என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Punjab"

    • அரியானா- பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் 207 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது.
    • இதனால் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது.

    18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அங்கிட் குமார் தலைமையிலான அரியானா அணியும் அபிஷேக் சர்மா தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது. இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

    அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த ஓவரை அன்ஷுல் காம்போஜ் வீசினார். முதல் பந்தில் 1 ரன் விட்டுக்கொடுத்த அவர் அடுத்த 2 பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அபிஷேக் சர்மா, சன்வீர் சிங் ஆகியோர் முதல் பந்தில் டக் அவுட் ஆனார்கள். இதனால் அரியானா அணிக்கு 2 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை அரியானா அணி முதல் பந்திலேயே அடித்து வெற்றி பெற்றது.

    சூப்பர் ஓவரில் மிரட்டிய அன்ஷுல் காம்போஜ் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அடுத்த கூட்டத்தொடரில் புதிய மசோதா கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    • பஞ்சாப் அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் உள்ளது.

    பஞ்சாப் அரியானா மாநிலங்களின் தலைநகராக  சண்டிகர் யூனியன் பிரதேசம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சண்டிகருக்கு தனியாக துணைநிலை ஆளுநரை நியமிக்கும் வகையில் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்  131வது அரசியலமைப்பு திருத்தம் மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

    அரியானாவில் பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ளது. இரு மாநிலங்களுக்கும் தனித்தனியே ஆளுநர்கள் உள்ளனர். தற்போது சண்டிகர் யூனியன் பிரதேசம் பஞ்சாப் ஆளுநரால் நிர்வகிக்கப்படுகிறது.

    இந்நிலையில் பஞ்சாப் ஆளுநாரால் நிர்வகிக்கப்பட்டுவரும் சண்டிகருக்கு, துணைநிலை ஆளுநர் நியமிக்கப்பட்டால், தலைநகர் மீதான உரிமைகள் நீர்த்துப்போகச் செய்யும் என ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக சண்டிகருக்கு தனியே துணை நிலை ஆளுநரை பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி முதல்வர் பகவந்த் மான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது ஒரு கடுமையான அநீதி என்றும், பஞ்சாபின் தலைநகரைப் அபகரிக்க பாஜக சதி செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.

    ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், இது பஞ்சாபின் அடையாளம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளைத் தாக்குகிறது என்றும் கூட்டாட்சி கட்டமைப்பைப் பிளவுபடுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளார். சண்டிகர் பஞ்சாபிற்குச் சொந்தமானது, அது பஞ்சாபுடனேயே இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

    • பஞ்சாப்பை சேர்ந்த அந்த பெண் ஓல்ட்பரி பகுதியில் வசித்து வந்துள்ளார்.
    • வெள்ளையின இளைஞர் ஒருவர் இந்திய பெண் என்பதால் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    இங்கிலாந்தின் வெஸ்ட்மிட்லாண்ட்ஸ் பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கராம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பஞ்சாப்பை சேர்ந்த அந்த பெண் ஓல்ட்பரி பகுதியில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த பெண்ணை 30 வயதுடைய வெள்ளையின இளைஞர் ஒருவர் இன ரீதியாக இந்திய பெண் என்பதால் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த பெண் மன உளைச்சலுடன் தெருவில் அமர்ந்திருந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் வால்சாலின் பார்க் ஹால் பகுதிக்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்ட இளைஞர் ஒருவர் பெண்ணின் வீட்டு கதவை உடைத்து அத்துமீறி உள்ளே சென்று அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் சேகரித்தனர். இதில் கருப்பு நிற உடை அணிந்து வந்த வாலிபர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அவரின் புகைப்படத்தை வெளியிட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    குற்றவாளியை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்

    • முன்னாள் டிஜிபி-யின் மகன் கடந்த வாரம் மரணம் அடைந்தார்.
    • அவரது மரணத்தில் சந்தேகம் இருந்த நிலையில், வீடியோ ஒன்றில் தந்தை, தாய் மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

    பஞ்சாப் மாநிலத்தில் 33 வயதான அகில் அக்தர் என்பவரின் மரணம் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதற்கிடையே, அகில் ரெக்கார்டு செய்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் என தந்தைக்கும், மனைவிக்கும் இடையில் தொடர்பு இருந்ததாகவும், தாய் மற்றும் சகோதரி தன்னை கொலை செய்ய சதி செய்வதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் அவரது தந்தையான முன்னாள் முன்னாள் டிஜிபி முகமது முஸ்தபா, தாயாரான முன்னாள் பஞ்சாப் மாநில அமைச்சர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ரஜியா சுல்தானா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அகில் அக்தர் கடந்த வியாழக்கிழமை இரவு அவருடைய பஞ்ச்குலா வீட்டில் மயக்கமான நிலையில் கிடந்தார். அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    அகில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருள் உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால், சில மருந்துகளை எடுத்துக் கொண்டதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு அதனால இறந்திருக்கலாம் என தொடக்க விசாரணையில் கண்டுபிடித்தாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அகில் பதிவு செய்து, குடும்ப நண்பர்களுக்கு அனுப்பப்பட்ட வீடியோ கண்டுபிடிக்கப்பட்டது, விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வீடியோ ஆகஸ்ட் மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதில் அகில் தனது தந்தை மற்றும் மனைவிக்கு இடையில் தகாத உறவு இருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார். அகில் அந்த வீடியோவில் "என்னுடைய தந்தையோடு, என் மனைவியின் தகாத உறவை நான் கண்டுபிடித்தேன். இதனால் நான் அதிக மன அழுத்தத்தில் இருக்கிறேன். என்ன செய்வேண்டும் என எனக்குத் தெரியவில்லை. அவர்கள் என்னை ஒரு பொய் வழக்கில் சிக்க வைப்பார்கள் என்று நான் தினமும் உணர்கிறேன்.

    என்னை பொய்யாக சிறையில் அடைப்பது அல்லது கொலை செய்வதுதான் எனது தாய் மற்றும் சகோதரியின் திட்டம். எனக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாகவே, எனது மனைவியை எனது தந்தைக்கு தெரியும். முதல்நாள், என் மனைவி, அவளை தொட அனுமதிக்கவில்லை. அவள் என்னை திருமணம் செய்யவில்லை. எனது தந்தையை திருமணம் செய்தாள்.

    நான் ஒரு சரியான வாதத்தை முன்வைக்கும் போதெல்லாம், அவர்களின் கதை மாறுகிறது. தனது குடும்பத்தினர் தன்னை பைத்தியம் என்று கூறி தங்கள் நற்பெயரைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.

    நான் அவர்களுக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், அவர்கள் என்னை பாலியல் வன்கொடுமை அல்லது கொலை வழக்கில் சிக்க வைப்பார்கள் என்று என்னை மிரட்டுகிறார்கள்.

    இவ்வாறு அந்த வீடியோவில் அகில் கூறுகிறார்.

    அதேவேளையில், மற்றொரு வீடியோவில் என் குடும்பத்தினர் மீது சுமற்றிய அனைத்து குற்றச்சாட்டுகளும், என்னுடைய மனநிலை பிரச்சினையால் ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.

    அகிலின் மரணத்தில் ஆரம்பத்தில் சந்தேகிக்கவில்லை. அவரது மரணத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு பங்கு இருப்பதாக ஒரு புகார் வந்தது. மேலும் அகில் அக்தரின் சமூக ஊடகப் பதிவுகள், சில வீடியோக்கள், சில புகைப்படங்கள், சில சந்தேகங்களை எழுப்பின. அதன் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது என்று துணை காவல் ஆணையர் சிருஷ்டி குப்தா தெரிவித்தார்.

    மிக உயர் பதவி வகித்த தந்தை மற்றும் தாய் மீது மகன் வீடியோவில் குற்றம்சாட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

    • அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளில் தீ பிடித்தது.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க பாடுபட்டனர்.

    பஞ்சாப் மாநிலத்தில் சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏசி பெட்டிகளில் தீ பிடித்தது.

    இதனையடுத்து ரெயில் நிறுத்தப்பட்டு அணைத்து பயணிகளும் உடனடியாக வெளியற்றப்பட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தினால் ஒரு பெண் பயணிக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. ஆனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. 

    • பஞ்சாப் மாநிலத்தின் 92 சதவீத மக்கள் இலவசமாக மின்சாரம் பெறுகிறார்கள்.
    • பாசனத்திற்கு குறைந்த பட்சம் 8 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது

    ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் ஆட்சி செய்து வருகிறது. பகவத் மான் முதலமைச்சராக இருந்து வருகிறார். அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மின்மாற்றிகள் மற்றும் வினியோக யூனிட் அமைப்பதற்கான கட்டுமான தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.

    அப்போது, அடுத்த வருடத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்தில் மின்தடை இருக்காது என கெஜ்ரிவால் உறுதி அளித்துள்ளார்.

    இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது:-

    பஞ்சாப் மாநிலத்தின் 92 சதவீத மக்கள் இலவசமாக மின்சாரம் பெறுகிறார்கள். பாசனத்திற்கு குறைந்த பட்சம் 8 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இது நாள் முழுவதும் வழங்கப்படும் வகையில் விரைவில் ஏற்பாடு செய்யப்படும்.

    24 மணி நேரம் மின்சாரம் வழங்குவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். 25 ஆயிரம் கி.மீ. புதிய பவர் கேபிள் பதிப்பதற்கான கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. 8,000 புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்கள், 77 புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த வேலைகள் மிகப்பெரிய அளவில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த சிஸ்டமும் நவீனமாக்கப்படும். அடுத்த கோடைக்காலத்தில், பஞ்சாபில் மின்தடை என்பதே இருக்காது.

    இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

    • 1,600 கோடி ரூபாய்க்கு என்ன நடக்கும்? 1,600 கோடி ரூபாய்க்கு என்ன செய்வது?
    • அவர்கள் கேலி செய்கிறார்களா?. தொடக்க இழப்பு 13,800 ரூபாய். 1600 கோடி ரூபாய் என்பது கடலின் ஒரு துளிதான்.

    பருவமழை இந்தியாவின் வடக்கு மாநிலங்களான ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீ்ர்த்தது. கனமழை காரணமாக பஞ்சாப் மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்தது.

    மழை வெள்ளத்தால் பஞ்சாப் மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. மாநில அரசு முதற்கட்டமாக 13,800 கோடி ரூபாய் அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என மதிப்பிட்டுள்ளது. ஆனால், பிரதமர் மோடி 1600 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். 12 ஆயிரம் கோடி ரூபாயை SDRF கணக்கில் இருந்து எடுத்து பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் மத்திய அரசின் நிதியுதவி குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் பகவத் மான் சிங்கிடம் என்.டி. டிவி கேள்வி எழுப்பியது.

    அதற்கு பகவத் மான் சிங் பதில் அளித்து கூறியதாவது:-

    1,600 கோடி ரூபாய்க்கு என்ன நடக்கும்? 1,600 கோடி ரூபாய்க்கு என்ன செய்வது? அவர்கள் கேலி செய்கிறார்களா?. தொடக்க இழப்பு 13,800 ரூபாய். 1600 கோடி ரூபாய் என்பது கடலின் ஒரு துளிதான்.

    பஞ்சாப் மாநிலம RDF-யை பயன்படுத்தி வந்தது. விவசாய பொருட்கள் விற்பனை, கொள்முதலுக்கு 3 சதவீதம் வரி விதிக்கப்பட்டு, அவை சாலைகள், மண்டிகள் அல்லது விவசாயிகள் மொத்த விற்பனை சந்தைகளை பராமரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த ஆர்டிஎஃப் எந்தவித காரணமும் இன்றி நிறுத்தப்பட்டது. பாஜக அல்லாத அரசாங்க மாநிலத்தில் வழக்கமாக இது நடக்கும்.

    SDRF கணக்கு 2010/11-ல் உருவாக்கப்பட்டது. அப்போது பஞ்சாப் மாநிலம் 84 கோடி ரூபாய் பெற்றது. ஆனால், 184 ரூபாய் செலவு செய்யப்பட்டது. 2011/12-ல் 171 கோடி ரூபாய் பெறப்பட்டது. 159 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. அதேபோல் 2012/13 மத்திய அரசு 272 கோடி ரூபாய் அனுப்பியது. 10 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. 2013/14-ல் 194 கோடி ரூபாய் பெற்ற நிலையில், 236 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது.

    மொத்தமாக பஞ்சாப் மாநிலம் 5012 ரூபாய் பெற்றுள்ளது. அதிலிருந்து எஸ்டிஆர்எஃப் 3820 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. இதில் சட்டவிரோதம் அல்லது மறைக்க ஒன்றுமில்லை. அதில் 1200 கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. இந்த ரூ.12,000 கோடி எங்கிருந்து வந்தது? பாஜக உண்மையான தொகையுடன் ஒரு பூஜ்ஜியத்தைச் சேர்த்தது.

    இவ்வாறு பகவத் மான் சிங் தெரிவித்துள்ளார்.

    • 4 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் நெல் பயிர் சேதமடைந்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன.
    • ராகுல் காந்தி பஞ்சாப் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார்.

    வெள்ளத்தால் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பஞ்சாபிற்கு மத்திய அரசு அறிவித்த ரூ.1,600 கோடி நிதி உதவி குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.

    மத்திய அரசு அறிவித்த சொற்ப உதவி பஞ்சாப் மக்களுக்கு பெரும் அநீதி இழைத்துள்ளது என்று அவர் கூறினார்.

    இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு ராகுல் எழுதியுள்ள கடிதத்தில், மழைப் பொழிவால் பஞ்சாப் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. 4 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் நெல் பயிர் சேதமடைந்துள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளன.

    வெள்ளத்தால் லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகளை இழந்து, நிலங்களை பயிரிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    பஞ்சாபில் மழையால் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்கும்போது, ரூ.1,600 கோடியை மட்டும் மத்திய அரசு அறிவிப்பது நியாயமற்றது. முழு தொகையையும் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

    சமீபத்தில் ராகுல் காந்தி பஞ்சாப் சென்று அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குருதாஸ்பூர் விவசாயிகளிடம் பேசினார்.

    இதற்கிடையில், சமீபத்தில் பஞ்சாப் சென்ற பிரதமர், அங்குள்ள நிலைமையை வான்வழியாக ஆய்வு செய்தார். இந்த மாதம் 9 ஆம் தேதி, பஞ்சாபிற்கு ரூ.1,600 கோடி நிதி உதவியை அறிவித்தார். இந்த சூழலில், ராகுல் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். 

    • பஞ்சாபில் வெள்ள பாதிப்பால் 43 பேர் பலியானார்கள்.
    • கனமழையால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

    புதுடெல்லி:

    உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் (9-ந்தேதி) பஞ்சாப் செல்கிறார்.

    பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது குர்தாஸ் பகுதியாகும். பிரதமர் மோடி அங்கு பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார். கனமழையால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள் மற்றும் பொதுமக்களை அவர் சந்திக்கிறார்.

    சட்ட விரோத சுரங்கம் மற்றும் பராமரிப்பு இல்லாமல் பல ஆண்டுகளாக பலவீனம் அடைந்துள்ள சட்லஜ், பியாஸ், காகர் நதிகளின் கரையை வலுப்படுத்த வேண்டியதன் அவசர தேவையை பிரதமர் இந்த பயணத்தின்போது வலியுறுத்துவார் என்று தெரிகிறது.

    மேலும் வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான பஞ்சாப்புக்கு சிறப்பு நிவாரண நிதியை மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து பஞ்சாப் மாநில பா.ஜ.க. தனது எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகளை அவர் நேரடியாக சந்தித்து உதவ அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார். பிரதமரின் இந்த வருகை மத்திய பா.ஜ.க. அரசு பஞ்சாப் மக்களுடன் எப்போதும் நிற்கிறது என்பதையும், இந்த கடினமான நேரத்தில் முழு ஆதரவையும் வழங்கும் என்பதையும் நிரூபிக்கிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பஞ்சாபில் வெள்ள பாதிப்பால் 43 பேர் பலியானார்கள். 23 மாவட்டத்தில் 1,900-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கிட்டத்தட்ட 1.71 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமானது.

    • அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
    • மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், காய்ச்சல் மற்றும் குறைந்த இதயத் துடிப்பு காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    முன்னதாக, அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

    மாலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவர் மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

    அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்தது. பஞ்சாபில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று பாவந்த் மான் ஆய்வு செய்து வந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

     

    • கனமழை எதிரொலியால் செப்டம்பர் 7 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
    • பஞ்சாப்பில் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பேரழிவில் இதுவும் ஒன்று என மாநில அரசு தெரிவித்தது.

    சண்டிகர்:

    வட மாநிலங்களில் பருவ மழை கொட்டி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 2.5 லட்சம் பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை காரணமாக பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறிவிட்டன.

    சட்லஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே, வெள்ளம் காரணமாக செப்டம்பர் 7 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பேரழிவுகளில் இதுவும் ஒன்று என மாநில அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

    • பஞ்சாப்பில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • சுமார் 2.5 லட்சம் பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    சண்டிகர்:

    வட மாநிலங்களில் பருவ மழை கொட்டி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2.5 லட்சம் பேர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை காரணமாக பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறிவிட்டன.

    சட்லஜ், பியாஸ் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வெள்ளம் காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழை எதிரொலியால் செப்டம்பர் 7 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாப்பில் ஏற்பட்ட மோசமான வெள்ளப் பேரழிவுகளில் இதுவும் ஒன்று என மாநில அரசு தெரிவித்துள்ளது.

    ×