search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minorities"

    • விருதுநகர் மாவட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.
    • 14-ந் தேதி சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினர்களுக்கு மதத்தைச் சார்ந்த பொருளா தாரத்தில் பின்தங்கிய நிலை யில் உள்ள மக்கள் புதிதாக தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்து கொண்டி ருக்கும் தொழிலை விரிவு படுத்தியும், தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளா தார மேம்பாட்டுக்கழகத்தின் மூலம் குறைந்த வட்டியில் தனிநபர் கடன், சிறுவணிகக்கடன், கல்விக்கடன், கறவை மாட்டு கடன் மற்றும் ஆட்டோ கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இக்கடன் திட்டங்கள் தொடர்பான விவரங்களையும் சந்தேகங்களையும் தெளிவு படுத்திக்கொள்ளவும் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் ஏதுவாக 2023- 2024-ம் நிதியாண்டிற்கான கடன் வழங்கும் முகாம் வட்டார அளவில் வருகிற 10-ந் தேதி அன்று விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்திலும், 11-ந்தேதி காரியாபட்டி வட்டாட் சியர் அலுவலகத்திலும், 12-ந்தேதி அருப்புக்கோட்டை வட்டாட் சியர் அலுவலகத்திலும், 13-ந்தேதி திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 14-ந் தேதி சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறுகிறது.

    இதேபோல் 17-ந்தேதி ராஜபாளையம் வட்டாட்சி யர் அலுவலகத்திலும், 18-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் வட் டாட்சியர் அலுவலகத்தி லும், 19-ந்தேதி சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தி லும், 20-ந்தேதி வெம்பக் கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 21-ந்தேதி அன்று வத்ராப் வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் கடன் தேவைப்படும் சிறுபான்மையின மக்கள் கடன் தொகை பெற உரிய ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறுபான்மையினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.
    • ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப் படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்க ளுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞ ர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    திட்டம் 1-ன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000 மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000 மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00, 000 மிகாமல் இருத்தல் வேண்டும்.

    தனிநபர் கடன் திட்டம் 1-ன் கீழ் ஆண்டிற்கு (ஆண்,பெண்) 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000, திட்டம் 2-ன் கீழ் ஆண்க ளுக்கு 8 சதவீதம், பெண்க ளுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.30,00,000 கடன் வழங்கப்படுகிறது.

    கைவினை கலைஞர் களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்கடன் திட்டம் 1-ன் கீழ் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் 10 நபர் முதல் 20 நபர் வரை ஒருவருக்கு ரூ.1,00,000 கடன் வழங்கப்படுகிறது.

    திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் 10 நபர் முதல் 20 நபர் வரை ஒருவருக்கு ரூ.1,50,000 கடன் வழங்கப்படுகிறது.

    மேலும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற்கல்வி, தொழில் நுட்பக்கல்வி பயில்பவர் களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் 3 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.20,00 ,000 வரையிலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்ப டுகிறது.

    எனவே மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மை யினர்கள் கடன் விண்ணப்பங்களை கூட்டுறவு சங்கங் களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

    கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானசான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்டஅறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்கு வரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கிகோரும் இதர ஆணவங்கள் சமர்ப்பி க்கப்பட வேண்டும்.

    கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுசான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது, சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்பித்து விண்ணப்பி க்கலாம்.

    மேற்குறிப்பிட்ட திட்டத்தி ன் கீழ் அனைத்து சிறு பான்மை ஒயின மக்கள் கடனுதவி பெற்று பயனடை யுமாறு ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    • கலைஞர்களுக்கு அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
    • கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    இதில் திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும் திட்டம் 2 -ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதவட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

    கைவினை. கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்க ளுக்கு 4சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

    திட்டம் 2 -ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் கடன் வழங்கப்படுகிறது.

    மேலும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நு ட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1 - ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2 - ன் கீழ் மாணவர்க ளுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

    எனவே தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

    கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.

    கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க. ஆதரவு என்ற பொய் பிரசாரம் தவிடுபொடியாகி விட்டது.
    • தமிழ் நாட்டை ஆதரித்தும் இரட்டை அர்த்தங்களால் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

    முதுகுளத்தூர்

    பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் ராம நாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு வந்தார். அங்குள்ள பஸ் நிலையத்தில் இருந்து அவரை ஊர்வ லமாக அழைத்துச் சென்று நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்.

    பின்னர் வேலூர் இப்ராகிம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 2024பாராளு மன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தாமரையில் வெற்றிபெறும் வகையில் மாநில தலைவர அண்ணாமலையின் வழிகாட்டுதலின்படி பாடுபட்டு வருகிறோம்.

    தி.மு.க.வின் ஊழலை, அராஜக போக்கை எதிர்த்து பா.ஜ.க. போராடி வருகிறது. இஸ்லாமியர்களுக்கு தி.மு.க. ஆதரவு நிலை என்பது தவிடுபொடியாகிவிட்டது. தி.மு.க. அரசு தொடர்ந்து ஊழலை செய்து வருகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முஸ்லிம் ஏழைகளுக்கு வீடு கட்டி கொடுக்க ஒதுக்கப்பட்ட இடங்களை தி.மு.க.வினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனை மீட்க ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்துள்ளோம். போலீசாரை நடவடிக்கை எடுக்கவிடாமல் தி.மு.க. அரசு தடுக்கிறது.

    தி.மு.க. அரசு ஆளுநரை இழிவு படுத்த முடிவு செய்து விட்டது. தமிழ் நாட்டை ஆதரித்தும் இரட்டை அர்த்த ங்களால் தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்கள். காவல்துறை மூலம் பா.ஜ.க.வினர் மீது அடக்குமுறையை பயன்படுத்துகிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தல் தி.மு.க.வுக்கு அதிர்ச்சியாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் ராம்குமார், மாவட்ட வக்கீல் பிரிவு துணை தலைவர் சிவராம கிருஷ்ணன், எம்.சி.ரமேஷ் ராணுவ அணிசெந்தூ 

    • 18 வயது பூர்த்தி அடைந்த, 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர் இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழ்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 2022-2023 ம் நிதியாண்டில் தமிழ்நாட்டை சார்ந்த சிறுபான்மையின மக்களுக்கு கடன் திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்திற்கு 2022-2023 ம் நிதியாண்டிற்கு ரூ.1.55 கோடி அளவில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்படவுள்ளது.

    தமிழ்நாடு சிறுபான்மையினர்பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் டாம்கோ விராசாட் (Virasat) கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடனுதவி சிறப்பு முகாம்கள் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது.

    புதிய தொழில், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்ய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த, 60 வயதுக்கு மேற்படாத சிறுபான்மையினர் இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் வசிப்போர் ரூ.98,000, நகர்புறங்களில் வசிப்போர் ரூ.1,20,000 இருக்க வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் சாதிச்சான்று, ஆதார் கார்டு, வருமான சான்று, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம்- திட்ட தொழில் அறிக்கை, டிரைவிங் லைசென்ஸ் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுபவர்கள் மட்டும்) மற்றும் வங்கிகள் கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழ்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    கடன் உதவி முகாம்கள் நடைபெறும் இடங்கள் : திருப்பூா் வடக்கு வட்டத்தில் திருப்பூா் நகர கூட்டுறவு வங்கி, திருப்பூா் தெற்கு வட்டத்தில் கரட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் வருகிற1-ந் தேதியும், அவிநாசி வட்டத்தில் ராக்கியாபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஊத்துக்குளி வட்டத்தில், ஊத்துக்குளி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் 2-ந் தேதியும், பல்லடம் வட்டத்தில், பல்லடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வட்டத்தில் காங்கயம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் 5 ந் தேதியும் முகாம்கள் நடைபெறும்.

    அதேபோல தாராபுரம் வட்டத்தில் தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி, உடுமலை வட்டத்தில் உடுமலை நகர கூட்டுறவு வங்கி, மடத்துக்குளம் வட்டத்தில் கணியூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் 6ந்தேதியும் முகாம் நடைபெறும். முகாம் காலை 10-30 மணி முதல் மாலை 4மணி வரை நடைபெறும்.

    மேலும், தகவலுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண்.0421-2999130 மற்றும் மின்னஞ்சல் dbcwotpr@gmail.com – ஐ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • கடனுதவி பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்
    • அரியலூர் மாவட்டத்தில் விரா சாட் திட்டத்தில்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் ஏற்கனவே தனிநபர் கடன், சுய உதவிக்குழுக் கடன் மற்றும் கல்விக்கடன் ஆகியவை குறைந்த வட்டி வீதத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் முகவராக செயல்படும் தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் கைவினை கலைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் "விராசாட்" என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தில் பயன்பெற சிறுபான்மையினராக (இஸ்லாமிய, கிறித்துவ, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) இருத்தல் வேண்டும். 18 முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். விராசட் 1ல் பயன்பெறாத நபராகவும், ஆண்டு வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமலும் இருகக வேண்டும். கிராம மற்றும் நகர்புற பகுதிகளில் வசிக்கும் ஆண்களுக்கு 6 சதவீதம் வட்டி வீதத்திலும், பெண்களுக்கு 5 சதவீதம் வட்டி வீதத்திலும் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பதாரார் கோரும் கடன் தொகையில், தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் மூலம் 90 சதவீதம் கடன் தொகையும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடன் தொகையும் மற்றும் விண்ணப்பதாரரின் பங்குத் தொகை 5 சதவீதம் சேர்த்து கடன் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கடன் திரும்ப செலுத்தும் கால அளவு 5 ஆண்டுகள் ஆகும்.

    இத்திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், அரியலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

    • சிறுபான்மையின கைவினைஞர்கள் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
    • புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு தகவல்

    புதுக்கோட்டை:

    பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுபான்மையின கைவினைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் விரசாட் திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டிற்கு கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் ஏழ்மை நிலையில் உள்ள சிறுபான்மையினத்தை சார்ந்த கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்போர் ஆகியோ ரின் நிதி ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில், குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படவுள்ளது.

    பெறப்படும் கடன் தொகை 60 மாதத் தவணைகளில் திரும்ப செலுத்தப்பட வேண்டும். மேற்கண்ட கடன் பெற விண்ணப்பிக்க விரும்புவோர், 25-ந் ேததிக்குள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில், முதல் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • தனியார் பள்ளியில் படிக்கும் சிறுபான்மையினர் உதவித்தொகைக்கு விண்ணபிப்பது 31-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • (www.scholarships.gov.in) என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    விருதுநகர்

    தமிழ்நாட்டில் மத்திய அரசால் அறிவிக்க ப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி, ஜெயின் மதங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியாா கல்வி நிலையங்களில் 2022-23ம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் (www.scholarships.gov.in) என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு ள்ளது.

    தகுதியான சிறுபான்மை யின மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தி ற்கு வருகிற 31-ந் தேதி வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலம் உதவித்தொகைக்கு விண்ண ப்பிக்கலாம்.

    இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
    • மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட சிறுபான்மை நலத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்துக்கு சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் எஸ்.சுரேஷ்குமாா் தலைமை வகித்து பேசியதாவது:-

    தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் சாா்பில் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறாா். சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள சிறுபான்மையின சமூகத்தினா் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கு இணக்கமானதொரு சூழலை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் 2 பயனாளிக்கு தலா ரூ.1.90 லட்சம் என ரூ.3.80 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, முஸ்ஸிம் மகளிா் உதவும் சங்கம், கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம், உலமா மற்றும் இதர பணியாளா்களுக்கு நல வாரியம் சாா்பில் மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம்,

    தேசிய கல்வி உதவித் தொகை (என்.எஸ்.வி), மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், கிறிஸ்தவ தேவாலயம் புனரமைக்கும் திட்டம், டாம்கோ திட்டம் மூலம் கடனுதவி வழங்கும் திட்டம் ஆகியன சிறுபான்மையினா் நலத் துறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது.ஆகவே, சிறுபான்மையினருக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் திட்டங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை அலுவலா் வாசுகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சொ.சீனிவாசன், மகளிா் திட்ட இயக்குநா் மதுமிதா, மாவட்ட சமூக நல அலுவலா் அம்பிகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • 2022-23 ம் ஆண்டில் திருப்பூா் மாவட்டத்தைச் சாா்ந்த சிறுபான்மையினருக்கு சுமாா் ரூ.1.55 கோடி அளவில் கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • முகாம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் சிறுபான்மையினா் கடன் பெற வரும் வருகிற 18-ந் தேதி முதல் ஜூலை 22ந்தேதி வரையில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் 2022- 23 ம் ஆண்டில் திருப்பூா் மாவட்டத்தைச் சாா்ந்த சிறுபான்மையினருக்கு சுமாா் ரூ.1.55 கோடி அளவில் கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞா்களுக்கு கடன், கல்விக் கடன் ஆகிய திட்டங்கள் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

    இந்த முகாமானது திருப்பூா் வடக்கு வட்டத்தில், திருப்பூா் நகர கூட்டுறவு வங்கியில் ஜூலை 18 ந் தேதி காலை 10.30 முதல் பிற்பகல் 1 மணி வரையும், திருப்பூா் தெற்கு வட்டத்தில், திருப்பூா் நகர கூட்டுறவு வங்கியில் ஜூலை 18 ந் தேதி பிற்பகல் 2.30 முதல் மாலை 5 மணி வரையிலும், அவிநாசி வட்டத்தில், பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஜூலை 19 ந் தேதி காலையிலும், ஊத்துக்குளி வட்டத்தில், ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஜூலை 19 ந்தேதி பிற்பகலிலும் முகாம் நடைபெறுகிறது.

    பல்லடம் வட்டத்தில், பல்லடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காங்கயம் வட்டத்தில், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் காங்கயம் கிளை, தாராபுரம் வட்டத்தில் தாராபுரம் நகர கூட்டுறவு வங்கி, மடத்துக்குளம் வட்டத்தில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் ஜூலை 20ந்தேதி காலையில் முகாம் நடைபெறுகிறது. உடுமலை வட்டத்தில், உடுமலை நகர கூட்டுறவு வங்கியில் ஜூலை 22 ந் தேதி காலையில் முகாம் நடைபெறுகிறது.

    இந்த முகாம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 -ந்தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்த ஆ லோசனை நடைபெற்றது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்ட செயல்வீரர்கள்கூட்டம் திருப்பூரில் உள்ளஅலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டதலைவர் சிக்கந்தர் தலைமை தாங்கினார். செயலாளர் யாசர் அராபத், பொருளாளர் அப்துல் ரகுமான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாநில பொதுச்செயலாளர் அப்துல் கரீம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 -ந்தேதி திருச்சியில் நடக்கும்மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்தும், 15வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில்இயங்கி வரும் பள்ளிவாசலை மூட முயற்சிக்கும் காவல்துறையையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டிப்பதுடன், சிறுபான்மையினரின் வழிபாட்டுஉரிமையை தமிழக அரசுபாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    சிறுபான்மையினரை நடத்தும் விதம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறிய கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கயிப் பதிலடி கொடுத்துள்ளார். #ImransRemarks #MohammadKaif
    புதுடெல்லி:

    சிறுபான்மையின மக்களை எப்படி நடத்துவது என்பதை மோடி அரசுக்கு காட்டுவோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் பேசினார். அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    பாகிஸ்தான் போன்ற பயங்கரவாத நாடு சிறுபான்மையின மக்களை எப்படி நடத்துவது என்று இந்தியாவுக்கு இப்போது பாடம் நடத்துகிறது என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார். பாகிஸ்தானை டெரரிஸ்தான் (பயங்கரவாத நாடு) என பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவர் விமர்சித்தார்.

    அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கயிப்பும் இம்ரான் கான் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சிறுபான்மையின மக்களை எப்படி நடத்தவேண்டும்? என வேறெந்த நாட்டிற்கும் உபதேசம் செய்யும் தகுதி படைத்த கடைசி நாடு பாகிஸ்தான்.


    பாகிஸ்தானை தனியாக பிரித்தபோது அங்கு 20 சதவீத சிறுபான்மையின மக்கள் இருந்தனர். இப்போது 2 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். அதேசமயம், இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு சிறுபான்மையின மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அலகாபாத்தைச் சேர்ந்த கயிப் (வயது 38), இந்தியாவுக்காக 125 ஒருநாள் போட்டிகளிலும், 13 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். கடந்த ஜூலை மாதம் அனைத்து வகை போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார். #ImransRemarks #MohammadKaif
    ×