என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலியல் புகார்"

    • மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார்.
    • தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார்.

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார். இதனை தொடர்ந்து அவர் நடித்த கயல், அன்னம், மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.

    மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார். அந்த நேர்காணலில் பேசிய மான்யா ஆனந்த், "தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ் படத்தில் நீங்க நடிக்க முடியுமா... அப்படியெனில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்.

    நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று கூறினேன். அதற்கு தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டேன்.

    அதே மாதிரி அண்மையில், ஷ்ரேயஸ் எனக்கு தனுஷ் படத்தின் ஸ்க்ரிப்ட் அனுப்பி நடிக்க வேண்டுமா என்று கேட்டார். ஆனால் நான் அந்த கதையை கூட படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நடிகையின் குற்றச்சாட்டை ஷ்ரேயாஸ் மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "என் பெயரில் அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரில் வந்த "Casting call" முற்றிலும் பொய்யானது" என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகை மான்யா ஆனந்த் விளக்கம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "நான் தனுஷ் மீது குற்றச்சாட்டு சுமத்தியதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அது தொடர்பாக விளக்கம் அளிக்கிறேன். நான் அண்மையில் ஒரு நேர்காணல் கொடுத்திருந்தேன். அதில் ஷ்ரேயாஸ் என்பவற்றின் பெயரை பயன்படுத்தி ஒருவர் எனக்கு போன் செய்திருந்தார் என்று கூறினேன். அதாவது தனுஷ் சார் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று தான் கூறியுள்ளேன். விழிப்புணர்வுக்காக நான் கூறியதை தவறாக பயன்படுத்தியுள்ளார்கள். இணையத்தில் பரவும் தகவல் பொய்யானது என்று நேற்று நான் பதிவிட்டிருந்தேன். என்னுடைய பெயரை பயன்படுத்தி தனுஷ் சார் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறார்கள். இது மிகவும் தவறு. ஆகவே பொய்யான தகவலை பரப்பாதீர்கள்" என்று தெரிவித்தார். 

    என் பெயரில் அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரில் வந்த "Casting call" முற்றிலும் பொய்யானது.

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார். இதனை தொடர்ந்து அவர் நடித்த கயல், அன்னம், மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.

    மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார். அந்த நேர்காணலில் பேசிய மான்யா ஆனந்த், "தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ் படத்தில் நீங்க நடிக்க முடியுமா... அப்படியெனில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார்.

    நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று கூறினேன். அதற்கு தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டேன்.

    அதே மாதிரி அண்மையில், ஷ்ரேயஸ் எனக்கு தனுஷ் படத்தின் ஸ்க்ரிப்ட் அனுப்பி நடிக்க வேண்டுமா என்று கேட்டார். ஆனால் நான் அந்த கதையை கூட படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி, விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நடிகையின் குற்றச்சாட்டை ஷ்ரேயாஸ் மறுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "என் பெயரில் அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரில் வந்த "Casting call" முற்றிலும் பொய்யானது. +91 75987 56841 இந்த நம்பர் என்னுடைய நம்பர் கிடையாது. என்னுடைய படத்துடன் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார்.
    • மான்யா ஆனந்த் நடித்த கயல், அன்னம் , மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியல் மூலமாக நடிகை மான்யா ஆனந்த் பிரபலமானார். இதனை தொடர்ந்து அவர் நடித்த கயல், அன்னம், மருமகள் சீரியல்களும் மக்களிடையே நல்ல கவனம் பெற்றது.

    தற்போது ஜிம்முக்கு சென்று பிட்னெஸ் விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் மான்யா ஆனந்த் தனது சீரியல் மற்றும் திரைத்துறை அனுபங்களை குறித்து நேர்காணல் கொடுத்துள்ளார்.

    அந்த நேர்காணலில் தனுஷின் மேனேஜர் தன்னை தனுஷ் படத்தில் நடிக்க அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறினார் என்று குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நேர்காணலில் பேசிய மான்யா ஆனந்த், "தனுஷின் மேனேஜர் ஷ்ரேயஸ் என்பவரிடம் இருந்து அழைப்பு வந்தது. தனுஷ் படத்தில் நீங்க நடிக்க முடியுமா... அப்படியெனில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று கூறினார். நான் அது எல்லாம் பண்ண மாட்டேன் என்று கூறினேன். அதற்கு தனுஷ் என்றாலும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய மாட்டீர்களா என்று அந்த நபர் மெசேஜ் அனுப்பினார். தனுஷாக இருந்தாலும் நான் அட்ஜஸ்ட் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டேன்.

    அதே மாதிரி அண்மையில், ஷ்ரேயஸ் எனக்கு தனுஷ் படத்தின் ஸ்க்ரிப்ட் அனுப்பி நடிக்க வேண்டுமா என்று கேட்டார் . ஆனால் நான் அந்த கதையை கூட படிக்கவில்லை. நாங்கள் நடிகர்கள் வேறு தொழில் செய்பவர்கள் இல்லை" என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,

    • காரைக்கால் கிளை பல்கலைக்கழக பேராசிரியர் அந்தமானுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • காரைக்காலில் ஒரு பேராசிரியர் மீது சம்பந்தப்பட்ட மாணவியிடம் இருந்து புகார் வரவில்லை.

    புதுச்சேரி:

    காரைக்காலில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக கிளையில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    மேலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும் மாணவிகளிடம் பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதில் தொடர்புடைய பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரியில் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர்.

    மேலும் மாணவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனை கண்டித்து புதுச்சேரி அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதனையடுத்து புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர்களுடன் அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பல்கலைக்கழக உள் புகார் குழு விசாரித்து பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் புகாருக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாணவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 3 பேராசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் காரைக்கால் கிளை பல்கலைக்கழக பேராசிரியர் அந்தமானுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை புதுச்சேரி பல்கலைக்கழக துணை பதிவாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த வாரம் 3 பேராசிரியர்கள் மீது வந்த புகாரை, பெண் பேராசிரியர் தலைமையிலான உள் புகார் குழு விசாரித்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் 3 பேராசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இந்த 3 புகார்கள்தான் எங்களுக்கு நேரடியாக வந்தது.

    காரைக்காலில் ஒரு பேராசிரியர் மீது சம்பந்தப்பட்ட மாணவியிடம் இருந்து புகார் வரவில்லை. இருப்பினும் குற்றச்சாட்டின் பேரில், காரைக்காலில் உள்ள மாவட்ட அளவிலான புகார் குழு விசாரித்து வருகிறது. அந்த குழுவிற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்க சம்மந்தப்பட்ட பேராசிரியர் அந்தமான் நிக்கோபார் தீவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

    குற்றம் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அவரை சஸ்பெண்டு செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் புகார் முறையாக வந்ததால், உள்புகார் குழுவால் விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் காரைக்காலில் அப்படி இல்லை. கலெக்டர் விசாரணையை தொடங்கி உள்ளார்.

    அவரது விசாரணைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும். யாரையும் பாதுகாக்கவும் இல்லை. மறைக்கவும் இல்லை. புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம், பாலியல் சம்மந்தமான குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான நிலைபாட்டில் உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தனது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாமனார் மீது பெண் ஒருவர் புகார் அளித்தார்.
    • விசாரணையில் கணவரின் பேச்சைக் கேட்டு மனைவி பொய் புகார் கொடுத்தது அம்பலமானது.

    சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை என பொய்யாக போக்சோ புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சென்னை ராயப்பேட்டையில் தனது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாமனார் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    இந்த வழக்கின் விசாரணையில் கணவரின் பேச்சைக் கேட்டு மனைவி பொய் புகார் கொடுத்தது அம்பலமானது.

    இதனையடுத்து, "போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22(1)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். .

    • பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார்.
    • இந்தி நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார்.

    தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகையான தனுஸ்ரீ தத்தா, தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார்.

    2018-ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளஸ் என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பில் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று மும்பை போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், தனது சொந்த வீட்டிலேயே தம்மை துன்புறுத்துவதாகவும், தமக்கு யாராவது உதவி செய்யும்படியும் சமூக வலைதளத்தில் தனுஸ்ரீ தத்தா வீடியோ வெளியிட்டு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும், அந்த வீடியோவில் metoo புகார் கொடுத்ததில் இருந்து தனது சொந்த வீட்டிலேயே நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன். அதனால் மிகவும் சோர்ந்து விட்டேன். இப்போது எனக்கு உடல்நிலை சரியில்லை" என்று தெரிவித்தார்.

    • பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண் தனது ஆண் நண்பர்கள் இருவருக்கு போன் செய்து விடுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.
    • ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் பெரம்பூரை சேர்ந்த இளம்பெண், அரசுத்துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னை பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண்ணும் வேலூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.

    தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இருவரும் கடந்த 27-ந்தேதி நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரில் உள்ள விடுதி ஒன்றில் 2 அறைகளை பதிவு செய்து தங்கினார்கள். அப்போது இருவரும் விடுதி அருகில் வைத்து நன்றாக மது அருந்தி உள்ளனர்.

    அப்போது பெரம்பூரைச் சேர்ந்த இளம்பெண் தனது ஆண் நண்பர்கள் இருவருக்கு போன் செய்து விடுதிக்கு வருமாறு கூறியுள்ளார்.

    இதையடுத்து அந்த 2 வாலிபர்களும் இளம்பெண்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றனர்.

    பின்னர் 4 பேரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கு ஏறிய நிலையில் அனைவரும் விடுதி அறையிலேயே படுத்து தூங்கி உள்ளனர்.

    வேலூரை சேர்ந்த இளம்பெண்ணும் போதையில் தள்ளாடிய படியே மது மயக்கத்தில் தூங்கி உள்ளார்.

    நீண்ட நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது, அவரது ஆடைகள் கலைந்திருந்தன. அலங்கோலமான நிலையில் அவர் காட்சி அளித்துள்ளார். இதன் பிறகே அவர் மதுபோதையில் ஆண் நண்பரின் அறையில் சென்று தூங்கியது தெரியவந்தது. அருகில் பெண் தோழியின் ஆண் நண்பர் படுத்திருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்த ஆண் நண்பர் தான் மதுபோதையில் வேலூர் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து வேலூர் பெண் தனது தோழியான பெரம்பூர் இளம்பெண்ணிடம் சண்டை போட்டுவிட்டு ஊருக்கு சென்று விட்டார்.

    அங்கு தனது தாயிடம் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்து கண்ணீர் விட்டு உள்ளார். அவரது அறிவுறுத்தலின் பேரில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.

    வேலூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினார்கள். பாலியல் அத்துமீறல் சம்பவம் நடந்த இடம் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், இந்த வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.

    இதையடுத்து ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் பெரம்பூரை சேர்ந்த இளம்பெண், அரசுத்துறையில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    பின்னர் 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மதுபோதையில் 2 இளம்பெண்கள் ஆண் நண்பர்களோடு தூங்கியதில் இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

    • ஊட்டி ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரித்தனர்.
    • கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தான் ஊட்டி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஹோப் பார்க் பகுதியில் வசித்து வந்தவர் செந்தில்குமார் (வயது50). இவர் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

    அந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இவர் அறிவியல் வகுப்பு எடுத்து வந்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் பாலியல் கல்வி குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது உடலில் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு முடிந்ததும் அந்த பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி ஒருவர் போலீசாரிடம், எங்கள் பள்ளியில் அறிவியல் ஆசிரியாக வேலை பார்த்து வரும் செந்தில்குமார் என்பவர் உடலில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

    அவர் இதுபோன்று பல மாணவிகளையும் தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு சில நேரங்களில் மாணவிகளுக்கு முத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    அந்த பள்ளியில் படித்த 21 மாணவிகள் தங்களுக்கு அறிவியல் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்தனர்.

    இதனால் அதிர்ச்சியான போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து ஊட்டி ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் இதுதொடர்பாக விசாரித்தனர்.

    விசாரணையில் முடிவில் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊட்டியில் உள்ள கிளை ஜெயிலில் அடைத்தனர்.

    தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், செந்தில்குமார் கடந்த 23 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தான் ஊட்டி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    மேலும் இதுதொடர்பாக சில மாணவிகள் ஏற்கனவே இவர் மீது புகார் அளிக்க முன்வந்துள்ளனர். இதனை அறிந்த அவர் அந்த மாணவிகளை மிரட்டியதால் அவர்கள் புகார் கொடுக்க முன்வரவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி உள்ளதால், முன்பு பணியாற்றிய பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளரா? என்பது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகள் குழுவினர் இணைந்து இந்த விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சப் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    • சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் மாலையில் வீட்டு அருகில் விளையாடிய மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் மாணவியை கண்டுபிடிக்க முடியாமல் உறவினர்கள் திணறி வந்தனர்.

    இந்த நிலையில் நுங்கம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் உள்ள ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் ராஜி என்பவரின் வீட்டில் காணாமல் போன மாணவி இருப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்று மாணவியை உறவினர்கள் மீட்டனர். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது வீட்டில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லை.

    இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவிக்கு சப் இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை அளித்து இருப்பதாக கூறி நள்ளிரவில் அவரது வீட்டை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவியின் தாத்தா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி மோதலை தடுத்து நிறுத்தினார்கள்.

    இதற்கிடையே இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டு வீடியோவிலும் அதனை பதிவு செய்து வெளியிட்டனர்.

    இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் உயர் போலீஸ் அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து மாணவி மீதான பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக பெண் போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து சப் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக நேற்று இரவு பரபரப்பான தகவல்கள் வெளியான நிலையில் போலீசார் முதலில் இதனை மறுத்தனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தான் சப் இன்ஸ்பெக்டர் செயல்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

    ஆனால் மாணவி மீதான பாலியல் வழக்கில் அதிரடி திருப்பமாக சப்-இன்ஸ்பெக்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்த விவகாரம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, எப்போதும் போல் சிறுமி மீதான பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், விசாரணை முடிவில் தான் மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றிய முழு விவரங்கள் தெரியவரும் எனவும் கூறி உள்ளனர்.

    மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியபோது மாலை 6 மணிக்கு பிறகு எனக்கு என்ன நடந்தது என தெரியவில்லை. நான் மயக்கமாகி விட்டேன் எனக் கூறியிருந்தார்.

    இதனால் மயக்க ஊசி அல்லது மயக்க மருந்து செலுத்தி சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றுள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விசாரணை முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் மீது கைது நடவடிக்கை மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மாணவியின் பெற்றோர் மீதும் மாணவியை துன்புறுத்தியதாக வழக்கு போடப்பட்டுள்ளது.

    • சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை அரசு நியமித்தது.
    • ஹேமா கமிட்டியிடம் நடிகைகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மொத்தம் 34 வழக்குகள் பதியப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகம் இருப்பதாக வந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, அதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டியை மாநில அரசு கடந்த 2017-ம் ஆண்டு அமைத்தது.

    அந்த கமிட்டியினர் ஏராளமான நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று அறிக்கை தயாரித்தனர். ஹேமா கமிட்டி தனது விசாரணை அறிக்கையை 2019-ம் ஆண்டு கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் ஒப்படைத்தது. ஆனால் அந்த அறிக்கை பல ஆண்டுகளாக வெளியிடப்படாமல் இருந்தது.

    இந்தநிலையில் பல தரப்பினரும் வலியுறுத்தி வந்ததன் பேரில் ஹேமா கமிட்டி அறிக்கையை கடந்த ஆண்டு கேரள அரசு வெளியிட்டது. அந்த அறிக்கையில் மலையாள நடிகைகள், சினிமா படப்பிடிப்பு தளங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி மிகவும் வெளிப்படையாக தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை அரசு நியமித்தது. அந்த குழுவினர் நடிகைகளின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது வழக்கு பதிந்தனர்.

    ஹேமா கமிட்டியிடம் நடிகைகள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மொத்தம் 34 வழக்குகள் பதியப்பட்டன. ஒவ்வொரு வழக்கிற்கான குற்றப்பத்திரிகையை தயார் செய்யும் பணியில் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் பாலியல் புகார் கொடுத்த நடிகைகளில் பலர், வழக்கை தொடர விரும்பவில்லை.

    இதனால் மலையாள திரையுலகினர் மீதான பாலியல் புகார் வழக்கு விசாரணையில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. இந்தநிலையில் ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பதியப்பட்ட 34 வழக்குகள் விசாரணையையும் சிறப்பு புலனாய்வு குழு நிறுத்தியுள்ளது.

    பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக ஹேமா கமிடடியிடம் வாக்குமூலம் அளித்தவர்கள், விசாரணைக்கு ஒத்துழைக்காததன் காரணமாக விசாரணையை முடிக்க வேண்டியிருந்ததாக கோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழு தகவல் தெரிவித்திருக்கிறது.

    மலையாள திரையுலகினர் மீதான பாலியல் வழக்குகளில் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையையும் சிறப்பு புலனாய்வு குழு நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பாதுகாப்பு பணியில் இருந்த காவலராலேயே அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளதை ஏற்க முடியவில்லை.
    • தைரியமாக மாணவி குற்றஞ்சாட்டியதால் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை தாம்பரம் அருகே அரசு விடுதியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அரசு விடுதி காவலராலேயே நடந்த இந்த சம்பவத்தை ஏற்கவே முடியாது.

    * இதுவரை காவலர் மேத்யூ மீது எந்த குற்றச்சாட்டும் பதிவாகவில்லை. இதுவே முதல்முறை.

    * வார்டன் விடுமுறையில் இருந்த சமயத்தில் குற்றச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    * பாதுகாப்பு பணியில் இருந்த காவலராலேயே அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளதை ஏற்க முடியவில்லை.

    * விடுதி வார்டன் விடுப்பில் சென்றநிலையில் காவலாளி அத்துமீறலில் ஈடுபட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

    * தைரியமாக மாணவி குற்றஞ்சாட்டியதால் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

    * பெண்கள், பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஆண்கள் ஈடுபடுவதை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    * அன்னை சத்யா இல்லம் உள்ளிட்ட பெண்கள், பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் பெண் காவலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    * அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் அனைத்து இல்லங்களிலும் பாதுகாப்பிற்கு பெண் காவலர்கள் நியமிக்கப்படுவர்.

    * தாம்பரம் அருகே அரசு விடுதியில் மாணவியிடம் காவலாளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரையடுத்து அரசு புதிய முடிவு எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாணவிக்கு விடுதி காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
    • விடுதி காவலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் கைது செய்யப்பட்டார்.

    அரசு விடுதியில் தங்கியிருந்து 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு விடுதி காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மாணவி கால் முறிவு ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் மேத்யூவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×