என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டாலின்"

    • கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்றும் நன்றியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய உறுப்பினர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். அதன்படி தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் தலைவராக கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்த ஏ.ஜே. ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மீனவர் நல வாரிய தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஏ. ஜே. ஸ்டாலின் இன்று நாகர்கோவில் வந்தார். அவருக்கு கன்னியாகுமரி மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வடசேரியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து ஒழுகினசேரியில் உள்ள மாவட்ட திமுக கட்சி அலுவலகம் உள்ள கலைஞரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் பேசும்போது போது, தமிழகம் முழுவதும் உள்ள மீனவ கிராமங்களில் சென்று மீனவ நலவாரிய உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன், மீனவ நல வாரிய திட்டத்தின் மூலம் மக்களுக்கு என்னென்ன நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்பதை மக்களிடம் எடுத்துரைத்து உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நடவடிக்கையில் மேற்கொள்ள இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    2007ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் மீனவர் நல வாரியம் கொண்டு வந்ததால் தான் இந்த பதவி தனக்கு கிடைத்ததாகவும், தனக்கு இந்தப் பதவியை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்றும் நன்றியுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகரச் செயலாளர் ஆனந்த், அயழக அணி மாநிலத் துணைச் செயலாளர் பாபு விதி பிரைட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

    • பரிதாபாத்தில் நமது பாதுகாப்புப் படையினரின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன்.
    • கடலோரப் பகுதிகளிலும் சிறப்பு கவனம் மற்றும் அதிகரித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

    டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்துள்ளது.

    அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 24 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு பல அப்பாவி உயிர்களைப் பலிகொண்டதால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அந்த இடத்திலிருந்து வரும் காட்சிகள் உண்மையிலேயே மனதை உடைக்கின்றன.

    துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு எனது மனம்கனிந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயங்களுடன் சிகிச்சை பெற்று வருபவர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. அவர்கள் வலிமை பெறவும், விரைவில் குணமடையவும் வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட வெடிவிபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.

    அதே நேரத்தில், பரிதாபாத்தில் நமது பாதுகாப்புப் படையினரின் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். கிட்டத்தட்ட 300 கிலோ வெடிபொருட்கள் மற்றும் பல AK-47 துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருப்பது, நமது நாடு தொடர்ந்து எதிர்கொள்ளும் கடுமையான அச்சுறுத்தல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

    சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசும் காவல்துறையும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

    அதிக கண்காணிப்பு தேவைப்படும் கடலோரப் பகுதிகளிலும் சிறப்பு கவனம் மற்றும் அதிகரித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று வலியறுத்தி உள்ளார்.  

    • தனது 36வது பிறந்தநாளை ஆர்ஜேடி தலைவரும் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் கொண்டாடி வருகிறார்.
    • கோடிக்கணக்கானோருக்கு நம்பிக்கையளிப்பவராகத் தாங்கள் இருக்கிறீர்கள்.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் நவம்பர் 11 அன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நவம்பர் 14 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    இந்த தேர்தலில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்ற பாஜவின் என்டிஏ கூட்டணிக்கும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக கொண்ட மகபந்தன் (இந்தியா) கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில் இன்று (நவம்பர் 9) தனது 36வது பிறந்தநாளை ஆர்ஜேடி தலைவரும் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் கொண்டாடி வருகிறார்.

    அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

    தம்பி தேஜஸ்வி யாதவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பீகாரில் புத்துணர்வு பெற்றுள்ள சமூகநீதி இயக்கத்தின் உந்துசக்தியாக எழுந்து, கோடிக்கணக்கானோருக்கு நம்பிக்கையளிப்பவராகத் தாங்கள் இருக்கிறீர்கள்.

    தங்களது தலைமையில் ஒரு புதிய அத்தியாயத்தின் விளிம்பில் பீகார் இருக்கும் நிலையில், சமத்துவம், தரமான கல்வி, வேலைவாய்ப்புகள், மாண்பு என அவர்களது எதிர்பார்ப்புகளைத் தாங்கள் நிறைவு செய்வீர்கள் என நம்புகிறோம்.

    இந்த வரலாற்றுப் பாதையில் தொடர்ந்து வலிமையோடும், நல்ல உடல்நலத்தோடும், துணிச்சலோடும் தாங்கள் தொடர விழைகிறேன்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

    • வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • இந்திய அணியின் ஒருமித்த செயல்பாடே இந்த வெற்றிக்கு காரணம்

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில் பட்டம் பெற்ற இந்திய மகளிர் அணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நமது பெண்கள் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்று, இந்தியா கிரிக்கெட் உலகை ஆழ்கிறது. இந்திய அணியின் ஒருமித்த செயல்பாடே இந்த வெற்றிக்கு காரணம்

    இந்திய அணியின் இந்த அபாரமான வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இது திறமை, மன உறுதியின் அற்புதமான வெளிப்பாடு.

    இந்த வெற்றி, தலைமுறை தலைமுறையாகப் பல இளம் வீராங்கனைகள் பெரிய கனவுகளைக் காணவும், துணிச்சலுடன் விளையாடவும் ஊக்கமளிக்கும்." என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ், பாஜக தலைவர்கள் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை ஆகியோரும் இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.   

    • தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மொத்தமாக ரூ.1 கோடி இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராகுல் காந்தி நேற்றிரவு இரங்கல் தெரிவித்திருந்தார்.

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.

    பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மொத்தமாக ரூ.1 கோடி இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கரூர் சம்பவ நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.

    இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ராகுலுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவில், "கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் விசாரித்து, சிகிச்சை பெற்றுவருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த சகோதரர் திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு நன்றி!" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராகுல் காந்தி நேற்றிரவு இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ம.க.ஸ்டாலினுடன் சென்ற இருவருக்கு அரிவாள் வெட்டு என தகவல்.
    • ம.க.ஸ்டாலின் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

    பாமக முக்கிய பிரமுகரும், ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலினை கொல்ல முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றபோது வழிமறித்து ம.க.ஸ்டாலின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

    மேலும், ம.க.ஸ்டாலினுடன் சென்ற இருவருக்கு அரிவாள் வெட்டு என தகவல் வெளியாகியுள்ளது.

    ம.க.ஸ்டாலின் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, ராமதாஸ் அணியைச் சேர்ந்த ம.க.ஸ்டாலின் மீது சணல் குண்டுவீசி கொலை முயற்சி செய்த சம்பவத்தை தொடர்ந்து பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.

    சாலையில் டயர்களை கொளுத்தி ராமதாஸ் ஆதரவு பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால், சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தீயை தண்ணீர் ஊற்றி அணைத்து போராட்டக்காரர்களை தடுத்தனர்.

    • போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
    • போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எழுச்சித்தமிழர் திருமாவை விட நீங்கள் பெரிய தியாகம் செய்துவிட்டிர்களா இபிஎஸ்?.

    சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) 'தமிழ்நாடு 26வது மாநில மாநாடு' நடந்து வருகிறது. "வெல்க ஜனநாயகம்" என தலைப்பிடப்பட்ட இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதில் சிபிஐ முன்னாள் மாநில தலைவர் முத்தரசன், இந்தநாள் தலைவர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், கருப்பும் சிவப்பும் சேர்ந்ததுதான் திராவிடர் கழகம். எங்களில் பாதி நீங்கள். கொள்கை முரண்கள் எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது.

    சமூகத்திற்கு தேவையான நமது கொள்கை வலுவாக இருப்பதால் தான் நமது நட்பும் வலுவாக இருக்கிறது. சேலத்தில் தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும். அதன் பணிகள் நாளையே தொடங்கப்படும். முத்தரசன் வைத்த கோரிக்கையை தட்டிக்கழிக்க முடியுமா!..  

    நாடு கடுமையான சூழலை எதிர்கொண்டு வரும் தருணத்தில் நாம் கொள்கை உறவோடு சேர்ந்திருக்கிறோம். சதி செய்தாலும் போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கம்யூனிஸ்டுகள் மீது திடீர் பாசம் வந்துள்ளது.

    கம்யூனிஸ்டுகளை விட நீங்கள் பெரிய தியாகம் செய்து விட்டீர்களா, எழுச்சித்தமிழர் திருமாவை விட நீங்கள் பெரிய தியாகம் செய்துவிட்டீர்களா இபிஎஸ்?.

    அடிமைத்தனத்தை பற்றி எடப்பாடி பேசலாமா? அவருக்கு பேச என்ன உரிமை உள்ளது. திராவிட, கம்யூனிஸ்ட் கொள்கைகளை பற்றி தெரியாத இபிஎஸ் வாய்க்கு வந்தததை பேசி வருகிறார். ரெய்டு மூலம் நம்மை மிரட்ட நினைத்தவர்கள் தற்போது மிரண்டு போயிருக்கின்றனர்.

    எப்படியாவது கூட்டணியை கலைத்துவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் நமது லட்சியம் பெரிது. அதற்காகத்தான் நாம் அனைவரும் ஒன்றாகி இருக்கிறோம். கூட்டணியில் இருந்தாலும் விமர்சனங்களை முன்வைக்க கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் தவறியதில்லை" என்று தெரிவித்தார். 

    • தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது
    • அரசியல் வாழ்க்கைக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொது வாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்.

    நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

    தமிழக பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து, பின்னர் 2021 இல் மணிப்பூர் ஆளுநராகவும், தற்போது நாகாலாந்து ஆளுநராக இல.கணேசன் பதவி வகித்து வந்தார். 

    இந்த மாத தொடக்கத்தில் இல.கணேசன் சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தது. இதனால் மயக்கம் ஏற்பட்டு அவர் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    தற்போது தி.நகர் வெங்கட் நாராயணா சாலையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் அங்கு குழுமியுள்ளனர்.

    இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    மேலும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டியவர். மாண்புடன் நடந்து கொண்டு அரசியல் நாகரீகம் பேணிக்காத்தவர்.

    அரசியல் வாழ்க்கைக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் பொது வாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர்" என முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான டான்சானியாவில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தெரியவந்ததாக கூறப்பட்டது.
    • ஸ்டாலின் போட்டோவுக்கு செய்தது போல் நடனமாடி வாழ்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

    சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் போட்டோவை தூக்கி வைத்துக் கொண்டு ஆப்பிரிக்க நாட்டின் பழங்குடியினர் பாரம்பரிய நடனமாடிய வீடியோ வைரலானது.

    10 கோடி ரூபாய் செலவில், 200 நிலமற்ற பட்டியல், பழங்குடியின விவசாயத் தொழிலாளர்கள் நிலம் வாங்க மானியம். ரூ 1000 கோடி மதிப்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன் காக்கும் அயோத்திதாசர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையம் உருவாக்கம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களைத் தொழில் முனைவோராக மாற்றிட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், நரிக்குறவர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பு, கடந்த மூன்று ஆண்டுகளில் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 மாணவர் விடுதிகள் உருவாக்கம் ஆகியன பழங்குடியின நலன் சார்ந்த திமுக அரசு திட்டங்கள் ஆகும்.

    இந்த திட்டங்கள் குறித்து தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான டான்சானியாவில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு தெரியவந்து அவர்கள் ஸ்டாலினை வாழ்த்துவதாக அந்த வீடியோவுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பழங்குடிகள் காசு கொடுத்தால் யார் போட்டோவை வைத்தும் வாழ்த்துவார்கள் என அதுமுக, பாஜக தரப்பு சமூக வலைதள பக்கங்கள் விமர்சித்தன.

    இந்நிலையில் இதை நிரூபணம் செய்யும் வகையில் ஜான் ரவி என்ற ஒருவரின் புகைப்படத்தை வைத்தும் பழங்குடியினர் ஸ்டாலினுக்கு செய்தது போல் நடனமாடி வாழ்த்தும் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது. இதனால் எது உண்மை, எது பொய் என்று மக்களுக்கே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    • ரவா கிச்சடி,சாம்பார் மாதிரி உணவை உண்டு கருத்துக்களை பதிவேட்டில் பதிவு செய்தேன்
    • ஆசிரியர் ஒருவரே அதைச் செய்திருப்பது கண்டு மகிழ்கிறேன்.

    தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், "இன்று எம்பள்ளி மாணவர்களுக்கு ரவா கிச்சடி,சாம்பார் மாதிரி உணவை உண்டு கருத்துக்களை பதிவேட்டில் பதிவு செய்தேன்..சிறப்பாக இருந்தது" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    இதை ரீ-ட்வீட் செய்துள்ள முதல்வர் ஸ்டாலின், "எந்த மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டாலும், மாவட்ட ஆட்சியர் போன்ற உயரதிகாரிகளைப் பார்த்தாலும், உங்கள் பகுதியில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தைப் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தீர்களா? என்று நான் கேட்பது வழக்கம்! அந்த வகையில், ஆசிரியர் ஒருவரே அதைச் செய்திருப்பது கண்டு மகிழ்கிறேன்.

    காலை உணவுத் திட்டம் என்பது வெறுமனே மாணவர்களின் பசியைப் போக்கும் திட்டமோ, ஊட்டச்சத்தை அளிக்கும் திட்டமோ மட்டுமல்ல; நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் அது!" என்று தெரிவித்துள்ளார். 

    • அன்று இரவு அங்கேயே தங்குகிறார்.
    • டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) சேலம் மாவட்டம் செல்கிறார்.

    மாலை மேட்டூர் செல்லும் அவர் 11 கிலோ மீட்டர் தூரம் நடைபெறும் 'ரோடு ஷோ'வில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிகிறார்.

    தொடர்ந்து மேட்டூரில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அன்று இரவு அங்கேயே தங்குகிறார்.

    நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு சேலம் வருகிறார்.

    காலை 11 மணிக்கு இரும்பாலை பகுதியில் உள்ள மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். 

    • அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.
    • பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    இந்தியாவின் உள்நாட்டு அணுசக்தி திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூத்த விஞ்ஞானியும், அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவருமான எம்.ஆர். ஸ்ரீனிவாசன் (95) இன்று காலமானார்.

    கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் ஊட்டியில் வசித்து வந்த நிலையில் வயது மூப்பு காரணமாக இன்று அவரது உயிர் பிரிந்தது.

    1955 இல் அணுசக்தித்துறையில் தனது பணியை தொடங்கிய ஸ்ரீனிவாசன், இந்தியாவின் முதல் அணு உலையை உருவாக்கிய ஹோமி பாபாவுடன் பணியாற்றி உள்ளார்.

    1959 இல் இந்தியாவின் முதல் அணுசக்தி நிலையத்தின் தலைமை பொறியாளராகத் தனது பங்களிப்பை வழங்கிய ஸ்ரீனிவாசன், 1967 இல் மெட்ராஸ் அணுசக்தி நிலயத்தின் தலைமை இன்ஜீனியர் ஆனார்.

    1974ஆம் ஆண்டு அணுசக்தி துறையின் மின் திட்டங்கள் பொறியியல் பிரிவு இயக்குநர், 1984-ஆம் ஆண்டு அணுசக்தி வாரியத்தின் தலைவர், 1987ஆம் ஆண்டு அணுசக்தி ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

    அணுசக்தித் திட்டத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, டாக்டர் சீனிவாசனுக்கு நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது அவரின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் தூணான டாக்டர் எம்.ஆர். ஸ்ரீனிவாசனின் மறைவுக்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம்.

    இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தின் தந்தையான டாக்டர் ஹோமி ஜே. பாபாவுடன் நமது முதல் அணு உலையை உருவாக்கினார்.

    பல தசாப்தங்களாக, அவர் 18 அணு மின் அலகுகளை உருவாக்கத் தலைமை தாங்கினார். எரிசக்தி தன்னிறைவை ஏற்படுத்தினார். உண்மையான தேசத்தைக் கட்டியெழுப்பியவர். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

    ×