என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "viral"

    • இந்த 2 வினாடி வீடியோ இணையத்தில் வைரலாகி 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
    • இளம் பெண், ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும்போது கேமராவைப் பார்க்கிறாள்.

    இளம்பெண் ஒருவரின் 2 வினாடி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், வெள்ளை நிற உடையணிந்து, வெள்ளி நகைகள் மற்றும் அச்சிடப்பட்ட பந்தனா அணிந்த இளம் பெண், ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும்போது கேமராவைப் பார்க்கிறாள்.

    இந்த 2 வினாடி வீடியோ இணையத்தில் வைரலாகி 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதன்மூலம் ரூ. 5 லட்சம் வருவாயை அப்பெண் ஈட்டியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    • மேலாளருடனான வாட்சப் உரையாடல் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    • உங்களுக்கு இப்போது விடுப்பு கொடுக்க முடியாது. அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

    ஆட்டு மந்தைகளைப் போல பணி நீக்கம் செய்யப்படுவதும், தனிப்பட்ட வாழ்க்கையை வாழ முடியாத அளவுக்கு எந்த நேரத்திலும் மீட்டிங், பணிச்சுமை என அலைக்கழிக்கப்படுவதும் கார்ப்பரேட் ஊழியர்கள் நவீன கொத்தடிமைகளாக மாறி வருவதற்காக அறிகுறி என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

    இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பல சம்பவங்களும் அவ்வப்போது வெளிவருகின்றன.

    அந்த வகையில், பிரசவ வலி ஏற்பட்ட மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, தனக்கு 2 நாட்கள் லீவ் வேண்டும் என தனது நிறுவன மேலாளரிடம் கேட்ட ஊழியருக்கு கிடைத்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    மேலாளருடனான வாட்சப் உரையாடல் புகைப்படத்தை பகிர்ந்து Reddit சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட இந்த அனுபவம் விமர்சனங்களை ஏற்ப்படுத்தி வருகிறது

    அந்த பதிவின்படி, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் ஊழியர் பிரசவ வலி ஏற்பட்ட தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அவரை கவனித்துக்கொள்வதற்காக 2 நாட்கள் தனது நிறுவன மேலாளரிடம் விடுப்பு கேட்டுள்ளார்.

    இதற்கு பதியளித்த மேலாளர், 'உங்களுக்கு இப்போது விடுப்பு கொடுக்க முடியாது. அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனைவியின் பிரசவத்திற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்? வேண்டுமானால் மருத்துவமனையில் இருந்து வேலை செய்ய முடியுமா?' என்று பதிலளித்தார்.

    இதற்கு பதிலளித்த ஊழியர்,"அது சாத்தியமில்லை, மருத்துவமனையில் மனைவியை கவனித்துக் கொள்ள வேண்டியவன் நான். மருத்துவக் வாங்க செல்வது போன்ற வேறு வேலைகளும் உள்ளன. மேலும், மருத்துவமனையில் இருந்து அலுவலக வேலைகளைச் செய்வது சாத்தியமில்லை," என்று பதில் கூறியுள்ளார். இதன்பின் மேலாளர் வேண்டா வெறுப்பாக அவருக்கு விடுப்பு வழங்கியுள்ளார். இந்த பதிவு வைரலாகி விமர்சனங்களை குவித்து வருகிறது. 

    • 'டெல்லியில் ஏதாவது நடக்கப் போகிறதா?
    • இங்கே என்ன நடக்கிறது? என்று குறிப்பிட்டுள்ளார்.

    டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    சம்பவத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு, சமூக ஊடக தளமான 'ரெடிட்' இல் ஒரு மாணவரின் பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    12 ஆம் வகுப்பு படிப்பதாகக் கூறப்படும் அந்த மாணவரின் பதிவில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் 3 மணி நேரம் முன்னதாகவே பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து அவர் சந்தேகம் தெரிவித்தார்.

    மாலை 4 மணியளவில் அவரது பதிவில், 'டெல்லியில் ஏதாவது நடக்கப் போகிறதா?. நான் இப்போதுதான் பள்ளியிலிருந்து வந்தேன். செங்கோட்டை மற்றும் மெட்ரோ நிலையங்களில் முன்பை விட அதிகமான போலீசார், ராணுவ வீரர்கள் மற்றும் ஊடகங்கள் உள்ளனர். மெட்ரோவில் பயணிக்கும்போது கூட இவ்வளவு வீரர்களை நான் பார்த்ததில்லை. இங்கே என்ன நடக்கிறது?" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த பதிவு இடைப்பட்டு சரியாக 3 மணி நேரம் கழித்து 7 மணியளவில் அதே பகுதியில் குண்டு வெடித்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் ஆச்சர்யம் தெரிவித்து வருகின்றனர்.  இதைதொடர்ந்து அந்த பதிவு தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    • கைவினைக் கலைஞர் மொரிசியோ கட்டெலன் வடிவமைத்துள்ளார்.
    • 18ஆம் தேதி நியூயார்க் நகரத்தில் ஏலத்துக்கு வர உள்ளது.

    இந்தியாவில் ராக்கெட் வேகத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் வாங்குவதே பகல் கனவாக மாறி வருகிறது.

    இந்த சூழலில் அமெரிக்காவில் 102.1 கிலோ எடையுள்ள தங்கத்தாலான டாய்லெட் உருவாக்கப்பட்டுள்ளது.

    கைவினைக் கலைஞர் மொரிசியோ கட்டெலன் வடிவைமைத்துள்ள இந்த டாய்லெட், வரும் 18ஆம் தேதி நியூயார்க் நகரத்தில் ஏலத்துக்கு வர உள்ளது.

    இந்த டாய்லெட்டின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் சுமார் 88 கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பளபளவென மின்னும் தங்க டாய்லெட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.  

    • 2017-ல் விமானப்படையின் இரண்டாவது பெண் போர் விமானிகள் பிரிவில் இணைந்தார்.
    • பாகிஸ்தான் ஊடகங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ஷிவாங்கி சிங் பிடிபட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியிருந்தன.

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று முன்தினம் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    அவருடன் புகைப்படத்தில் இருந்த இந்தியாவின் ஒரே பெண் ரஃபேல் விமானி ஷிவாங்கி சிங் கவனம் பெற்றுள்ளார்.

    அம்பாலா விமானப்படை தளத்தில் உள்ள 'கோல்டன் ஆரோஸ்' என்ற 17வது ஸ்க்வாட்ரனின் ஸ்க்வாட்ரன் லீடராக ஷிவாங்கி சிங் பணியாற்றி வருகிறார்.

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவாங்கி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 2017-ல் விமானப்படையின் இரண்டாவது பெண் போர் விமானிகள் பிரிவில் இணைந்தார்.

    ஆரம்பத்தில் அவர் கடினமான மிக்-21 பைசன் விமானங்களை ஓட்டினார். 2020-ல் ரஃபேல் போர் விமானியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை இயக்கிய இயக்கிய முதல் இந்தியப் பெண்மணி ஆனார்.

    பாகிஸ்தான் ஊடகங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ஷிவாங்கி சிங் பிடிபட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியிருந்தன.

    இதன் பின்னணியில் ஜனாதிபதி முர்முவுடன் ஷிவாங்கி சிங் எடுத்துக்கொண்ட புகைப்படம் கவனம் ஈர்த்து வருகிறது.

    இன்று டெல்லியில் நடந்த ஆர்ய சமாஜ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "நமது நாட்டின் மகள்கள் போர் விமானங்களை இயக்குகின்றனர்" என சிவிங்கி சிங்கை குறிப்பிட்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.  

    • இதன் அர்த்தம் என்னவென்று தெரியாமல் பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
    • ஆசிரியர்கள் 67 என்ற எண்ணையே மாணவர்கள் உச்சரிக்க தடை விதிக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.

    Dictionary.com 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த வார்த்தையாக ``67'' ஐத் தேர்ந்தெடுத்துள்ளது. 67 என்ற எண்ணை வார்த்தையாக தேர்தெடுத்திருப்பது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

    இதற்கு காரணம் 67 என்பது ஒரு எண்ணாக அல்லாமல் குறியீடாக இருப்பதே ஆகும். அண்மை காலங்களாக சமூக வலைத்தளங்களில் கஜென் ஆல்பா சிறுவர் சிறுமிகள் 67 என்ற எண்ணை அதிகம் பதிவிடுகின்றனர்.

    2010 and 2024 இடையில் பிறந்தவர்கள் ஜென் ஆல்பா ஆவர். அவர்களுக்கு 67 என்பது உற்சாகத்தை வெளிப்படுத்ததும் ஒரு குறியீட்டு வழியாக மாறியுள்ளது. டிக்டாககில் 67 என்ற ஹேஷ்டேக் 2 மில்லியன் பதிவுகளை தாண்டியுள்ளது.

    இதன் அர்த்தம் என்னவென்று தெரியாமல் பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    டிரெண்டின் படி, இதை 'அறுபத்தி ஏழு' என்று உச்சரிக்காமல், 'சிக்ஸ்-செவன்' என்றுதான் சொல்ல வேண்டும்.

     67 எப்படி குறியீடாக மாறியது என்பது உறுதியாகத் தெரியவில்லை. இதற்கு ஒரு நிலையான வரையறை இல்லை, அதன் பயன்பாடு சூழலுக்கு சூழல் மாறுபடும் என்று Dictionary.com தெரிவித்துள்ளது.

    இதன் பயன்பாடு, அமெரிக்க ராப் பாடகர் ஸ்க்ரில்லாவின் 'Doot Doot (6 7)' என்ற பாடலில் இருந்து வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

    பள்ளிகளில் வகுப்பில் சில மாணவர்கள் ஆறு என்று சொல்லும்போது, மற்றவர்கள் ஏழு என்று கத்துகின்றனர். ஆசிரியர்கள் 67 என்ற எண்ணையே மாணவர்கள் உச்சரிக்க தடை விதிக்கும் அளவுக்கு 67 என்பது இளைய தலைமுறையின் குறியீடாக மாறியுள்ளது.  

    • 93-வது இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டது.
    • இனிப்பு வகைகள்: பாலகோட் டிராமிசு, முசாஃபராபாத் குல்ஃபி ஃபலூடா, முரிட்கே மீத்தா பான்.

    ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 93-வது இந்திய விமானப்படை தினம் நேற்று கடைபிடிக்கப்படுகிறது.

    உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

    ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை அணிவகுப்பை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் பார்வையிட்டார்.

    இந்நிலையில் நேற்று விழாவின் ஒரு பகுதியாக இரவு விருந்தின்போது பரிமாறப்பட்ட உணவுகளின் பட்டியல் வைரலாகி வருகிறது.

    பாகிஸ்தானை கிண்டலடிக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறிவைக்கப்பட்ட இடங்களின் பெயரால் பல உணவுகளுக்கு பெயரிடப்பட்டது.

    மெனுவில் உள்ள உணவுகள்: ராவல்பிண்டி சிக்கன் டிக்கா மசாலா, ரஃபிகி ராரா மட்டன், போலாரி பனீர் மேத்தி மலாய், சுக்கூர் ஷாம் சவேரா கோஃப்தா, சர்கோதா தல் மக்கானி, ஜகோபாபாத் மேவா புலாவ், பகவல்பூர் நான்.

    இனிப்பு வகைகள்: பாலகோட் டிராமிசு, முசாஃபராபாத் குல்ஃபி ஃபலூடா, முரிட்கே மீத்தா பான்.

    மெனுவின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பலரும் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ஏப்ரல் 22 இல் 26 உயிர்களை பறித்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இரவு பாகிஸ்தானில் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. இதில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

    • கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர்-நடிகைகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
    • மற்ற தமிழ் நடிகர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.

    இந்திய சினிமாவின் திரை பிரபலங்கள் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறார்கள் என்பதை படங்களின் வசூலை தாண்டி, சமூக வலைதளங்களில் அவர்களை எத்தனை பேர் தேடினார்கள்? என்ற விவரத்தை வைத்தும் மதிப்பிடப்படுகிறார்கள்.

    அந்தவகையில் கடந்த 10 வருடங்களில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர்-நடிகைகளின் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

    இதில் ஷாருக்கான், சல்மான் கான், விஜய், பிரபாஸ் என நாட்டின் முன்னணி நடிகர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

     ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், ஆலியா பட், இர்பான்கான், அமீர்கான், சுஷாந்த் சிங் ராஜ்புத், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன், அக்ஷய்குமார் முறையே அடுத்தடுத்த இடங்களில் தொடருகிறார்கள்.

    இந்த பட்டியலில் சமந்தா 13-ம் இடத்திலும், தமன்னா 16-ம் இடத்திலும், நயன்தாரா 18-வது இடத்திலும் இருக்கின்றனர். பிரபாஸ் 29-ம் இடமும், தனுஷ் 30-ம் இடமும் பிடித்து இருக்கின்றனர். மற்ற தமிழ் நடிகர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. 

    • பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் (47) 2007 இல் தன்னை விட 25 வயது மூத்த தனது பள்ளி ஆசிரியை பிரிஜிட்டை (72) மணந்தார்.
    • பிரிஜிட் உடைய சகோதரனின் புகைப்படத்துடன் அவரின் புகைப்படத்தை ஒப்பிட்டு இருவரும் வெவ்வேறு ஆட்கள் இல்லை, இருவரும் ஒரே நபர் தான் என்று கூறப்பட்டது.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்(47) 2007 இல் தன்னை விட 25 வயது மூத்த தனது பள்ளி ஆசிரியை பிரிஜிட்டை (72) மணந்தார். அவர் ஒரு மாணவராக இருந்தபோது அவர் அவரது பள்ளி ஆசிரியராக இருந்தார்.

    மேக்ரான் தற்போது பிரான்சின் அதிபராக இரண்டாவது மற்றும் இறுதி பதவிக்காலத்தில் பணியாற்றி வருகிறார்.

    இதற்கிடையே மேக்ரான்ஒரு வினோதமான பிரச்னையை எதிர்கொண்டுள்ளார்.

    அவர் தனது மனைவி ஒரு ஆண் அல்ல பெண் தான் என அமெரிக்க நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    மேக்ரான் உடைய மனைவியும் பிரான்சின் முதல் பெண்மணியுமான பிரிஜிட் மேக்ரோன் ஒரு காலத்தில் ஆணாக இருந்ததாகவும், பாலின மாற்றத்திற்கு உட்பட்டு பெண்ணாக மாறியதாகவும் பல காலமாக வதந்திகள் பரவி வருகின்றன.

    உண்மையில் இந்த சர்ச்சை 2017 இல் பிரான்சில் தொடங்கியது. நடாஷா ரே என்பர் வெளியிட்ட யூடியூப் வீடியோவில் பிரிஜிட் மேக்ரோனின் உண்மையான பெயர் ஜீன்-மைக்கேல் ட்ரோக்னக்ஸ் என்று கூறினார்.

    மேலும் பிரிஜிட் உடைய சகோதரனின் புகைப்படம் என்று நம்பப்படும் ஒன்றை பகிர்ந்து அதனுடன் ஒப்பிட்டு இருவரும் வெவ்வேறு ஆட்கள் இல்லை, இருவரும் ஒரே நபர் தான் எனவும் வீடியோவில் நடாஷா கூறியிருந்தார்.

    இதுதொடர்பான அவதூறு வழக்கு பிரான்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நாடாஷாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.

    இதற்கிடையே அமெரிக்க தீவிர வலதுசாரி அரசியல் விமர்சகர் கேண்டஸ் ஓவன்ஸ் பிரிஜிட் மேக்ரோன் ஒரு ஆண் என்று பேசி வந்தார். அவருக்கு எதிராக மேக்ரான் தம்பதியினர் அமெரிக்க நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தனர்.

    வழக்கின் ஒரு பகுதியாக, பிரிஜிட் மேக்ரான் கர்ப்பம் தரித்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் பிற அறிவியல் ஆதாரங்களை அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக மேக்ரானின் வழக்கறிஞர் டாம் கிளேர் தற்போது தெரிவித்துள்ளார். 

    • பத்து நிமிடங்களுக்குப் பிறகு, அதாவது காலை 8:47 மணிக்கு, சங்கருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்தார்.
    • புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சங்கர் திடீரென மாரடைப்பால் இறந்தார் என்பதை நம்ப முடியவில்லை.

    கர்நாடக மாநிலம் பெங்களூரில் முதுகு வலி காரணமாக மேலதிகாரியிடம் Sick leave கேட்ட ஊழியர் சரியாக பத்து நிமிடங்களுக்குள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

    தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த சங்கர் (40) கடந்த 13 ஆம் தேதி தனது மேலதிகாரி கே.வி. ஐயருக்கு காலை 8:37 மணிக்கு, தனது முதுகு வலி காரணமாக அன்றைய தினம் விடுப்பு வேண்டும் என மெசேஜ் அனுப்பினார். மேலதிகாரி கே.வி.ஐயரும் விடுப்பு வழங்கி ஓய்வு எடுக்குமாறு பதிலளித்தார்.

    ஆனால் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, அதாவது காலை 8:47 மணிக்கு, சங்கருக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென இறந்தார்.

    இந்த துயரச் செய்தியை ஐயர் காலை 11 மணிக்கு அறிந்தார். காலையில் தன்னிடம் விடுப்பு கேட்ட நபர் சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார் என்ற செய்தியை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

    இந்த சம்பவத்தை ஐயர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

    அவரது பதிவில், "புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாத சங்கர் திடீரென மாரடைப்பால் இறந்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது" என்று அவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். இந்தப் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.  

    • அடைமொழிக்கு ஏற்றவாறு அவரின் பாறை போன்ற கட்டுக்கோப்பான உடல் பிரசித்தி பெற்றது.
    • பாக்சிங் வீரராக ராக் நடித்துள்ள தி ஸ்மாஷிங் மெஷின் படம் வரும் அக்டோபரில் திரைக்கு வர உள்ளது.

    WWE முன்னாள் மல்யுத்த வீரரும் பிரபல ஹாலிவுட் நடிகருமானவர் "The Rock" என ரசிகர்களால் அழைக்கப்படும் டுவைன் ஜான்சன் (53 வயது). அடைமொழிக்கு ஏற்றவாறு அவரின் பாறை போன்ற கட்டுக்கோப்பான உடல் வகுக்காவே பல பட வாய்ப்புகள் அவருக்கு வந்து குவிந்தன.

    இந்நிலையில் அண்மையில் ராக் பொதுவெளியில் தோன்றி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளார். அவரின் பிரதான அடையாளமான அவரது ஆஜானுபாகுவான உடல் தோற்றம் குன்றி ஒல்லியாக அவர் காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    இதைப் பார்த்த ரசிகர்கள் அவரது உடல்நிலைக்கு என்ன ஆயிற்று என்று கவலைப்படுகிறார்கள். அவருக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சினை உள்ளதா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என சமூக ஊடகங்களில் இது குறித்து விவாதித்து வருகின்றனர்.

    இருப்பினும், இது அவரது வரவிருக்கும் படத்தில் வரும் கதாபாத்திரத்திற்காக இருக்கலாம் என்று சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். சிலரோ, வயதானால் அப்படிதான் என ஆறுதல்பட்டுக்கொள்கின்றனர். 

    பாக்சிங் வீரராக ராக் நடித்துள்ள தி ஸ்மாஷிங் மெஷின் படம் வரும் அக்டோபரில் திரைக்கு வர உள்ளது.  இது Mark Kerr என்ற பிரபல பாக்சிங் சாபியனின் வாழக்கை வரலாற்று படமாகும். இந்த படத்திற்காகவே ராக் தனது உடல் எடையில் 27 கிலோ குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

    • விமானியின் செயலை விமானியில் இருந்த மற்ற பணியாளர்கள் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் தெரிவித்தனர்.
    • பின்னர் விமானம் தரையிறக்கப்பட்டபின் அவர் கைது செய்யப்பட்டார்.

    இங்கிலாந்தின் லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூ யார்க்குக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.

    அப்போது, விமானத்தை எப்படி ஓட்டுவது என்பதை அதே விமானத்தில் பயணித்த தனது குடும்பத்தினருக்குக் காட்டுவதற்காக விமானத்தின் காக்பிட்-ஐ (விமானி அறைக்கதவை) விமானி ஒருவர் திறந்து காட்டியுள்ளார். இந்த சம்பவத்தால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

    பொதுவாக, விமானக் கடத்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க பயணத்தின்போது காக்பிட் எப்போதும் பாதுகாப்பாக மூடப்பட்டிருக்கும்.

    இந்நிலையில் விதிமுறைகளை மீறியதற்காக விமானி இடைநீக்கம் செய்யப்பட்டார். விமானியின் செயலை விமானியில் இருந்த மற்ற பணியாளர்கள் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் தெரிவித்தனர்.

    ×