என் மலர்

    நீங்கள் தேடியது "collector information"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.3.75 லட்ச மாக உயர்த்தப்பட்டுள்ளது

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வேலையற்ற இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது, தமிழக அரசினால் கடன், மானியம் மற்றும் வயது வரம்பு உயர்த்தப் பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வியாபார சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு அதிகபட்சம் ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, மாநில அரசால் 25 சதவீத மானியம் அதிகபட்ச மாக ரூ.3.75 லட்ச மாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உதவி கலெக்டர் தலைமையில் நடைபெறுகிறது
    • கலெக்டர் வளர்மதி தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் வருகிற 24-ந் தேதி முதல் 31 -ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.

    இதன்படி கலவை தாலுகா அலுவலகத்தில் வருகிற 24, 25, 26 ஆகிய தேதிகளில் மாவட்ட கலெக்டர் தலைமையிலும், அதே தேதிகளில் சோளிங்கர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும் நடக்கிறது. வாலாஜா தாலுகா அலுவலகத்தில் 24, 25, 26, 30 ஆகிய தேதிகளில் கலால் உதவி ஆணையர் தலைமையிலும், 24 ,25, 26, 30, 31 ஆகிய தேதிகளில் ஆற்காடு தாலுகா அலுவல கத்தில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் தலைமை யிலும் நடைபெறுகிறது.

    நெமிலி தாலுகா அலுவலகத்தில் அரக்கோணம் உதவி கலெக்டர் தலைமையிலும், அரக்கோணம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும் ஜமாபந்தி நடைபெறுகிறது.

    நிலவரி கணக்குகள், பட்டா மாற்றம், அரசு நலத்திட்டங்களின் கீழ் உதவி கோருதல், கிராம வளர்ச்சிக்கான திட்ட பணிகள், குடிநீர் சாலை வசதி மற்றும் இதர தேவைகள் தொடர்பான மனுக்கள் ஜமாபந்தி அலுவலரால் பெறப்படும். ஒரு கிராமத்தில் சம்பந்தப்பட்ட மனுக்கள் கிராம கணக்குகள் தணிக்கை நாள் அன்று அளிக்க வேண்டும்.

    முன்னதாக கொடுக்கப்படும் மனுக்கள் அந்த கிராம தணிக்கை நாட்களில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் .

    தபால் மூலமாக மனு அனுப்ப விரும்புவர்களும் ஜமாபந்தி அலுவலருக்கோ அல்லது தாசில்தாருக்கோ அனுப்பலாம். இந்த தகவலை கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்று பெறவேண்டும்.
    • வருகிற 23-ந் தேதிபிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்று பெறவேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்க்குள் இருக்க வேண்டும்.

    வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பி டச் சான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்று, ஜாதிச் சான்று, விண்ணப்பதாரரின் வண்ண புகைப்படம் - 2, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று, ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், எண்.30சி வ.உ.சி. நகர், 5-வது தெரு, கச்சிராப்பாளையம் ரோடு, கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் வருகிற 23-ந் தேதிபிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சிறுபான்மை மாணவ-மாணவிகளுக்கு ரூ.30 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்படும்.
    • இந்த தகவலை மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    திட்டம்1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1லட்சத்து 20ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புற மாயிருப்பின் ரூ.98ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம்2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் மிகாமல் இருத்தல் வேண்டும்.

    திட்டம்-1ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20லட்சமும், திட்டம் 2-ன்கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30லட்சம் வரை வழங்கப்படுகிறது.

    கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5சதவீதம், பெண்களுக்கு 4சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1லட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.

    திட்டம் 2-ன்கீழ் ஆண்களுக்கு 8சதவீதமும், பெண்களுக்கு 6சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1லட்சத்து 50ஆயிரம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் சிறுபான்மையின மாணவ- மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம்-2ன் கீழ் மாணவர்களுக்கு 8சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

    எனவே மதுரை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய மதங்களை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுசான்றிதழ், உண்மைச்சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, ெசலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். அனைத்து சிறுபான்மையினர் இனத்தைச்சார்ந்த மக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 வரையும் பயிற்சியளிக்கப்படும்.
    • இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்ட ரங்கத்தில் 8-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை கோடை கால பயிற்சி முகாம் நடை பெறவுள்ளது. இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். தடகளம், கைப்பந்து, கபடி, கால்பந்து, வாலிபால், மல்லர்கம்பம், கூடைப்பந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டு களில் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி முகாமில் 10 வயதிற்கு மேற்ப்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளலாம். காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 வரையும் பயிற்சியளிக்கப்படும்.

    இந்த பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வர்கள் தங்கள் பெயர்களை 6381799370 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். அல்லது 8-ந் தேதி அன்று நேரடியாக மாவட்ட விளை யாட்டரங்கம், அரசு கலை கல்லூரி அருகில் கீழ்பெரும் பாக்கம், விளையாட்டு மைதானத்தில் காலை 7.30 மணிக்கு நடை பெறும் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பயன்பெற லாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் அனை வருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்படும். எனவே இந்த கோடை கால விடுமுறையை பெருமளவில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய விளையாட்டு திறனை மேம்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
    • அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் திருக்கோ வில் சித்திரைப்பெருவிழா நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள கூவாகம் கிராமத்தில் இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க கூத்தாண்டவர் சித்திரைப்பெருவிழா கடந்த 18- ந் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து வருகிற மே மாதம் 1- ந் தேதி மாலை கம்பம் நிறுத்துதல், 2- ந் தேதி இரவு சுவாமி திருக்கண் திறத்தல், திருநங்கைள் பக்தர்கள் திருமாங்கல்யம் ஏற்றுக்கொள்ளுதல் 3 - ந் தேதியன்று காலை திருத்தேர் வலம் வருதல், மாலையில் பந்தலடியில் பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை, குளியலறை, மின்சார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். மேலும் கூட்ட நெரிசலை கட்டுபடுத்துவதற்கும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்கும், கூடுதல் காவலர்களை காவல் பணியில் ஈடுபடுத்திடவும், கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் திருநங்கைகள் மற்றும் பக்தர்கள், பாதுகாப்பிற்காக அனைத்து அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநா ராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர்சிவாகரன், திருக்கோவிலூர் கோட்டா ட்சியர் யோகஜோதி, உதவி இயக்குநர்( ஊராட்சிகள்) ரெத்தினமாலா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் சரவணன், உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், செல்வபோதகர், கூவாகம் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
    • மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 3.5.2023 காலை 7 மணியளவில் நடத்தப்பட இருப்பதால் தவறாது கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்காக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சிறப்பு விளையாட்டு விடுதி, தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டி, வேலூர் காட்பாடியில் மாணவ மாணவிர்ளுக்கு சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு 01-01-2023 அன்று 17 வயது நிரம்பிய 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற கல்லூரியில் இளநிலை மற்றும் முதுகலை பயிலும் மாணவ , மாணவிர்ள் தகுதியுடையவர்கள் ஆவர்.

    தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு , பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல்3 இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் , இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள், சிறப்பு விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை 19.4.2023 முதல் இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 2.5.2023 மாலை 5 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 3.5.2023 காலை 7 மணியளவில் நடத்தப்பட இருப்பதால் தவறாது கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மேற்படி சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெளிநாட்டில் வேலையிழந்து தமிழகம் திரும்பியோருக்கு 25 சதவீத மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படும்.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    கொரோனா பரவலால் வெளிநாட்டில் வேலை இழந்து தமிழகம் திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு "புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தை'' செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொேரானா பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி ெபற்றுப் பயன் பெறலாம். அவர்கள் ெகாரோனா பரவலால் 1.1.2020 அன்று அல்லது அதற்குப் பிந்தைய நாட்களில் தமிழ்நாடு திரும்பி இருக்க வேண்டும். குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18-க்கு மேலாகவும், 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    விற்பனை மற்றும் சேவைத் தொழில் திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சமாகவும், உற்பத்தித் தொழில் திட்டங்களுக்கு ரூ.15 லட்சமாகவும் பயனாளர் தம் பங்காக, பொதுப் பிரிவுப் பயனாளர்கள் எனில் திட்டத் தொகையில் 10 சதவீதம் மற்றும் பெண்கள், இட ஒதுக்கீடு பிரிவினர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் எனில் 5சதவீதம் செலுத்த வேண்டும்.

    மீதமுள்ள தொகை வங்கி கடனாக வழங்கப்படும். அரசு திட்டத் தொகையில் 25சதவீதம் அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் என வழங்கும் மானியம் 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடனுக்கு சரிகட்டப்படும்.

    மேற்கண்ட திட்டத்தில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் www/msme.Online.tn.gov.in/uyegp என்ற இணையதள முகவரி யில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை 2 பிரதிகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் மாவட்ட தொழில்மையம், சிவகங்கை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    எனவே வெளிநாடுகளில் இருந்து கொரோனா பரவலால் வேலையிழந்து தமிழகம் திரும்பிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும் ஆர்வமும் கொண்டோர் வாழ்வாதாரத்துக்கான தொழில் தொடங்க (MEGP) என்ற இந்த திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இது குறித்து மேலான விவரங்கள் மற்றும் ஆலோச னைகள் பெற மாவட்ட கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்திள் அமைந்துள்ள மாவட்டத் தொழில் மையத்தை நேரடியாகவோ அல்லது 04575-240257 என்ற தொலைபேசி மூலமாகவோ அணுகி பயன்பெறலாம் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விருதுநகர் மாவட்டத்தில் 22-ந்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினமான வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொரு ளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவா தித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்து விவாதித்தல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதிசெய்வது குறித்து விவாதித்தல் நடக்கிறது.

    மேலும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22 மற்றும் 2022-23ம் ஆண்டு ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விவரங்கள் குறித்து விவாதித்தல், கிராம வளர்ச்சித்திட்டம் குறித்து விவாதித்தல், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம் குறித்து விவாதித்தல், ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவா தித்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதித்தல் நடக்கிறது.

    எனவே வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி பணிகள் துரிதமாக செயல்படுத்தப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு அரசு விவசாயிகள் நலனுக்காக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கி தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மேம்படுத்தும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் மொத்தம் 112 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குடும்பத்திற்கு 3 தென்னங்கன்றுகள் வீதம் 200 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    வரப்பு பயிர்கள் (துவரை, உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு) ஆகியவை கிராம பஞ்சாயத்துக்கு 15 எக்டர் வீதம் 58 கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 5 கைத்தெளிப்பான்கள் மற்றும் 5 விசைத் தெளிப்பான்கள் அல்லது 5 பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை பயனுள்ள வேளாண் நிலங்களாக மாற்றும் நோக்கத்தில் இதுவரை 39 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், தரிசு நில தொகுப்புகள் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10 ஏக்கர் முதல் 15 ஏக்கர் வரை தொடர்ச்சியான தரிசு நிலங்களை கண்டறிந்து தொகுப்புகளாக அமைந்திட வேண்டும். தரிசு நில தொகுப்புகள் தொட ர்ச்சியாக அமையாதபோது இடையில் உள்ள 2 முதல் 3 ஏக்கர் வரை சாகுபடி நிலங்க ளையும் கொண்டு வந்து தொடர்ச்சியான தரிசு நிலத் தெர்குப்பாக அமைத்துக் கொள்ளலாம்.

    தரிசு நில தொகுப்பு அமைப்பதில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மை யினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் செல்லம்பட்டி வட்டாரம், விக்ரமங்கலம் கிராம பஞ்சாயத்தில் ரூ.10.5 லட்சம் மதிப்பீட்டில் எண் உலர்களம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகானந்தன், தோட்டக்கலை துணை இயக்குநர் ரேவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin