என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாழ்ந்து காட்டுவோம் திட்ட மண்டல ஆலோசகர், தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
- வாழ்ந்து காட்டுவோம் திட்ட மண்டல ஆலோசகர், தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு உலக வங்கி நிதியுதவியுடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் செயல்படுத்தி வரும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம், ஊரக தொழில்களை மேம்படுத்தல், வேலைவாய்ப்பு மற்றும் நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்ப டுத்தப்பட்டு வருகின்றது.
இந்த திட்டம் சிவகங்கை மாவட்டத்தில் காளையா ர்கோவில், மானாமதுரை மற்றும் தேவகோட்டை வட்டாரங்களை சேர்ந்த 124 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் வாயிலாக ஊரகப்பகுதிகளில் உள்ள சுய உதவி க்குழு உறுப்பினர்கள், தனிநபர் தொழில் முனை வோர், குழு தொழில், உற்பத்தியாளர்குழு, உற்பத்தியாளர் நிறுவனம் போன்றவற்றிற்கு தொழில் சார் ஆலோசனைகள் வழங்கவும், நடைமுறையில் உள்ள உற்பத்திசார் தொழில் நுட்பங்களை வழங்கவும், மதிப்புக்கூட்டு செயல்பாடுகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகளை வழங்கவும் மண்டல ஆலோசகர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகுதிகள் பற்றிய விபரங்கள் https://www.tnrtp.org/notification.in என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து நேரடியாகவோ, தபால் மூலமாகவோ மாவட்ட திட்ட அலுவலகத்தில் வருகிற 27-ந் தேதிமாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க ேவண்டும்.
தொழில் நுட்ப ஆலோசகர் (Technical Consultant /Advisior) பணிகளுக்கு பண்ணை தொழில் (நெல், கடலை, பயிறு வகைகள், தென்னை உற்பத்தி) M.Sc Agri, B.Tech Agri, B.Tech Biotechnology, MBA Agri, M.Sc. horticulture or any other Agri related Course கல்வித்தகுதியும், பண்ணை சார் தொழில் (மாடு, ஆடு கோழி மற்றும் மீன் வளர்ப்பு) M.Sc Animal husbandry, M.Sc. fisheries or any other related courses கல்வித்தகுதியும் மற்றும் பண்ணை சாரா தொழில் (பாரம்பரிய கைவினைப் பொருட்கள், அப்பளம், சர்க்கரை, தையல், மண்பாண்டம், பனை இலை பொருட்கள், கடல் சங்கு மற்றும் வெல்டிங்) M.Sc. Agribusiness Management,M.B.A. Marketing, M.B.A. Agribusiness Management or any other related courses கல்வித்தகுதியும் மற்றும் 7 மற்றும் அதற்கு மேற்பட்ட வருடம் அனுபவம் இருக்க வேண்டும். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மண்டலங்களில் 5 பணியிடங்கள் உள்ளன.
வாழ்ந்து காட்டு வோம் திட்டத்தின் அங்கீகரி க்கப்பட்ட வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள கூகுள்படிவத்தில் 27.12.2022-க்குள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பத்தின் மீதான பரிசீலினை மாநில திட்ட மேலாண்மை அலுவ லகத்தில் மேற்கொள்ள ப்பட்டு தகுதியானவர்களை நேர்காணலுக்கு அழைக்கப்ப டுவார்கள். தகுதியானவர்களின் இறுதிப்பட்டியல் மாநில திட்ட மேலாண்மை அலகின் முதன்மை செயல் அலுவலரால் தேர்வு செய்யப்படும்.
மேலும் விபரங்களுக்கு https://www.tnrtp.org/notification என்ற இணையதளத்தின் வாயிலாகவும், மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம், பல்நோக்கு கட்டிடம், கோர்ட் வாசல், மேலூர் ரோடு, சிவகங்கை என்ற முகவரியிலும், 04575 – 248096 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.