூலம் ஆட்சேர்ப்பு செய்வதற்கான வயது வரம்பை 21 ஆண்டுகளில் இருந்து 23 ஆண்டுகளாக மத்திய அரசு நீட்டித்தது.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்புகள் இருந்தாலும், ஏராளமான இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக எம்.பி ரவி கிஷானின் மகள் இஷிதா சுக்லாவும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளார்.
ரவி கிஷான் தனது மகள் குறித்த செய்திகளை ட்விட்டரில் பதிவிட்டு வருபவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்த மாத தொடக்கத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் லைட் காலாட்படையின் (JAKLI) முதல் பிரிவு அக்னிவீரர்களுக்கு ஸ்ரீநகரில் நடந்த விழாவில் சான்றளிக்கப்பட்டது.
- காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.
- அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கிச்சூடு சண்டை நடந்தது. இதில், 4 முதல் 6 நக்சலைட்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், இதில் இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனரா என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.
காரணம், துப்பாக்கிச்சூடுக்கு பிறகு அந்த இடத்தில் நக்சலைட்களின் உடல்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்களை நக்சலைட்டுகள் காட்டுக்குள் இழுத்துச் சென்றதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிந்தாகுஃபா மற்றும் கிஸ்டாரம் காவல் நிலைய எல்லையில் உள்ள மாவோயிஸ்டுகளின் கோட்டையான சோடேகெட்வால் கிராமத்தின் வனப்பகுதியில் நடந்த இந்த என்கவுண்டரில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் எலைட் கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசல்யூட் ஆக்ஷன் (கோப்ரா) ஆகியவற்றைச் சேர்ந்த பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.
- தேவையற்ற அரட்டை, பேச்சுகள் இடம் பெறுவதால் அதனை பெண் பயணிகள் வெறுக்கின்றனர்.
சென்னை:
சென்னையில் மெட்ரோ ரெயில் 2 வழித்தடங்களில் தற்போது இயக்கப்படுகிறது. தினமும் சராசரியாக 3 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். நாளுக்கு நாள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது, டிக்கெட் பெறக்கூடிய கவுண்டர், உள்ளே நுழையக் கூடிய பகுதியில் நீண்ட வரிசையும் காணப்படுகிறது.
ஒவ்வொரு மெட்ரோ ரெயிலிலும் 4 பெட்டிகள் உள்ளன. அதில் 3 பெட்டிகள் பொதுவானவை. ஒரு பெட்டி மட்டும் பெண்கள் பயணம் செய்ய ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் பெண்கள் பெட்டியில் பயணம் செய்து இடையூறு செய்வதாக புகார்கள் வருகின்றன.
மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயணத்தின் போது மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணிக்கக்கூடாது என அறிவிப்பையும் வெளியிடுகிறது.
ஆனாலும் சிலர் தெரியாமலும் ஒரு சிலர் தெரிந்தே அதில் பயணம் செய்வதால் பெண் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
கல்லூரி மாணவர்கள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள், ஆண்-பெண் ஒன்றாக மகளிர் பெட்டி யில் பயணம் செய்கின்றனர். இதனால் தேவையற்ற அரட்டை, பேச்சுகள் இடம் பெறுவதால் அதனை பெண் பயணிகள் வெறுக்கின்றனர்.
மேலும் ரெயில் நிலையங்களிலும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக நின்று பேசுவது, உட்கார்ந்து இருப்பது போன்றவை தற்போது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இளஞ்சிவப்பு படை (பிங்க் ஸ்குவாட்) தொடங்கப்பட்டு உள்ளது.
பெண் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இளஞ்சிவப்பு படையில் கராத்தே தற்காப்பு பயிற்சி பெற்ற பெண்கள் இடம் பெற்றுள்ளனர். 25 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு மெட்ரோ ரெயில் மற்றும் நிலையங்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் தற்காப்பு கலைகளில் பிரவுன் பெல்ட் பெற்றவர்கள். பெண் பயணிகளின் பாதுகாப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
அவர்கள் ஒவ்வொரு ரெயில் மற்றும் நிலையத்திலும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்த ஆய்வின் அடிப்படையில் இளஞ்சிவப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் பெண் பயணிகளிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான பெண்கள் மெட்ரோ ரெயில் பயணம் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.
ஆனாலும் சில இடையூறுகள் இருப்பதாக ஆய்வில் உறுதியானது. இந்த இளஞ் சிவப்பு படையிடம், பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த புகார்களை தெரிவிக்கலாம். அவற்றை அவர்கள் உடனே சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிகாரி தெரிவித்தார்.
நந்தனத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் இளஞ்சிவப்பு பாதுகாப்பு படையை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் சித்திக் தொடங்கி வைத்தார்.






