search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம்- கலெக்டர் தகவல்
    X

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம்- கலெக்டர் தகவல்

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று கலெக்டர் கூறினார்.
    • 04575-299293 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் நடைபெற உள்ளன.

    ஆண்-பெண் இரு பாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 42 போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் என மொத்தம் 50 வகையான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளன.

    இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்-வீராங்கணைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in–ல் வீரர்களின் குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

    மேலும், விபரங்களுக்கு சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கத்திலுள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்திலோ அல்லது தொலைபேசி எண்களான 74017 03503 மற்றும் 04575-299293 என்ற எண்களிலோ தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×