search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students protest"

    • வல்லம்பட்டியிலிருந்து வலசு கிராமம் வரை பஸ் வசதியை நீட்டித்திடக் கோரி குரும்பபட்டியில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து பஸ் இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

    குள்ளனம்பட்டி:

    சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி ஊராட்சி வல்லம்பட்டியிலிருந்து வலசு கிராமம் வரை பஸ் வசதியை நீட்டித்திடக் கோரி குரும்பபட்டியில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழக அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

    ஆனால் பஸ் இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் ஆய்வாளர் ஜெயச்சந்திரன்,வி.ஏ.ஓ செல்வம்,இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன்,ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் வருகிற 14-ந்தேதி போக்குவரத்து கழக அதிகாரிகளோடு அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து பஸ் இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

    • போலீசார் மாணவர்களை குண்டு கட்டாக அப்புறப்படுத்த முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    • விடுதி மாணவர்களின் போராட்டத்தினால் திருச்சி-மதுரை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது.

    திருச்சி:

    திருச்சி கிராப்பட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 120 பேர் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி அவர்கள் பல முறை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக சென்று மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. விடுதி வார்டனும், துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் இன்று திருச்சி-மதுரை சாலையில் கிராப்பட்டி மேம்பாலத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்ட மோசமான காலை உணவான இட்லியுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவர்களை குண்டு கட்டாக அப்புறப்படுத்த முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தரமற்ற உணவுகளால் விடுதியில் பயின்ற 3 மாணவர்கள் வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதாகவும், இதுபோன்று மற்ற மாணவர்களுக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது என்ற நோக்கிலேயே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் மாணவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். பின்னர் மாணவர்கள் இட்லி குண்டாவை தூக்கிக் கொண்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

    இதை தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    விடுதி மாணவர்களின் போராட்டத்தினால் திருச்சி-மதுரை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது.

    • இறந்த தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு கூடுதலாக நிதி வழங்க வேண்டும் எனக் கூறி புதுப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கல்லூரி ஆரம்பம் மற்றும் முடியும் நேரத்தில் அரசு பஸ் விட வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் அரசு பெரியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் பண்ருட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் உள்பட 9 பேர் ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது ஷேர் ஆட்டோ திடீரென்று சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்த மாணவன் தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதற்கு உத்தரவிட்டார். ஆனால் இறந்த தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு கூடுதலாக நிதி வழங்க வேண்டும் எனக் கூறி புதுப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை பெரியார் அரசு கலைக் கல்லூரிக்கு வழக்கம் போல் மாணவர்கள் வந்தனர். பின்னர் திடீரென்று மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு கோஷங்கள் எழுப்பிக்கொண்டு கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி ஆரம்பம் மற்றும் முடியும் நேரத்தில் அரசு பஸ் விட வேண்டும். ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ போன்றவை எங்களுக்கு தேவையில்லை. மேலும் இறந்த மாணவன் தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு கூடுதலாக நிவாரண உதவி வழங்குவதோடு, அவரது குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள்.

    அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த சமயத்தில் மாணவர்கள் அங்கிருந்து தலைமை தபால் நிலையம் வந்து மறியலில் ஈடுபட ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை ஏற்காமல் மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். உப்பனாறு பகுதியில் வரும் போது தாசில்தார் விஜய் ஆனந்த் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு நின்றனர். அவர்களும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைத்தனர். அதனையும் ஏற்காத மாணவர்கள் தீயணைப்பு துறை அலுவலகம் அருகே ஊர்வலமாக வந்தனர்.

    அங்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் நீங்கள் வாய்மொழி வழியாகத்தான் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் என கூறுகிறீர்கள். கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என எழுத்து பூர்வமாக எழுதி கொடுங்கள் என்றனர். மேலும் பேச்சுவார்த்தைக்கு கலெக்டர் வரவேண்டும் என்றனர். கலெக்டர் வெளியூர் சென்று இருப்பதால் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் கடலூரில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    • மணிப்பூர் பிரச்சனையில் மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • அரசாங்கத்தின் சந்தர்ப்பவாதம் மற்றும் அரசியல் தந்திரங்களை கண்டிக்கிறோம்.

    மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறையை கண்டித்து புதுடெல்லியில் மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜந்தர் மந்தர் அருகே நடந்த இப்போராட்டத்தில், அகில இந்திய மாணவர் சங்கம், கிராந்திகாரி யுவ சங்கதன் மற்றும் புரட்சிகர இளைஞர் சங்கம் ஆகியவை பங்கேற்றன.

    இப்போராட்டம் தொடர்பாக ஒரு மாணவி போராடும் மாணவ-மாணவியர்களிடையே உரையாற்றிய வீடியோ வெளியாகியிருக்கிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

    மணிப்பூர் பிரச்சனையில் மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்களிலேயே நேரம் செலவிடுகிறார். பல்வேறு மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் மணிப்பூரில் நடக்கும் வன்முறைகளை குறித்து அவர் எங்கும் பேசவில்லை.

    வன்முறையை அடக்க முடியாமல் போனதால் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் இதற்கு பெருமளவு பொறுப்பாகிறார். நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, தனது மாநில மக்களை வெளியாட்கள் மற்றும் பழங்குடியினர் என்றும் முதல்வர் அழைக்கிறார். மே மாதம் நடந்த இனக்கலவரத்தில் மணிப்பூரில் பெண்கள் மானபங்கபடுத்தப்பட்டது குறித்து காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது. ஆனால் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு நடந்த சம்பவங்களின் வீடியோக்கள் 4 நாட்கள் முன் வெளியானதும், பொதுமக்களின் சீற்றத்தை கண்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் முடிவு செய்தது.

    இங்கு கூடியிருக்கும் நாங்கள் அனைவரும் அரசாங்கத்தின் இத்தகைய சந்தர்ப்பவாதம் மற்றும் அரசியல் தந்திரங்களை கண்டிக்கிறோம். முதல்வர் பிரேன் சிங் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அந்த மாணவி உணர்ச்சிகரமாக பேசினார்.

    • திரு.வி.க. பள்ளிக்கு சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் சென்றனர்.
    • திரு.வி.க. பள்ளி மாணவர்கள் பள்ளியின் கதவை பூட்டி, இது ஆண்கள் பள்ளி, எங்கள் பள்ளி எனக்கூறி போராட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை ஆம்பூர் சாலையில் உள்ள பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது.

    பழமையான கட்டிடம் சேதமடைந்ததால் அங்கு மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உருவானது. இதையடுத்து கடந்த கல்வியாண்டில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி மாணவிகள் குருசுகுப்பத்தில் உள்ள என்.கே.சி. பள்ளிக்கு மாற்றப்பட்டனர். அங்கு 2 பள்ளிகளும் ஷிப்ட் முறையில் இயங்கி வந்தது. என்.கே.சி. பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பள்ளி இயங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் இந்த ஆண்டு சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகளை சவரிராயலு வீதியில் உள்ள திரு.வி.க. ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    திரு.வி.க. பள்ளி மாணவர்கள் கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு மாற்றி ஷிப்ட் முறையில் இயக்க முடிவு செய்தனர். திரு.வி.க. பள்ளி மாணவர்கள் வீரமாமுனிவர் பள்ளிக்கு செல்ல மறுத்து போராட்டம் நடத்தினர். அதேபோல வீரமாமுனிவர் பள்ளி மாணவர்களும் ஷிப்ட் முறையில் பள்ளி நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று பள்ளி திறந்த போது சுப்பிரமணிய பாரதியர் பள்ளி மாணவிகள் திரு.வி.க. பள்ளிக்கு சென்றபோது பள்ளி நடைபெறவில்லை. பள்ளிக்கு விடுமுறை அறிவித்தனர்.

    இன்று திரு.வி.க. பள்ளிக்கு சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் சென்றனர். திரு.வி.க. பள்ளி மாணவர்கள் பள்ளியின் கதவை பூட்டி, இது ஆண்கள் பள்ளி, எங்கள் பள்ளி எனக்கூறி போராட்டம் நடத்தினர். இதனால் பள்ளிக்கு இடம் இல்லாத நிலைக்கு சுப்பிரமணிய பாரதியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தள்ளப்பட்டனர்.

    இதையடுத்து மாணவிகள் கல்வித்துறை நோக்கி பெற்றோர்களுடன் செல்ல முயற்சித்தனர். அவர்கள் ஊர்வலமாக வந்து கம்பன் கலையரங்கில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மாணவிகள் போராட்டம் குறித்து தெரிந்த பல்வேறு சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். மாணவிகளை ஊர்வலமாக வெங்கடசுப்பாரெட்டியார் சதுக்கத்துக்கு சமூக அமைப்பினர் அழைத்து வந்தனர். இதனிடையே நேரு எம்.எல்.ஏ. திரு.வி.க. பள்ளிக்கு சென்று மாணவர்களை சமாதானப்படுத்தினார். பின்னர் போராட்டம் நடத்திய இடத்துக்கு வந்த நேரு எம்.எல்.ஏ. மாணவிகளை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் மாணவிகள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் நேரு எம்.எல்.ஏ. அங்கிருந்து விலகிச்சென்றார். மாணவிகள் போராட்டத்தால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. புதிய பஸ் நிலையத்திலிருந்து வந்த வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. புஸ்சி வீதி, அண்ணாசாலை, கடலூர் வழியாக வந்த வாகனங்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த அமைச்சர் நமச்சிவாயம் சம்பவ இடத்துக்கு நேரில் வந்தார். அப்போது மாணவிகள், சரமாரியாக கேள்வி எழுப்பினர். தங்களுக்கு தனியாக பள்ளி வளாகம் வேண்டும், ஷிப்ட் முறையில் பள்ளியை நடத்தக்கூடாது என கேட்டனர். இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம், 2 நாட்கள் அவகாசம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார்1 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    • புதுவை கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது.
    • இந்த கல்லூரியில் 140 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். 10-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது.

    இந்த கல்லூரியில் 140 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். 10-க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 10 மாதமாக சம்பளம் வழங்கவில்லை. பலமுறை கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

    சம்பளம் வழங்க வலியுறுத்தி பேராசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இங்கு படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பேராசிரியர்களுக்கு ஆதரவாக இன்று மாணவர்க ளும் போராட்டத்தில் குதித்த னர். தனியார் கல்லூரிக்கு நிகராக ரூ. 51 ஆயிரம் கட்டணம் வசூலிக்கின்றனர். அடுத்தமாதம் செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளது. பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால் போராட்டம் நடத்துகின்றனர்.

    இதனால் பாதியளவு பாடங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இதனால் செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை உள்ளது. கூட்டுறவுத்துறையில் இருந்து கல்வியியல் கல்லூரியை பிரித்து கல்வித்துறையின் கீழ் இணைக்க வேண்டும்.

    பேராசிரியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கி வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    தொடர்ந்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவுவாயிலில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • போலீசார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
    • போராட்டத்தில் ஈடுபடாத சில மாணவர்களும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    கொழும்பு:

    இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கொழும்பு பல்கலைக்கழகம் அருகே மாணவர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் காவல்துறையினர் விரட்டினர். மேலும் போலீசார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

    அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபடாத சில மாணவர்களும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனவே தாக்குதலை நிறுத்தும்படி போலீஸ் அதிகாரிகளிடம் பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்களும் சில மாணவர்களும் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடாத மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களிடம் காவல்துறை மன்னிப்பு கோரியது.

    போலீசாரின் தாக்குதலுக்கு மாணவர் அமைப்பு மற்றும் பேராசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது. தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பேராசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி சுமார் 100 மாணவர்கள் விடுதியில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தரமான உணவு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பெரம்பூர்:

    காசிமேடு, சூரிய நாராயணன் சாலையில் ஆதிதிராவிடர் ஆராய்ச்சி மற்றும் முதுகலை பட்டதாரி மாணவர் விடுதி உள்ளது.

    இங்கு சுமார் 180 மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்று இருப்பதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து மாணவர்கள் விடுதி பொறுப்பாளர் ராதிகாவிடம் தெரிவித்தனர். அதேபோல் தொடர்ந்து உணவு வழங்கப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணியளவில் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி சுமார் 100 மாணவர்கள் விடுதியில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ ஐட்ரீ்ம் மூர்த்தி, சப்-கலெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தரமான உணவு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு 12 மணியளவில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • மாணவ பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
    • முதல்வர் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மாணவ-மாணவிகள் வீடியோ எடுத்து வெளியிட்டனர்

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் முதல்வராக ரெமா செயல்பட்டு வந்தார். இக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், குடிநீர் மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கல்லூரி மாணவ பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.

    அப்போது முதல்வர் அறைக்கு சென்ற மாணவ-மாணவிகள் தங்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் அறையில் இருந்து வெளியேற மாட்டோம் எனவும் கூறினர். இதனால் கல்லூரி முதல்வர், மாணவர்கள் அமர்ந்திருந்த அறையை வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

    இதையடுத்து முதல்வர் அறையில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்த மாணவ-மாணவிகள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இது வைரலாகி கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இந்த தகவல் கேரள உயர் கல்வி துறை மந்திரி கவனத்திற்கும் சென்றது. கேரள உயர் கல்வி துறை மந்திரி பிந்து இச்சம்பவம் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் ரெமாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். இதுபற்றிய தகவலை அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். மாணவர் போராட்டம் காரணமாக கல்லூரி முதல்வர் பதவிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வடமதுரை மற்றும் அய்யலூர் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது.
    • அரசு பஸ்சை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மற்றும் அய்யலூரை சுற்றி ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு காலை நேரத்தில் ஒரு அரசு பஸ் மட்டுமே திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் வந்து செல்கின்றனர்.

    கடந்த சில நாட்களாக பஸ்கள் சரிவர இயக்கப்படாததால் மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு பள்ளியில் ஆப்சென்ட் போடப்பட்டது. இதுதொடர்பாக பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களாக வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே அரசு பஸ் இயக்கப்பட்டதால் கர்ப்பிணி பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரும் போக்குவரத்து வசதியின்றி தவித்தனர். இதனால் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் கொடுத்து செல்லும் நிலை ஏற்பட்டது.

    இன்று காலை மம்மானியூர் வந்த அரசு பஸ்சை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். மேலும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கொம்பேறிபட்டி, காடையனூர், மம்மானியூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு போதுமான பஸ்வசதி செய்து தரவேண்டும் என அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

    • திண்டிவனத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • இரவு நேரத்தில் மின்விளக்கு கள் சரியாக எரியாததால் எங்க தொட்டாலும் ஷாக் அடிக்கிறது.

    விழுப்புரம்:

    திண்டிவனத்தில் அரசு கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரி அருகே ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர் விடுதி இயங்கி வருகிறது. இங்கு 75 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இன்று காலை கல்லூரி செல்லாமால் மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்த னர். அங்கு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நல்ல முறையில் இல்லாததால் அவர்கள் உணவை சாப்பிட மறுத்து திடீரென உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த திண்டிவனம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன் மற்றும் ரோசணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் ஆகியோர் நேரில் சென்று, மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது, மாணவர்கள் விடுதியில் குடிநீர், கழிப்பறை வசதிகள் எதுவும் சரியான முறையில் இல்லை. மேலும் எங்களுக்கு தயார் செய்து வழங்கப்படும் உணவும் நல்ல முறையில் இல்லை. அதோடு இரவு நேரத்தில் மின்விளக்கு கள் சரியாக எரியாததால் எங்க தொட்டாலும் ஷாக் அடிக்கிறது. எங்களால் படிக்க முடியாமல் போய்விடுகிறது. மேலும் விடுதியை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் எங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவு கிறது. ஆகையால் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தந்தால் தான் போராட்டத்தை கைவிடு வோம் என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து தனிதா சில்தார் கூறுகையில் இன்னும் ஒரு வாரத்தில் மாற்று இடம் வழங்கப்படும் எனவும், புதிய கட்டிடம் விரைவில் கட்டப்படும் என்று தெரிவித்தார். இதையேற்று மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்து, உணவை சாப்பிட்டனர்.

    • மாணவர்கள் மடியில் மாணவிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
    • சிறிதுநேரத்தில் இந்த வீடியோ வைரலானது. பலரும் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் அமர நீண்ட இருக்கை அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த பஸ் நிறுத்தத்தில் எப்போதும், கல்லூரி மாணவ, மாணவிகள் நீண்ட இருக்கையில் அமர்ந்து அரட்டை அடிப்பது வழக்கம்.

    இதனை அப்பகுதி மக்கள் அடிக்கடி கண்டித்து வந்தனர். மேலும் மாணவ, மாணவிகள் சேர்ந்து அமர்ந்திருப்பதையும் விமர்சித்தனர்.

    பொதுமக்களின் விமர்சனத்தை மாணவ, மாணவிகள் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்து இருக்கையில் அமர்ந்து பேசி வந்தனர்.

    இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் இரவோடு, இரவாக நீண்ட இருக்கையை துண்டு, துண்டாக வெட்டி ஒருவர் மட்டுமே அமரும் வகையில்தனித்தனி இருக்கையாக மாற்றி விட்டனர். மறுநாள் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் இருக்கை துண்டிக்கப்பட்டு தனித்தனியாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    நீண்ட இருக்கை துண்டிக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் பஸ் நிறுத்தத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துண்டிக்கப்பட்ட இருக்கையில் மாணவர்கள் அமர்ந்து கொள்ள அவர்களின் மடியில் மாணவிகள் நெருக்கமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நேரம் செல்ல செல்ல கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் பலரும் பேராட்டத்தில் இணைந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    மாணவர்கள் மடியில் மாணவிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    சிறிதுநேரத்தில் இந்த வீடியோ வைரலானது. பலரும் இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.

    இந்த பதிவை திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யாவும் பார்த்தார். நேற்று அவர் அந்த பஸ் நிறுத்தத்திற்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கேரளாவில் ஆணும், பெண்ணும் ஒன்றாக அமர எந்த தடையும் இல்லை. முற்போக்கு சிந்தனை உடைய சமூகத்தில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதை ஏற்கமுடியாது.

    இன்னும் பழங்கால சிந்தனையில் ஊறி திளைப்பவர்கள், காலம் மாறிவிட்டதை புரிந்து கொள்ள வேண்டும்.

    பாழடைந்த இந்த பஸ் நிறுத்தம் பொதுப்பணித்துறையின் அனுமதி இன்றி கட்டப்பட்டு உள்ளது. விரைவில் இங்கு நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிறுத்தம் கட்டப்படும், என்றார்.

    ×