என் மலர்
நீங்கள் தேடியது "Canara bank"
- இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் நாடு தழுவிய தீவிர விழிப்புணர்வு மாதம் நடக்கிறது.
- பாதுகாப்பான வங்கி நடைமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
காங்கயம் :
இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் நாடு தழுவிய தீவிர விழிப்புணர்வு மாதம் 1-11-2022 முதல் 30-11-2022 வரை நடக்கிறது. கனரா வங்கியின் (மாவட்ட முன்னோடி வங்கி) சார்பாக காங்கயம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம்,மாவட்ட வளர்ச்சி அதிகாரி (நபார்டு) அசோக்குமார், வங்கியாளர்கள் , அனைத்து தொழில் முனைவோர், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் கூறுகையில், நிதி நிறுவன மற்றும் வங்கி வாடிக்கையாளர்களுக்கான உரிமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வினை மேம்படுத்துதல், வங்கிகள் மீதான வாடிக்கையாளர்களுக்கான குறைகளை தீர்ப்பதற்கான வழிமுறை , பாதுகாப்பான வங்கி நடைமுறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
வங்கியின் சேவைகளில் ஏதேனும் குறைபாடு இருக்கும் நிலையில் அதனை அந்தந்த வங்கியின் இணைய தளத்தில் புகாராக பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட குறைகளுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படவில்லை எனில் அதனை ஆர்.பி.ஐ. இணையதளத்தில் காணும் வங்கி குறை தீர்ப்பு அதிகாரியிடம் cms.rbi.in என்ற இணையதளம் மூலமாக மேல்முறையீடு செய்யலாம் என்றார்.
- கனரா வங்கியின் 117-வது நிறுவனர் தினவிழா நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
- வங்கி சார்பில் பொதிகை நகர் ஊனமுற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் 5 மாற்றுத்தினாளிகளுக்கு சைக்கிள்கள் மற்றும் ஒரு மாத மளிகை பொருட்கள் வழங்கினார்.
நெல்லை:-
கனரா வங்கியின் 117-வது நிறுவனர் தினவிழா நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் மண்டல உதவி பொது மேலாளர் கனகாம்பரன் வரவேற்று பேசினார்.
மண்டல அலுவலக துணை பொதுமேலாளர் தில்லி பாபு வங்கி நிறுவனர் தினவிழாவின் முக்கியத்துவம் மற்றும் வங்கியின் தற்போதைய சந்தை நிலவரம் பற்றி பேசினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் கலந்து கொண்டார். அவர் வங்கி சார்பில் பொதிகை நகர் ஊனமுற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் 5 மாற்றுத்தினாளிகளுக்கு சைக்கிள்கள் மற்றும் ஒரு மாத மளிகை பொருட்கள் வழங்கினார். தொடர்ந்து சங்கர்நகர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. முடிவில் மண்டல மேலாளர் அன்பு செழியன் நன்றி கூறினார்.
- பெண் குழந்தைகள் 119 பேருக்கு ரூ.4.42 லட்சம் அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
- ரூ.43ஆயிரம் அளவில் மளிகை பொருட்கள் மண்டல துணை பொது மேலாளர் சந்தோஷ் மூலம் வழங்கப்பட்டது.
அவினாசி :
கனரா வங்கியின் 117-வது நிறுவனர் தினவிழாவையொட்டி அரசு பள்ளியில் படிக்கும் சமுதாயத்தில் மிகவும் நலிவுற்ற பிரிவை சார்ந்த பெண் குழந்தைகள் 119 பேருக்கு ரூ.4.42 லட்சம் அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும் அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற தொழில் முனைவோர் கருத்தரங்கில் அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் குறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் மற்றும் மாவட்ட தொழில் மையம், தாட்கோ மேலாளர் கலந்து கொண்டு எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.57 லட்சம் அளவில் கடன் வழங்கப்பட்டது.
மேலும் கனரா வங்கியின் மூலம் கரவலூர் பிரபஞ்ச அமைதி ஆசிரமத்திற்கு ரூ.43ஆயிரம் அளவில் மளிகை பொருட்கள் மண்டல துணை பொது மேலாளர் சந்தோஷ் மூலம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவி பொது மேலாளர் கண்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்தியா முழுவதும் கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் நாளை வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதில் உதவி மேலாளர்கள், கிளை மேலாளர்கள், சீனியர் மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் என 3½ லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.
தமிழகத்தில் சுமார் 600 கனரா வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கிளைகளில் பணியாற்றும் 15 ஆயிரம் அதிகாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறார்கள்.
குறைந்தபட்ச சம்பள விகித அடிப்படையில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் போட வேண்டும். பொதுத்துறை வங்கிகள் இணைப்பினை கைவிட வேண்டும். தேக்க நிலையற்ற சம்பள விகிதங்கள் வழங்க வேண்டும். அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் ஸ்டேட் வங்கி போன்ற மருத்துவ காப்பீட்டு வசதி திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.
அனைத்து வங்கிகளிலும் வங்கி அதிகாரிகளுக்கு ஒரே மாதிரியான சம்பள விகிதங்கள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து கனரா வங்கி கிளை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபடுவதால் நாளை வங்கிகள் மூடப்படுகின்றன. அந்தந்த கிளை அதிகாரிகள் வங்கியினை பூட்டி சென்று விடுவார்கள். ஊழியர்கள் வேலைக்கு வந்தாலும் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்படும்.
வேலை நிறுத்தம் குறித்து கனரா வங்கி அதிகாரிகள் சங்க பொதுச்செயலாளர் மணிமாறன் கூறியதாவது:-

லாக்கரில் இருந்து பணம் எடுத்து கொடுப்பது, ரகசிய கீ போன்றவற்றை அதிகாரிகள்தான் செயல்படுத்த முடியும். ஸ்டிரைக் காரணமாக காசோலை, பண பரிவர்த்தனை எதுவும் நடைபெறாது.
சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் காலை 10 மணியளவில் நடைபெறும். அதில் அதிகாரிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கமிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Canarabank