search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus facility"

    • தஞ்சை மற்றும் புதுக்கோட்டைகளுக்கு சென்று வர பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.
    • போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பழைய கந்தர்வக்கோட்டையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் இருந்து பொதுமக்கள் அருகில் உள்ள தஞ்சை மற்றும் புதுக்கோட்டைகளுக்கு சென்று வர பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    அதே போல் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி கேட்டும், அனைத்து பேருந்துகளும் பேருந்து நிறுத்தத்தில் செல்ல வலியுறுத்தியும் இன்று காலை சாலை மறியலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதனை அறிந்து கந்தர்வகோட்டை காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • வெள்ளகோவிலில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர்.
    • ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

    வெள்ளகோவில்: 

    வெள்ளகோவில், திருப்பூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். வெள்ளகோவிலில் 200-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன, விசைத்தறிக்கூடங்கள், ஆயில் மில்கள், பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. வெள்ளகோவிலில் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர். வெள்ளகோவில் வழியாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருப்பூர், ஊட்டி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. விசேஷ தினங்களில் பயணிகளுக்கு போதிய பஸ் வசதி இருப்பதில்லை.

    இதனால் மணிக்கணக்கில் பயணிகள் காத்திருந்து கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. நீண்ட நேரத்திற்கு பிறகு வரும் பஸ்சில் பயணிகள் நின்று கொண்டும், படியில் தொங்கியவாறும் பயணிக்கின்றனர். அதைத் தொடர்ந்து வரும் பேருந்துகள் ஒரே நேரத்தில் ஒன்றின் பின் ஒன்றாக போதிய பயணிகள் இல்லாமல் ஒரே வழித்தடத்திற்கு செல்கின்றன. இதனால் போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஒரு கண்காணிப்பாளரை நியமனம் செய்து பயணிகளின் தேவைக்கேற்ப பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமாறு பயணிகள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளகோவில் நகராட்சி பஸ் நிலைய வளாகத்தில் போக்குவரத்து கழகத்திற்கு என்று தனியாக ஒரு அறையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாணவிகள் மற்றும் மாணவர்கள் பஸ்சில் படியில் ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர்.
    • கூடுதல் பஸ் விடு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றனர்.

    தாளவாடி:

    தாளவாடி சுற்று வட்டார பகுதியில் 80-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் தாளவாடி, சூசைபுரம், மல்லங்குழி, பனக்கள்ளி ஆகிய பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு போதிய பஸ் வசதிகள் இல்லாத காரணத்தால் படியில் தொங்கிய படி ஆபத்தான முறையில் தினந்தோறும் பயணம் செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் தாளவாடியில் இருந்து சூசைபுரம் வழியாக பனக்கள்ளி நோக்கி சென்ற அரசு பஸ்சில் மாணவிகள் மற்றும் மாணவர்கள் பஸ்சில் போதிய இடம் இல்லாத காரணத்தால் படியில் ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனர்.

    இது பற்றி மாணவ- மாணவிகள் கூறும்போது,

    காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டு மென அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளிக்கப் பட்டுள்ளதாகவும், இது வரை அதிகாரிகள் எந்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என குற்றம் சாட்டினர்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பஸ் விடு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றனர்.

    • பஸ் வசதி இல்லாததால் ஆண்டிபட்டி மற்றும் சக்கம்பட்டி பகுதிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
    • நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இப்பகுதிகளில் இயக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே லட்சுமிபுரம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதிகளில் சுமார் 1500 பேர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதிகளுக்கு கடந்த 40 ஆண்டுகளாக இயக்கி வந்த பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.

    அதன்பின் மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் ஆண்டிபட்டி மற்றும் சக்கம்பட்டி பகுதிகளுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். பஸ் வசதி இல்லாததால் ஆட்டோவிற்கு அதிக தொகை கொடுத்து சென்று வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் இப்பகுதிகளில் இருந்து ஆண்டிபட்டிக்கு அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர்களும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை மீண்டும் இப்பகுதிகளில் இயக்க வேண்டும் என பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உத்தரகோசமங்கை கோவிலுக்கு பஸ் வசதி செய்து தர வேண்டும்.
    • பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் பல்வேறு பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள்.

    குறிப்பாக விஷேச நாட்களிலும், ஆருத்திரா தரிசனத்தன்றும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள். இந்த கோவிலுக்கு சென்று வர தற்போது வரை போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பக்தர்கள் கூடுதல் விலை கொடுத்து ஆட்டோ, கார்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, சத்திரக்குடி, சாயல்குடி, கீழக்கரை, பரமக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து உத்தரகோசமங்கைக்கு பஸ் வசதி இல்லை. இப்பகுதியை சேர்ந்த வர்கள் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் ராமநாத புரத்திற்கு வந்து பஸ் ஏற வேண்டும். இதனால் பொது மக்கள் கடும் சிரமமடைகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களும் அவதியடை கின்றனர். எனவே பிரசித்தி பெற்ற உத்தரகோசமங்கை கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக சென்று கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    • பொது மக்கள் பேருந்து வசதிகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நகர் பகுதியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி மற்றும் அரசு கல்வியில் கல்லூரி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அனைத்து துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருவதால் காலை மாலையில் பள்ளி கல்லூரி அலுவலகத்திற்கு செல்லும் அதிகாரிகள் உள்ளிட்டோர் போதுமான பேருந்து வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் கறம்பக்குடி மன்னார்குடி திருவோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகமான கல்லூரி மாணவர்கள் ஒரத்தநாடு அரசு கல்லூரியில் படித்து வருவதால் போதுமான பேருந்து வசதியின்றி மாணவிகள் தவித்து வருவதாகவும் இதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகம் தலையிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் தஞ்சை மாவட்ட கலெக்டர் ஒரத்தநாடு பகுதியில் இயங்கி வரும் கல்லூரி மற்றும் பள்ளிகளை நேரடி ஆய்வு செய்து போதுமான கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு மாணவர்களின் பெற்றோ ர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • பொது மக்கள் பேருந்து வசதிகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நகர் பகுதியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி மற்றும் அரசு கல்வியில் கல்லூரி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அனைத்து துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருவதால் காலை மாலையில் பள்ளி கல்லூரி அலுவலகத்திற்கு செல்லும் அதிகாரிகள் உள்ளிட்டோர் போதுமான பேருந்து வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் கறம்பக்குடி மன்னார்குடி திருவோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகமான கல்லூரி மாணவர்கள் ஒரத்தநாடு அரசு கல்லூரியில் படித்து வருவதால் போதுமான பேருந்து வசதியின்றி மாணவிகள் தவித்து வருவதாகவும் இதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகம் தலையிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் தஞ்சை மாவட்ட கலெக்டர் ஒரத்தநாடு பகுதியில் இயங்கி வரும் கல்லூரி மற்றும் பள்ளிகளை நேரடி ஆய்வு செய்து போதுமான கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு மாணவர்களின் பெற்றோ ர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    • உடன்குடி ஊராட்சி ஒன்றியம் ஜெ.ஜெ.நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.
    • அவசர தேவைக்கு அருகில் உள்ள உடன்குடி செல்ல வேண்டுமானால் சுமார் 4 கிலோ மீட்டர் நடந்து தான் செல்ல வேண்டும்.

    உடன்குடி:

    தமிழக மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால் நடை பராமரிப்புத்துறை அமைச்சர்அனிதா ராதாகிருஷ்ணனிடம், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    உடன்குடி ஊராட்சி ஒன்றியம் ஜெ.ஜெ.நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு குடியிருப்பவர்கள் அனைவரும் தினசரி கூலிவேலை செய்து வருகின்றனர்.இங்குள்ள மக்கள் திருச்செந்தூர் மற்றும் உடன்குடி செல்ல வேண்டும். ஆனால் எந்தவிதமான அரசு மற்றும் தனியார் பஸ் வசதிகள் கிடையாது. சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வழியாக ஓடிய தனியார் மினி பஸ் நிறுத்தப்பட்ட பின் எந்த விதமான பஸ் வசதியும் இல்லாமல் கடும் அவதிப்படுகின்றனர். அவசர தேவைக்கு அருகில் உள்ள உடன்குடி செல்ல வேண்டுமானால் சுமார் 4 கிலோ மீட்டர் நடந்து தான் செல்ல வேண்டும். அதனால் உடன்குடி மற்றும் திருச்செந்தூர் சென்று வர ஜெ.ஜெ. நகர் வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    மனுவைபெற்றுக் கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரியுடன் கலந்து அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அப்போது, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, நெசவாளர் அணி துணை த்தலைவர் சீனிவாசன், நெச வாளர் அணி துணை ச்செய லாளர் மைக்கேல் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் பெரியகாரை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியை சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும் இப்பள்ளி 10-ம், 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் தொடர்ந்து 10 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த பள்ளிக்கு எழுவன் கோட்டை, தெண்ணீர்வயல், உடப்பன்பட்டி, நாச்சியா புரம் கிராமங்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்ல பெரியகாரையில் இருந்து தேவகோட்டை நகர் பஸ் நிலையம் வரை பஸ் வழித்தடத்தில் செல்லும் நகர பஸ்சை முன்னாள் மாணவர் பூமிநாதன் முன்னிலையில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி கொடி யசைத்து தொடங்கி வைத்தார் மேலும் பஸ்சின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை கவுரவித்து பள்ளி மாணவ- மாணவிகளுடன் அரசு பஸ்சில் பயணம் செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் சிங்காரவேலன், டிவிஷனல் மேனேஜர் தங்கபாண்டியன், தேவகோட்டை கிளை மேலாளர் சொக்கலிங்கம், பச்சைமால், பொறியாளர் மோகன், பேருந்து நிலைய பொறுப்பாளர் சந்தியாகு, ஊராட்சி மன்ற தலைவர் திருமணவயல் ராமையா, கண்ணங்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிலவிழிநாதன், அப்பச்சி சபாபதி, நகர தலைவர் இரவுசேரி சஞ்சய், சாமிநாதன், இளங்குடி முத்துக்குமார் மற்றும் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முதடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முத்து நன்றி கூறினார்.

    • அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தினமும் 70க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படிக்க செல்கிறார்கள்.
    • காலை 8மணி, மாலை 4-30மணிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    திருப்பூர் :

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையம் பஞ்சாயத்துக்கு உடபட்ட காளிவேலம்பட்டி கிராமத்திலிருந்து செம்மிப்பாளையம் ஊராட்சி சாமிகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தினமும் 70க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படிக்க செல்கிறார்கள். தினந்தோறும் இந்த பகுதிகளில் இருந்து நடந்தும் சைக்கிளிலும் சென்று வருகின்றனர்.

    இதனால் குறித்த நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. ஆகவே இந்த பகுதியில் காலையிலும், மாலையிலும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று திரும்பும் வகையில் காலை 8மணி, மாலை 4-30மணிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    • சோழவந்தான் பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்குமாறு மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • வெங்கடேசன் எம்.எல்.ஏ. தனி கவனம் செலுத்தி மாணவிகளுக்கு உதவ வேண்டும் என்றனர்.

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கருப்பட்டி, இரும்பாடி, நாச்சிகுளம், மன்னாடிமங்கலம், முள்ளிப்பள்ளம், தென்கரை, குருவித்துறை, திருவேடகம், மேலக்கால், நெடுங்குளம், தச்சம்பத்து, விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளில் இருந்து பட்டப்படிப்பிற்காகவும், தொழில் சார்ந்த படிப்பு களுக்காகவும் மதுரை நகர் பகுதிகளுக்கு தினசரி 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் சென்று வருகின்றனர்.

    இவர்கள் கல்லூரி முடிந்து மாலை 5மணிக்கு மேல் வீடு திரும்புவதற்கு பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து போதுமான பஸ்வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து மாலை 6 மணி முதல் 7.30மணி வரை சோழவந்தான், விக்கிரமங்கலம் பகுதி களுக்கு எந்த ஒரு பஸ்சும் இல்லாததால் தினசரி சுமார் 2மணி நேரம் பெரியார் பஸ் நிலையத்தில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    எனவே வீட்டிற்கு செல்வதில் மேலும் தாமதம் ஏற்படுவதாகவும், ஆகை யால் மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாலை நேரத்தில் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து சோழவந்தான் மற்றும் விக்கிரமங்கலம் பகுதிக ளுக்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் இதில் தனி கவனம் செலுத்தி மாணவிகளுக்கு உதவ வேண்டும் என்றனர்.

    • மாலை மலரில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
    • மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் இலுப்பநத்தம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் எஸ்.புங்கம்பாளையம் பகுதியில் அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், அம்மன் புதூர், காரனூர், இலுப்பநத்தம், பழைய சாலை, இடுகம்பாளையம், பகத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ- மாணவிகள் சென்று கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் இலுப்ப நத்தம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 6-வது வார்டுக்குட்பட்ட வெங்கட்ராமபுரம், அண்ணா நகர், பழைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 30-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று கல்வி பயின்று வருகின்றனர். கிராம பகுதியில் இருந்து கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தான் கல்வி பயின்று வருகின்றனர்.

    இதனிடையே இப்பகுதியில் இருந்து சென்று வரும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள், மனுவாக ஊராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு வழங்கினர்.

    ஆனால் மாணவர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் மாணவர்கள் நடந்து செல்லும் அவல நிலை உருவாகியது. இதில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் போதிய வசதி இல்லாததால் ஆட்டோவில் கூட செல்ல முடியாமல் நடந்தே செல்லும் நிலை உருவாகியது.

    எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து கிராம பகுதிகளில் இருந்து எஸ்.புங்கம்பாளையம் அரசுப் பள்ளிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

    இதுகுறித்து மாலை மலரில் புகைப்படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையொட்டி அதன் எதிரொலியாக இன்று முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து மூக்கனூர் வழியாக சென்ற அரசு பேருந்து அண்ணா நகர், வெங்கட்ராமபுரம் வழியாக எஸ்.புங்கம்பாளையம் அரசு பள்ளி வழியாக காலை 8 மணிக்கு பஸ் இயக்கப்பட்டது. இதேபோன்று மாலை 4 மணிக்கு இதே வழித்தடத்தில் பஸ் இயக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×