என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் தகவல்"

    • மிகக்குறைந்த வட்டியில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • ஆண் 5 சதவீதம், பெண் 4 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பா ட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்த ங்கிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த கைவினைக் கலைஞர்களுக்கு, விராசாட் திட்டத்தின் மூலம் கைவி னைப்பொருட்கள் செய்யப் பயன்படும் மூலப்பொருட்கள், கருவிகள், எந்திரங்கள் வாங்குவதற்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    தனிநபர் கடன் திட்டங்களில், திட்டம்-1-ன் கீழ் கடனுதவி பெற ஆண்டு வருமான வரம்பு கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரம், நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து க்குள் இருப்பின், ஆண் 5 சதவீதம், பெண் 4சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். தவணைத் தொகை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டிய காலம் 5 ஆண்டுகள், அதிகபட்சம் 60 தவணைகள் ஆகும்.

    தனிநபர் கடன் திட்டங்களில், திட்டம்-2-ன் கீழ் கடன் உதவி பெற ஆண்டு வருமான வரம்பு கிராமப்புறம் மற்றும் நகாப்புறம் ரூ.8,லட்சத்துக்கு மேல் இருப்பின், ஆண் 6சதவீதம், பெண் 5சதவீதம் வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். தவணைத் தொகை வட்டியுடன் திரும்பசெலுத்த வேண்டிய காலம் 5 ஆண்டுகள், அதிகபட்சம் 60 தவணைகள் ஆகும்.

    கடன் பெற இணைக்க ப்பட வேண்டிய ஆவணங்கள்: சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் நகல், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று நகல், கடன் பெறுவதற்கான தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஆதார் அட்டை நகல், கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள், பாஸ்போர்ட் புகைப்படம்-3.

    கடன் விண்ணப்பப் படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் இருந்து விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகம் (மாவட்ட கலெக்டர் அலுவலகம்), கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், விருதுநகர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், விருதுநகர் மாவட்டம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பி.நெற்புகப்பட்டி கிராமத்தில் வருகிற 9-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை சிவகங்கை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பி.நெற்புகப்பட்டி கிராமத்தில், வருகிற 9-ந் தேதி காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. இதில் அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். தகுதிவாய்ந்த பயனாளிகள் பயன்பெறச் செய்வதே இந்த முகாமின் நோக்கமாகும். மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை அறிந்து பயன்பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • மின் கழிவு புதுப்பிப்பாளர்களால் மட்டுமே மின்கழிவுகளைச் சேகரித்து செயலாக்க முடியும்.
    • மனித ஆரோக்கியத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

    கள்ளக்குறிச்சி:

    இந்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின், மின் விதிகள் மற்றும் மேலாண்மைக் கழிவு விதிகளின்கீழ், அங்கீகரி க்கப்பட்ட மின் கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மின் கழிவுபு துப்பிப்பாளர்களால் மட்டுமே மின்கழிவுகளைச் சேகரித்து செயலாக்க முடியும். மேலும், நடுவண்மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் பொறுப்பு சான்றிதழ் பெற்ற உற்பத்தியாளர்கள், மின் கழிவுகளை சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின்-கழிவுகளை பிரித்தெடுப்போர், மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்கள் மற்றும் அங்கீக ரிக்கப்பட்ட மின்-கழிவு புதுப்பிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், மின்னனு கழிவு விதிகளின்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கைவிடப்பட்ட மின்-கழிவுப் பொருட்களைச் சேகரித்து அதனை அங்கீகரிக்கப்பட்ட மின் -கழிவுகளைபி ரித்தெடுப்போர் அல்லது மின் கழிவுகளை மறுசுழற்சி செய்பவர்களுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.

    முறைசாரா வர்த்தகம் அறிவியல்பூர்வமற்ற செயலாக்கம் மற்றும் மின் கழிவுகளை எரித்தல் பேன்ற சம்பவங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொது மக்களின் குறைகளாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. எனவே, அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் மின்கழிவுகளைஅறிவியல் பூர்வமற்ற முறையில் பதப்படுத்துதல் மற்றும் எரித்தல் ஆகியவை மனிதஆரோக்கியத்திற்கும், சுற்று ச்சூழலுக்கும் எதிர்ம றையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. எனவே, மின்னனு கழிவு மேலாண்மை விதிகளின்படி, மின் பொருள் உற்பத்தியாளர்கள்,தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், மின் கழிவு இடமாற்றம் செ ய்வோர், பிரித்தெடுப்போர்மற்றும் மறுசுழற்சி செய்வோர் ஆகியோர் மீறினால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ன் கீழ்தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் அபராதம் விதிக்க ப்படும். மேலும், அந்நிறு வனத்தைமூடிவிடவும் அல்லது அந்நிறுவனத்தில் மின்சாரம், நீர் அல்லது வேறு ஏதேனும் சேவையை நிறுத்தவும் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது.

    மேலும், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனைஅல்லது ரூ.1 இலட்சம் வரை அபராதம் அல்லது இவை இரண்டும் விதிக்கப்படும். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட பொது மக்கள் சட்டவி ரோதமாக அல்லது முறைசாரா செயலாக்கத்தைத் தடுக்கும் பொருட்டு மின் கழிவுகளை அங்கீகரி க்கப்பட்ட பிரித்தெ டுப்போர் மற்றும் மறுசுழற்சி செய்பவர்களிடம் திரும்ப ஒப்படைத்திட வேண்டும். மேலும்,பொதுமக்கள் மற்றும் மின்கழிவுகளை கையாளுபவர்கள், மின் கழிவுகளை எரிக்கவோ மற்றும் முறைசாரா வர்த்கத்தைத் தவிர்த்து மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற்று செயல்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • சிவகங்கையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.
    • இந்த முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.

    சிவகங்கை

    சிகவங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படு த்தும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

    அதன்படி வருகிற 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெறலாம்.

    மேலும் இந்த முகாமில் இலவச திறன்பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவ தற்கான விண்ணப்ப படிவமும் வழங்கப்படும்.

    விருப்பமுள்ளவர்கள் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ படித்த இளைஞர்கள் கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இந்த முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கான்கிரிட் வீடுகளை கட்டித்தருவதற்கான நடவடிக்கைகளை மே ற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள்.
    • அரசின் அனைத்து சுற்றுசூழல் விதிகளும் பின்பற்றி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு குடியிருப்பு கட்டிட கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையத்தின் அனுமதி பெறுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் மோகன் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் வசிக்கும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான சூழலில் வாழ்ந்திடும் பொருட்டு கான்கிரிட் வீடுகளை கட்டித்தருவதற்கான நடவடி க்கைகளை மே ற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், இலங்கை தமிழர்களுக்கு ரூ.23.4 கோடிபுதியதாக 440 வீடுகள் 300 சதுர அடி பரப்பளவில் 4 வீடுகள் ஒருங்கிணைந்த தொகுப்பு வீடாக கட்டித்தரப்படவுள்ளது. கீழ்ப்புத்துப்பட்டு கடலோர பகுதி என்பதால் மண்ணின் தன்மை அறிந்து கட்டிடங்கள் தரமா னதாகவும், பலமானதாகவும் இருக்கும் பொருட்டு, அறிவியல் பூர்வமாக கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. மேலும், கடலோர ஒழு ங்குமுறை ஆணையத்திற்கு கட்டிடத்தின் தன்மை, சுற்றுசூழல் பாதுகாப்பு, வரைபடம், பணிகள் மேற்கொள்ளப்படும் காலம், அளவு போன்ற விவர ங்களுடன் விண்ணப்பி த்து அனுமதி பெறப்படவுள்ளன. அரசின் அனைத்து சுற்றுசூழல் விதிகளும் பின்பற்றி குடியிருப்புகள் கட்டப்படவுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராஜா, மண்டல பொறியாளர் (சுற்றுசூழல்) செல்வக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

    • சமுதாய நல்லிணக்கத்துக்கு வழங்கப்படும் கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • மேற்படி தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்து விருதினை பெறலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-ம் ஆண்டிற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது.

    இந்த விருதானது தலா ரூ.20 ஆயிரம், ரூ.10ஆயிரம், ரூ.5 ஆயிரம் தகுதிஉடையோருக்கு வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயலாற்றல் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயலாற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில இந்த பதக்கத்தைப் பெறத் தகுதிஉடையவர் ஆவார்.

    இந்த விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சேர்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.

    மேற்கண்ட விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான http://awards.tn.gov.in மற்றும் www.sdat.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்த 3 விண்ணப்பப் படிவங்கள் வருகிற 12-12-2022 அன்று மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகம், டாக்டர்.எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கில் ஒப்படைக்கப்பட வேண்டும்.

    மேற்படி தகுதியான நபர்கள் விண்ணப்பம் செய்து விருதினை பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குறை தீர்க்கும் மையத்தில் புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் அணுகி குறைகளை தெரிவிக்கலாம். (தொலைபேசி எண்: 044-25340518).

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2021-22-ம் ஆண்டின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கையின் போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் கைத்தறி ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

    அதைத்தொடர்ந்து கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவும், நெசவாளர்களின் குறைகளான வேலை வாய்ப்பு, கூலி உயர்வு, கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், அவர்களின் குறைகளை தெரிவிக்க எதுவாகவும் கைத்தறி துறை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தில் நெசவாளர்கள் தங்களது குறைகளை கீழ்காணும் வழிமுறைகளில் தெரிவித்து தீர்வு பெறலாம்.

    துணை இயக்குநர் (அமலாக்கம்), குறை தீர்க்கும் அலுவலர், நெசவாளர் குறை தீர்க்கும் மையம், கைத்தறி ஆணையரகம், குறளகம் 2-ம் தளம், சென்னை -104 என முகவரியிட்டு கடிதம் மூலமாக நெசவாளர்கள் புகார்களை தெரிவிக்கலாம். நெசவாளர் குறை தீர்க்கும் அலுவலரை அரசு அலுவலக வேலை நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் அணுகி குறைகளை தெரிவிக்கலாம். (தொலைபேசி எண்: 044-25340518).

    நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தின் இணைதளம் முகவரி:https://gdp.tn.gov.in/dhi நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தின் மின்னஞ்சல் wgrcchennai@gmail.com மேற்கண்ட வழிகள் மூலமும் நெசவாளர்கள் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 19 மீனவ கிராமங்களில் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
    • கோட்டகுப்பத்தில் செய்தி யாளர்களிடம் பேட்டி அளித்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலை மையில் கூடுதல் கலெக்டர் சித்ரா, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஸ்ரீ நாதா உள்ளிட்ட அதிகாரிகள் மாண்டஸ் புயல் பாதிக்கப்பட்ட அனு மந்தை, அழகன் குப்பம், பெரிய முதலியார்சாவடி, சின்ன முதலியார் சாவடி, கோட்ட குப்பம் உள்ளிட்ட 19 மீனவ கிராமங்களில் பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்ற னர். அதனைத் தொடர்ந்து கோட்டகுப்பத்தில் செய்தி யாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்பொழுது கலெக்டர் மோகன் கூறியதாவது:-

    மாண்டஸ் புயல் காரண மாக விழுப்புரம் மாவட்ட த்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. 5 இடங்களில் 13 மரங்கள் விழுந்தன, அதனையும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்துக்கு தடை இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. மேலும் மாவட்டம் முழு வதும் வேறு ஏதாவது பாதிப்பு உள்ளதா என்பது குறித்து கணக்கெடுப்பு செய்வதற்கு அறிவுறுத்தப் பட்டுள்ளதாக மாவட்ட, கலெக்டர் மோகன் தெரிவித்தார். மேலும் பிள்ளை சாவடி பகுதிகளில் ரூ. 14 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான பணி மழை காரணமாக தாமதம் ஆனது நாளை முதல் அந்த பணி தொடங்கும் எனவும் கலெக்டர் மோகன் தெரிவித்தார்.

    • வாழ்ந்து காட்டுவோம் திட்ட மண்டல ஆலோசகர், தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்தல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்ப டுத்தப்பட்டு வருகின்றது.

    இந்த திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் காளையா ர்கோவில், மானாமதுரை மற்றும் தேவகோட்டை வட்டாரங்களை சேர்ந்த 124 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின் வாயிலாக ஊரகப்பகுதிகளில் உள்ள சுய உதவி க்குழு உறுப்பினர்கள், தனிநபர் தொழில் முனை வோர், குழு தொழில், உற்பத்தியாளர்குழு, உற்பத்தியாளர் நிறுவனம் போன்றவற்றிற்கு தொழில் சார் ஆலோசனைகள் வழங்கவும், நடைமுறையில் உள்ள உற்பத்திசார் தொழில் நுட்பங்களை வழங்கவும், மதிப்புக்கூட்டு செயல்பாடுகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளை வழங்கவும் மண்டல ஆலோசகர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

    விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகுதிகள் பற்றிய விபரங்கள் https://www.tnrtp.org/notification.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து நேரடியாகவோ, தபால் மூலமாகவோ மாவட்ட திட்ட அலுவலகத்தில் வருகிற 27-ந் தேதிமாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க ேவண்டும்.

    தொழில் நுட்ப ஆலோசகர் (Technical Consultant /Advisior) பணிகளுக்கு பண்ணை தொழில் (நெல், கடலை, பயிறு வகைகள், தென்னை உற்பத்தி) M.Sc Agri, B.Tech Agri, B.Tech Biotechnology, MBA Agri, M.Sc. horticulture or any other Agri related Course கல்வித்தகுதியும், பண்ணை சார் தொழில் (மாடு, ஆடு கோழி மற்றும் மீன் வளர்ப்பு) M.Sc Animal husbandry, M.Sc. fisheries or any other related courses கல்வித்தகுதியும் மற்றும் பண்ணை சாரா தொழில் (பாரம்பரிய கைவினைப் பொருட்கள், அப்பளம், சர்க்கரை, தையல், மண்பாண்டம், பனை இலை பொருட்கள், கடல் சங்கு மற்றும் வெல்டிங்) M.Sc. Agribusiness Management,M.B.A. Marketing, M.B.A. Agribusiness Management or any other related courses கல்வித்தகுதியும் மற்றும் 7 மற்றும் அதற்கு மேற்பட்ட வருடம் அனுபவம் இருக்க வேண்டும். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மண்டலங்களில் 5 பணியிடங்கள் உள்ளன.

    வாழ்ந்து காட்டு வோம் திட்டத்தின் அங்கீகரி க்கப்பட்ட வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கூகுள்படிவத்தில் 27.12.2022-க்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பத்தின் மீதான பரிசீலினை மாநில திட்ட மேலாண்மை அலுவ லகத்தில் மேற்கொள்ள ப்பட்டு தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்கப்ப டுவார்கள். தகுதியானவர்களின் இறுதிப்பட்டியல் மாநில திட்ட மேலாண்மை அலகின் முதன்மை செயல் அலுவலரால் தேர்வு செய்யப்படும்.

    மேலும் விபரங்களுக்கு https://www.tnrtp.org/notification என்ற இணையதளத்தின் வாயிலாகவும், மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், பல்நோக்கு கட்டிடம், கோர்ட் வாசல், மேலூர் ரோடு, சிவகங்கை என்ற முகவரியிலும், 04575 – 248096 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விண்ணப்பங்கள் வருகிற 25-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் வரவேற்கப்படுகிறது.
    • மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளம் https://kallakurichi.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி கூறியிரு ப்பதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நல வாழ்வு மையத்தில் காலியாக உள்ள 54 செவிலியர் பணியிடங்களை தேசிய நல வாழ்வு குழுமத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலமாக மாதம் 18 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்திடும் வகையில் விண்ணப்ப ங்கள் வருகிற 25-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் வரவேற்கப்படுகிறது.

    மேலும் இப்பணியி டத்திற்கான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படி வங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக இணையதளம் https://kallakurichi.nic.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் செயலாளர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பெருவங்கூர் ரோடு, கள்ளக்குறிச்சி-606 213 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • நாளை வேலை நாள் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.
    • ராமநாதபுரம் கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள மங்களநாதசுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெற்றதை முன்னிட்டு 6.1.2023 அன்று வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 'உள்ளூர் விடுமுறை" அறிவிக்கப்பட்டது.

    அதனை ஈடு செய்யும் பொருட்டு 21.1.2023 சனிக்கிழமை வேலை நாளாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 21.1.2023 தை அமாவாசை என்பதால் 21.1.2023 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யப்படுகிறது.

    அதற்கு பதிலாக 28.1.2023 சனிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 28.1.2023 அன்று வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • கல்வித் தகுதிக்கேற்ப விருப்பமான வேலை வாய்ப்பு பெற்று பயனடைமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- 

    கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான தனியார் நிறுவனங் களில் வேலை வாய்ப்பு பெரும் வகையில் வட்டார அளவில் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தீனதயாள் உபாத்யாய - கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் வருகின்ற 28- ந்தேதி சனிக்கிழமை அன்று சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    இந்த வேலை வாய்ப்பு முகாமில் சங்கராபுரம் மற்றும் கல்வராயன் மலை வட்டாரத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலை வாய்ப்பற்ற இளை ஞர்களுக்கு தொழில் சார்ந்த தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எனவே வாய்ப்பை சங்கராபுரம் மற்றும் கல்வராயன் மலை வட்டாரத்தில் உள்ள தகுதியான அனைத்து ஆண், பெண் இருபாலரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு தங்களின் கல்வித் தகுதிக்கேற்ப விருப்பமான வேலை வாய்ப்பு பெற்று பயனடைமாறு கேட்டுக்கொள்கிறேன். என செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×