என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

    • சமுதாய நல்லிணக்கத்துக்கு வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • மேற்படி தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்து விருதினை பெறலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது.

    இந்த விருதானது தலா ரூ.20 ஆயிரம், ரூ.10ஆயிரம், ரூ.5 ஆயிரம் தகுதிஉடையோருக்கு வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயலாற்றல் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயலாற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில இந்த பதக்கத்தைப் பெறத் தகுதிஉடையவர் ஆவார்.

    இந்த விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

    மேற்கண்ட விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான http://awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்த 3 விண்ணப்பப் படிவங்கள் வருகிற 12-12-2022 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், டாக்டர்.எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    மேற்படி தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்து விருதினை பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×