என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Punjab"

    • 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள 5 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான், " கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்தது சோகமான நிகழ்வாகும். அப்பாவி மக்களைக் கொன்ற இந்த கொலையாளிகள் எக்காரணம் கொண்டும் தப்பவிடப்பட மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பகவத் மான் அறிவித்தார்.

    2020 ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து மொத்தம் 120 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. .

    • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 1 வாரம் தீவிர பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
    • பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    சண்டிகர்:

    இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் நடந்து வரும் நிலையில் எல்லைப் பகுதிகளில் பொதுமக்கள் ராணுவத்துக்கு உதவி செய்ய வேண்டும் என்று அந்தந்த மாநில நிர்வாகங்கள் கோரி வருகின்றன. அதன்படி பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள போலீஸ் துணை கமிஷனர், 18 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள், பெண்கள் தன்னார்வலர்களாக உடன டியாக பதிவு செய்து ராணுவத்துக்கு உதவுமாறு கூறி இருந்தார்.

    அதற்கான பதிவு பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பகுதியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து இன்று காலை முதலே இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அந்த பகுதிக்கு வரத் தொடங்கினார்கள். 100-க்கணக்கானோர் அந்த பகுதியில் கூடி தங்களின் பெயர்களை பதிவு செய்து இந்திய ராணுவத்துக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

    அவர்களுக்கு பயிற்சி அளித்து ராணுவ வீரர்களுக்கு உதவ எப்படி பயன்படுத்தப்படுவார்கள் என்பது குறித்தும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 1 வாரம் தீவிர பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக்கு பிறகு எங்கெங்கு பதட்டமான சூழல் இருக்கிறதோ அந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு அவர்கள் வழிகாட்டுவார்கள். பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    அவர்களுக்கு போலீசாருக்கான அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. முதலுதவி அளிப்பதற்கான பயிற்சி, பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசலை சரி செய்வது போன்ற பயிற்சிகளும் வழங்கப்படும்.

    மேலும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான மார்க்கெட், சினிமா தியேட்டர், ரெயில் நிலையங்களில் இந்த தன்னார்வலர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

    • பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல்
    • பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து இந்திய ராணுவம் தாக்கி அழித்தது

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை இந்தியா நடத்தப்பட்டது. சுமார் 25 நிமிடங்கள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து இந்திய ராணுவம் தாக்கி அழித்தது என்று தகவல் வெளியாகியுள்ளது. 

    • பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தினேஷ் குமார் என்ற ராணுவ வீரர் வீர மரணமடைந்தார்.
    • பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறையினர் வார விடுமுறை, விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றது.

    இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை வான்வழி தாக்குதலாக மத்திய அரசு நேற்று முன்தினம் தொடங்கியது.

    நள்ளிரவு 1 மணிக்குப்பின் இந்தியாவின் போர் விமானங்கள் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கி அழித்தன.

    பாகிஸ்தானில் 4 இடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாதிகள் உள்ள அலுவலகங்கள், பயிற்சி முகாம்கள், அவர்களது வசிப்பிடங்கள் என 21 பயங்கரவாத நிலைகளை தரைமட்டமாக்கின.

    இதையடுத்து எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் தினேஷ் குமார் என்ற ராணுவ வீரர் வீர மரணமடைந்தார். எல்லைப் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி வரும் நிலையில் இந்தியாவில் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன.

    இந்த நிலையில், எல்லையை ஒட்டிய பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலம் முழுவதும் பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பொது இடங்களில் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆபரேஷன் சிந்தூரை அடுத்து எல்லைப்பகுதி மாநிலங்களில் பதற்றம் நிலவுவதால் பஞ்சாபின் எல்லையோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மறு அறிவிப்பு வரும் வரை பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறையினர் வார விடுமுறை, விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • எந்வொரு மாநிலத்திற்கும் தண்ணிர் வழங்க பஞ்சாபிடம் தண்ணீர் இல்லை.
    • ஹரியானாவிற்கு குடிநீர் தேவைக்காக வழங்கப்படும் 4,000 கனஅடி தண்ணீர் மனிதாபிமான அடிப்படையில் தொடரும்.

    பஞ்சாப் மாநிலம் அண்டை மாநிலமான ஹரியானாவுக்கு தண்ணீர் வழங்கி வருகிறது. இரு மாநிலங்களுக்கும் இடையில் தண்ணீர் பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் உள்ளது. ஏப்ரல மாதம் குடிநீர் தேவைக்காக ஹரியானா மாநிலம் பஞ்சாபிடம் கூடுதலாக நீர் திறந்து விட வலியுறுத்தியது. ஆனால் பஞ்சாப் தங்களிடம் போதுமான தண்ணீர் இருப்பு இல்லை எனத் தெரிவித்தது.

    இந்த நிலையில் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தை அரியானாவும், மத்திய அரசும் கூட்டி பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஹரியான மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இதனால் பஞ்சாப் அரசு கடுங்கோபம் அடைந்தது. அத்துடன் ஹரியானாவிற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றுள்ளது.

    சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி பஞ்சாப் மாநில நீர்வளத்துறை அமைச்சர் பரிந்தர் குமார் கோயல் இந்த தீர்மானம் கொண்டு வந்தார்.

    அந்த தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-

    மார்ச் 31ஆம் தேதி வரைக்கும் ஹரியானா அனைத்து பங்கீடு நீரையும் பயன்படுத்தியுள்ளது. தற்போது பாஜக பஞ்சாப் மாநில தண்ணீரை ஹரியானாவுக்கு வழங்க விரும்புகிறது.

    கால்வாய் மூலம் விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க பஞ்சாப் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கான வேலைகள் முழு வீச்சில் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. 2021 வரை வெறும் 22 சதவீது பஞ்சாப் நிலை நிலங்கள் கால்வாய் தண்ணீரை பெற்று வந்தன. ஆனால் இன்று, 60 சதவீத விவசாய நிலங்கள் கால்வாய் தண்ணீரை வெற்றி பெற்று வருகிறது.

    பஞ்சாபின் ஒரு சொட்டு நீர் கூட பஞ்சாப் மாநிலத்திற்கு மிகவும் மதிப்பிற்குரியதாகியுள்ளது. எந்வொரு மாநிலத்திற்கும் தண்ணிர் வழங்க பஞ்சாபிடம் தண்ணீர் இல்லை.

    ஹரியானநா அரசு கடந்த மாதம் 6ஆம் தேதி குடிநீர் வசதிக்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. அதன்படி 4 ஆயிரம் கனஅடி நீர் திறந்த விடப்பட்டது. தாகம் எடுத்த எவருக்கும் தண்ணீர் கொடுப்பது ஒரு சிறந்த நற்பண்பு என்று நமது குருமார்கள் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர்.

    ஹரியானாவில் மொத்தம் 3 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் மற்றும் மனித தேவைகளுக்காக 1700 கனஅடி நீர் போதுமானது. தற்போது திடீரென ஹரியானா 8500 கனஅடி நீர் தேவை எனச் சொல்கிறது. பஞ்சாப் அதன் தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் தண்ணீர் இல்லை.

    எனவே, பாஜக அரசியலமைப்பிற்கு விரோதமான மற்றும் சட்டவிரோதமான முறையில் பிபிஎம்பி கூட்டத்தை வலுக்கட்டாயமாகக் கூட்டி, பஞ்சாப் தனது சொந்தப் பங்கிலிருந்து ஹரியானாவிற்கு தனது தண்ணீரை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இது எங்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

    ஹரியானாவிற்கு குடிநீர் தேவைக்காக வழங்கப்படும் 4,000 கனஅடி தண்ணீர் மனிதாபிமான அடிப்படையில் தொடரும், ஆனால் ஒரு சொட்டு கூட கூடுதலாக வழங்கப்படாது.

    இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

    • ஹர்ப்ரீத் சிங் என்ற பிட்டு மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டதாக தெரிவித்தார்.
    • தகவல்களையும் புகைப்படங்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்திய ராணுவ முகாம்கள் மற்றும் விமானப்படைத் தளங்களின் புகைப்படங்கள் மற்றும் முக்கியமான தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறைக்கு அனுப்பி வந்த இரண்டு நபர்களை பஞ்சாப் போலீஸ் கைது செய்துள்ளது.

    கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அஜ்னாலாவைச் சேர்ந்த ஃபலக்ஷேர் மாசிஹ் மற்றும் சூரஜ் மாசிஹ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் கூறுகையில், இந்த இரண்டு குற்றவாளிகளும் தற்போது அமிர்தசரஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹர்ப்ரீத் சிங் என்ற பிட்டு மூலம் பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டதாக தெரிவித்தார்.

    குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராணுவ நடவடிக்கைகள், எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) முகாம்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற முக்கிய இடங்களின் தகவல்களையும் புகைப்படங்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து இரண்டு மொபைல் போன்களை போலீசார் மீட்டுள்ளனர், அதன் மூலம் முக்கியமான தரவுகள் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    • அரவிந்த் கெஜ்ரிவால் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது.
    • கெஜ்ரிவால் மகளின் திருமணம் ஏப்ரல் 18 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

    டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவால், சம்பவ் ஜெயின் என்பவரை நேற்று திருமணம் செய்தார்.

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது மகள் ஹர்ஷிதா கெஜ்ரிவாலின் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் சாமி பாடலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுடன் இணைந்து நடனமாடுகிறார்

    இதே போல், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இந்த நிகழ்வில் நடனமாடிய மற்றொரு வீடியோவும் இணையத்தில் வைரலானது.

    • பஞ்சாபின் காவல் நிலையங்கள் மீது பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டு, அதற்கு பொறுப்பேற்றார்.
    • பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ உடன் செயல்பட்டார்.

    பஞ்சாபில் கடந்த 5 மாதங்களாக நடந்த 14 வெடிகுண்டுத் தாக்குதலில் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஹேப்பி பாசியா அமெரிக்காவில் கைது செய்யப்ட்டுள்ளார்.

    ஹேப்பி பாசியா என்ற ஹர்ப்ரீத் சிங், பஞ்சாபின் காவல் நிலையங்கள் மீது பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்திவிட்டு, அதற்கு சமூக வலைத்தளத்தில் பொறுப்பேற்றதாக கூறப்படுகிறது.

    நவம்பர் 2024 முதல் அமிர்தசரஸில் உள்ள காவல் நிலையங்களை குறிவைத்து தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளில் அவர் தேடப்பட்டு வந்தார். அவர் குறித்த தகவலுக்கு ரூ.5 லட்சமும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

    பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் பப்பர் கல்சா இன்டர்நேஷனலுடன் இணைந்து ஹேப்பி பாசியா பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

    தற்போது அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள ஹேப்பி சிங் ICE (குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு) காவலில் உள்ளார். 

    • காம்போஜ் இன்ஸ்டாகிராம் மூலமாக சுக்சரண் சிங் உடன் பழக்கமாகி குண்டு தயாரிக்க கற்றுக்கொள்வது வரை சென்றுள்ளார்.
    • அவர் 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

    பஞ்சாப் மாநிலம் ஜலத்தினரில் யுடியூபர் ஒருவரின் வீட்டில் கடந்த மாதம் மர்ம நபர் கையெறி குண்டை (GRENADE) வீசி எறிந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வெடிக்கவில்லை. குண்டு வீசிய மர்ம நபர் ஹர்திக் காம்போஜ் என்று அடையாளம் காணப்பட்டார்.

    காம்போஜிடம் பஞ்சாப் போலீஸ் நடத்திய விசாரணையில் அவருக்கு GRENADE தயாரிக்க ஜம்மு காஷ்மீரில் இருந்து பஞ்சாபின் முக்த்சார் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுக்சரண் சிங் என்பவர் ஆன்லைனில் பயிற்சி அளித்தது தெரியவந்தது.

    காம்போஜ் இன்ஸ்டாகிராம் மூலமாக சுக்சரண் சிங் உடன் பழக்கமாகி குண்டு தயாரிக்க கற்றுக்கொள்வது வரை சென்றுள்ளார்.

    இந்நிலையில் நேற்று ராணுவ வீரர் சுக்சரண் சிங் பஞ்சாப் போலீசார் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். பஞ்சாபில் சமீக காலமாக குண்டுவீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • அந்த பெண் திடீரென சத்தம் எழுப்பியதால் மாணவனின் திட்டம் தோல்வியடைந்தது.
    • சூட்கேஸைத் திறந்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

    பஞ்சாப் மாநிலம் சோனிபட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவன் தனது காதலியை சூட்கேசில் அடைத்து தான் தங்கியிருக்கும் பாய்ஸ் ஹாஸ்டலுள் கொண்டு செல்ல முயன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    ஆனால் அந்த பெண் திடீரென சத்தம் எழுப்பியதால் மாணவனின் திட்டம் தோல்வியடைந்தது. சத்தம் கேட்டவுடன் செக்யூரிட்டிகள் மாணவனைத் தடுத்து நிறுத்தினர். அவர்கள் சூட்கேஸைத் திறந்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

    தற்போது வைரலாகி வரும் காணொளியில், காரிடாரில் வைத்து சில காவலர்கள் ஒரு பெரிய சூட்கேஸைத் திறப்பதைக் காணலாம். சூட்கேஸ் திறந்ததும், அதனுள் இருந்து ஒரு பெண் வெளியே வருகிறாள்.

    அங்கிருந்தவர்கள் இந்தக் காட்சியைத் தங்கள் மொபைல் போன்களில் பதிவு செய்தனர். இணையத்தில் பரவி வரும் இந்த காணொளி அனைவரிடையேயும் சிரிப்பலையை ஏற்படுத்தி வருகிறது.

    • தனது மகனுக்கு படிப்பில் கவனம் செலுத்தவும், செல்போன் பார்க்கும் நேரத்தைக் குறைக்கவும் அறிவுறுத்தினார்.
    • "உங்கள் மகன் இறந்துவிட்டான்" என்ற செய்தியே அவர்களுக்கு கிடைத்துள்ளது.

    பஞ்சாபில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் ஷாப்பிங் மாலின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    நேற்று முன்தினம் பஞ்சாபில் மொஹாலியில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் ஒன்றின் 4 ஆவது மாடியில் இருந்து அந்த மாணவர் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இறந்த மாணவர் 17 வயது அபிஜித் என அடையாளம் காணப்பட்டார். தனது தந்தையுடன் ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்திற்குப் பிறகு அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

    காவல்துறையினரின் கூற்றுப்படி, அன்றைய தினம் காலை 10 மணியளவில் காவல்துறைக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் ஒருவர் மாலின் நான்காவது மாடியில் இருந்து குதித்ததாகத் தெரிவித்தனர்.

    ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது, அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

     அபிஜித்தின் தந்தை மன்மோகன் சிங், தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாட்களாக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார்.

    சம்பவம் நடந்த அன்று காலை, தனது மகனுக்கு படிப்பில் கவனம் செலுத்தவும், செல்போன் பார்க்கும் நேரத்தைக் குறைக்கவும் அறிவுறுத்தினார். இது ஒரு சிறிய வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது.

    பின்னர் அபிஜித் விதமாக வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் குடும்பத்தினர் அவரைத் தேடத் தொடங்கினர். இந்நிலையில் "உங்கள் மகன் இறந்துவிட்டான்" என்ற செய்தியே அவர்களுக்கு கிடைத்துள்ளது.

    [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

    • குண்டுவெடிப்பில் கோயிலின் ஒரு பகுதி சேதமடைந்தது.
    • கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பஞ்சாபில் பல இடங்களில் கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கோவிலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அமிர்தசரஸின் கண்ட்வாலா பகுதியில் உள்ள தாக்குர்த்வாரா கோவிலின் மீது நேற்று முன் தினம் இரவு சுமார் 12:35 மணியளவில் பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் 2 கையெறி குண்டுகளை வீசினர். அதிர்ஷ்டவசமாக, இந்த கையெறி குண்டு வெடித்தபோது கோவிலில் பக்தர்கள் யாரும் இல்லை.

     

    அங்கு தூங்கிக்கொண்டிருந்த கோவில் பூசாரியும் நூலிழையில் காயங்களின்றி உயிர் தப்பினார். குண்டுவெடிப்பில் கோயிலின் ஒரு பகுதி சேதமடைந்தது. தாக்குதலின்போது அந்த மர்ம நபர்களின் ஒரு கையில் மத கொடி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

    கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பஞ்சாபில் பல இடங்களில் கையெறி குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆனால் ஒரு கோவிலை குறிவைத்துத் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறை.

    முதற்கட்ட விசாரணையில் பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ-யின் தொடர்பு இருப்பதாக காவல்துறை ஆணையர் குர்பிரீத் சிங் புல்லர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

    மேலும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த இளைஞர்களை ஐ.எஸ்.ஐ மூளைச்சலவை செய்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துகிறது என்று அவர் கூறினார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், தாக்குதல் நடத்தியவர்களை போலீஸ் குழுக்கள் தேடி வருகின்றன என்று தெரிவித்தார். 

    ×