search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "viral"

    • டெட்பூல் திரைப்படத்திற்கு இந்தியாவிலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர்.
    • இப்படம் வரும் 26ஆம் தேதி திரையங்களில் வெளியாக உள்ளது.

    மார்வெல் யுனிவர்ஸின் டெட்பூல் திரைப்படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது Deadpool & Wolverine என்ற படம் வெளியாக உள்ளது.

    ஷான் லெவி இயக்கும் இப்படத்தில் ரியான் ரெனால்ட்ஸ் மற்றும் ஹக் ஜேக்மேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் 21 லேப்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான இந்த படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    டெட்பூல் திரைப்படத்திற்கு இந்தியாவிலும் பல்வேறு ரசிகர்கள் உள்ளனர். அவ்வகையில் வரும் வாரம் வெளியாகவுள்ள டெட்பூல் & வோல்வரின் படத்திற்கான கொண்டாட்டங்களில் இந்திய ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    டெட்பூல் & வோல்வரின் படம் வெளியாவதை ஒட்டி ஐதராபாத்தில் இப்படத்தின் மிகப்பெரிய கட் அவுட்களை வைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக ஹக் ஜேக்மேன் பகிர்ந்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.
    • வகுப்பில் சுவர் இடிந்தபோது சுவரின் அருகே இருந்த மாணவனும் சுவரோடு கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது.

    குஜராத் மாநிலத்தில் 7 ஆம்  வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த  பள்ளியின் வகுப்பறை இடிந்து விழுந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் உள்ள வதோதராவில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயண் குருகுல் பள்ளியின் முதல் தளத்தில் இருந்த 7 வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையின்  பக்கவாட்டுச் சுவர் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.

    வகுப்பறையில் இருந்த மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு தலைமையாசிரியர் உட்பட  அனைவரும் அங்கு ஓடி வந்து  மாணவ்ர்களை அங்கிருந்து மீட்டனர். இந்த விபத்தில் ஒரு மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வகுப்பறையின் சுவரானது கீழ் தளத்தில் இருந்த, மாணவர்கள் சைக்கிள் நிறுத்தும் இடத்த்தின்மீது விழுந்துள்ளது.

    வகுப்பில் சுவர் இடிந்தபோது  சுவரின் அருகே இருந்த மாணவனும் கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது. இதற்கிடையில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து  பள்ளிக் கட்டடங்களின் தரம் குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. 

    • பெங்களூரில் டாட்டூ சூத்ரா ஸ்டூடியோ வைத்திருக்கும் கலைஞர் ரிதேஷ் அகாரியா
    • அவரது நெஞ்சில் “F**k the police” என்று எழுத சொல்லியதாக தெரிவித்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள டாட்டூ கலைஞர் ஒருவர் "F**k the police" என்று நபர் ஒருவரின் நெஞ்சில் குத்திய டாட்டூவை இணையத்தில் பகிர்ந்து வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார். பெங்களூரில் டாட்டூ சூத்ரா ஸ்டூடியோ வைத்திருக்கும் ரிதேஷ் அகாரியா என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நபர் ஒருவரின் நெஞ்சில் "F**k the police" என்று எழுதப்பட்டிருந்த டாட்டூவை பகிர்ந்ததிலிருந்தே இந்த பிரச்சனை தொடங்கியுள்ளது.

     

    இந்த புகைப்படம் வைரலாக நிலையில் போலீசின் கவனத்துக்கும் இது சென்றுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ரிதேஷ், தனது கடைக்கு வந்த வெளிநாட்டுக்காரர் ஒருவர் அவரது நெஞ்சில் "F**k the police" என்று எழுத சொல்லியதாக தெரிவித்துள்ளார்.

    இருந்தபோதிலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக டாட்டூ கலைஞர் ரிதேஷ் அகாரியா மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 352 இந்த கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    • அன்புத் தொல்லைகளிலிருந்து தப்பிக்க மெஸ்ஸி, மெய்ப்பாதுகாப்பாளர் அதாவது பாடிகார்ட் ஒருவரை நியமித்துள்ளார்.
    • அதவாது கிட்டத்தட்ட கருடன் பட சூரி போல் மெஸ்ஸி மீது யாரவது கை வைக்க முயன்றால் கூட உடனே தடுத்து விடுகிறார்.

    அர்ஜென்டினவைச் சேர்ந்த கால்பந்துலகின் ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பிரபலமாக இருப்பதில் பல்வேறு பிரச்சைனைகளும் உள்ளது. பொது நிகழ்ச்சிகள், விமான நிலையங்கள் என ரசிகர்களின் அன்புத் தொல்லையை பல பிரபலங்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. இதில் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில், வேலியை எகிறிக் குதித்து மைதானதுக்குள்ளேயே வந்துவிடும் நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கிறது.

    எனவே இவ்வாறான அன்புத் தொல்லைகளிலிருந்து தப்பிக்க மெஸ்ஸி, மெய்ப்பாதுகாப்பாளர் அதாவது பாடிகார்ட் ஒருவரை நியமித்துள்ளார். இப்போது விஷயம் என்னவென்றால் மெஸ்ஸியின் பாடிகார்டான யாசைன் சூகோ தனது அசாதாரணமான முன்னுணர்வால் அதாவது ரிப்ளெக்ஸ்கலால் மெஸ்ஸியிடம் ஓடிவரும் ரசிகர்களை அவர்கள் நெருங்குவதற்குள் சடாரென முன்வந்து தடுத்துவிடுகிறார்.

    Messi's bodyguard byu/Efficient_Sky5173 ininterestingasfuck

    அதவாது கிட்டத்தட்ட கருடன் பட சூரி போல் மெஸ்ஸி மீது யாரவது கை வைக்க முயன்றால் கூட உடனே தடுத்து விடுகிறார். அவரின் இந்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. அமெரிக்க ராணுவத்தின் கடற்படையில் இருந்த யாசைன் சூகோ ஈராக்கிலும் , ஆப்கனிஸ்தானிலும் பணியாற்றியுள்ளார். மெஸ்ஸி கேப்டனாக இருக்கும் மியாமி கிளப் கால்பந்து அணியின் தலைவர் டேவிட் பெக்கம் ரெக்கமெண்டேஷனில் யாசைன் மெஸ்ஸியின் பாடிகார்ட் ஆகியுள்ளாராம்.  தனது சமூக வலைதள பக்கத்தில் ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டும்  பிரபலமாகியுள்ளார் யசைன் சூகோ.

     

    • பராமரிப்பாளர்கள் யானைகளை வழிக்கு கொண்டுவர வாலை பிடித்து இழுத்தால் அவை பயந்துள்ளது என்று கூறப்படுகிறது.
    • மக்கள் அலறியடித்து பயந்து சிதறிய இந்த சம்பவதின் வீடியோ இணையதளத்தில் பரவி வைரழகை வருகிறது

    இலங்கை தலைநகர் கொழும்பு -வுக்கு தெற்கே 280 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கதிர்காமம் பகுதியில் நேற்று நடந்த இந்து மத கோவில் நிகழ்ச்சியில் யானைகள் அழைத்துவரப்பட்டன.  இரவு கொண்டாட்டங்களின்போது திடீரென பாகனின் கட்டுப்பாட்டை இழந்த யானைகள் அச்சத்தில் பிளிறியதால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தினர்

    இதனால் ஏற்பட்ட நெரிசலில் 12 பேர் காயமடைந்துள்ளனர். சிவப்பு, நீல ஆடைகளுடன் அலங்கரிக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு அழைத்து  அழைத்துவரப்பட்ட  யானைகள் மணி இசையாலும், பராமரிப்பாளர்கள் அதை வழிக்கு கொண்டுவர வாலை பிடித்து இழுத்தாலும் யானை பயந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    மக்கள் அலறியடித்து பயந்து சிதறிய இந்த சம்பவதின் வீடியோ இணையதளத்தில் பரவி வைரழகை வருகிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யானை துன்புறுத்தப்பட்டதற்கு விலங்குகள் நல ஆர்வர்களிடமிருந்து கண்டங்கள் குவிந்து வருகிறது.

    • வீட்டின் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
    • வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    கேரளாவில் இருந்து வந்து தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    சினிமாவை தாண்டி தொழில் அதிபராகவும் உயர்ந்து இருக்கிறார். சென்னை எழும்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

    இந்த நிலையில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் வசிக்கும் போயஸ் கார்டனில் நயன்தாரா இடம் வாங்கி வீடு கட்டி வருவதாக ஏற்கனவே தகவல் பரவியது.

    தற்போது வீடு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் புதிய வீட்டில் நயன்தாரா குடியேறி இருக்கிறார். வீட்டின் முன்னால் எடுத்த புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அவை வைரலாகின்றன.

    புதிய வீட்டுக்கு சென்ற நயன்தாராவுக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். நயன்தாரா தற்போது தி டெஸ்ட், மண்ணாங்கட்டி, சின்ஸ் 1960, டியர் ஸ்டூடண்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை சுனைனாவுக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • இந்த சேனலுக்கு 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள்.

    தமிழில் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, திருத்தணி, வம்சம், நீர்ப்பறவை, தெறி, கவலை வேண்டாம், , சில்லுக்கருப்பட்டி, தொண்டன், லத்தி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

    இறுதியாக ரெஜினா என்ற திரைப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். அண்மையில் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற இணைய தொடரிலும் சுனைனா நடித்திருந்தார்.

    இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை சுனைனா புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைக் கண்ட ரசிகர்கள், சுனைனா காதலிப்பதாக பல செய்திகளை இணையத்தில் தெரிவித்து வந்தனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது மீண்டும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் நடிகை சுனைனா, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்ததாகவும், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

    இதனையடுத்து சுனைனாவுக்கு யாருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. யார் அந்த மாப்பிள்ளை என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வந்தனர்.

    இந்நிலையில், சுனைனா துபாயைச் சேர்ந்த பிரபல யூடியுபரான கலித் அல் அமேரி என்பரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கடந்த வாரம் தனக்கு நிச்சயம் ஆகிவிட்ட தகவலை கலித் அல் அமேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரை திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண்ணைப் பற்றி தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்தனர்.

    இந்நிலையில், தனது திருமண ஏற்பாடுகளுக்காக கலித் துபாயில் இருந்து இந்தியா வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் திருமணம் செய்துகொள்ள இருக்கும் பெண் நடிகை சுனைனா என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

    துபாயைச் சேர்ந்த கலித் அல் அமேரி தனது பெயரில் ஒரு பிரபல யூடியுப் சேனலை நடத்தி வருகிறார். பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிடும் இந்த சேனலுக்கு 3 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளார்கள். சமீபத்தில் நடிகர் மம்மூட்டியுடனான இவரது நேர்காணல் சமூக வலைதளத்தில் வைரலானது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களுடன் பேச பெரு நிறுவனங்கள் சாட் பாட்களை பயன்படுத்தி வருகிறது.
    • இந்த உரையாடலின் ஆடியோவை பகிர்ந்த அந்த நபர் தான் ஒரு ஏ.ஐயின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளார்.

    உலகம் டிஜிட்டல் மயமாக மாறி வருகிறது என்று கூறிவந்த நிலை வழக்கொழிந்து தற்போது உலகம் செயற்கைத் நுண்ணறிவான ஏ.ஐ மயமாக மாறி வருகிறது என்று கூறும் அளவுக்கு ஏ.ஐ மனிதர்களின் வாழ்க்கையோடு அதிகம் இணங்கத் தொடங்கியுள்ளது. இந்த இணக்கம் ஒரு படி மேலே சென்று மனிதர்களை ஆட்டிப்படைக்கும் சக்தியாக ஏ.ஐ மாறும் என்ற அச்சமும் பரவி வருகிறது.

    போலியான DEEP FAKE புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை உருவாக்குவது தொடங்கி மனிதர்களின் வேலையை பறிப்பது வரை இந்த 21 ஆம் நூற்றாண்டில் மனித குலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக ஏ.ஐ மாறத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஏ.ஐ மூலம் இயங்கும் சாட் பாட்கள் [CHAT BOT] மனிதர்களின் கட்டளை இன்றியே பொய் சொல்லத் தொடங்கியுள்ளது.

     

    வெளிநாடுகளில் வாடிக்கையாளர்களுடன் பேச பெரு நிறுவனங்கள் சாட் பாட்களை பயன்படுத்தி வருகிறது. அமரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்று சேல்ஸ் பிரிவில் வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க ரோபோ கால் சர்வீஸ் மூலம் பிளான்ட் என்று அதிநவீன ஏ.ஐ சாட் பாட்டை பணியமர்த்தியுள்ளனர்.

     

    இந்த சாட் பாட் வாடிக்கையாளர்களிடம் மனிதரைகளைப் போலவே பேசுமாம். இந்நிலையில் நிறுவனத்தின் முன்னாள் நின்றுகொண்டு விஷயம் தெரிந்த நபர் ஒருவர் அந்த நிறுவனத்தின் தொலைபேசி எண்ணுக்கு போன் செய்யவே, போனை அட்டென்ட் செய்த சாட் பாட் பெண்ணைப் போலவே அவரிடம் பேசியுள்ளது.தான் ஒரு சாட் பாட் தான் என தனது குரலில் காட்டிக்கொள்ளவில்லை.

     

    தான் உயிருள்ள மனிதன் தான் என நம்பவைக்க நிறுவனத்துக்குள் வேலை நேர இரைச்சல் இருப்பது போன்ற சத்தங்களை உருவாக்கி அவ்வப்போது பேச்சை நிறுத்தி நிறுத்தி பேசியுள்ளது சாட் பாட். ஆனால் ஏ.ஐ சாட்பாட்டை உருவாக்கிய நிறுவனம் இது எதையும் புரோக்ராம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஏ.ஐ ஆகவே இவ்வாறு ஏமாற்ற கற்றுக்கொண்டுள்ளது.

     

    இந்த உரையாடலின் ஆடியோவை பகிர்ந்த அந்த நபர் தான் ஒரு ஏ.ஐயின் ஆபத்துகளை அம்பலப்படுத்தியுள்ளார். இதனைதொடர்ந்து, இதுபோன்ற பல்வேறு ஏ.ஐ சாட் பாட் களுடன் உரையாடி வல்லுநர்கள் நடத்திய செய்து ஏஐ தொழில்நுட்ப பாட்கள் மனிதர்களின் கட்டளை இல்லாமலேயே இந்த செயல்களை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மனித குலத்துக்கு வருங்காலங்களில் ஏஐ மூலம் பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்றுஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். 

     

    • நேற்றைய தருணத்தை விளக்கும் சரியான வார்த்தைகளை என்னால் தேர்வு செய்ய முடியவில்லை.
    • தனது அறையில் உலகக்கோப்பைக்கு பக்கத்தில் தூங்கி கண்விழிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரோகித் சர்மா செய்யும் ஒவ்வொரு செயல்களும் வைரலாகத் தொடங்கியுள்ளது.

    பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக் கோப்பையை வாஙகியது, மைதானத்தில் உள்ள மண்ணை எடுத்து சாப்பிட்டது என உற்சாகத்தில் ரோகித் செய்து வரும் செயல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

     

    அந்த வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் மைதானத்தில் கோப்பையுடன் படுத்திருக்கும் தனது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ரோகித் சர்மா, தற்போது நான் உள்ள மனநிலையை சிறந்த முறையில் இந்த புகைப்படம் எடுத்துக்காட்டுகிறது. நிறைய வார்த்தைகள் இருக்கின்றன, ஆனால் நேற்றைய தருணத்தை விளக்கும் சரியான வார்த்தைகளை என்னால் தேர்வு செய்ய முடியவில்லை. விரைவில் உங்களுடன் அதை பகிர்வேன்.

    ஆனால் இப்போதைக்கு என்னுடையதும் பில்லியன் கணக்கான மக்களுடையதுமான கனவு நினைவான இன்ப அதிர்ச்சியை கிரகிக்க முயற்சித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்று அதிகாலை தனது அறையில் உலகக்கோப்பைக்கு பக்கத்தில் தூங்கி கண்விழிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். 

     

    • ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் மூலம் ஆசா போஸ்லேவின் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது.
    • ஆஷா போஸ்லேவின் சுயசரிதை 'ஸ்வரஸ்வாமினி ஆஷா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

    மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கையும் இந்திய சினிமாவின் மூத்த பாடகியான 90 வயதாகும் ஆஷா போஸ்லே தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல கிளாசிக் படலக்ளை பாடி ரசிகர்களை கவர்ந்தவர் ஆவார். ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் மூலம் ஆசா போஸ்லேவின் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது. சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற கொஞ்சநேரம் கொஞ்சநேரம் பாடல், ஹே ராம் படத்தில் இடம்பெற்ற நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி என ஆஷா போஸ்லேவின் கிரக்கும் குரலுக்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

    இந்நிலையில் தற்போது ஆஷா போஸ்லேவின் சுயசரிதை 'ஸ்வரஸ்வாமினி ஆஷா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. நேற்று [ஜூன் 28] வெள்ளிக்கிழமை மும்பையில் வைத்து நடந்த இந்த புத்தக வெளியீட்டு விழாவில், ஜாக்கி செராப் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள், பின்னணி பாடகர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் என பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விழாவில் கலந்துகொண்ட பிரபல பின்னணி பாடகர் சோனு நிகாம், விழா மேடையில் வைத்து ஆஷா போஸ்லேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது கால்களை முத்தமிட்டு தண்ணீரால் கழுவிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்ணீரால் ஆஷாவின் கால்களைக் கழுவித் துடைத்த சோனு நிகாம் பின் எழுந்து நின்று ஆஷாவுக்கு தலைவணங்கினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சோனு நிகாம் தமிழில் அஜித்தின் கிரீடம் படத்தில் இடம்பெற்ற விழியினில் உன் விழியினில், ஆர்யாவின் மதராசபட்டினம் படத்தில் இடம்பெற்ற ஆருயிரே, கார்த்தியின் சகுனி படத்தில் இடம்பெற்ற மனசெல்லாம் மழையே உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடுயுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது.

    மெக்சிகோவில் உள்ள தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுரடி 100 டாலர் [சுமார் 8,336 ருபாய்] என்ற கணக்கில் விற்பனை செய்து வருவது அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது. மெக்சிகோ நாட்டின் இக்லேசியா டிஎம்போஸ் தேவாலயதில் நடந்து வரும் இந்த விற்பனை மூலம் மில்லியன் கணக்கான டாலர்கள் தேவாலயத்துக்கு வந்து குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அந்த தேவாலயத்தின் பாதிரியார் கடந்த 2017 ஆம் ஆண்டு கடவுளை சந்தித்தார் எனவும் அப்போது சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்பனை செய்ய அவருக்கு கடவுள் அங்கீகாரம் அளித்தார் எனவும் கூறி தேவாலயம் இந்த விற்பனையில் இறங்கியுள்ளது.

     

    சொர்க்கத்தில் ஒரு சதுரடியின் ஆரம்ப விலை நூறு டாலர்கள், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ஜி.பே ஆப்பிள் பே உள்ளிட்ட தளங்களின் மூலம் ஆன்லைனிலேயே பணம் செலுத்தலாம் என்று விளம்பரப்படுத்தியுள்ளது.

    சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இந்த தேவாலயம் விளையாட்டாகவே இந்த வியாபாரத்தை தொடங்கியுள்ளது. ஆனால் இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட பக்தர்கள் - வாடிக்கையாளர்கள் சொர்க்கத்தில் உள்ள மனைகளை வாங்கிக் குவித்து வருகின்றனர். இதற்கிடையில் இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா அடுத்ததாக 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தை 10 மொழிகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா அடுத்ததாக 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார். சிவா இதற்கு முன் நடிகர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 அஜித் படங்களை இயக்கியவராவர்.

    மாபெரும் பொருட் செலவில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது . படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொள்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    கங்குவா படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகியது. வெளியான குறுகிய நேரத்தில் பலக் கோடி பார்வைகளை பெற்றது. டீசரில் சூர்யா மிக அற்புதமாக நடித்து இருப்பார். படத்தை 10 மொழிகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    இப்படத்தின் மீது ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர் பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுக்குறித்து படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டரில் மனித பிணங்கள் மலைப் போல குவித்து வைக்கப்பட்டுள்ளது அதன் மேல் சூர்யா ஒரு வாழ் ஏந்தியப் படி காணப்படுகிறார்.


    அக்டோபர் 10 ஆம் தேதி ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன்  திரைப்படமும் வெளியாகவுள்ளது. அதே நாலில் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் வெளியாகப்போவதால் . மிகப்பெரிய போட்டி இந்த இரண்டு படங்களிடையே உருவாகப்போவது உறுதி. இதனால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். சூர்யா தற்பொழுது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா44  என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×