என் மலர்

    நீங்கள் தேடியது "suspended"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ் அதிகாரி ஒருவரே இது போன்று நடந்து கொண்டதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
    • பிரான்சிஸ்கோ மார்லெட் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

    மேரிலேண்ட்:

    அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பிரான்சிஸ்கோ மார்லெட் என்ற போலீஸ் அதிகாரி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் போலீஸ் வாகனம் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணுக்கு திடீரென முத்தம் கொடுத்தார். பின்னர் போலீஸ் அதிகாரி அந்த பெண்ணின் தோளில் கை போட்டவாறு, கையை பிடித்துக்கொண்டு அழைத்துச்சென்று போலீஸ்காரை திறந்து கொண்டு உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டனர்.

    பொது இடத்தில் போலீஸ் உடையில் அவர் செய்த இந்த முத்த செயல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீஸ் அதிகாரி ஒருவரே இது போன்று நடந்து கொண்டதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பிரான்சிஸ்கோ மார்லெட் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் கிராம நிர்வாக அலுவலர் தீபா ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • துறை ரீதியான நடவடிக்கை எடுத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி தீபாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி தீபா (43) கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் கொந்தளம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (45) என்பவர் பட்டாவில் உள்ள பூர்வீக சொத்தில் இருந்து பெயர் நீக்கம் செய்ய ஊராட்சி நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். பட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ஜெகநாதனிடம் கிராம நிர்வாக அலுவலர் தீபா ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

    இதுகுறித்து ஜெகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் மற்றும் போலீசார் தீபாவை நேற்று முன்தினம் கைது செய்து சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி தீபாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

    திருச்சி:

    திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக காமினி பொறுப்பேற்றது முதல் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சமூக விரோத செயல்களை தடுக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.

    அதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி போலீஸ்காரர் காளி முத்துவை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • லிபிய யூதர்களின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.
    • நீதி மந்திரி தலைமையிலான ஆணையத்தின் நிர்வாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

    லிபியா நாட்டின் வெளியுறவுத் துறையின் பெண் மந்திரியாக இருப்பவர் நஜ்லா அல்-மங்குஷ். இவர் சமீபத்தில் இத்தாலியின் ரோம் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, இஸ்ரேலின் வெளியுறவுத் துறை மந்திரி கோஹனை சந்தித்து பேசினார். இது அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பாகும். இதில் லிபிய யூதர்களின் பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.

    இதற்கு லிபியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் பெண் மந்திரி நஜ்லாவை சஸ்பெண்டு செய்து பிரதமர் அப்துல் ஹமித உத்தரவிட்டுள்ளார். நீதி மந்திரி தலைமையிலான ஆணையத்தின் நிர்வாக விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான லிபிய வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, ரோமில் நடந்தது ஒரு அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பாகும். பாலஸ்தீன விவகாரம் தொடர்பாக லிபியாவின் நிலைப்பாட்டை மந்திரி மீண்டும் வலியுறுத்தினார். இந்த சந்திப்பை ஒரு பேச்சுவார்த்தைக்காக முன்வைக்க இஸ்ரேல் முயற்சிக்கிறது என்று கூறியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெல்லையில் உள்ள 4 மண்டலங்களிலும் இருந்து தினந்தோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
    • குப்பை கிடங்கில் பற்றிய தீயை 5 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி டவுன், தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களை உள்ளடக்கியது. இந்த 4 மண்டலங்களிலும் இருந்து தினந்தோறும் 100 டன்னுக்கும் மேலாக மட்கும், மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள ராமையன்பட்டி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.

    தீ விபத்து

    இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால், புகை மூட்டம் ஏற்பட்டு சங்கரன்கோவில் சாலை யில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சிரமம் ஏற்படும். மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. அதனை 5 நாட்களாக தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். அந்த நேரத்தில் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி இதுதொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டார்.

    ஆய்வாளர் சஸ்பெண்டு

    இந்நிலையில் தீ விபத்து நடந்த சில நாட்களில் அந்த பகுதி மேஸ்திரி பெருமாள் என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடந்து வந்தது.

    இந்தநிலையில் தற்போது பேட்டை பகுதி சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன்(வயது 52) சஸ்பெண்டு செய்யப்ப ட்டுள்ளார். பணி யில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி அவர் சஸ்பெண்டு செய்ய ப்பட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோசடிகள் செய்து ரூ.36 லட்சம் அளவுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது
    • தனியார் தொழிற்சாலைக்கு ரூ.17 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மின் பகிர்மான வட்டம் திருப்பூர் டவுன் தெற்கு மின்சார வாரிய பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட தனியார் தொழிற்சாலையில் மின்சார மீட்டரை எரித்து மின்சார கட்டணத்தை குறைத்து மோசடிகள் செய்து ரூ.36 லட்சம் அளவுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியது

    தொடர்பாக தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச., மாநில இணை பொதுச்செயலாளர் ஈ.பி.அ.சரவணன் மாவட்ட கலெக்டரிடம் நேரிடையாக புகார் அளித்தார்.

    இந்தப் புகாரின் அடிப்படையில் கலெக்டர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது .இதில் மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்துமின்சார வாரியம் சார்பில் சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலைக்கு ரூ.17 லட்சத்து 53 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.இந்த மோசடியில் ஈடுபட்ட போர்மேன் பாபு முதல் கட்டமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழகத்தில் சில டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதாக புகார் எழுந்தது.
    • நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வாங்கினால் சஸ்பெண்டு உள்பட நடவடிக்கைகள் பாயும் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    சேலம்:

    தமிழகத்தில் சில டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதாக புகார் எழுந்தது. இதனால் டாஸ்மாக் ஊழியர்களுக்கும் மது வாங்குவோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதையடுத்து மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக வாங்கினால் சஸ்பெண்டு உள்பட நடவடிக்கைகள் பாயும் என டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் மகுடஞ்சாவடி அருகே உள்ள கனககிரி டாஸ்மாக் கடை விற்பனையாளர் கந்தசாமி (45) என்பவர் மது பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து டாஸ்மாக் அதிகாரிகள் அந்த கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது அவர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கியது உறுதி செய்யப்பட்டதால் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மசோதாக்களை தாக்கல் செய்யவுள்ளார்.
    • 75 ஆண்டுகால பாராளுமன்ற வரலாற்றில் சஸ்பெண்டு நடவடிக்கை மோசமானது என்றார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி தொடங்கி யது. தொடர்ந்து நேற்றுடன் 16 நாள் நிறைவு பெற்று இன்று (வெள்ளிக்கிழமை) 17-வது நாளுடன் நிறைவு பெற உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் வன்முறை, பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் உள்ளிட்ட நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் சரிவர நடைபெறாமல் முடங்கியது.

    17 அமர்வுகளாக நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடரில் மத்திய அரசு 21 மசோதாக்களை நிறைவேற்றியது. டெல்லி நிர்வாக சீர்திருத்த சட்ட மசோதா, டிஜிட்டல் தனிநபர் தரவு மசோதா, தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க குழு அமைக்கும் மசோதா, காலாவதியான சட்டங்களை ரத்து செய்யும் மசோதா உள்ளிட்டவை இதில் அடங்கும்.

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவையில் ஆன்லைன் சூதாட்டம் மீது 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கான மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன. மழைக்கால கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மசோதாக்களை தாக்கல் செய்யவுள்ளார். ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவுகளின் அடிப்படையில் இன்று 2 மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில் இன்று காலை பாராளுமன்றம் கூடியது. அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்டு செய்யப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

    தொடர்ந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

    பின்னர் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி பேசுகையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எதிர்க் கட்சிகளின் வழக்கமாகிவிட்டது என்றார். இதை தொடர்ந்து பாராளுமன்றம் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    முன்னதாக மனீஷ்திவாரி எம்.பி. பேசுகையில், அரசிய லமைப்பு சட்டத்தின் 105(1) பிரிவின்படி ஒவ்வொரு எம்.பி.க்கும் பாராளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் உள்ளது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி சஸ் பெண்டு செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு விரோத மானது என்றார்.

    சிவசேனா எம்.பி. பிரி யங்கா சதுர்வேதி பேசுகையில், எதிர்க்கட்சியினர் பேசுவதால் பிரதமர் மோடியும் ஒட்டு மொத்த அமைச்சரவையும் எரிச்சலடைகிறார்கள். எங்கள் கூட்டணியின் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை என்றார்.

    காங்கிரஸ் தலைமைக் கொறடா சுரேஷ் பேசும் போது, எம்.பி.யாக இருந்த வரை சஸ்பெண்டு செய்ததன் மூலமாக பாராளுமன்ற ஜன நாயக அமைப்பை கொன்றுவிட்டார்கள் என்றார். மாணிக்கம்தாகூர் எம்.பி. பேசும்போது, 75 ஆண்டுகால பாராளுமன்ற வரலாற்றில் சஸ்பெண்டு நடவடிக்கை மோசமானது என்றார்.

    பின்னர் 12 மணிக்கு பின்னர் பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டார்கள். இதை தொடர்ந்து மதியம் 12.30 மணி வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மழைக்காலக் கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். மதியம் 12.30 மணிக்கு பின்னர் பாராளுமன்றம் மீண்டும் கூடியது.

    இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், மூத்த வக்கீலின் விளக்கம் மனுதாரருக்கு பதிலாக கிடைத்துவிட்டதால், அதை பதிவு செய்து வழக்கை முடித்து வைக்கிறோம் என்று தீர்ப்பளித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சுஷில் லஞ்ச பணத்தை வாங்கும் போது மேயர் முனேஷ் குர்ஜார் வீட்டில்தான் இருந்தார்.
    • உதவியாளர் நாராயண் சிங் வீட்டில் இருந்து ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மேயராக இருப்பவர் முனேஷ் குர்ஜார். இவரது கணவர் சுஹில்.

    பெண் மேயரின் கணவர் சுஷில் குர்ஜார் நிலம் குத்தகை வழங்கியதற்கு ஈடாக ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கி உள்ளார். அவர் வீட்டில் லஞ்சப் பணத்தை வாங்கும் போது ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

    சுஷில் லஞ்ச பணத்தை வாங்கும் போது மேயர் முனேஷ் குர்ஜார் வீட்டில்தான் இருந்தார்.

    லஞ்ச ஒழிப்பு துறையினர் வீட்டில் சோதனை நடத்தி ரூ.40 லட்சத்தை பறிமுதல் செய்தனர். சுஷில் குர்ஜாருடன் அவரது உதவியாளர்கள் நாராயண் சிங், அனில் துபே ஆகியோரும் பிடிபட்டனர்.

    சுஷில் தனது உதவியாளர்கள் மூலம் நிலம் குத்தகைக்கு விண்ணப்பித்த நபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அந்த நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் செய்தார். அவர்கள் பொறி வைத்து சுஷிலை பிடித்தனர்.

    அவரது உதவியாளர் நாராயண் சிங் வீட்டில் இருந்து ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

    லஞ்சம் வாங்கிய போது மேயர் முனேஷ் குர்ஜார் இருந்தார். அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கருதியும், வழக்கு விசாரணையில் தலையிடக் கூடும் என்பதாலும் அவரை மேயர் பதவியில் இருந்து மாநில காங்கிரஸ் அரசு அதிரடியாக நீக்கி உத்தர விட்டது. இரவோடு இரவாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    மேயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவர் கவுன்சிலர் பதவியில் இருந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேனியில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட இருந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் பதிவு எண் செங்கல்பட்டு மாவட்ட எண்ணாக இருப்பதால் அதன் உண்மைத் தன்மையையும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை ரோட்டில் பறக்கும்படை தனி தாசில்தார் முத்துக்குமார் தலைமையிலான குழுவினர் கடந்த 30-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அந்த லாரியில் 3 டன் அளவில் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தேனியில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட இருந்த அந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கைப்பற்றி வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர். மேலும் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவத்தின் போது லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். அவரது செல்போனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதில் பதிவான அழைப்புகளை உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட தேனியைச் சேர்ந்த ஒச்சு, லாரி டிரைவர், லோடு மேன் பீமன், நுகர்பொருள் வாணிப கழக இளநிலை தர நிர்ணய ஆய்வாளர் தமிழ்செல்வன், எழுத்தர் சுரேஷ் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட வழங்கல் அலுவலர் இந்துமதி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் செந்தில்குமார் முன்னிலையில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை கலெக்டருக்கு அளித்தனர்.

    அந்த அறிக்கையில் குடோன் இறநிலை தரஆய்வாளர் தமிழ்செல்வன், பட்டியல் எழுத்தர்கள் சுரேஷ், சதாசிவம் ஆகியோர் ஒச்சு, டிரைவரை பலமுறை செல்போனில் அழைத்து பேசியுள்ளது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் ஷஜீவனா பரிந்துரையின் பேரில் தமிழ்செல்வம், சுரேஷ், சதாசிவம் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து மண்டல முதுநிலை மேலாளர் உத்தரவிட்டார். பறிமுதல் செய்யப்பட்ட லாரியின் பதிவு எண் செங்கல்பட்டு மாவட்ட எண்ணாக இருப்பதால் அதன் உண்மைத் தன்மையையும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print