என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "punjab"
- அமிர்தசரஸ் நகரில் தனியார் வங்கி ஒன்று உள்ளது.
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்தனர்.
அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த வங்கி வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்தனர். அவர்கள் துப்பாக்கியை காட்டி வங்கி ஊழியர்களை மிரட்டி ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு, ஜலந்தர் தொகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு எனக்கு உதவவில்லை
- பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜகவில் இணைத்துள்ளேன் என்று சுஷில் குமார் தெரிவித்துள்ளார்
பஞ்சம் மாநிலத்தில் ஜலந்தர் தொகுதி எம்.பியான சுஷில் குமார் மற்றும் ஜலந்தர் மேற்கு தொகுதி எம்எல்ஏ ஷீதன் அங்கூரல் ஆகியோர் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்த ஒரே ஒரு எம்.பி சுஷில் குமார் ரிங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி அரசு, ஜலந்தர் தொகுதியின் வளர்ச்சி திட்டங்களுக்கு எனக்கு உதவவில்லை. அதனால் தான் ஜலந்தர் மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஆதலால் பஞ்சாப் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜகவில் இணைத்துள்ளேன் என்று சுஷில் குமார் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஜலந்தர் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக சுஷில் குமார் அறிவிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார் சுஷில் குமார். அதன் பின் தற்போது அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.
- பா.ஜனதாவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கால் சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் தொடர்ந்து நழுவி வந்தார்.
- மக்களின் கருத்துகள், கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
சண்டிகார்:
பஞ்சாப்பை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சியான சிரோமணி அகாலிதளம், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகித்து வந்த கட்சிகளில் முக்கியமானது.
இந்த கட்சி கடந்த 1996-ம் ஆண்டு முதல் பா.ஜனதா கூட்டணி சார்பில் பல்வேறு தேர்தல்களை சந்தித்தது. கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் பஞ்சாப்பில் இந்த இரு கட்சிகளும் தலா 2 இடங்களை வென்றிருந்தன.
ஆனால் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை சிரோமணி அகாலிதளம் கடுமையாக எதிர்த்தது. அத்துடன் பா.ஜனதாவுடனான உறவையும் கடந்த 2020-ம் ஆண்டு முறித்துக்கொண்டது.
எனினும் வருகிற மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட இரு கட்சிகளும் விரும்பின. அதன்படி இரு கட்சிகளும் கடந்த சில நாட்களாக கூட்டணி பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருந்தன.
இந்த பேச்சுவார்த்தையை பா.ஜனதா மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷாவும் உறுதி செய்திருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அனைத்து கட்சிகளும் இணைய வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று அவர் கூறியிருந்தார்.
அதேநேரம் பா.ஜனதாவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கால் சிரோமணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் தொடர்ந்து நழுவி வந்தார்.
இந்த நிலையில் இரு கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்கு பா.ஜனதா தனித்து போட்டியிடுவதாக அறிவித்து உள்ளது.
இதை கட்சியின் மாநில தலைவர் சுனில் ஜாக்கர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் பஞ்சாப்பில் பா.ஜனதா தனித்து போட்டியிடுகிறது.
மக்களின் கருத்துகள், கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பஞ்சாப்பின் எதிர்காலம், இளைஞர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
பஞ்சாப் மக்கள் ஜூன் 1-ந் தேதி அதிக எண்ணிக்கையில் பா.ஜனதாவுக்கு வாக்களிப்பதன் மூலம் கட்சியை மேலும் வலுப்படுத்துவார்கள்.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பஞ்சாப்புக்கு பா.ஜனதா ஆற்றிய பணிகள் யாருக்கும் மறைக்கப்படவில்லை.
இவ்வாறு சுனில் ஜாக்கர் கூறியுள்ளார்.
பா.ஜனதா தனித்து போட்டியிடுவதன் மூலம் பஞ்சாப்பில் 4 முனை போட்டி உறுதியாகி இருக்கிறது.
அந்தவகையில் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தனித்தனியாக தேர்தலை சந்திக்கின்றன.
- விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்ட கிராமங்களில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள குஜ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள பல கிராமங்களில் கடந்த 20-ந் தேதி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை வாங்கி குடித்த பலர் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அன்று இரவே சிகிச்சை பலனின்றி 5 பேர் இறந்தனர். அதை தொடர்ந்து 21-ந் தேதி காலையில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.
இது சங்ரூர் மாவட்டம் முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, விஷ சாராயம் விற்பனை செய்யப்பட்ட கிராமங்களில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் சாராயம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் விஷ சாராயம் குடித்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை இறந்தனர். இதனால் விஷ சாராயத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே விஷ சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சிகள் ஆம் ஆத்மி தலைமையிலான அரசைக் கண்டித்துள்ளன.
- ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்தது.
- செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார்.
புகழ்பெற்ற பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
58 வயதான சரண் சிங்கின் ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்தது. ஆதலால் தனது மகனின் நினைவாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார் என்று கூறப்பட்டது.
மேலும் அவர் மார்ச் மாதம் அவர் குழந்தையை பெற்றெடுப்பார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், பாடகர் சித்து மூஸ் வாலாவிவன் பெற்றோருக்கு 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
- நான் பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என்று பாஜகவில் சேர்ந்த ப்ரினீத் கவுர் தெரிவித்துள்ளார்.
- கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எம்.பி ப்ரினீத் கவுர் காங்கிரஸ் கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டார்
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவி ப்ரினீத் கவுர் பாஜகவில் இணைந்துள்ளார்.
பாட்டியாலா தொகுதி காங்கிரஸ் எம்.பியான ப்ரினீத் கவுர், மீண்டும் இதே தொகுதியில் பாஜக சார்பில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
பிரதமர் மோடி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ளார். நான் பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன் என்று பாஜகவில் சேர்ந்த ப்ரினீத் கவுர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எம்.பி ப்ரினீத் கவுர் காங்கிரஸ் கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கைகள் மற்றும் பாஜகவுக்கு உதவியதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவர் பாஜகவில் சேர்ந்துள்ளார்.
அமரீந்தர் சிங் 2002 முதல் 2007 வரை பஞ்சாப் முதலமைச்சராக இருந்தவர். இவர் மீண்டும் 2-ம் முறையாக 2017 -ம் ஆண்டு மீண்டும் பஞ்சாப் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021-ல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அமரீந்தர் சிங் தனது முதலமைச்சர் ராஜினாமா செய்தார். பின்னர் அவர் காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கினார். அதன் பிறகு 2022 செப்டம்பரில் அவரது கட்சியை பாஜகவுடன் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 58 வயதான சரண் சிங்கின் ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்துள்ளது.
- தனது மகனின் நினைவாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார்
மறைந்த பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் அம்மா சரண் சிங் கர்ப்பமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை கருத்தரித்தல் முறையில் அவர் கர்ப்பமாகியுள்ளார். வரும் மார்ச் மாதம் அவர் குழந்தையை பெற்றெடுப்பார் என்று சொல்லப்படுகிறது.
புகழ்பெற்ற பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான சித்து மூஸ் வாலா, அங்குள்ள மன்சா மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு மே 29-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கனடாவைச் சேர்ந்த கூலிப்படைத் தலைவர் கோல்டி பிரார் இந்த கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்றாா். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், 58 வயதான சரண் சிங்கின் ஒரே மகனான சித்து மூஸ்வாலாவின் திடீர் மரணம் அவர்களை வெகுவாக பாதித்துள்ளது. ஆதலால் தனது மகனின் நினைவாக ஒரு குழந்தை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செயற்கை கருவுறுதல் முறையில் அவர் கருவுற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
- 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி சுற்றுக்குத் தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது.
- 7 ஆட்டங்களில் ஒரு தோல்வி, 4 வெற்றிகளுடன் 28 புள்ளிகள் எடுத்து ‘சி’ பிரிவில் முதலிடத்தில் உள்ளது தமிழக அணி
ரஞ்சி கோப்பைப் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதி சுற்றுக்குத் தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது.
சேலத்தில் நடைபெற்ற தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் தமிழக அணி மோதியது. இந்த ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தமிழ்நாடு வெற்றி பெற்றது.
இப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 435 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திரஜித் 187 ரன்களும், விஜய் சங்கர் 130 ரன்களும் அடித்தனர். இதைத் தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அன்மோல் மல்ஹோத்ரா 64 ரன்கள் எடுத்தார். தமிழக அணியின் அஜித் ராம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் அணிக்கு ஃபாலோ ஆன் வழங்கப்பட்டது.
2-வது இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப் அணி 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 109 ரன்களை குவித்தார். தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் பிறகு தமிழக அணிக்கு 71 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய தமிழக அணி 7 ஓவர்களில் இந்த இலக்கை எட்டி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 7 ஆட்டங்களில் ஒரு தோல்வி, 4 வெற்றிகளுடன் 28 புள்ளிகள் எடுத்து 'சி' பிரிவில் முதலிடத்தில் உள்ளது தமிழக அணி. இன்னும் ஒரு சில அணிகள் தங்களின் கடைசி லீக் ஆட்டங்களில் விளையாடி வருவதால், அதன் முடிவுகளை பொறுத்தே காலிறுதி போட்டிக்கான அட்டவணை அமையும்.
- மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து எடுத்த முடிவுதுதான்
- டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதிக் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
"மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து எடுத்த முடிவுதுதான். இதுகுறித்து எந்த மோதலும் எங்களுக்குள் இல்லை" என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காங்கிரஸ் தலைவரான அபிஷேக் சிங்வியின் வீட்டிற்கு மதிய உணவுக்காக சென்றிருந்தார். அதன் பின்னர், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் தனித்து களம் காணலாம் என்பது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து எடுத்த முடிவுதுதான். இதுகுறித்து எந்த மோதலும் எங்களுக்குள் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், டெல்லியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே தொகுதிக் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டெல்லியில் கூட்டணி இல்லாவிட்டால் பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு எளிதாகிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்திருந்தார். பஞ்சாபில் காங்கிரஸின் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான பர்தாப் சிங் பஜ்வா, "முதலமைச்சர் பகவந்த் மானுக்கு 'நன்றி' தெரிவித்து, இதைத்தான் காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தற்போது சுட்டுவீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன் அம்ரித்சர் பகுதியில் கீழே விழுந்தது.
- இதில் இருந்த போதை பொருளின் மதிப்பை அறிந்து கொள்வதற்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது.
சர்வதேச எல்லை பகுதியில் பஞ்சாப் வழியே இந்தியாவுக்குள் போதை பொருளை கொண்டுவந்த பாகிஸ்தான் டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். கடந்த நான்கு நாட்களில் இது போன்ற டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சுட்டுவீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன் அம்ரித்சர் பகுதியில் கீழே விழுந்தது. கீழே விழுந்த கருப்பு நிற டிரோனை எல்லை பாதுகாப்பு படையினர் மீட்டனர். அளவில் பெரியதாகவும், கருப்பு நிறத்திலும் இருந்த டிரோனில் சந்தேகத்திற்குரிய போதை மருந்து வைக்கப்பட்டு இருந்தது. இதில் இருந்த போதை பொருளின் மதிப்பை அறிந்து கொள்வதற்கான பரிசோதனை நடைபெற்று வருகிறது.
மே 19 ஆம் தேதி முதல் இந்திய எல்லைக்குள் இதே போன்று அத்துமீறி நுழைந்த ஐந்தாவது டிரோன் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பல சமயங்களில் டிரோன் பறந்து வருவது போன்ற சத்தம் மட்டும் கேட்கும். ஆனால் விசாரணையில் டிரோன் எதுவும் மீட்கப்படாத சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.
ஏற்கனவே இரண்டு டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. மூன்றாவது டிரோன் ஊடுறவ முயன்ற போது சுட்டதில், அது பாகிஸ்தான் எல்லை பகுதியில் வீழ்ந்தது என்று எல்லை பாதுகாப்பு படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மே 20 ஆம் தேதி ஊடுறவிய டிரோனில் 3.3 கிலோகிராம் போதை பொருள் இருந்தது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
- மதுபான ஆலை செயல்பட உள்ளூர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு.
- மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதுடன் நீர் ஆதாரங்களை அழிப்பதாக குற்றச்சாட்டு.
பெரோஸ்பூர்:
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டம் மன்சுர்வால் கிராமத்தில் உள்ள மதுபான ஆலைக்கு எதிராக அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நீண்ட காலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்த தொழிற்சாலை உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதுடன் அப்பகுதி நீர் ஆதாரங்களையும் அழிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மதுபான ஆலைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி கடந்த ஜூலை மாதத்தில் இருந்து அந்த பகுதியில் போராட்டம் நடைபெற்று வந்தது.
மதுபான ஆலையால் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் விளைச்சல் குறைந்ததாகவும் குற்றம் சாட்டி, அந்த ஆலையின் வாயிலை இன்று முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார் போராட்டக்கார்களை தடுத்து நிறுத்த முற்பட்டபோது இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதற்றமான நிலை காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்