search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒரத்தநாடு அரசு பணிமனையிலிருந்து கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்
    X

    ஒரத்தநாடு அரசு பணிமனையிலிருந்து கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்

    • பொது மக்கள் பேருந்து வசதிகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
    • அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நகர் பகுதியில் அரசு மகளிர் கலைக்கல்லூரி மற்றும் அரசு கல்வியில் கல்லூரி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அனைத்து துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருவதால் காலை மாலையில் பள்ளி கல்லூரி அலுவலகத்திற்கு செல்லும் அதிகாரிகள் உள்ளிட்டோர் போதுமான பேருந்து வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் கறம்பக்குடி மன்னார்குடி திருவோணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகமான கல்லூரி மாணவர்கள் ஒரத்தநாடு அரசு கல்லூரியில் படித்து வருவதால் போதுமான பேருந்து வசதியின்றி மாணவிகள் தவித்து வருவதாகவும் இதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிர்வாகம் தலையிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் தஞ்சை மாவட்ட கலெக்டர் ஒரத்தநாடு பகுதியில் இயங்கி வரும் கல்லூரி மற்றும் பள்ளிகளை நேரடி ஆய்வு செய்து போதுமான கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட கலெக்டருக்கு மாணவர்களின் பெற்றோ ர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    Next Story
    ×