search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "viral"

    • ஒரு நாளைக்கு 14 மணிநேரம் வரை உழைத்து சமீபத்தில் ரூ. 7.8 கோடி சம்பளத்துடன் மூத்த மேலாளராகியுள்ளார்.
    • நான் வெறுமையாகவும் அலட்சியமாகவும் உணர்கிறேன்.

    ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை செய்யும் ஒரு தொழில்நுட்ப ஊழியர், பதவி உயர்வுக்காக தனது திருமணம் எவ்வாறு முறிந்தது என்பது குறித்து பேசியுள்ளார்.

    சமூக ஊடகமான Blind தளத்தில் பெயர் குறிப்பிடாத அந்த நபர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் அந்த நபர் மூன்று ஆண்டுகளாக, மிகவும் கடினமாக உழைத்ததாகவும், சில நேரங்களில் ஒரு நாளைக்கு 14 மணிநேரம் கூட உழைத்து கடைசியாக சமீபத்தில் ரூ. 7.8 கோடி சம்பளத்துடன் மூத்த மேலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

    ஆனால் வேலையில் மும்முரமாக இருந்ததால் தான் தவறவிட்ட பல முக்கியமான குடும்ப நிகழ்வுகளை அவர் இத்தருணத்தில் நினைவு கூர்ந்தார். பதவி உயர்வு ஆசை, தனது தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு நெருக்கடியான நிலைக்கு கொண்டு வந்தன என்று பகிர்ந்துள்ளார். தற்போது தான் பெற்ற பதவி உயர்வு குறித்து வெறுமையாக உணர்வதாக தெரிவித்துள்ளார்.

    தனது பதிவில் அவர் கூறியதாவது,

    3 வருடங்களுக்கு முன்பு ஒரு வேலையில் சேர்ந்தேன். அங்கு பதவி உயர்வுக்காக அதிக எண்ணிக்கையிலான பணிகளை அங்கு செய்து வந்தேன். நிறுவனத்தின் ஐரோப்பா - ஆசியா குழுவை ஒருங்கிணைக்கும் அளவுக்கு உயர்ந்தேன். அதனால் என் மீட்டிங்- கள் காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு முடிவடைகின்றன.

    என் மகள் பிறந்த நாளில், கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும் நான் மீட்டிங்ளில் இருந்தேன். என் மனைவிக்கு பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு இருக்கும்போது, மீட்டிங்கில் இருந்த பிரச்சனையால் அவளை உடன் இருந்து மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடியவில்லை. இதனால் அவள் விவாகரத்து கேட்டாள்.

    இன்று எனது பதவி உயர்வு அங்கீகரிக்கப்பட்டது என்ற நல்ல செய்தி எனக்குக் கிடைத்தது. ஆனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. நான் வெறுமையாகவும் அலட்சியமாகவும் உணர்கிறேன்.

    என் வாழ்க்கையில் நான் என்ன செய்கிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்வதை நிறுத்த முடியவில்லை. இந்த குழப்பமான காலத்தில், என்னிடம் உள்ளதைப் பற்றி நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், இல்லையா? ஆனால் எப்படி மகிழ்ச்சியாக இருப்பது? என்று தெரிவித்துள்ளார். 

    • அதிரிபுதிரியாக ரிங்கில் இறங்கிய ஜேசன், ஓடிஸ் - ஐ எலிமினேட் செய்ய பிரோன் பிரேக்கருக்கு உதவிசெய்தார்.
    • இனி தனது வாழ்நாளில் WWE பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டேன் என ஜேசன் உறுதி பூண்டுள்ளார்.

    உலகளப் பிரசித்தி பெற்ற யூடியூபர், ஐ ஷோ ஸ்பீட்[IShowSpeed] எனப்படும் டேரன் ஜேசன். இவர் சமீபத்தில் WWE ராயல் ரம்பில் 2025 நிகழ்ச்சியில் பங்கேற்றார். போட்டியாளர் அகிரா டோசாவா கயாத்தால் விளையாடமுடியாமல் இருந்த நிலையில் அவருக்கு பதிலாக யூடியூபர் ஜேசன் ரிங்கில் இறக்கிவிடப்பட்டார்.

     

    அதிரிபுதிரியாக ரிங்கில் இறங்கிய ஜேசன், ஓடிஸ் - ஐ எலிமினேட் செய்ய பிரோன் பிரேக்கருக்கு உதவிசெய்தார். ஓடிஸ் எலிமினேட் ஆன அடுத்த கணமே ஜேசன் பக்கம் திரும்பிய பிரோன் பிரேக்கர் அவரை ஸ்பியர் ஷாட்டை பயன்படுத்தி சில நிமிடங்களில் அல்லோலகல்லோல பட வைத்தார்.

    அந்தரத்தில் ஜேசனை தூக்கி அவர் ஆடிய ருத்ர தாண்டவத்தால் ஜேசன் படுகாயமடைந்தார். இறுதியில் ஜேசன் நிற்பதற்கே ஊன்றுகோலைப் பயன்படுத்த வேண்டிய பரிதாப நிலைமைக்கு ஆளானார். இனி தனது வாழ்நாளில் WWE பக்கமே தலைவைத்துப் படுக்கமாட்டேன் என ஜேசன் உறுதி பூண்டுள்ளார். 

    • பதிவுகள், மீம்கள் உலகெங்கிலும் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
    • கூகுள் தேடலில் 'ஆண்டில் மிக நீண்ட மாதம் எது?' என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது.

    2025 ஜனவரி மாதம் இன்று [31 ஆம் தேதியுடன்] முடிவடைகிறது. இந்த ஆண்டில் 31 நாட்களை கடப்பதற்குள்ளாகவே பலருக்கு போதும் போதும் என்ற நிலை ஏற்பட்டுவிடுகிறது.

    மிக நீண்ட மாதமாக மக்கள் இதை கருதுகின்றனர். எனவே சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பான பதிவுகள், மீம்கள் உலகெங்கிலும் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

    எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் உள்ள பயனர்கள் ஜனவரி மாதம் 31 நாட்களுக்குப் பதிலாக 65 நாட்களைக் கொண்டிருப்பதைப் போல் தோன்றுவதாக மலைப்பு தெரிவித்து வருகின்றனர். சிலர் ஜனவரியை நகைச்சுவையாக மாதங்களின் "திங்கட்கிழமை" என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கூகுள் நிறுவனமும் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் மீம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    கூகுள் தேடலில் 'ஆண்டில் மிக நீண்ட மாதம் எது?' என்ற கேள்வுக்கு பதிலாக, 'ஆண்டின் நீண்ட மாதம் ஜனவரி, பிற மாதங்களை போல 31 நாட்களை மட்டுமே கொண்டுள்ள போதும் ஜனவரி முடிவடையாமல் காலாகாலத்துக்கும் நீண்டு கொண்டே செல்கிறது' என்று நகைச்சுவையாக பதிலளித்துள்ளது. இதை பகிர்ந்து, ஜனவரி முடியவே மாட்டேன் என்கிறது என்று கூகுள் இந்தியா தெரிவித்துள்ளது.

     

    • தன்னுடைய 11 வயது பேரனுடன் கடைசி காலம் வரை அந்த வீட்டில்தான் இருப்பேன் என்று அவர் கூறினார்.
    • அவரின் வீட்டை மட்டும் விட்டுவிட்டு இரு பக்கமும் நெடுஞ்சாலை கட்டி முடிக்கப்பட்டது.

    சீனாவை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வீட்டை அரசாங்கத்துக்குக் கொடுக்க மறுத்ததால் விசித்திரமான சிக்கலை சந்தித்துள்ளார்.

    சீனாவின் ஷாங்காயின் தென்மேற்கில் உள்ள ஜின்சி நகரில் வசிக்கும் முதியவர் ஹுவாங் பிங். இவரது 2மாடி வீடு இருக்கும் பகுதியில் அரசு நெடுஞ்சாலை அமைத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள் அனைவரும் அரசு கொடுத்த நஷ்டஈடு தொகையைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து காலி செய்தனர்.

    ஆனால் முதியவர் ஹுவாங் பிங் தனது வீட்டை விற்க ஒரேயடியாக மறுத்துவிட்டார். தன்னுடைய 11 வயது பேரனுடன் கடைசி காலம் வரை அந்த வீட்டில்தான் இருப்பேன் என்று அவர் கூறினார். அரசு அதிகாரிகள் பல முறை அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    ரூ.2 கோடி வரை நஷ்ட ஈடு தருவதாகவும், வேறு இடத்தில் வீடு கட்ட நிலம் ஒதுக்குவதாகவும் பேசிப்பார்த்துள்ளனர். ஆனால் முதியவரை என்ன சொல்லியும் வழிக்கு கொண்டுவர முடியவில்லை என்பதால் அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர். ஆனால் அதன்பின்தான் முதியவருக்கு சிக்கல் ஆரம்பித்துள்ளது. அவரின் வீட்டை மட்டும் விட்டுவிட்டு இரு பக்கமும் நெடுஞ்சாலை கட்டி முடிக்கப்பட்டது.

    இதனால் முதியவர் தனது பிடிவாதத்தின் விளைவை நினைத்து வருந்தி வருகிறார். அரசு பணம் தருவதாக சொன்னது நியாயமானதாக இப்போது தெரிகிறது. நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு வாகனங்கள் இரைச்சல், தூசியுடன், தனி வீட்டில் இருக்க முடியாது.

    முந்தைய காலத்துக்கு என்னால் செல்ல முடிந்தால், அரசு கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு என் வீட்டை இடிக்க ஒப்புக் கொள்வேன். ஆனால் அது இப்போது அது முடியாது என்று அவர் புலம்பி வருகிறார். 

    • இதனால் மோனாலிசா அசைவுகர்யங்களுக்கும் ஆளாகியுள்ளார்.
    • நேரடியாகச் சென்று மோனாலிசா மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து விவாதிப்பதாகக் சனோஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை நடைபெறும்.

    சுமார் 40 கோடி பேர் இங்கு புனித நீராட வருகை தருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் 16 வயதான மோனாலிசா போஷ்லே என்ற 16 வயது பெண் தனது தந்தையுடன் சேர்ந்து பாசி மாலை விற்று வருகிறார்.

    மோனாலிசா தனது தனித்துவமான கண்கள் மற்றும், இயற்கையான அழகால் இணையத்தில் டிரண்ட் ஆகி வருகிறார். இதனால் அவரை பேட்டி காணவும், அவருடன் செல்பி எடுத்துக்கொள்ளவும், கும்பமேளாவில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் மோனாலிசா அசைவுகர்யங்களுக்கும் ஆளாகியுள்ளார். அவரின் பாசி மாலை வியாபாரமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் மோனாவிசாவுக்கு சினிமாவில் ஹீரோனியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவை தனது அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க விருப்புவதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக நேரடியாகச் சென்று மோனாலிசா மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து விவாதிப்பதாகக் சனோஜ் மிஸ்ரா கூறியுள்ளார்.

     

    'டைரி ஆஃப் மணிப்பூர்' என்ற தனது அடுத்த படத்தில் நடிக்க பொருத்தமான ஒருவருக்காக காத்திருந்ததாகவும், மோனாலிசாவின் கரிய தோல் மற்றும் தேன் போன்ற கண்கள் தனது படத்தின் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • ஹவுசிங் சொசைட்டிக்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • ஓட்டுநர் தவறுதலாக ரிவர்ஸ் கியர் போட்டுள்ளார்.

    மல்டி லெவல் பார்க்கிங் வளாகத்தில் இரண்டாவது மாடியில் இருந்த கார் சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள விமன் நகரில் உள்ள ஒரு ஹவுசிங் சொசைட்டிக்குள் கடந்த ஜனவரி 20 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

    அங்குள்ள மல்டி லெவல் பார்க்கிங் வளாகத்தில் இரண்டாவது மாடியில் நிறுத்தப்பட்டிருந்த கார், ஓட்டுநர் தவறுதலாக ரிவர்ஸ் கியர் போட்டதால் பின் பக்கமாக இருந்த சுவரை இடித்துக்கொண்டு கீழே விழுந்துள்ளது.

    இந்த சம்பவத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றாலும், இதுதொடர்பான வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. சுவரின் தரம் குறித்தும், ஓட்டுனரின் அலட்சியப்போக்கு குறித்தும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    • இதுவரை சுமார் 8.81 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
    • மக்கள் அவருடன் செல்பி எடுக்க அலைமோதுகின்றனர்.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் [திரிவேணி சங்கமம்] இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா பூரண கும்பமேளா.

    144 ஆண்டுகளுக்கு ஒரு முறை, 12 பூரண கும்பமேளாக்கள் நடந்து முடிந்ததை குறிக்கும் விதமாக கொண்டாடப்படுவது மகா கும்பமேளா. அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகாசிவராத்திரி வரை வரை நடைபெறும்.

    இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.

    இதுவரை சுமார் 8.81 கோடி பேர் கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 54.96 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் சுமார் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆண்டு மகா கும்பமேளாவில் வித்தியாசமான துறவிகள் கவனம் பெற்று வருகின்றனர். அதே வெளியில் பாசி மணி மாலைகள் விற்கும் மோனாலிசா போஸ்லே எனும் 16 வயதான பெண் இந்திய அளவில் சமூக ஊடகங்களில் டிரண்ட் ஆகி வருகிறார்.

    திரை நடிகைகளின் போலித்தனங்கள் இல்லமால் எதார்த்தமான அழகுடன் அவர் இருப்பது பலரையும் கவர்ந்துள்ளது. மிளிரும் மாநிறத்தில் தனித்துவமான கண்களுடன் கும்பமேளாவில் பாசி மாலைகள் விற்கும் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதனால் பல ஊடகங்கள் அவரிடம் கும்பமேளாவில் வைத்து பேட்டி எடுக்கவும், மக்கள் அவருடன் செல்பி எடுக்கவும் அலைமோதுகின்றனர். பல சமூக ஊடக பயனர்கள் லியோனார்டோ டா வின்சியின் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்துடன் இவருக்கு இருக்கும் ஒற்றுமையை எடுத்துக்காட்டுகின்றனர். 

    • பெண் ஆசிரியை முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும், தகாத செயல்களில் ஈடுபடுவதும் சிசிடிவியில் சிக்கியது.
    • மேசையில் அமர்ந்து புகையிலையை போடுவதை காணலாம்

    ராஜஸ்தான் அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒரு பெண் ஆசிரியையுடன் பள்ளியில் உள்ள தனது அலுவலக அறைக்குள் தகாத செயலில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள சலேரா கிராமத்தில் செயல்படும் அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர், பலமுறை அந்த பெண் ஆசிரியை முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும், தகாத செயல்களில் ஈடுபடுவதும் சிசிடிவியில் சிக்கியது.

    மற்றுமொரு காணொளியில், அதிபர் பாடசாலையில் தனது மேசையில் அமர்ந்து புகையிலையை போடுவதை காணலாம். இந்த வீடியோக்கள் பள்ளி வளாகத்திற்குள் தலைமை ஆசிரியரின் தகாத நடத்தைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

     

    இந்த சம்பவம் குறித்து பதிலளித்த மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திர சர்மா, "முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியை இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்த குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்  

    • தனது பொறுமையை இழந்துவிடாத ஓட்டுநர் அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளார்
    • குறைகளை நிறுவனத்திடம் கூறுங்கள் என்று ஓட்டுநர் அந்த பெண்ணின் கோபத்தை தணிக்க முயன்றார்.

    7 நிமிடம் தாமதாக வந்ததற்காக கால் டாக்சி ஓட்டுனரை பெண் மோசமாக நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓட்டுனருடன் வாக்குவாதம் செய்து திட்டிய அந்த பெண் ஒரு கட்டத்தில் அவர் மீது எச்சில் துப்பியுள்ளார்.

    ஆனால் தனது பொறுமையை இழந்துவிடாத ஓட்டுநர் அவரை சமாதானப்படுத்த முயன்றுள்ளார். உங்கள் குறைகளை டாக்சி நிறுவனத்திடம் கூறுங்கள் என்று ஓட்டுநர் அந்த பெண்ணின் கோபத்தை தணிக்க முயன்றார்.

    ஆனால் பெண் அடாவடித்தனமாக நடந்துகொண்டதால் டாக்சியை விட்டுவிட்டு வேறு வழிகளில் பயணத்தைத் தொடருமாறு அந்த ஓட்டுநர் கூறியுள்ளார்.

    இந்த சம்பவத்தை அந்த ஓட்டுநர் வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் அவர்களின் உரையாடல் பதிவாகி உள்ள நிலையில் இணையத்தில் பலர் அந்த பெண்ணின் செய்கையை கண்டித்து வருகின்றனர். இந்த சம்பவம் எங்கு எப்போது நடந்தது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

    • எல்லோர் முன்னிலையிலும் முள் படுக்கையில் படுத்திருந்தார்
    • அவரது சட்டையைப் பிடித்து இழுத்து ஓங்கி அறைந்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆன்மீக திருவிழா மகா கும்பமேளா.

    45 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 கோடி பேர் கலந்துகொள்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறும்.

    இதில் கலந்துகொள்ள முனிவர்கள், துறவிகள், பாபாக்கள், அகோரிகள் என பலவகைப்பட்ட ஆன்மீக குருக்கள் வருகை தந்துள்ளனர். அவர்களின் அசாதாரண செயல்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் அப்படியொரு செயலைப் பற்றி கேள்வி கேட்கப்போய் பத்திரிகையாளர் ஒருவர் வாங்கிக் கட்டிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    முள் பாபா என்று அறியப்படும் காண்டே வாலே பாபா கும்பமேளாவில் எல்லோர் முன்னிலையிலும் முள் படுக்கையில் படுத்திருந்தார். மேலும் அவர் சுமார் 50 ஆண்டுகளாக முட்களில்தான் படுத்திருப்பதாக கூறிக்கொண்டார்.

    முள் பாபாவை நெருங்கிய செய்தி நிருபர் ஒருவர், இந்த முட்கள் உண்மையானதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதை கேட்டு ஆத்திரமடைந்த முள் பாபா, அங்கிருந்து எழுந்து அந்த நிருபரை நெருங்கி அவரது சட்டையைப் பிடித்து இழுத்து ஓங்கி அறைந்துள்ளார்.

    "வா வந்து இதில் நீயே படுத்து, முட்கள் உண்மையா? இல்லையா? எனக் கண்டுபிடி" என்று அந்த நிருபரை ஒரு வழி செய்துள்ளார் முள் பாபா. ஆளை விட்டால் போதும் என அந்த நிருபர் அங்கிருந்து நழுவினார். இத்தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • மதிய உணவும் அவர்களுக்கு இதோடு வழங்கப்படும்.
    • ஒரு நாற்காலியில் உட்கார்ந்து "பாஸ்" போல் போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்க 50 யுவான்.

    சீனாவில் வேலையின்மையை மறைக்க அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து சும்மா இருக்கும் போக்கு டிரெண்டாகி வருகிறது.

    பல பெரிய நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கின்றன. இதனால் வேலை இல்லை என்று சொன்னால் சமூகத்தில் கௌரவக் குறைச்சல், குடும்பத்தில் குறையும் மதிப்பு உள்ளிட்டவை குறித்து பயப்படுபவர்கள் இந்த யுக்தியை கண்டறிந்துள்ளனர்.

    அதிகரித்து வரும் வேலையின்மைக்கு மத்தியில் வேலை செய்வதுபோல் நடிக்கும் இந்த முறையை பலர் பின்பற்றி வருகின்றனர். ஒரு நாளைக்கு 30 யுவான் [சுமார் 350 ரூபாய்] தினசரி வாடகைக்கு இதற்கென்றே அலுவலகம் போன்ற அறைகள் செயல்பட்டு வருகின்றன.

    தினமும் 30 யுவான் கட்டி, காலை முதல் மாலை வரை இங்கு இருந்துவிட்டு, வேலைக்கு சென்று வந்ததுபோல் பலர் பாவலா செய்து வருகின்றனர்.

    வடக்கு சீனாவின் ஹெப்பி [Hebei] மாகாணத்தில் இதுபோன்ற ஒரு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு ரூ.29.9 யுவான் கட்டி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இங்கு இருக்கலாம். மதிய உணவும் அவர்களுக்கு இதோடு வழங்கப்படும்.

    மற்றொரு வைரல் பதிவில், குடும்பத்தினருக்கு அனுப்ப, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து "பாஸ்" போல் போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்க 50 யுவான் வசூலிக்கப்படுவதாக பயனர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

    • ஹூண்டாய் ஆரா காரில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கணவன் இழுத்துச் செல்லப்பட்டார்.
    • புகாரின் பேரில் மஹிர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்

    காருக்குள் மனைவியும் அவரது காதலனும் அமர்ந்திருக்க கணவன் பானட்டில் தொங்கியபடி பயணித்த வீடியோ வைரலாகி வருகிறது.

    உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் ஒரு பரபரப்பான சாலையில் வேகமாகச் சென்ற ஹூண்டாய் ஆரா காரில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கணவன் இழுத்துச் செல்லப்பட்டார்.

    பானட்டில் தொங்கிய நிலையில் பயணித்தவர் சமீர். மஹிர் என்ற நபர் தனது மனைவியை தனது காரில் எங்கோ அழைத்துச் செல்ல முயன்றார் என்றும் இதுபற்றி அறிந்ததும் காரை நிறுத்த முயன்று பானட்டில் ஏறியதாகவும் சமீர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் மஹிர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வழக்குப்பதிவு செய்த தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சமீரின் மனைவியும் மஹிரும் காதலித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். 

    ×