search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "viral"

    • தற்போது உள்ளாடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.
    • இந்த புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலவித கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

    பிரபல இயக்குனர் கவுதம்மேனன் இயக்கத்தில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை  சமந்தா.இப்படத்தின் தெலுங்கு மொழிபெயர்ப்பில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு ஹீரோயின் ஆகவும் மாறினார்.

    அதன்பின்னர் விஜய், சூர்யா போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடியாக நடித்தார்விஜயுடன் சமந்தா ஜோடியாக நடித்த 'கத்தி', 'மெர்சல்' போன்ற படங்கள் தொடர் வெற்றி அடைந்தது.

    அதை தொடர்ந்து நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.திருமணமான 4 ஆண்டுகளில் நாக சைதன்வை விவாகரத்து செய்தார்.அதன்பின்னர் சமந்தா கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார்.புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து குத்தாட்டம் டான்ஸ் ஆடினார்.அதன்பின் 'மயோசிட்டிஸ்' என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அதில் இருந்து மீண்ட அவர் மீண்டும் நடிக்க தொடங்கினார்.




    இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலை தளங்களில் பல்வேறு கவர்ச்சி புகைப்படங்கள் பகிர்ந்து வருகிறார். தற்போது உள்ளாடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

    இந்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரசிகர்கள் பலவித கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2008-ல் வெளியான ஆடுஜீவிதம் எனும் மலையாள நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
    • கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியா சென்று மாட்டி கொண்டு அடிமையான ஒருவனின் கதையாகும்.

    மலையாள சினிமாவில் விரைவில் வெளியாக இருக்கும் ஆடுஜீவிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ப்லஸி இப்படத்தை இயக்கி தயாரித்து இருக்கிறார்.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான ப்ரிதிவிராஜ் சுகுமாரன் மற்றும் அமலா பால் நடித்துள்ளனர். 2008-ல் வெளியான ஆடுஜீவிதம் எனும் மலையாள நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

    'தி கோட்ஸ் லைஃப்'என இப்படத்திற்கு ஆங்கில தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    ப்ரித்திவிராஜ் 'நஜீப்' எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கேரளாவில் இருந்து புலம்பெயர்ந்து சவுதி அரேபியா சென்று மாட்டி கொண்டு அடிமையான ஒருவனின் கதையாகும்.

    சுனில் கே. எஸ். ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீகர் ப்ரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார்.

    வரும் மார்ச் 28ம் தேதி ஆடுஜீவிதம் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளும் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் ஆடுஜீவிதம் படத்தின் ட்ரெய்லர் இப்பொழுது வெளியாகியுள்ளது.

    • 60 வயதான ஏரண்ணா அதிகளவில் நிலம் வைத்துள்ளார். இவரது மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார்.
    • ஏரண்ணா அனுஸ்ரீயை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவரது குடும்பத்தினரிடம் பெண் கேட்டார்.

    பெங்களூரு:

    சமீபகாலமாக வயதான தொழிலதிபர்கள், பிரபலங்கள் சிலர் இளம் வயதுடைய பெண்களை திருமணம் செய்யும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்து வருகிறது.

    அந்த வகையில் கர்நாடகத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் 30 வயது பெண்ணை திருமணம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகாவில் உள்ள மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏரண்ணா. 60 வயதான இவர் அதிகளவில் நிலம் வைத்துள்ளார். இவரது மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார்.

    இந்நிலையில் ஏரண்ணாவின் மகனும், மகளும் அவரை கவனிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் 2-வது திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

    அதன்படி ஏரண்ணா, தனக்கான வரனை தேடினார். அப்போது மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த அனுஸ்ரீ (30) என்ற பெண்ணை அவருக்கு பிடித்து போனது. அனுஸ்ரீ தனது கணவரை பிரிந்த நிலையில் மகனுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

    இதையறிந்த ஏரண்ணா அனுஸ்ரீயை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அவரது குடும்பத்தினரிடம் பெண் கேட்டார். அவர்களும் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

    இதையடுத்து அப்பே கவுடனஹள்ளி பகுதியில் உள்ள கோவிலில் வைத்து ஏரண்ணா-அனுஸ்ரீ திருமணம் எளிமையாக நடந்தது. இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் சிலர், வயதை காரணம் காட்டி இந்த திருமணத்தை தவிர்த்திருக்கலாம் எனவும், சிலர் ஏரண்ணா தனது வயதிற்கேற்ப வேறு பெண்ணை மணம் முடித்திருக்கலாம் எனவும் கூறி உள்ளனர்.

    இதுபோன்ற பல கருத்துக்களால் திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது.
    • நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி புறக்கணிக்கப்பட்டதாக வலைதளங்களில் பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    நேட்டோ குழுவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடான லிதுவேனியாவில் உள்ள வில்னியஸ் நகரில் நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு நடந்தது. இதில் 2-வது நாளில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பங்கேற்றார். அப்போது பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், ஜெலன்ஸ்கி மட்டும் தனியாக நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த படத்தில் பச்சை நிற ராணுவ உடையில் ஜெலன்ஸ்கி தனியாகவும், அதே நேரம் முகத்தில் கடுமையாக எதையோ யோசிப்பது போன்றும் காட்சிகள் இருந்தன.

    இதனை தொடர்ந்து நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கி புறக்கணிக்கப்பட்டதாக வலைதளங்களில் பயனர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் அழைப்பு இல்லாமல் கூட உறுப்பினர்கள் நிகழ்ச்சிக்கு வரும் போது இதுபோன்று நடக்கும் என கிண்டல் செய்துள்ளார். இதே போல பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். அதே நேரம் சந்தர்ப்ப சூழல் காரணமாகவே அந்த தருணத்தில் ஜெலன்ஸ்கி மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தார் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • நாய் சில்வர் குடத்தில் தலையை விட்ட போது எதிர்பாராத விதமாக தலை குடத்திற்குள் சிக்கி மாட்டிக்கொண்டது
    • தீயணைப்பு நிலைய வீரர்கள் குடத்திற்குள் தலை மாட்டிய நாயை போராடி பத்திரமாக மீட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அண்ணா சத்யா தெருவை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இதற்கிடையே அந்த நாய் நேற்று இரவு தண்ணீர் குடிப்பதற்காக அவரது வீட்டு தோட்டத்தில் இருந்த சில்வர் குடத்தில் தலையை விட்ட போது எதிர்பாராத விதமாக தலை குடத்திற்குள் சிக்கி மாட்டிக்கொண்டது.

    பின்னர் நாயின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கோபாலகிருஷ்ணன் இது குறித்து உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த தீய ணைப்பு நிலைய வீரர்கள் குடத்திற்குள் தலை மாட்டிய நாயை போராடி பத்திரமாக மீட்டனர். நாயை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது.

    கர்நாடக மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாக்குரிமையை நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்து அனில் கும்ப்ளே டுவிட்டரில் பதிவு செய்த தகவல் வைரலாக பரவி வருகிறது. #KarnatakaElections2018 #AnilKumble
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவடைவதால் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். காலை 9 மணி நிலவரப்படி 10.6 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு காலையிலேயே சென்று வாக்கை பதிவு செய்தனர்.

    இதேபோல் கிரிக்கெட் நட்சத்திரம் அனில் கும்ப்ளேவும் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.



    வாக்குச்சாவடியில் சக வாக்காளர்களுடன் வரிசையில் காத்து நின்ற அவர் அதனை புகைப்படம் எடுத்து டுவிட்டரில் வெளியிட்டார். அதில், ‘நான் ஓட்டு போடுவதற்காக காத்திருக்கிறேன். இதேபோல் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்கள் வாக்குரிமையை நிறைவேற்ற வேண்டும்’ என கும்ப்ளே கேட்டுக்கொண்டார்.

    அவரது இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது. இந்த பதிவை வெளியிட்ட ஒரு மணி நேரத்திற்குள் 17 ஆயிரம் பேர் லைக் செய்தனர். 200 பேர் ரீடுவிட் செய்தனர். 11 மணியளவில் 39 ஆயிரம் பேர் லைக் செய்திருந்தனர். பின்னர் ஓட்டு போட்டுவெளியே வந்ததும் மையிட்ட விரலைக் காட்டி எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் டுவிட்டரில் பதிவிட்டார். இந்த புகைப்படமும் வேகமாக பரவி வருகிறது. #KarnatakaElections2018 #AnilKumble

    ×