என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்குடியினர்"

    • பந்தபள்ளி பெண்கள் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது.
    • மாணவிகள் உதவுவதாகக் கூறி அச்செயலை செய்ததாகவும் ஆசிரியை விளக்கமளித்தார்.

    ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், மேலியபுட்டி மண்டலத்தில் பந்தபள்ளி பெண்கள் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது.

    இங்கு பாட நேரத்தில் ஆசிரியை ஒருவர் நாற்காலியில் அமர்ந்தபடி தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்க, மாணவிகள் அவருக்குக் கால்கள் பிடித்துவிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் தான் முழங்கால் வலியால் அவதிப்பட்டதாகவும், அன்றைய தினம் கீழே விழுந்ததாகவும், மாணவிகள் உதவுவதாகக் கூறி அச்செயலை செய்ததாகவும் ஆசிரியை விளக்கமளித்தார்.

    இதுதொடர்பாக விசாரணை முடியும் வரை அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கு முன்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை, மாணவர்களைத் தனது காரைக் கழுவவும் பிற தனிப்பட்ட வேலைகளைச் செய்யுமாறு வற்புறுத்தியதற்காகவும் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • வயநாடு தொகுதிக்கு கடந்தமாதம் (நவம்பர்) 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டார்.

    கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மக்களவை தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் வயநாடு தொகுதிக்கு கடந்தமாதம் (நவம்பர்) 13-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிட்டார். அவர் 6,22,338 வாக்குகள் பெற்று 4 லட்சத்துக்கு அதிகான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

    இந்நிலையில், பிரியங்கா காந்தி வயநாடு மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர்களுடன் கொட்டியம்வயலில் முன்மொழியப்பட்ட படிஞ்சரத்தாரா-பூழித்தோடு சாலைப் பகுதியைப் பார்வையிட்டார்.

    பின்னர் நிலம்பூர் வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரை நேரில் சென்று அவர்களின் பிரச்னைகளை பிரியங்கா காந்தி கேட்டறிந்தார்.

    • ரூ.2,72,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வரும் இந்தத் திட்டம், பழங்குடியினருக்கும், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
    • 32 லட்சம் முதல் 58 லட்சம் வரையிலான எண்ணிக்கையில் மரங்கள் வெட்டப்படும்.

    மத்திய அரசின் கிரேட் நிக்கோபார் தீவுத் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாகக் கண்டித்துள்ளார்.

    இந்தத் திட்டத்தின் கீழ் அந்தமான் நிக்கோபாரில் ஒரு டிரான்ஸ்-ஷிப்மென்ட் சரக்கு துறைமுகம், ஒரு சர்வதேச விமான நிலையம், ஒரு டவுன்ஷிப் மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட உள்ளது.

    இந்நிலையில் இந்தத் திட்டம் பழங்குடியினரின் உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குழைக்கும் பேராபத்தான திட்டம் என்று முன்னணி நாளிதழ் ஒன்றில் சோனியா காந்தி விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், ஷோம்பென் மற்றும் நிக்கோபாரிஸ் போன்ற பழங்குடியினரின் உயிர்வாழ்வு ஆபத்தில் இருக்கும்போது நாட்டு மக்களின் மனசாட்சி அமைதியாக இருக்கக்கூடாது. ரூ.2,72,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வரும் இந்தத் திட்டம், பழங்குடியினருக்கும், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.

    இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த அநீதிக்கு எதிராக நாம் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்.

    இந்தத் திட்டத்தை நிர்மாணிப்பதில் மத்திய அரசு அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது. தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையத்திடம் ஆலோசிக்காமல், கிரேட் நிக்கோபார் பழங்குடி கவுன்சிலின் முறையீடுகள் புறக்கணித்து திட்டம் தன்னிச்சையாக செயல்படுத்தப்படுவது கேலிக்கூத்தாகும். 

    அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, இந்த திட்டத்திற்காக 8.5 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும், ஆனால் சுயாதீன மதிப்பீடுகளின்படி, இந்த எண்ணிக்கை 32 லட்சம் முதல் 58 லட்சம் வரை இருக்கலாம்.

    ஆமைகள் முட்டையிடும் ஒரு சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கடலோரப் பகுதியில் துறைமுகம் காட்டப்படுகிறது.

    அந்தப் பகுதி பூகம்ப அபாயகரமான மண்டலத்தில் இருக்கும் நிலையில், அங்கு இவ்வளவு பெரிய திட்டத்தைக் மேற்கொள்வது முதலீடு, உள்கட்டமைப்பு, மக்கள் மற்றும் சுற்றுச்சூழலை மோசமான ஆபத்தில் ஆழ்த்தும்" என்று எச்சரித்துள்ளார்.

    பழங்குடியினர் உரிமைகளை பறித்து சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான பணியில் மத்திய அரசு ஈடுபடுவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  

    • மருத்துவமனைக்கு ரூ.1000 கோடி செலவில் பழங்குடியினரின் நிலங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்,
    • மாநிலத்தில் பழங்குடியினர் குறிவைக்கப்படுவதாகவும், அவர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டால் அவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதாகவும் சோரன் குற்றம் சாட்டினார்.

    ராஞ்சியில் அரசு மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக பழங்குடி அமைப்புகள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான சம்பாய் சோரன் இன்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

    சம்பாய் சோரனின் மகன் பாபுலால் சோரனும் அவரது ஆதரவாளர்களும் ராஞ்சிக்கு செல்லும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். ராஞ்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    பழங்குடி அமைப்புகளின் போராட்டங்களைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பாய் சோரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாக ராஞ்சி நகர டிஎஸ்பி கே.வி. ராமன் தெரிவித்தார்.

     முன்னதாக, சம்பாய் சோரன் செய்தியாளர் சந்திப்பில், ஹேமந்த் சோரன் அரசாங்க பழங்குடியினரின் நிலங்களை ஆக்கிரமித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

    ராஞ்சி நக்ரி பகுதியில் உள்ள ரிம்ஸ்-2 மருத்துவமனைக்கு ரூ.1000 கோடி செலவில் பழங்குடியினரின் நிலங்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டதாகவும், நிலங்களை காலி செய்ய அவர்களுக்கு எந்த இழப்பீடும வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    மாநிலத்தில் பழங்குடியினர் குறிவைக்கப்படுவதாகவும், அவர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டால் அவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதாகவும் சம்பாய் சோரன் குற்றம் சாட்டினார்.  

    • தொலைதூர மலைப்பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
    • தருமபுரி மன்னூர் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும், இதற்காக 7 தலைமையாசிரியர்.

    7 பழங்குடியின உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், 1 பழங்குடியின உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தி ரூ.38.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தொலைதூர மலைப் பகுதிகளில் வாழ்ந்துவரும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு குறிப்பாக பழங்குடியின மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கும் நோக்கத்தோடு மாணவர்கள் அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே உயர்கல்வியை தொடர்ந்து பயின்றிட அரசு தொடர்முயற்சிகளை எடுத்து வருகிறது.

    அந்த வகையில், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் கல்வராயன் மலை, கிருஷ்ணகிரி மாவட்டம் தனி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உள்ளிட்ட இடங்களிலுள்ள தொலைதூர மலைப்பகுதிகளில் அமைந்துள்ள 14 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும்.

    2. மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட பழங்குடியினர் நல இயக்குநரின் கடிதத்தில், மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்துதல் தொடர்பாக விரிவான கருத்துருவினை அனுப்பியிருந்தார்.

    -அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரை பயின்று 11-ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணாக்கர் தங்களது இருப்பிடத்திற்கு அருகே மேல்நிலைக் கல்வி பயிலவும், இடைநிற்றலைக் குறைத்து, உயர்கல்வி சேர்க்கை வீதத்தினை அதிகரித்திடும் பொருட்டும்.

    அருகாமையில் உள்ள பின்வரும் 7 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், தருமபுரி மன்னூர் நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகவும், இதற்காக 7 தலைமையாசிரியர்.

    63 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் மற்றும் 7 கணினி பயிற்றுநர் உள்ளிட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களைத் தோற்றுவித்தும் இதற்கான மொத்த செலவினம் ரூ.38,98,61486/- (ரூபாய் முப்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று எட்டு இலட்சத்து அறுபத்தோராயிரத்து நானூற்று எண்பத்தாறு) மதிப்பிலான செலவினத்தில், கட்டுமானப் பணிகளை தாட்கோ மூலம் செயல்படுத்தவும். அதற்கான நிதி ஒதுக்கீடு வழங்குமாறு கோரியிருந்தார்.

    வ.எண்.1 முதல் 7 வரை உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் / வ.எண். 8 - நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்துதல், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துதல்,

    3. பழங்குடியினர் நல இயக்குநரின் கருத்துரு அரசால் கவனமுடன் ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் மேலே பத்தி 2ல் அட்டவணையில் உள்ள 7 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், தருமபுரி மாவட்டம் மன்னூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும் நிலை உயர்த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான டான்சானியாவில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தெரியவந்ததாக கூறப்பட்டது.
    • ஸ்டாலின் போட்டோவுக்கு செய்தது போல் நடனமாடி வாழ்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

    சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் போட்டோவை தூக்கி வைத்துக் கொண்டு ஆப்பிரிக்க நாட்டின் பழங்குடியினர் பாரம்பரிய நடனமாடிய வீடியோ வைரலானது.

    10 கோடி ரூபாய் செலவில், 200 நிலமற்ற பட்டியல், பழங்குடியின விவசாயத் தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியம். ரூ 1000 கோடி மதிப்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன் காக்கும் அயோத்திதாசர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் உருவாக்கம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களைத் தொழில் முனைவோராக மாற்றிட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 மாணவர் விடுதிகள் உருவாக்கம் ஆகியன பழங்குடியின நலன் சார்ந்த திமுக அரசு திட்டங்கள் ஆகும்.

    இந்த திட்டங்கள் குறித்து தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான டான்சானியாவில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தெரியவந்து அவர்கள் ஸ்டாலினை வாழ்த்துவதாக அந்த வீடியோவுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பழங்குடிகள் காசு கொடுத்தால் யார் போட்டோவை வைத்தும் வாழ்த்துவார்கள் என அதுமுக, பாஜக தரப்பு சமூக வலைதள பக்கங்கள் விமர்சித்தன.

    இந்நிலையில் இதை நிரூபணம் செய்யும் வகையில் ஜான் ரவி என்ற ஒருவரின் புகைப்படத்தை வைத்தும் பழங்குடியினர் ஸ்டாலினுக்கு செய்தது போல் நடனமாடி வாழ்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இதனால் எது உண்மை, எது பொய் என்று மக்களுக்கே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    • ஆதிவாசிகளை வரம்பற்ற விரோதத்துடன் நடத்தும் ராணுவ அணுகுமுறையை கைவிட வேண்டும்
    • சத்தீஸ்கரில் உள்ள காடுகள், கனிம வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பேரழிவு தரும் விளைவுகளுடன் பெருநிறுவன சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறது.

    நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையான "ஆபரேஷன் காகர்" என்ற பெயரில் நடைபெற்று வரும் "சட்டவிரோத படுகொலைகளை" உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐந்து இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளன.

    நடுநிலையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், நக்சல்களின் அமைதி அழைப்பை ஏற்று அவர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என்றும் மோடியை வலியுறுத்தியுள்ளன.

    பிரதமர் மோடிக்கு எழுதிய கூட்டுக்கடிதத்தில், சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா, சிபிஐ(எம்.எல்.எல்) தீபங்கர் பட்டாச்சார்யா, ஆர்.எஸ்.பி. மனோஜ் பட்டாச்சார்யா, ஃபார்வர்ட் பிளாக் ஜி.தேவராஜன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

    அந்த கடிதத்தில், ஆபரேஷன் காகர் என்ற பெயரில் நடக்கும் சட்டவிரோத படுகொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு கொல்லப்பட்ட சம்பவங்கள் குறித்து நடுநிலையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நக்சல்களின் தன்னிச்சையான போர்நிறுத்த சலுகையை ஏற்று அவர்களுடன் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். ஆதிவாசிகளை வரம்பற்ற விரோதத்துடன் நடத்தும் ராணுவ அணுகுமுறையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையில் பொதிந்துள்ள பழங்குடியினர் உரிமைகள் மீறப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர். சத்தீஸ்கரில் உள்ள காடுகள், கனிம வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பேரழிவு தரும் விளைவுகளுடன் பெருநிறுவன சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.

    உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களின் குடும்பங்களிடம் ஒப்படைக்க மறுப்பது, கண்ணியத்துடன் இறுதிச் சடங்குகளை செய்யும் உரிமையை மறுப்பதாகும் என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    பாதுகாப்புப் படையினரின் காவலில் உள்ள நக்சல் தலைவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டுவர மார்ச் 31, 2026 காலக்கெடுவை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதும், சத்தீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு சாய் தியோ பேச்சுவார்த்தைக்கு அவசியமில்லை என்று கூறுவதும், பிரச்சனைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்பாத மனநிலையை பிரதிபலிப்பதாக இடதுசாரிக் கட்சிகள் விமர்சித்துள்ளன. 

    • சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.
    • நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் 1989, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016 மற்றும் 2018, விதி-16-ன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோருடன் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள மாநிலங்களவை / மக்களவை மற்றும் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுடன் வருகிற 29-ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு அளிக்கப்பட்ட தீருதவி, மறுவாழ்வு மற்றும் அவை பற்றிய விவரங்கள், இந்தச் சட்டத்தின்கீழ் வழக்குகள் தொடுத்தல், சட்டத்தைச் செயற்படுத்தும் பல்வேறு அலுவலர்களின் / அமைப்புகளின் பங்கு, பணி மற்றும் மாநில அரசால் பெறப்படும் பல்வேறு அறிக்கைகள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) திருத்தச் சட்டம் 2015-இல் அத்தியாயம் 4-ஏ-இல் உள்ள பிரிவுக் கூறு 15 ஏ(11)-இன்படி வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் ஆகியவை குறித்து இந்த கண்காணிப்புக் குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்படவுள்ளது.

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • ஹமர் மற்றும் ஜோமி பழங்குடியினரிடையே மோதல் ஏற்பட்டது.
    • கடைகள் மற்றும் சொத்துக்களை சூறையாடிய கலவரக்காரர்களை அடக்க போலீசார் போராடினர்.

    மணிப்பூரில் சூரசந்த்பூர் மாவட்டத்தில், ஹமர் பழங்குடியினத் தலைவர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட்டார்.

    இதனால் ஹமர் மற்றும் ஜோமி பழங்குடியினரிடையே மோதல் ஏற்பட்டது. எனவே சூரசந்த்பூரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு தீர்வு காணும் விதமாக இரு சமூக தலைவர்களும் கடந்த திங்கள்கிழமை அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டினர். ஆனால் நேற்று இரவே மீண்டும் இரு சமூகத்தினரிடையேயும் மோதல் வெடித்தது.

    அப்பகுதியில் ஜோமி பழங்குடியினர் தங்கள் சமூகத்தின் கொடியை ஏற்ற ஹமர் பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தபோது இருதரப்புக்கும் வன்முறையில் இறங்கியது. கல்வீச்சு சம்பவங்கள் மற்றும் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இதில் லால்ரோபுயி பாகுமாட்டே என்ற 53 வயது நபர் உயிரிழந்தார்.

    மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கலவரத்தை அடக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். கடைகள் மற்றும் சொத்துக்களை சூறையாடிய கலவரக்காரர்களை அடக்க போலீசார் போராடினர். சூரசந்த்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே குக்கி மற்றும் மெய்தேய் பழங்குடியினரையே கடந்த வருடம் முதல் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து பார்வையிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் இன்று மணிப்பூர் வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரை 250 க்கும்  அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெற்றிருக்க கூடாது.
    • விண்ணப்பதாரர் மற்றும் வணிகத்தை தொடர்வதற்கு முன் விண்ணப்பதாரர் நிறுவனத்திலிருந்து உணவு உரிமத்தை பெற வேண்டும்.

    கடலூர்:

    தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் தொழில் முனைவோர் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் பாலகம் அமைக்க மின் வாகனம் , குளிர்விப்பான் மற்றும் உறைவிப்பான் கொள்முதல் தாட்கோ மானியம் ரூ.90 ஆயிரம் மானியத்துடன் திட்டம் செயல்படுத்த அரசாணையிடப்பட்டுள்ளது. இதில் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 18 முதல் 65 வயதிற்குள்ளவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் ஏதும் பெற்றிருக்க கூடாது. கூடுதல் செலவினத்தை ஈடு செய்யவும் மற்றும் அதிக பட்ச மானியத் தொகை சென்றடைய ஆதிதிராவிட தனிநபர்களுக்கான திட்டத் தொகையில் 30 சதவீதம் விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 2.25 இலட்சம் மானியம் விடுவிக்கப்படும்.

    ஆவின் பாலகம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் கடையின் இடம் குறைந்த பட்சம் 100 சதுர அடியாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் அருகில் உள்ள மண்டல அலுவலகத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பித்தவுடன் அந்தந்த மண்டல அலுவலகத்தின் பொது மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் கடையை மதிப்பீடு செய்து ஒதுக்கீட்டு உத்தரவை வழங்குவார்கள். விண்ணப்பதாரர் மற்றும் வணிகத்தை தொடர்வதற்கு முன் விண்ணப்பதாரர் நிறுவனத்திலிருந்து உணவு உரிமத்தை பெற வேண்டும். ஆவின் பொருட்கள் ஆவின் மூலம் விற்பனை நிலையத்திற்கே நேரடியாக சென்று விநியோகம் செய்யப்படும். அதற்கான பணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்திக தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கோக்கால் கிராமத்தில் கோலகலமாக தொடங்கியது.
    • திரளானோர் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மலைப்பகுதியில் கோத்தர், தோடர், பணியர், குரும்பர், காட்டுநாயக்கர், இருளர் என 6 இனங்களைச் சேர்ந்த பண்டைய பழங்குடினர் வசித்து வருகின்றனர்.

    கோக்கால் என்பது கோத்தர் குடியிருப்பின் பெயர். இந்தியாவிலேயே சோலூர், திருச்சுக்கடி, கொல்லிமலை, குந்தா கோத்தகிரி, மேல் கூடலூர், கோத்தகிரி, கீழ் கோத்தகிரி என 7 இடங்களில் மட்டுமே இவர்களின் சமுதாயத்தினர் வாழ்ந்து வருகின்றனர்

    எருமை மேய்த்தல், இரும்புப் பொருட்கள் மற்றும் மண்பாண்டங்கள் செய்தல், விவசாயம் ஆகியவை இவர்களின் தொழில். ஆரம்பத்தில் பாரம்பரிய சிறுதானியங்களான ராகி, சாமை, தினை, கம்பு போன்றவற்றை விளைவித்தனர் இப்போது கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு பயிரிட்டு வருகின்றனர்.

    இவர்கள் கடவுள் நம்பிக்கை, பாரம்பரியத்தை விட்டுக் கொடுக்க வில்லை. பெண்கள் மண்டூ செடியை தலையில் சூடிக்கொண்டு, துபிட்டி எனும் வெள்ளை புடவையை அணிந்து கொள்வதும், ஆண்கள் வேட்டி கட்டிக் கொண்டு வராடு என்கிற துணியை போர்த்திக் கொள்வதும்தான் இவர்களின் உடைக் கலாசாரம்.

    ஐனூர், அம்மனூர் தான் இவர்களின் குல தெய்வம். இந்த நிலையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் 7 கோக்கால்களிலும் ஐனூர், அம்மனூர் கோவில் திருவிழா கோலாகலமாக நடக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா சோலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோக்கால் கிராமத்தில் கோலகலமாக தொடங்கியது.

    பாரம்பரிய சிறப்புடன் தொடங்கிய இந்த திருவிழாவில் திரளான கோத்தர் இன மக்கள் கலந்து கொண்டு தங்களின் பாரம்பரிய உடை அணிந்து ஆடி பாடி திருவிழாவை கொண்டாடினர். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். 

    • 60 குடும்பம் வீடுகள் இல்லாதது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சார் ஆட்சியர் தெரிவித்தார்.
    • அங்கன்வாடி மையத்தை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் ஆய்வு செய்தார்.

    திருவள்ளூர்:

    மீஞ்சூர் அடுத்த நந்தியம் பாக்கம் ஊராட்சியில் 150-க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. இவர்களின் ஜாதி சான்றிதழ், இருப்பிடம், அடிப்படை தேவைகள், உள்ளிட்டவைகள் குறித்து பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார்.

    அப்போது 60 குடும்பம் வீடுகள் இல்லாதது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். முன்னதாக அதே பகுதியில் அங்கன்வாடி மையத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருவதாகவும் அங்கன்வாடி மையம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் காணப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர் அங்கன்வாடி மையத்தை சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் ஆய்வு செய்தார்.

    ×