பாஜக அலுவலகம் மீது கச்சா குண்டு வீச்சு | Punjab

வெடிகுண்டின் பாகங்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இது ஒரு கச்சா வெடிகுண்டு என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
பாஜக அலுவலகம் மீது கச்சா குண்டு வீச்சு | Punjab
Published on

பஞ்சாப் மாநிலம் சண்டிகர், செக்டர் 37 ல் இயங்கி வரும் பஞ்சாப் பாஜக அலுவலகம் அருகே இன்று மாலை கையெறிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை 5 மணியளவில் வெடிச்சத்தம் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து, அலுவலகம் அருகே கையெறி குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்த வெடிவிபத்தில் ஒரு காரின் ஜன்னல்கள் நொறுங்கின, மேலும் இரண்டு ஸ்கூட்டர்கள் சேதமடைந்தன.

காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, விசாரணைக்காக அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர்.

சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே வெடிகுண்டின் பாகங்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இது ஒரு கச்சா வெடிகுண்டு என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com