என் மலர்
நீங்கள் தேடியது "toilet"
- ஷீஷ்மஹாலில் உள்ள இந்த கழிப்பறைகள் ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ. 1.44 கோடி.
- டெல்லி மக்களுக்கு நல்ல தரமான கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் கட்டுவோம்
டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஆட்சிக்கு ஆம் ஆத்மி - பாஜக இடையே குடுமிப் பிடி சண்டை நிலவி வருகிறது.
அதன் ஒரு பதியாக அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்த சமயத்தில் தனது ஷீஷ்மஹால் பங்களாவுக்குள் எப்படி ஆடம்பரமாக இருந்துள்ளார் பாருங்கள் என ஒரு வீடியோவை பாஜக ஐடி விங் சமீபத்தில் வைரல் செய்தது.
खुद को आम आदमी कहने वाले @ArvindKejriwal की अय्याशी के शीशमहल की सच्चाई हम बताते आए हैं , आज आपको दिखायेंगे भी!जनता के पैसे खाकर अपने लिए 7-Star Resort का निर्माण करवाया है!शानदार Gym-Sauna Room-Jacuzzi की कीमत! • Marble Granite Lighting→ ₹ 1.9 Cr. •Installation-Civil… pic.twitter.com/QReaeNMRQ8
— Virendraa Sachdeva (@Virend_Sachdeva) December 10, 2024
உடற்பயிற்சி கூடம், sauna குளியலறை போன்ற வசதிகளுக்காக ரூ. 3.75 கோடி வரை செலவாகியிருக்கும் என பாஜக ஊகித்துள்ளது. மேலும் பங்களாவில் மார்பிள் கிரானைட் பொருத்த ரூ. 1.9 கோடி, ஜிம் மற்றும் ஸ்பா பொருத்துவதற்கு மட்டும் ரூ. 35 லட்சம், இதர செலவினங்களாக ஒரு ரூ. 1.5 கோடி சேர்த்து பொதுப் பணத்தை அபகரித்து கெஜ்ரிவால் தனக்கென 7-ஸ்டார் ரிசார்ட்டைக் கட்டியுள்ளார் என்று பாஜக விமர்சித்தது. இதை கெஜ்ரிவால் முற்றிலுமாக மறுத்தார்.
இந்நிலையில் கெஜ்ரிவாலின் இந்த குடியிருப்பில் தங்கத்தில் முலாம் பூசப்பட்ட 12 கழிப்பறைகள் உள்ளதாக டெல்லி பாஜக பிரசாரம் செய்து வருகிறது. மக்கள் கூடும் இடத்தில் தங்க நிறத்தில் வெஸ்டர்ன் டாய்லட் கழிவறை மாதிரியை நிறுவி, போஸ்டர்கள் ஒட்டி பாஜக பம்பரமாக சுழன்று புதுவித பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.
டெல்லி பாஜக தலைவர் ஆர்.பி.சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், இது தங்க முலாம் பூசப்பட்ட கழிப்பறை. கெஜ்ரிவால் தனது வீட்டில் இதுபோன்ற 12 கழிப்பறைகளை அமைத்திருந்தார்.
ஷீஷ்மஹாலில் உள்ள இந்த கழிப்பறைகள் ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ. 1.44 கோடி. மொத்தம் ரூ.56 கோடி மதிப்புள்ள மதிப்பும் கழிப்பறைகள் நிறுவப்பட்டன. இங்குள்ள கழிப்பறைகளின் நிலையை நாங்கள் பார்த்திருக்கிறோம். டெல்லியின் நிலைமை இதுதான், ஆட்சியில் இருப்பவர்கள் ஆடம்பரத்திற்காக பொது நிதியை வீணடிக்கிறார்கள், மக்கள் அவதிப்படுகிறார்கள்.
ஆம் ஆத்மி அரசாங்கம் இலவச சலுகைகள், வாக்குறுதிகள் மூலம் டெல்லி மக்களை தவறாக வழிநடத்துகிறது. எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், டெல்லி மக்களுக்கு நல்ல தரமான கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் கட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.
- உள்ளே கரு சிக்கியிருந்ததைப் பார்த்து குழாயை அறுத்து கருவை வெளியே எடுத்தார்
- அவர்கள் அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் குடியிருப்பு ஒன்றின் கழிப்பறைக் குழாயிலிருந்து 6 மாத கரு கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இந்திரபுரம் பகுதியில் உள்ள அந்த குடியிருப்பின் உரிமையாளர் தேவேந்திரன் நேற்று காலையில் தண்ணீர் தேங்கியதால் குழாய் கழன்று விழுந்ததாகவும் குழாயின் உள்ளே கரு சிக்கியிருந்ததைப் பார்த்து குழாயை அறுத்து கருவை வெளியே எடுத்ததாகவும் போலீசிடம் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் இந்திரபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
தனது குடியிருப்பில் உள்ள வீடுகளில் ஒன்பது பேர் வாடகைக்கு வசித்து வருவதாக உரிமையாளர் காவல்துறையிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர்கள் அனைவரையும் போலீசார் விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தி வருகின்றனர். குழாயிலிருந்து மீட்கப்பட்ட 6 மாத கரு பாதுகாக்கப்பாக வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அங்கு வசித்து வரும் 9 வீட்டாரின் டிஎன்ஏ மற்றும் ஓனர் தேவேந்திரன் டிஎன்ஏ, கருவில் உள்ள டிஎன்ஏ உடன் ஒப்பீடு செய்யப்பட்டு, அது யாருடன் பொருந்துகிறது என்று ஆராய உள்ளதாக இந்திரபுரம் காவல் உதவி ஆணையர் சுவதந்திர குமார் சிங் தெரிவித்தார்.
- கழிவறையை சுத்தப்படுத்தும் பிரஸ்சில் கேமரா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
- செல்போனை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பயன்படுத்தும் கழிப்பறைகள் தனித்தனியாக உள்ளன.
நேற்று கழிவறைக்கு சென்ற பெண்நர்சுகள், கழிவறையில் கேமரா வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கழிவறையை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் பிரஸ்சில் பேனா காமிரா ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி நர்சுகள் ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவ அலுவலர் மாரிமுத்துவிடம் புகார் செய்தனர். அவரும், டாக்டர்களும் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பேனா காமிரா இருந்ததை உறுதி செய்தனர்.
பின்னர் அவர்கள் பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அங்கு பயிற்சி ஆர்த்தோ டாக்டராக பணியாற்றும் வெங்கடேஷ் (வயது 33) என்பவர் கழிவறையில் பேனா கேமரா பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பெண்களை தவறாக சித்தரித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் வெங்கடேஷ் பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை வருகிற 13-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வெங்கடேஷ் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
கைதான டாக்டர் வெங்கடேசன், கிருஷ்ணகிரி மாவ ட்டம் ஊத்தங்கரை தாலுகா கீழ்குப்பம் அருகே உள்ள பனமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கோவையில் வசித்து வருகிறார்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்த இவர் பட்ட மேற்படிப்புக்காக கடந்த மாதம் 16-ந் தேதி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.
அங்கு சபல புத்தியால் பெண்கள் பயன்படுத்தும் கழிவறையில் கேமரா பொருத்தி போலீசில் சிக்கிக் கொண்டார். கழிவறையில் காமிரா இருந்ததை நர்சுகள் பார்த்து முதலில் வெங்கடேசிடம் தான் தெரிவித்துள்ளனர்.
உடனே அவர் கேமராவில் இருந்த மெமரி கார்டை எடுத்துவிட்டு விசாரிப்பதாகக் கூறி இருக்கிறார். பிரச்சனை பெரிதானதும் வெங்கடேசும் அங்கு சென்று விசாரிப்பது போல் நடித்துள்ளார்.
ஆனால் போலீசார் ஆஸ்பத்திரியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் வெங்கடேஷ் கழிவறைக்கு சென்று வந்த காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் பேரிலேயே அவரை போலீசார் பிடித்தனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆன்லைன் வாயிலாக பேனா கேமராவை வெங்கடேஷ் வாங்கியிருக்கிறார். அதனை யாருக்கும் தெரியாமல் கழிவறையில் மறைத்து வைத்துள்ளார்.
அந்த கேமராவில் பதிவான காட்சிகளை செல்போனில் பார்த்து ரசித்துள்ளார். ஆனால் கேமரா வைத்த சில நாட்களிலேயே சிக்கிக் கொண்டார்.
அவரிடம் இருந்து செல்போன் மற்றும் மெமரி கார்டு போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள். அவர் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் மட்டும் தான் இப்படி செய்தாரா அல்லது பணியாற்றிய வேறு இடங்களில் இடங்களிலும் இப்படி ஒழுங்கீனமாக நடந்து கொண்டாரா என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்காக அவரது செல்போனை போலீசார் ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர்.
பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் ஒருவர் இழிவான செயல், பெண் டாக்டர்கள், செவிலியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
- மதிப்பெண்களுக்காக அவர்கள் தங்களின் இயற்கை உபாதையையும் அடக்கிக்கொள்ளும் அவலம் நிகழ்ந்துள்ளது
- பாத்ரூம் போகாமல் வகுப்பறையிலேயே இருந்து குழந்தைகள் பாடத்தைக் கவனிக்கின்றனர்.
அமெரிக்காவில் சேர்ந்த கணக்கு ஆசிரியை மாணவர்கள் கழிவறை செல்ல இடைவேளை எடுத்துக்கொள்ளாமல் இருக்க போனஸ் மதிப்பெண்கள் வழங்கி ஊக்குவித்த சம்பவம் கண்டனத்தைக் குவித்து வருகிறது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த இந்த கொடுமை குறித்து அங்கு பயின்று வந்த சிறுமியின் தாய் சமூக வளைத்ததில் பதிவிட்டதை அடுத்து இந்த விவகாரம் வைரலாகி வருகிறது.
மதிப்பெண்களைத் தேடி ஓடும் ரேசாக இந்தியா உட்பட உலகம் முழுமைக்கும் கல்வியானது தரம் தாழ்ந்து கிடக்கிறது. அந்த வகையில் சிறுவர்கள் மதிப்பெண்களே முக்கியம் என்று மூளைச்சலவை செய்யப்பட்டதால் அந்தமதிப்பெண்களுக்காக அவர்கள் தங்களின் இயற்கை உபாதையையும் அடக்கிக்கொள்ளும் அவலம் நிகழ்ந்துள்ளது.
'எனது மகளின் கணக்கு ஆசிரியை ஒரு வினோதமான டாய்லட் பாலிசி வைத்திருக்கிறார். அதன்படி வாரத்துக்கு ஒரு நாள் மட்டுமே பள்ளியில் குழந்தைகளை பாத்ரூம் போக அவர் அனுமதிக்கிறார், அதன்படி பாத்ரூம் போகாமல் வகுப்பறையிலேயே இருந்து பாடத்தைக் கவனிக்கும் குழந்தைகளுக்கு அவர்அகாடெமிக் பாயிண்ட்ஸ் எனப்படும் குழந்தைகள் படிக்கும் தரத்தை நிர்ணயிக்கும் மதிப்பெண்களை போனசாக வழங்குகிறார்' என்று தனது சமுக வலைத்தள பதிவில் சிறுமியின் தாய் குறிப்பிட்டுள்ளார்.
My daughter's math teacher has a rule that they only get one bathroom pass per week, AND, if they don't use it, they get academic extra credit. I am livid. But my daughter is mad that I want to email the teacher and CC the principal. Am I wrong here?
— Seets? (@MamaSitaa__) September 5, 2024
மேலும் இதுகுறித்து பிரின்சிபலுக்கு புகார் தெரிவித்து மெயில் அனுப்பியதற்கு தனது மகள் தன்னிடம் கோபித்துக்கொள்ளும் அளவுக்கு அவ்விஷயம் நார்மலைஸ் ஆக்கப்பட்டுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிரைவசி கருதி தனது மகளின் வயதையும் பள்ளி பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
- ஒவ்வொரு கழிவறைக்கும் ரூ. 25 கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதிய வரி விதிப்புக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இமாச்சல பிரதேசம்:
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் நகர்ப்புறங்களில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வரியை அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய விதியின் கீழ், மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஒவ்வொரு கழிப்பறைக்கும் மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு கழிவறைக்கும் ரூ. 25 கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் சுமார் 10 லட்சம் குடியிருப்பாளர்களை பாதிக்கும் ஒரு முடிவாகும்.
இந்த கட்டணம் ஏற்கனவே செலுத்தி வரும் கழிவுநீர் வடிகால் கட்டணத்துடன் சேர்க்கப்படும் என்றும், சேகரிக்கப்பட்ட தொகை ஜல் சக்தி துறைக்கு செலுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
பல நகர்ப்புற வீடுகளில் பல கழிப்பறைகள் இருப்பதால் நகர்ப்புறங்களில் இந்த வரி குறிப்பாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது, கழிவறை கட்டுவது அவசியம் என்று அரசு ஒருபக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தது. இப்போது கழிப்பறைக்கு வரி போடப்படுகிறது. இதனால் குடும்பங்களுக்கு நிதி சுமை அதிகரிக்கிறது.
இந்த புதிய வரி விதிப்புக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவின்பேரில் கொட்டாம்பட்டி வட்டார கல்வி அதிகாரி மற்றும் தொடக்கக்கல்வி அதிகாரி உள்ளிட்டோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
- தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை:
மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் பட்டூர் என்ற கிராமம் உள்ளது. இந்த நிலையில் பள்ளியின் கழிவறையை அங்கு படிக்கும் மாணவிகள் சுத்தம் செய்வது போன்ற வீடியோ ஒன்று வலைத்தளங்களில் பரவியது.
அந்த ஊரை சேர்ந்த பெண் ஒருவரின் தூண்டுதலின் பேரில் மாணவிகள் சிலரை நடிக்க வைத்து இந்த வீடியோ எடுத்ததாகவும் பரபரப்பானது. இதுகுறித்து தெரியவந்ததும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா உத்தரவின்பேரில் கொட்டாம்பட்டி வட்டார கல்வி அதிகாரி சாந்தி மற்றும் தொடக்கக்கல்வி அதிகாரி உள்ளிட்டோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா கூறுகையில், "இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தொடக்கக்கல்வி அதிகாரிகளின் அறிக்கையை தொடர்ந்து, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கூறப்படும் பிற குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது" என்றார்.
- பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றன.
- தீயணைப்புத்துறை வீரர்களை வரவழைத்து கழிவறையின் கதவை உடைத்து உள்ளே பதுக்கி இருந்த வாலிபரை பிடித்து நத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நகரின் மையப் பகுதியில் இருந்து வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 1500 மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றன. இந்நிலையில் நேற்று வாலிபர் ஒருவர் பள்ளி கழிவறையில் பதுங்கி இருந்துள்ளார்.
இதைப் பார்த்த கழிவறைக்கு சென்ற மாணவிகள் கூச்சலிட்டவாறு பதட்டத்துடன் சென்று இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பார்த்தபோது வாலிபர் ஒருவர் கழிவறைக்குள் கதவை சாத்திக் கொண்டு திறக்காமல் இருந்துள்ளார்.
இதையடுத்து அருகில் இருந்த தீயணைப்புத்துறை வீரர்களை வரவழைத்து கழிவறையின் கதவை உடைத்து உள்ளே பதுக்கி இருந்த வாலிபரை பிடித்து நத்தம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சப் இன்ஸ்பெக்டர் விஜய பாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நத்தம் காமராஜர் நகரைச் சேர்ந்த சின்னவர் மகன் பெரியசாமி (வயது 24)என்பது தெரியவந்தது.
மேலும் வாலிபர் எதற்காக கழிவறைக்கு சென்றார்? வேறு குற்ற வழக்குகளில் ஏதும் தொடர்புடையவரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கழிவறைக்கு சென்றபோது தவறி வழுக்கி விழுந்தார்.
- புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே விக்ரமம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 51) கொத்தனார். சம்பவத்தன்று சுப்ரமணியன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் கழிவறைக்கு சென்றபோது தவறி வழுக்கி விழுந்தார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுப்ரமணியன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- காவலர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க நடமாடும் கழிப்பறை வாகனங்கள் அனுப்பப்பட்டு, போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
- 10 நடமாடும் கழிப்பறை வாகனங்களும் தினசரி பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில், வி.வி.ஐ.பி.க்கள் வழி பாதுகாப்பு பணி மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு, ஆண் மற்றும் பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பணியிலிருக்கும் ஆண் மற்றும் பெண் காவலர்கள், இயற்கை உபாதைகளை கழிக்க நடமாடும் கழிப்பறை வாகனங்கள் அனுப்பப்பட்டு, போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை பெருநகர காவல்துறையின் 4 மண்டலங்களுக்கும் தலா 2 கழிப்பறை வாகனங்கள் என 8 கழிப்பறை வாகனங்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறைக்கு 2 கழிப்பறை வாகனங்கள் என 10 நடமாடும் கழிப்பறை வாகனங்களும் தினசரி பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கழிப்பறை வாகனங்களிலும் 2 இந்தியன் வகை கழிப்பறை, 2 மேற்கத்திய கழிப்பறைகள் என 4 கழிப்பறைகளும், உடை மாற்றுவதற்கு 1 சிறிய அறை, கை கழுவுவதற்கு 2 வாஷ் பேஷின்கள், தண்ணீர் நிரப்பி வைத்துக் கொள்ள 1 தண்ணீர் தொட்டி, பெண் காவலர்கள் கழிப்பறை வாகனங்களில். 5 ரூபாய் நாணயம் செலுத்தினால் நாப்கின்கள் வழங்கும் எந்திரம், சிறிய குப்பை தொட்டி ஆகியவை பொருத்தப்பட்டு, நல்லமுறையில் இயங்கி வருகிறது. இவைகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு கழிப்பறை வாகனம் தினசரி தலைமைச் செயலகத்தில் நிறுத்தப்பட்டு, அங்கு பணிபுரியும் பெண் போலீசார் பயன்படுத்தி வருகின்றனர்.
- நீலகண்டன் : திருவையாறு பஸ் நிலைய ஆக்கிரமிப்பு எப்போது அகற்றப்படும்.
- தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக கழிவறைகள் அதிகளவில் ஏற்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது.
மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் , தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட அய்யன்குளத்துக்கு மத்திய அரசால் 3-வது இடத்திற்கான விருது தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த விருதை அடுத்த மாதம் 27 மற்றும் 28 தேதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் விருது வழங்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காக மத்திய அரசு, தமிழ்நாடு முதலமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் , நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்கள் பேசிய விவரமும் , அதற்கு பதில் அளித்து மேயர் , ஆணையர் பேசிய விவரமும் வருமாறு:-
மண்டல குழு தலைவர் மேத்தா: அய்யன் குளம், அழகியகுலத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி.
ரம்யா சரவணன்: அய்யன் குளத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
காந்திமதி : கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரது ஆட்சியில் நகராட்சியாக இருந்த தஞ்சாவூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
தஞ்சை தற்காலிக மீன் மார்க்கெட் இடமாற்றம் எப்போது ? தஞ்சாவூர் மாநகராட்சியுடன் 13 ஊராட்சிகள் எப்போது இணைக்கப்படும்.
ஜெய் சதீஷ்: தஞ்சை செண்பகவல்லி நகரில் பாதாள சாக்கடை இணைப்பு பணி ஒரு மாதமாக நடந்து வருகிறது.
அந்தப் பணியை துரித படுத்த வேண்டும். வானக்கார தெருவில் பைப் லைன் அமைக்கும் பணியையும் துரிதப்படுத்த வேண்டும். சிவகங்கை பூங்கா குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேசவன் : எனது வார்டில் வாய்க்கால் தூர்வார வேண்டும். சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
தூய்மை பணியாளர்கள் குப்பை அள்ள வராத சமயத்தில் அதற்கு மாற்று ஏற்பாடு செய்து குப்பைகளை உடனுக்குடன் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன்: நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 3 விண்கலத்தை ஏவி நமது விஞ்ஞானிகள் மாபெரும் உலக சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையில் தமிழ்நாட்டை சேர்ந்த வீர முத்துவேல் முக்கிய பங்காற்றினார். எனவே தஞ்சை மாநகராட்சி பள்ளிகளில் ஏதாவது ஒரு பள்ளி ஆய்வகத்துக்கு வீர முத்துவேல் பெயர் சூட்ட வேண்டும். அருளானந்தநகர் 4, 5-வது தெருவில் பேவர் பிளாக் அமைக்கும் பணியை தொடங்கி உடனே முடிக்க வேண்டும். தினமும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஏராளமானோர் வெளியூர்களுக்கு செல்வதால் அவர்களின் வசதிக்காக இலவச கழிவறையை அமைக்க வேண்டும். பெத்தண்ணன் கலையரங்கம் பணிகள் உரிய அனுமதி பெற்று நடைபெற்றதா ? என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
நீலகண்டன் : திருவையாறு பஸ் நிலைய ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது எப்போது ?
துணை மேயர் அஞ்சுகம் பூபதி:
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக கழிவறைகள் அதிகளவில் ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டு மக்களுக்கும் சுகாதார அட்டை வழங்க வேண்டும். ஆணையர் சரவணகுமார் :
தஞ்சை மாநகராட்சியில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கு முன்னர் இருந்ததை விட தற்போது சாலைகள் அனைத்தும் புதுப்பொலிவு பெற்றுள்ளன. இதனை வெளியூர் மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மேயர் சண். ராமநாதன்:
தஞ்சை மாநகராட்சியுடன் 13 ஊராட்சிகள் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தி ற்குள் இணைக்கப்படும். பெத்தண்ணன் கலையரங்கம் பணிகள் உரிய வழிகாட்டு முறைகளை பின்பற்றி உடன் அனுமதி பெற்று தான் நடந்தது .
தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ராசா மிராசுதார் மருத்துவமனை வரை உள்ள இடங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த இடத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்படும். தற்காலிக மீன் சந்தை அருகே உள்ள இடத்திற்கு மாற்றும் பணி விரைவில் தொடங்கும். தஞ்சை மாநகராட்சி கல்லு குளம் சுகாதார நிலையம் தர வரிசையில் மாநில அளவில் 2-வது இரண்டாம் இடமும் , கரந்தை சுகாதார நிலையம் 5-வது இடமும் பிடித்துள்ளதற்கு பாராட்டு க்கள். செயற்பொறியாளர் நாளையுடன் பணி ஓய்வு பெற உள்ளார். அவருக்கு நாளை பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற உள்ளது. அவர் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவருக்கு வாழ்த்துக்கள். கவுன்சிலர்கள் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டவுன் போலீஸ் நிலையம் அருகே பெண்கள் மற்றும் ஆண்களுக்கென கழிவறை செயல்பட்டு வந்தது.
- கழிவறையை மீண்டும் திறந்திட மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாவட்ட பொது ஜன பொது நல சங்க தலைவர் அய்யுப் மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லையின் இதய பகுதியாக விளங்கும் டவுனில் மேல ரத வீதி பகுதியில் டவுன் போலீஸ் நிலையம் அருகே பெண்கள் மற்றும் ஆண்களுக்கென கழிவறை செயல்பட்டு வந்தது. அதில் தற்போது பெண்கள் கழிப்பறையை மட்டும் செயல்படாமல் அடைத்து வைத்து பல மாதங்கள் ஆகின்றது. இதன் காரணமாக அந்த பகுதியில் பொருள்கள் வாங்குவதற்கும், போலீஸ் நிலையத்திற்கு வரும் பெண்களும் கடுமையான சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
கடந்த மாதம் 19-ந் தேதி இந்த கழிவறையை மீண்டும் திறந்திட மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க ப்பட்டது. இது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் உள்ளிட்டவர்களிடமும் நேரில் தகவல் தெரிவி க்கப்பட்டது. மாதங்கள் கடந்து விட்ட போதிலும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே உடனடியாக அதனை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
- அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பூங்காவினை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.
- உமா மகேஸ்வரி சுகுமார், பத்மாவதி திருசங்கு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின்கீழ், ரூ.30.60 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட பூங்காவை திறந்து வைத்து, 48 பயனாளிகளுக்கு ரூ.80.23 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பூங்காவினை திறந்து பொதுமக்கள் பயன்பா ட்டிற்கு ஒப்படைத்தார்.
தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தின் சார்பில், தலா ரூ.2.10 லட்சம் மானியம் வீதம், 38 நபர்களுக்கு ரூ.79.30 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை மற்றும் தனி நபர் கழிவறை அமைக்கும் திட்டத்தின்கீழ், தலா ரூ.9,300 வீதம் 10 நபர்களுக்கு ரூ.93 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவறை கட்டுவதற்கான ஆணை என மொத்தம் 48 பயனாளிகளுக்கு ரூ.80.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
இதில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், வளவனூர் பேரூராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ஜீவா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரிய செயற்பொறியாளர் குமாரதுரை, பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அசோக், செயல் அலுவலர் (பொ) ஷேக் லத்திப், கவுன்சிலர்கள் மகாலட்சுமி செந்தில், சசிகலா கபரியேல், சந்திர பாண்டியன், வடிவேல், யுவராஜா, ஆரிஸ், பாஸ்கரன், சிவசங்கரி அன்பரசு, கந்தன், பார்த்திபன், கீதா செந்தில், உமா மகேஸ்வரி சுகுமார், பத்மாவதி திருசங்கு உட்பட பலர் கலந்துகொண்டனர்.