என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்-அமைச்சர்"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார்.
    • அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்

    அரியலூர்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 5-ந் தேதி அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 4-ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு அவருக்கு கட்சியினர், பொதுமக்கள் வரவேற்பு கொடுக்கின்றனர்.

    பின்னர் மதியம் அவர் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் பெரம்பலூருக்கு மாலையில் வருகை தந்து, மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ஓய்வெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    பின்னர் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் திறந்தவெளியில் தி.மு.க. சார்பில் நடைபெறும் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இரவில் கூட்டம் முடிந்த பின்னர் அவர் பெரம்பலூர் கட்சி அலுவலகத்தில் தங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து 5-ந்தேதி காலை 10.30 மணியளவில் அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் 2 மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பெரம்பலூரில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் அங்கு சென்றடைகிறார். பின்னர் அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் சென்னை செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரம்பலூர்-அரியலூர் வருகையை முன்னிட்டு அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
    • அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் அளிக்க தீர்மானம்

    கரூர்:

    கரூர் மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாணிக்கம் (குளித்தலை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசியதாவது:-

    தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று 2-வது முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். இன்று மாலை நொய்யல் குறுக்கு சாலை மற்றும் கரூர் பஸ் நிலைய ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க வேண்டும்.

    அதனைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு கரூர் அரசு விருந்தினர் மாளிகை 9 மணிக்கு தடாகோவில் உள்ளிட்ட பகுதிகளில் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க வேண்டும். தமிழகத்தில் நீண்ட காலம் பதிவு செய்து மின் இணைப்பு கிடைக்காதவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் அறிவித்து முதற்கட்டமாக ஒரு லட்சம் மின் இணைப்பு வழங்கி சாதனை படைத்ததற்கும், தொடர்ந்து 50 ஆயிரம் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தினை அரவக்குறிச்சியில் தொடங்கி வைக்கும் தமிழக முதல்-அஅமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது,

    இந்தி திணிப்புக்கு எதிராக வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநில நிர்வாகிகள் நன்னியூர் ராஜேந்திரன், வழக்கறிஞர் மணிராஜ், பரணி கே.மணி, முனவர் ஜான், மாநகர செயலாளர் கனகராஜ், மாநகர பகுதி செயலாளர் கணேசன், அன்பரசன், கோல்டுஸ்பாட் ராஜா, வழக்கறிஞர் சுப்பிரமணியன், புகளூர் நகர செயலாளர் நொய்யல் சேகர் என்கிற குணசேகரன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் குடியரசு உட்பட பலர் கலந்து கொ

    • திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் தாராபுரம், என்.ஜி.மகாலில் நடைபெற்றது.
    • திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக அமைய அயராது பணியாற்றியும்.

    தாராபுரம் :

    திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் தாராபுரம், என்.ஜி.மகாலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தி.மு.க.தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

    கூட்டத்தில் ஏழை எளிய-மக்களுக்காகவும், அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் என்றும் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக அமைய அயராது பணியாற்றியும் தி.மு.க.வில் அடிமட்டதொண்டனையும் நினைவு கூர்ந்து கட்சி பணியாற்ற வேண்டும் என்று தனது அறிவுரையால் தி.மு.க. நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு செயல்பட்டு வரும் தி.மு.க.தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை பாராட்டி வாழ்த்துவது.

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின் மூலம் பொதுமக்களை கவர்ந்துவெல்லக்கூடிய ஆற்றல் மிக்கவராக வெற்றி நடைபோட்டு வரும் அவருக்கு வருகிற 27-ந் தேதி பிறந்த நாள் விழாவை சீரும் சிறப்போடும் ஏழை எளிய-மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க.விற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடுவது.

    கருணையுள்ளதோடு இதுவரை 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய முதல்-அமைச்சர் மு.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிப்பது. மேலும் தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி திராவிட மாடல் ஆட்சிக்கு மேலும் வலுச்சேர்த்த முதல்-அமைச்சருக்கு பாராட்டு தெரிவிப்பது.

    தேர்தல் ஆணையத்தால் ஆண்டு தோறும் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்க்கவும், நீக்கம், முகவரி மாற்றம், இடமாற்றம் ஆகியவற்றை செய்ய சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இந்த முகாம் பற்றி பொதுமக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். திருப்பூர் மாவட்டம், ஒன்றிய நகர பேரூர், வார்டு கிளை நிர்வாகிகள் வாக்குச்சாவடி நிலை நிர்வாகிகள் ஆகியோர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்காளர் பட்டியலில் சரியான நபர்களை இடம் பெற செய்ய வேண்டும்.திருப்பூர் தெற்கு மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர்களை தி.மு.க.விற்கு சேர்ப்பதற்கு ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • மக்களின் தேவையறிந்து முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் மூர்த்தி பேசினார்.
    • வீடுதோறும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது தற்காலிகமாக தான்நடந்து உள்ளது.

    மதுரை

    மதுரை ஆனையூர் பகுதிக்கான குடிநீர் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    மதுரையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த திட்டம் 2006-ம் ஆண்டு தமிழக முதல்வராக கலைஞர் இருந்தபோது தொடங்கப்பட்டது. 2010-ம் ஆண்டு திட்டம் முடிவடைந்த நிலையில் சிறு, சிறு தவறுகளினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    தற்போது தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்று இத்திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார். மேலும் திட்டத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வீடுதோறும் குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது தற்காலிகமாக தான்நடந்து உள்ளது.

    முழுமையாக இப்பகுதியில் பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட்ட பின்னர் நிரந்தரமாக மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும். மக்களின் தேவைகளை அறிந்து முதல்வர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், சோழவந்தான் எம்.எல்.ஏ., வெங்கடேசன், மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங், மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், தி.மு.க. நிர்வாகிகள் மருது பாண்டி, சசிகுமார், செல்வகணபதி கணேஷ், ரோகிணி பொம்மதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 5-ந்தேதி தென்காசி வருகிறார்.
    • 50 ஆயிரம் பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

    தென்காசி:

    முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்னர் முதன் முறையாக மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 5-ந்தேதி தென்காசி மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வருகிறார்.

    முதல்-அமைச்சர்

    இதற்காக தென்காசி அருகே உள்ள கணக்குப்பிள்ளை வலசையில் உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளி வளாகத்தில் பிரமாண்ட மேடை அமைப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.

    விழாவில் தென்காசி மாவட்டத்தில் முடிவுபெற்ற பணிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

    தொடர்ந்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழா நடைபெறும் இடத்தினை தென்காசி மாவட்ட நிர்வாகம், மாவட்ட போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முதல்-அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தினை ஆய்வு செய்தார்.

    அப்போது தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், கலெக்டர் ஆகாஷ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக தென்காசி வருவதையொட்டி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் முடிவு செய்துள்ளனர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கட்சியின் சார்பில் சுமார் 60 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    • ரூ.1கோடியே 30 லட்சம் மதிப்பில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.
    • அமைச்சர்.மு.பெ.சாமிநாதன் காவல் நிலையத்தில் குத்துவிளக்கினை ஏற்றினார்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன் பூண்டி,ராக்கியாபாளையம் பகுதியில் தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் ரூ.1கோடியே 30 லட்சம் மதிப்பில் புதிதாக காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    இந்த புதிய காவல் நிலையத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருமுருகன்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்.மு.பெ. சாமிநாதன் காவல் நிலையத்தில் குத்துவிளக்கினை ஏற்றினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார்,மாநகர காவல் ஆணையர் பிரபாகரன்,மாநகர துணை காவல் ஆணையர்கள் அபினவ் குமார்,வனிதா மற்றும் காவல் துறை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் கூறினார்.
    • 04575-299293 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் நடைபெற உள்ளன.

    ஆண்-பெண் இரு பாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் என மொத்தம் 50 வகையான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளன.

    இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்-வீராங்கணைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in–ல் வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

    மேலும், விபரங்களுக்கு சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலுள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்திலோ அல்லது தொலைபேசி எண்களான 74017 03503 மற்றும் 04575-299293 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மேயர் மகேஷ் தகவல்
    • மாநகராட்சி அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை வைத்து திறக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான மகேஷ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி புதிய கட்டிடம் ரூ.10கோடியே 50 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகிறது. அலுவலக பணி 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்பொழுது காம்பவுண்டு கட்டுமான பணி நடந்து வருகிறது.

    மாநகராட்சி அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை வைத்து திறக்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. மேலும் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தின் முன்பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் கட்சி அலுவலகமும் புதுப்பிக்கப்பட உள்ளது. கலைஞர் சிலை திறப்பு விழா மற்றும் மாநகராட்சி அலுவலகம் திறப்பு, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து அழைத்தோம். பிப்ரவரி மாதத்தில் வருவதாக கூறியிருந்தார். தற்பொழுது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதால் மார்ச் முதல் வாரத்தில் வருவதாக கூறியுள்ளார்.

    இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வருகிற 30-ந்தேதி நேரில் சந்தித்து மாநகராட்சி அலுவலக கட்டிடத்திற்கான புக்லேட் மற்றும் கலைஞர் சிலை அமைப்பதற்கான புக் லைட்டை வழங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஒவ்வொரு மாதமும் அமைச்சர் மற்றும் ஆணையர் ஆய்வு செய்கின்றனர்.
    • மாசி திருவிழாவிற்கு கூடுதலாக கழிப்பிடம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ஒவ்வொரு மாதமும் அமைச்சர் மற்றும் ஆணையர் ஆய்வு செய்கின்றனர்.

    வளர்ச்சி திட்ட பணிகள் ஒவ்வொரு நிலையாக நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தை ஒட்டி பக்தர்களின் வசதிக்காக 130 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தது. கட்டுமான பணிகள் கோவிலில் பல இடங்களில் நடந்து வருவதால் இதற்கு மேல் கழிப்பிடங்கள் அமைக்க முடியவில்லை.

    மாசி திருவிழாவிற்கு கூடுதலாக கழிப்பிடம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளால், ஓராண்டில் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறிவிடும். பணிகளை பார்வையிட முதல்-அமைச்சர் வருவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நாகராஜா கோவில் திடலில் மேடை அமைப்பு பணியை பாதுகாப்பு படையினர் ஆய்வு
    • புதிய மாநகராட்சி அலுவலகத்தையும் பார்வையிட்டனர்

    நாகர்கோவில் :

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குமரி மாவட்டத்தில் வருகிற 6 மற்றும் 7-ந் ேததிகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    நாளை மறுநாள் (6-ந் தேதி) மாலை நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

    இந்த கூட்டத்தில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் மற்றும் பலரும் பங்கேற்கின்றனர். மறுநாள் (7-ந் தேதி) நாகர்கோவிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கி றார். தொடர்ந்து ஒழுகின சேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையையும் அவர் திறந்து வைக்கிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் நேற்று ஆய்வு செய்தார்.

    இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை முதல்-அமைச்சரின் பாதுகாப்பு படையினர் குமரி மாவட்டம் வந்து ஆய்வு செய்தனர். அவர்கள் முதலில் நாகராஜா கோவில் திடலில் அமைக்கப்பட்டு வரும் மேடை அமைப்பு பணிகளை பார்வையிட்ட னர். அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் விழா நடைபெறும் இடங்களான மாநகராட்சி அலுவலகம், தி.மு.க. மாவட்ட அலுவல கம் பகுதிகளிலும் பாது காப்பு படையினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.வும் தி.மு.க. துணை அமைப்பு செயலாளருமான ஆஸ்டின் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • 10 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்–படையில் பணியாற்றி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
    • பணியாளர்கள் வாழ்வாதார கோரிக்கைகளை ஏற்று உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தபட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று தஞ்சையில் நடைபெற்றது.

    பல்நோக்கு மருத்துவ மனை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் சரவணகுமார் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். மாநில பொருளாளர்சதீஷ் வரவு, செலவு வாசித்தார்.

    அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் குமார், பொதுச் செயலாளர் பொன்னி வளவன், தஞ்சை மாவட்ட செயலாளர்பாஸ்கரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    இந்த கூட்டத்தில், 10 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்–படையில் பணியாற்றி வரும் பல்நோக்கு மருத்துவ–மனை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தை ஏப்ரல் மாதத்தில் நடத்திட வேண்டும். அரசால் அனுமதிக்கப்பட்ட அரசின் காலி பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்பட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் வாழ்வாதார கோரிக்கைகளை ஏற்று சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி உரிய தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தபட்டது.

    இதில் மாநில நிர்வாகிகள் தினேஷ்குமார், முருகன், கார்த்தி, ராஜசேகர், இளைய–ராஜா, தமிழ்செல்வன், மணி, கோபி, அருண்குமார், மணமங்கலம், நாகலட்சுமி, சியாமளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தஞ்சை மாவட்ட தலைவர் சுந்தரலிங்கம் வரவேற்று பேசினார். முடிவேல் மாநில துணை செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.

    • 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி தொடங்கப்பட்டு சுமார் 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் தாராபுரம் நகராட்சி பகுதியில் தற்போதைய மக்கள் தொகை சுமார் 1½ லட்சத்தை கடந்துள்ளது. இதனால் தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் அமைய போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் தாராபுரம் நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர்.

    அதனை ஏற்று நேற்று சட்டசபை மானிய கோரிக்கையின் போது தாராபுரம் நகராட்சி தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலக்குழு தலைவரும், தி.மு.க.திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன் ஆகியோருக்கு தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகர செயலாளர் டி.எஸ்.முருகானந்தம், நகராட்சி கவுன்சிலர்கள், தாராபுரம் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    ×