என் மலர்

    நீங்கள் தேடியது "Loan assistance"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்கை லைட் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மூன்று மாத கால இலவச தையல் பயிற்சி பெண்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
    • புதிதாக தொழில் தொடங்க இருப்ப வர்களுக்கு மானியத்துடன் வியாபாரம் தொடங்குவதற்கு ரூ. 5 லட்சம் வரை அரசு கடன் வழங்குகிறது.

    தென்காசி:

    தென்காசி மேலகரத்தில் செயல்பட்டு வரும் ஸ்கை லைட் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மூன்று மாத கால இலவச தையல் பயிற்சி பெண்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

    இங்கு 7-வது பயிற்சி பிரிவில் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா மலையான் தெருவில் உள்ள பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

    தையல் பயிற்சி ஆசிரியை உஷா தேவி இளங்கோ வரவேற்றார். டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் சைலப்பன் டிரஸ்டின் சேவைகள் பற்றி எடுத்துரைத்தார்.

    தென்காசி மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் மாரியம்மாள் தலைைம தாங்கி பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறிய போது,

    புதிதாக தொழில் தொடங்க இருப்ப வர்களுக்கு மானியத்துடன் வியாபாரம் தொடங்குவதற்கு ரூ. 5 லட்சம் வரையும், உற்பத்தி தொழில் தொடங்குபவர்களுக்கு ரூ.15 லட்சம் வரையும் அரசு கடன் வழங்குகிறது.

    இதற்கு கல்வி தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த கடன் உதவி வழங்கப்படுகிறது.

    சிறப்பு பிரிவினருக்கு 42 வயது வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு வருமானம் 5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும் .

    முதலீடாக 5சதவீதம் மட்டுமே தொழில் தொடங்குபவர் கள்செய்தால் போதும். மேலும் அரசு மானியமாக 25 சதவீதம் வழங்கப்படுகிறது.

    மேலும் பி.எம். இ.ஜி.பி. திட்டத்தின் கீழ் கடன் பெற கல்வி தகுதி ஏதும் தேவையில்லை. வயதுவரம்பு 60 வயது வரை உள்ளவர்களுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்க உள்ள நபர்களுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது. இதில் அரசு மானியமாக 15 சதவீதம் முதல் உற்பத்தி 35 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. உற்பத்தி தொழிலுக்கு ரூ.50 லட்சம் வரையிலும் சேவை தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் கடன் உதவி வழங்கப்படுகிறது.

    எனவே பெண்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்தும் விதமாக கார்மெண்ட்ஸ் உள்ளிட்ட புதிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு அரசின் கடன் திட்டத்தில் கடன் பெற்று தாங்களும் மேம்படுவதோடு தங்கள் குடும்பத்தினரையும் மேம்படுத்தலாம் என்று கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக குற்றாலம் ரோட்டரி கிளப் சக்தி தலைவர் கவிதா, ரத்தினகுமாரி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி முடித்த பெண்களுக்கு ரோட்டரி கிளப் சார்பில் சேலைகள் வழங்கினர்.

    ரோட்டரி கிளப் சேலம் வெஸ்ட் சார்பில் பயிற்சி முடித்த பெண்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    மேலும் இந்நிகழ்ச்சியில் கொல்கத்தா ப்ளூ ஸ்டார் லிமிடெட் ஓய்வு பெற்ற மண்டல மேலாளர் சுப்பிரமணியன், ஸ்கைலட் சாரிடபிள் டிரஸ்ட் நிறுவன ராதா, செயலாளர் நவநீதகிருஷ்ணன் உறுப்பினர்கள் நாகராஜன் ,சபாபதி குமார் ,சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாற்றுத்திறனாளிகள் ரூ.5 கோடி வரை மானியத்துடன் சுயதொழில் கடனுதவி பெறலாம்.
    • திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள படித்த வேலையில்லாத மாற்றுதிறனாளிகள் மாவட்ட தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் மூலம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை மானியம் பெற்று சுயதொழில் தொடங்கலாம்.

    வேலையில்லாத திண்டாட்டத்தினை போக்கு வதற்காக தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்படும் சுயதொழில் கடனுதவி திட்டங்களை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உரிய முறையில் பயன்படுத்தி தொழில் முனைவோர்களாக திகழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை நிறைவேற்றிட தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 21 வயது நிரம்பிய மாற்றுதிறனாளிகள், 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டய படிப்பு மற்றும் பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகள் பெற்றிருந்தால் உற்பத்தி பிரிவு மற்றும் சேவைப் பிரிவு ஆகிய தொழில்களுக்கு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடு மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.75லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுதவித் தொகையினை திரும்ப செலுத்திடும் தவணைத் தொகைகளில் விதிக்கப்படும் வட்டியில் 3 விழுக்காடு வட்டித் தொகையினை பின்னேற்பு மானியமாக அரசு வழங்கி வருகிறது.

    பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள் உற்பத்தி பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் வரையிலும், சேவைத்தொழில் பிரிவின் கீழ் ரூ.5 லட்சம் வரையிலும் கடனுதவி பெறுவதற்கு எவ்வித கல்வித் தகுதியும் தேவையில்லை.

    மேற்கண்ட கடன் வரம்பிற்கு மேல் கடனுதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமானதாகும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உற்பத்தி தொழில்களுக்கு ரூ.50 லட்சம் மற்றும் சேவை தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையில் திட்ட மதிப்பீடாக கொண்டு வரலாம்.

    இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்படும் தொழில் வகைகளுக்கு 35 விழுக்காடு மானியமாக ரூ.17.50 லட்சம் அதிகபட்சமாக வழங்கப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் செலுத்தும் 5 விழுக்காடு பங்களிப்புத் தொகையானது மாற்றுத்திறனாளி நலத்துறையினரால் மானியமாக வழங்கப்படு கிறது. திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்படவில்லை.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட கடனுதவி திட்டங்களில் தங்களுக்கு தகுதியான கடனுதவி திட்டத்தை தேர்வு செய்து www.msmeonline.tn.gov.in/uyegp/needs மற்றும் www.kviconline.gov.in Agency DIC என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து அரசு மானியங்களை பெற்று பயனடையுமாறும் மற்றும் மாவட்ட தொழில் மையத்தினை நேரிலோ அல்லது 8925534036 என்ற தொலைபேசியிலோ தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்கள் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விருதுநகரில் மகளிர் குழுக்களுக்கு ரூ.83.79 கோடி கடனுதவிகளை ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படுகிறது.
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசினார்.

    விருதுநகர்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து, விருதுநகர் மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில், மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், அசோகன் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 1591 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.83.79 கோடி மதிப்பிலான கடனுதவி களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் தன்னம்பிக்கை மூலம் மகளிரின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது.

    இந்தியாவிலேயே முதன்முறையாக 1989ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு இயக்கத்தை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, ஊரக மற்றும் நகர்ப்புரங்களில் உள்ள ஏழை மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் வெற்றி கரமாக செயல்படுத்தப்பட்டு தற்போது சமூக பொரு ளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்ட மைப்புகளை உருவாக்கி முறையான பயிற்சிகள் வழங்கி வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தெய்வேந்திரன், விருதுநகர் நகர்மன்றத்தலைவர் மாதவன், அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வியாபாரிகளும் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென அதிகாரியும் கேட்டுக் கொண்டுள்ளார்.
    • இந்த கமிட்டியில் 15 நாட்கள் வரை இலவசமாக இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே வளத்தியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இங்கு அதிகமாக நெல் மூட்டைகள் வராததால் வியாபாரிகளும் அதிகமாக வருவதில்லை. எனவே குறைந்த அளவே கணக்கீடு வைத்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. வளத்தியில் பழைய முறைப்படி நடைபெறும் ஏலத்தில் விவசாயிகளும் வியாபாரிகளும் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென அதிகாரியும் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் ரவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    விழுப்புரம் விற்பனை குழு எல்லைக்குட்பட்ட வளத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2 . 1. 2023 முதல் நெல் மறைமுக ஏலம் தொடங்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்கள் நெல் விலை பொருட்களை இங்கு விற்பனை செய்து அதிகபட்ச விலை பெற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறார்கள். எனவே விவசாயிகள் தாங்கள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை நன்கு காய வைத்து தூய்மையாக கொண்டு வந்து கூடுதல் விலை பெற வேண்டும் எனவும் இந்த மறைமுக ஏலத்தில் உள்ளூர் மற்றும் செஞ்சி, அவலூர்பேட்டை, கீழ்பெண்ணாத்தூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    எனவே இதில் நடைபெறும் மறைமுக ஏலத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து பயனடைய வேண்டும் எனவும் மேலும் விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை இந்த கமிட்டியில் 15 நாட்கள் வரை இலவசமாக இருப்பு வைத்துக் கொள்ளலாம். அதன் பின்னர் குறைந்த வாடகையில் 180 நாட்களுக்கு இருப்பு வைத்துக் கொள்ளலாம். .மேலும் நெல் மூட்டைகளை இருப்பு வைத்து அதற்காக பொருளீட்டுக்கடனாக விலை பொருள் மதிப்பிற்கு ரூ 3 லட்சம் வரை கடனாக குறைந்த வட்டியில் பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காரைக்குடியில் மகளிர் குழுக்களுக்கு ரூ.8.61 கோடி கடனுதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
    • ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் விழா நடந்தது.

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவை தொடங்கி வைத்தார்.கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், ரகுபதி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    அரசு கூடுதல் தலைமை செயலாளர், அதுல்யாமிஸ்ரா, நில நிர்வாக ஆணையர் நாகராஜன், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயல் உறுப்பினர் கார்த்திகேயன், மகளிர் மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் பிரியங்கா பங்கஜம், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.மாங்குடி, தமிழரசி முன்னிலை வகித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் வேலைநாடுநர்கள் பயன்பெறும் வகையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 95 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கல்வித்தகுதிக்கேற்றார் போல் வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெற்று வருகின்றனர்.

    இளைஞர்கள் எந்த துறையில் ஆர்வ முள்ளவர்கள் என்பதை அறிந்து, அவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்றார்போல் பயிற்சி அளிக்க சுமார் 95 பதிவு பெற்ற நிறுவனங்களின் மூலம் ஏறத்தாழ 5 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அனைத்துத்துறைகளின் வாயிலாக, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தனிநபர் பயன்பெறுவது மட்டுமன்றி, ஒட்டு மொத்த சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமையும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக 113 மகளிர் சுயஉதவிக்குழுக்களைச் சார்ந்த மொத்தம் 1,641 உறுப்பினர்களுக்கு அவர்கள் பயன்பெறும் வகையில் மொத்தம் ரூ.8.61 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வங்கிக்கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணை தலைவர் குணசேகரன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர்.கே.ஆர்.ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, கோட்டையூர் பேரூராட்சி தலைவர் கே.எஸ்.கார்த்திக் சோலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார், நகர்மன்ற ஆணையாளர் லெட்சுமணன், செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளி தலைவர் செல்லப்பன், தாளாளர் சத்யன், பேரூராட்சி தலைவர்கள் முகம்மது மீரா, சாந்தி சிவசங்கர், ராதிகா, சங்கீதா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்விற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது.
    • சிறு தொழில் தொடங்க ரூ.5000 முதல் ரூ.25,000 வரை குறைந்த சதவீதம் வட்டியில் கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்விற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சிறுதொழில் கடன் வழங்கிட திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கியின் 34 கிளைகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் 198 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும், கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தொழில் தொடங்கிட விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பத்தினை முழுமையாக பூர்த்தி செய்து இதர ஆவணங்களுடன் இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் அலுவலகம், அருகில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் 34 கிளைகளிலும், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்டத்திலுள்ள 198 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் வழங்கி பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    நபர் பிணையம் என்பது அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் உறுப்பினர்கள், நகர கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள், மத்திய வங்கி இணை உறுப்பினர்கள் அல்லது மத்திய வங்கியில் இட்டு வைப்புதாரர்கள் ஆகியோர் ஆவர்.

    கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட மகளிர்களுக்கான கடன்:-

    திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 34 கிளைகள் மூலம் சிறு தொழில் தொடங்க ரூ.5000 முதல் ரூ.25,000 வரை குறைந்த சதவீதம் வட்டியில் கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் அருகிலுள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் அதற்கான படிவத்தை உரிய இணைப்புகளுடன் பூர்த்தி செய்து வழங்கி பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 18 வயது பூர்த்தி அடைந்த, 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர் இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழ்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 2022-2023 ம் நிதியாண்டில் தமிழ்நாட்டை சார்ந்த சிறுபான்மையின மக்களுக்கு கடன் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்திற்கு 2022-2023 ம் நிதியாண்டிற்கு ரூ.1.55 கோடி அளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்படவுள்ளது.

    தமிழ்நாடு சிறுபான்மையினர்பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் டாம்கோ விராசாட் (Virasat) கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடனுதவி சிறப்பு முகாம்கள் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.

    புதிய தொழில், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்ய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த, 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர் இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்போர் ரூ.98,000, நகர்புறங்களில் வசிப்போர் ரூ.1,20,000 இருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் சாதிச்சான்று, ஆதார் கார்டு, வருமான சான்று, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம்- திட்ட தொழில் அறிக்கை, டிரைவிங் லைசென்ஸ் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுபவர்கள் மட்டும்) மற்றும் வங்கிகள் கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழ்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    கடன் உதவி முகாம்கள் நடைபெறும் இடங்கள் : திருப்பூா் வடக்கு வட்டத்தில் திருப்பூா் நகர கூட்டுறவு வங்கி, திருப்பூா் தெற்கு வட்டத்தில் கரட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் வருகிற1-ந் தேதியும், அவிநாசி வட்டத்தில் ராக்கியாபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஊத்துக்குளி வட்டத்தில், ஊத்துக்குளி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் 2-ந் தேதியும், பல்லடம் வட்டத்தில், பல்லடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வட்டத்தில் காங்கயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் 5 ந் தேதியும் முகாம்கள் நடைபெறும்.

    அதேபோல தாராபுரம் வட்டத்தில் தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி, உடுமலை வட்டத்தில் உடுமலை நகர கூட்டுறவு வங்கி, மடத்துக்குளம் வட்டத்தில் கணியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் 6ந்தேதியும் முகாம் நடைபெறும். முகாம் காலை 10-30 மணி முதல் மாலை 4மணி வரை நடைபெறும்.

    மேலும், தகவலுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண்.0421-2999130 மற்றும் மின்னஞ்சல் dbcwotpr@gmail.com – ஐ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பெண் குழந்தைகள் 119 பேருக்கு ரூ.4.42 லட்சம் அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • ரூ.43ஆயிரம் அளவில் மளிகை பொருட்கள் மண்டல துணை பொது மேலாளர் சந்தோஷ் மூலம் வழங்கப்பட்டது.

    அவினாசி :

    கனரா வங்கியின் 117-வது நிறுவனர் தினவிழாவையொட்டி அரசு பள்ளியில் படிக்கும் சமுதாயத்தில் மிகவும் நலிவுற்ற பிரிவை சார்ந்த பெண் குழந்தைகள் 119 பேருக்கு ரூ.4.42 லட்சம் அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற தொழில் முனைவோர் கருத்தரங்கில் அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் மற்றும் மாவட்ட தொழில் மையம், தாட்கோ மேலாளர் கலந்து கொண்டு எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.57 லட்சம் அளவில் கடன் வழங்கப்பட்டது.

    மேலும் கனரா வங்கியின் மூலம் கரவலூர் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்திற்கு ரூ.43ஆயிரம் அளவில் மளிகை பொருட்கள் மண்டல துணை பொது மேலாளர் சந்தோஷ் மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி பொது மேலாளர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மிகக்குறைந்த வட்டியில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • ஆண் 5 சதவீதம், பெண் 4 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் பொருளாதார மேம்பா ட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்த ங்கிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த கைவினைக் கலைஞர்களுக்கு, விராசாட் திட்டத்தின் மூலம் கைவி னைப்பொருட்கள் செய்யப் பயன்படும் மூலப்பொருட்கள், கருவிகள், எந்திரங்கள் வாங்குவதற்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

    தனிநபர் கடன் திட்டங்களில், திட்டம்-1-ன் கீழ் கடனுதவி பெற ஆண்டு வருமான வரம்பு கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரம், நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து க்குள் இருப்பின், ஆண் 5 சதவீதம், பெண் 4சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். தவணைத் தொகை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டிய காலம் 5 ஆண்டுகள், அதிகபட்சம் 60 தவணைகள் ஆகும்.

    தனிநபர் கடன் திட்டங்களில், திட்டம்-2-ன் கீழ் கடன் உதவி பெற ஆண்டு வருமான வரம்பு கிராமப்புறம் மற்றும் நகாப்புறம் ரூ.8,லட்சத்துக்கு மேல் இருப்பின், ஆண் 6சதவீதம், பெண் 5சதவீதம் வட்டியில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். தவணைத் தொகை வட்டியுடன் திரும்பசெலுத்த வேண்டிய காலம் 5 ஆண்டுகள், அதிகபட்சம் 60 தவணைகள் ஆகும்.

    கடன் பெற இணைக்க ப்பட வேண்டிய ஆவணங்கள்: சாதிச்சான்றிதழ், வருமான சான்றிதழ் நகல், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று நகல், கடன் பெறுவதற்கான தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஆதார் அட்டை நகல், கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள், பாஸ்போர்ட் புகைப்படம்-3.

    கடன் விண்ணப்பப் படிவங்கள் பின்வரும் அலுவலகங்களில் இருந்து விலையில்லாமல் பெற்றுக் கொள்ளலாம். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகம் (மாவட்ட கலெக்டர் அலுவலகம்), கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், விருதுநகர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், விருதுநகர் மாவட்டம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொட்டாம்பட்டி பகுதியில் வேளாண் பட்டதாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டது.
    • மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலத்தை தொடர்பு கொள்ளலாம்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுபாசாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனை வோர்களாக மாற்ற ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. அதற்கு 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

    மானியம் பெற இளங்கலை வேளாண், தோட்டக்கலை அல்லது வேளாண் பொறியியல் பயின்றவராகவும், 21 வயதில் இருந்து 40 வயது வரை இருக்க வேண்டும். பயனாளி அரசு, தனியார் நிறுவனங்களில் பணியில் இருக்கக் கூடாது.

    மூலதனத்தில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில் செய்ய வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்கள் போன்ற உள்கட்டமைப்பு செலவுகளை திட்ட மதிப்பீட்டில் சேர்க்க கூடாது.

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைப்பு திட்டத்தில் தேர்வான வலைச்சேரி பட்டி, குன்னாரம் பட்டி, மேலவளவு, 18 சுக்காம்பட்டி, பதினெட்டாங்குடி, பூதமங்கலம் கிராம த்தினருக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print