என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "andaman and nicobar"

    • ரூ.2,72,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வரும் இந்தத் திட்டம், பழங்குடியினருக்கும், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.
    • 32 லட்சம் முதல் 58 லட்சம் வரையிலான எண்ணிக்கையில் மரங்கள் வெட்டப்படும்.

    மத்திய அரசின் கிரேட் நிக்கோபார் தீவுத் திட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாகக் கண்டித்துள்ளார்.

    இந்தத் திட்டத்தின் கீழ் அந்தமான் நிக்கோபாரில் ஒரு டிரான்ஸ்-ஷிப்மென்ட் சரக்கு துறைமுகம், ஒரு சர்வதேச விமான நிலையம், ஒரு டவுன்ஷிப் மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட உள்ளது.

    இந்நிலையில் இந்தத் திட்டம் பழங்குடியினரின் உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குழைக்கும் பேராபத்தான திட்டம் என்று முன்னணி நாளிதழ் ஒன்றில் சோனியா காந்தி விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், ஷோம்பென் மற்றும் நிக்கோபாரிஸ் போன்ற பழங்குடியினரின் உயிர்வாழ்வு ஆபத்தில் இருக்கும்போது நாட்டு மக்களின் மனசாட்சி அமைதியாக இருக்கக்கூடாது. ரூ.2,72,000 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுவரும் வரும் இந்தத் திட்டம், பழங்குடியினருக்கும், அரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.

    இந்த தனித்துவமான சுற்றுச்சூழல் அமைப்பை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இந்த அநீதிக்கு எதிராக நாம் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்.

    இந்தத் திட்டத்தை நிர்மாணிப்பதில் மத்திய அரசு அரசியலமைப்பு மற்றும் சட்ட விதிகளை முற்றிலுமாக புறக்கணித்துள்ளது. தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையத்திடம் ஆலோசிக்காமல், கிரேட் நிக்கோபார் பழங்குடி கவுன்சிலின் முறையீடுகள் புறக்கணித்து திட்டம் தன்னிச்சையாக செயல்படுத்தப்படுவது கேலிக்கூத்தாகும். 

    அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, இந்த திட்டத்திற்காக 8.5 லட்சம் மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும், ஆனால் சுயாதீன மதிப்பீடுகளின்படி, இந்த எண்ணிக்கை 32 லட்சம் முதல் 58 லட்சம் வரை இருக்கலாம்.

    ஆமைகள் முட்டையிடும் ஒரு சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கடலோரப் பகுதியில் துறைமுகம் காட்டப்படுகிறது.

    அந்தப் பகுதி பூகம்ப அபாயகரமான மண்டலத்தில் இருக்கும் நிலையில், அங்கு இவ்வளவு பெரிய திட்டத்தைக் மேற்கொள்வது முதலீடு, உள்கட்டமைப்பு, மக்கள் மற்றும் சுற்றுச்சூழலை மோசமான ஆபத்தில் ஆழ்த்தும்" என்று எச்சரித்துள்ளார்.

    பழங்குடியினர் உரிமைகளை பறித்து சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான பணியில் மத்திய அரசு ஈடுபடுவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  

    • ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படை தளமாக விளங்கிய தீவுப் பகுதி.
    • நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு.

    அந்தமான் நிக்கோபாரின் தலைநகரம் போர்ட் பிளேரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    நாட்டை காலனி ஆதிக்கத்தின் சுவடுகளில் இருந்து விடுவிக்கும் விதமாக அந்தமான் நிக்கோபார் தலைநகரின் பெயர் ஸ்ரீ விஜயபுரம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்," ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படை தளமாக விளங்கிய தீவுப் பகுதி, இன்று நமது வளர்ச்சிக்கு முக்கிய தளமாக விளங்குகிறது.

    நமது சுதந்திரப் போராட்டத்திலும், சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு" என்றார்.

    அந்தமானில் உள்ள மூன்று தீவுகளுக்கு இன்று பெயர் மாற்றம் செய்த பிரதமர் மோடி இங்குள்ள ராஸ் தீவு இனி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றழைக்கப்படும் என்று அறிவித்தார். #Modirenames #threeislands #Rossislands #Nethajiislands
    போர்ட் பிளைர்:

    அரசுமுறை பயணமாக இன்று அந்தமான் வந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்தமான் நிக்கோபார் தீவுகளை கடந்த 2004-ம் ஆண்டு தாக்கிய சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு கார் நிக்கோபார் நகரில் உள்ள நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர், இங்குள்ள பி.ஜே.ஆர். விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கார் நிக்கோபார் பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தடுப்பு சுவர் திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

    போர்ட் பிளைர் நகரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த மோடி, வெள்ளையர் ஆட்சி காலத்தில் இங்குள்ள காலா பானி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 

    பின்னர், போர்ட் பிளைர் நகரில் உள்ள மெரினா பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அந்தமானில் உள்ள மூன்று தீவுகளுக்கு இன்று பெயர் மாற்றம் செய்த பிரதமர் மோடி இங்குள்ள ராஸ் தீவு இனி நேதாஜி  சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றழைக்கப்படும் என்று அறிவித்தார். 

    30-12-1943 அன்று நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் சார்பில் அந்தமானில் இந்தியாவின் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்ட நாளை நினைவுகூரும் வகையில் இன்று 150 அடி உயரக் கொடிக்கம்பத்தில் இந்தியாவின் கொடி இங்கு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நிகழ்ச்சியை நமது நாட்டு மக்கள் நீண்டகாலம் நினைவில் வைத்திருப்பார்கள்.

    சுபாஷ் சந்திரபோஸ் நினைவை கவுரவிக்கும் வகையில் கூட்டத்தில் இருந்த மக்கள் அனைவரும் தங்களது கை பேசிகளில் உள்ள விளக்குகளை எரியவிட்டு அஞ்சலி செலுத்துமாறு மோடி கேட்டு கொண்டார். மக்களும் அவ்வாறே செய்து ‘நேதாஜி வாழ்க’ என கோஷமிட்டனர். இங்குள்ள பல்கலைக்கழகத்துக்கு நேதாஜியின் பெயர் சூட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

    இதேபோல், நீல் தீவு இனி ஷஹீத் தீவு என்றும் ஹாவ்லாக் தீவு இனி சுயராஜ் தீவு என்றும் அழைக்கப்படும். 

    அந்தமான் மக்களின் அத்தியாவசிய தேவைகளான தண்ணீர், மின்சாரம் ஆகிய முக்கிய கட்டமைப்பு வசதிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டடுள்ளதாக குறிப்பிட்ட மோடி, அடுத்த 20 ஆண்டுகள்வரை இங்குள்ள மக்களுக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படாத வகையில் டனிகாரி அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். #Modirenames #threeislands #Rossislands #Nethajiislands
    ×