என் மலர்

    நீங்கள் தேடியது "Puducherry University"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் பங்கேற்றார்.
    • வழக்கமாக மத்திய மந்திரிகள், துணை ஜனாதிபதி ஆகியோர் சென்னை விழாவையொட்டி புதுவைக்கும் வருவார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.

    பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார் என முதலில் அறிவிக்கப்பட்டது.

    அவரின் வருகைக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தது. 2 நாட்களுக்கு முன்பு துணை ஜனாதிபதி வருகை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து பட்டமளிப்பு விழாவில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவார்கள் என தெரிவித்தனர். ஆனால் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கவர்னரும், முதல்-அமைச்சரும் பங்கேற்கவில்லை.

    அதேநேரத்தில் சென்னை ஐ.ஐ.டி.,யில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் பங்கேற்றார். வழக்கமாக மத்திய மந்திரிகள், துணை ஜனாதிபதி ஆகியோர் சென்னை விழாவையொட்டி புதுவைக்கும் வருவார்கள்.

    சென்னை வரை வந்த துணை ஜனாதிபதி புதுவை பல்கலைக்கழக விழாவில் பங்கேற்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுவதுதான் காரணம் என கூறப்படுகிறது.

    சமீபத்தில் டெல்லி பல்கலைக்கழகம், புதுவை பல்கலைக்கழக துணை வேந்தருக்கு நோட்டீஸ் அனுப்பியது. அங்கு அவர் பேராசிரியராக பணியாற்றிய போது தங்கியிருந்த வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும், அதற்கான வாடகை பாக்கி ரூ.23 லட்சத்தை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் புதுவை பல்கலைக்கழகத்தில் இயங்கும் பல்வேறு சங்கத்தினர் ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி ஆகியோருக்கு தொடர்ந்து புகார்களை அனுப்பி வருகின்றனர்.

    அதில் புதுவை பல்கலைக்கழகத்தில் பல கோடி ரூபாய் ஊழல், முறைகேடுகள் நடப்பதாக குறிப்பிட்டுள்ளனர். டிஜிட்டல் போர்டு அமைப்பது உட்பட பல்வேறு முறைகேடுகளில் பல கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த புகார் காரணமாகவே பட்டமளிப்பு விழாவை துணை ஜனாதிபதி, கவர்னர் தமிழிசை புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பாடத்திட்டத்தை வடிவமைக்க திட்டம்.
    • தேர்ந்த பட்டய கணக்காளர்களின் தேவை அதிகரித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழக மேலாண்மை வணிகவியல் துறை, லண்டனில் உள்ள சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் பட்டய (ஏசிசிஏ) சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய பல்கலைக்கழக இயக்குனர் கே.தரணிக்கரசு, தேசிய கல்விக் கொள்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய ஏ.சி.சி.ஏ. கல்வித் திட்டத்துடன் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை வடிவமைப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்று தெரிவித்தார். டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகளாவிய சூழ்நிலையில் தேர்ந்த பட்டய கணக்காளர்களின் தேவை மற்றும் பணிச் சூழல் மாறுதல்களின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

    நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் அமரேஷ் சமந்தராய, ஏ.சி.சி.ஏ-வின் தென்னிந்திய தலைவர் சரவணகுமார், சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் சுப்பிரமணியம் ராஜூ, வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×