search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passengers suffer"

    • மின்சாரத்தால் இயங்கி வந்த ரெயிலில் திடீரென்று மின்சார இணைப்பு கிடைக்காததால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.
    • நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்திற்கு சுமார் 25 நிமிடம் காலதாமதமாக சென்றது.

    கடலூர்:

    மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலூர், நெல்லிக்குப்பம் வழியாக பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியில் பயணிகள் ரெயில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று நடுவழியில் நின்றது. இதனால் அதிர்ச்சிடைந்த பயணிகள் மற்றும் ரெயில் டிரைவர் கீழே இறங்கி பார்த்தனர். பின்னர் ரெயில் டிரைவர் மற்றும் ஊழியர்கள் ரெயில் நின்றதற்கான காரணத்தை உடனடியாக பார்வையிட்டனர். அப்போது மின்சாரத்தால் இயங்கி வந்த ரெயிலில் திடீரென்று மின்சார இணைப்பு கிடைக்காததால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து ரெயில்வே ஊழியர்கள் அதனை சரி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே வெள்ளகேட், கருப்பு கேட், காராமணிக்குப்பம், நெல்லிக்குப்பம் போன்ற பகுதிகளில் ரெயில் வருவதற்காக கேட் மூடப்பட்டிருந்தது.

    ஆனால் நடுவழியில் திடீரென்று ரெயில் நின்றதால் சிக்னல் கிடைக்காமல் ரெயில்வே கேட்டை திறக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து நான்கு பகுதிகளிலும் நீண்ட நேரமாக பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் பரிதவித்து காத்துக் கொண்டிருந்தனர். மேலும் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை ஓரத்தில் நின்று நடுவழியில் திடீரென்று நின்ற ரெயிலுக்கு வேறு ஏதேனும் பிரச்சனையா? என பார்த்துக் கொண்டிருந்தனர். சுமார் 20 நிமிடம் ரெயில்வே ஊழியர்கள் என்ஜின் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு ரெயிலை இயங்க வைத்தனர். இதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம் ரெயில் நிலையத்திற்கு சுமார் 25 நிமிடம் காலதாமதமாக சென்றது.

    • நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல், செம்பட்டி, மைக்கேல் பாளையம் போன்ற ஊர்களுக்கு செல்ல பகலில் போதிய பஸ் வசதி இல்லை.
    • பகல் நேரத்தில் கூடுதல் பஸ்களும், இரவு 10 மணிவரை பஸ்களும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தமிழகத்திலேயே 2-வது பெரிய பூமார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மேலும் இதன் அருகிலேயே வாரச்சந்தை நடத்தப்பட்டு வருகிறது. நிலக்கோட்டையை சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மல்லிகை, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் விவசாயம் செய்யப்படுகிறது.

    இங்கு பறிக்கப்படும் பூக்கள் நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும், வடமாநிலங்களுக்கும், சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதனால் பல்வேறு ஊர்களில் இருந்தும் நிலக்கோட்டை சந்தைக்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகை தருகின்றனர். திண்டுக்கல், செம்பட்டி, மைக்கேல்பாளையம் போன்ற ஊர்களுக்கு செல்ல பகலில் போதிய பஸ் வசதி இல்லை.

    இரவு 7 மணிக்குமேல் திண்டுக்கல் செல்ல பஸ்களே இல்லை. இதனால் வியாபாரிகள் வத்தலக்குண்டு, கொடைரோடு போன்ற ஊர்களுக்கு சென்று அங்கிருந்து வேறுபஸ்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வீண்அலைச்சலும், காலவிரயமும், கூடுதல் செலவும் ஏற்படுகிறது.

    தங்களுக்கு கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதி பஸ் செலவுக்கே சென்றுவிடுவதாக வியாபாரிகள் வேதனையடைந்து வருகின்றனர். எனவே நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் செல்ல பகல் நேரத்தில் கூடுதல் பஸ்களும், இரவு 10 மணிவரை பஸ்களும் இயக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • பஸ் வெளித்தோற்றத்தில் புதிய ஆம்னிபஸ் போல காட்சியளித்தாலும் உள்ளே ஏறும் பயணிகளுக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது.
    • வெகு தூரம் அமர்ந்து செல்லும் இருக்கைகள் சேதம் அடைந்தும் உள்ளிருக்கும் கம்பிகள் ஆபத்தான நிலையில் உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் கம்பம் அரசு போக்குவரத்து கழக பனிமனையில் இருந்து தினந்ேதாறும் நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை உடைசலான நிலையில் இயக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இருக்கை சேதம்அடைந்தும், கம்பிகள் துரு பிடித்தும் மழை பெய்தால் ஒழுகும் நிலையில் உள்ளது. உள்ளூர் பஸ்கள் என்றால் சில மணி நேரத்தில் பயணிகள் இதனை பொறுத்துக் கொண்டு தங்கள் இடத்திற்கு சென்று விடுவார்கள். ஆனால் ெதாலைதூரங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் இதே நிலையில் இருப்பதால் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    கம்பத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினந்தோறும் காலை 6.50க்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் வெளித்தோற்றத்தில் புதிய ஆம்னிபஸ் போல காட்சியளித்தாலும் உள்ளே ஏறும் பயணிகளுக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது.

    வெகு தூரம் அமர்ந்து செல்லும் இருக்கைகள் சேதம் அடைந்தும் உள்ளிருக்கும் கம்பிகள் ஆபத்தான நிலையில் உள்ளது. தூக்கத்தில் அந்த கம்பியில் இடித்தால் பயணிகளின் தலையை இருக்கை பதம் பார்த்து விடும். இதனால் தூங்காமலேயே பயணம் செய்யும் நிலை உள்ளது. தொலை தூரங்களுக்கு இயக்கப்படும் இடைநில்லா பஸ்களையாவது தரமான முறையில் பராமரித்து இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • வெள்ளகோவிலில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர்.
    • ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.

    வெள்ளகோவில்: 

    வெள்ளகோவில், திருப்பூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். வெள்ளகோவிலில் 200-க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன, விசைத்தறிக்கூடங்கள், ஆயில் மில்கள், பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. வெள்ளகோவிலில் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர். வெள்ளகோவில் வழியாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருப்பூர், ஊட்டி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் 100க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. விசேஷ தினங்களில் பயணிகளுக்கு போதிய பஸ் வசதி இருப்பதில்லை.

    இதனால் மணிக்கணக்கில் பயணிகள் காத்திருந்து கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. நீண்ட நேரத்திற்கு பிறகு வரும் பஸ்சில் பயணிகள் நின்று கொண்டும், படியில் தொங்கியவாறும் பயணிக்கின்றனர். அதைத் தொடர்ந்து வரும் பேருந்துகள் ஒரே நேரத்தில் ஒன்றின் பின் ஒன்றாக போதிய பயணிகள் இல்லாமல் ஒரே வழித்தடத்திற்கு செல்கின்றன. இதனால் போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் வெள்ளகோவில் பஸ் நிலையத்தில் போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஒரு கண்காணிப்பாளரை நியமனம் செய்து பயணிகளின் தேவைக்கேற்ப பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமாறு பயணிகள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளகோவில் நகராட்சி பஸ் நிலைய வளாகத்தில் போக்குவரத்து கழகத்திற்கு என்று தனியாக ஒரு அறையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • பஸ்நிலையத்தை விரிவுபடுத்தும் பணி

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பழமை வாய்ந்தது வாலாஜா நகரம் ஆகும். மேலும் தமிழ்நாட்டின் முதல் நகராட்சி என்ற பெருமையும் உடையது.

    வர்த்தக நகரமாகவும் விளங்கி வருகிறது. சிறப்புகள் வாய்ந்த வாலாஜா நகரத்திற்கான பஸ் நிலையம் நகரின் மையப்பகுதியில் வாலாஜா நகராட்சி அலுவலகத்திற்கு அருகிலேயே உள்ளது.

    சிறிய அளவிலேயே இருந்தாலும் இந்த பஸ் நிலையத்தின் வழியே தான் சென்னை, திருத்தணி, காஞ்சிபுரம், சோளிங்கர், அரக்கோணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கான பஸ்கள் வந்து செல்கிறது.

    சுற்றுப்புற கிராமங்களுக்கான அனைத்து பஸ்களும் இந்த பஸ் நிலையத்திற்கு வருவதால் கிராமங்களிலிருந்து வேலை நிமித்தமாகவும், அத்தியாவசிய தேவைகளுக்காகவும் வரும் பொதுமக்கள், பயணிகள் இந்த பஸ் நிலையத்திற்கு அதிகம் வந்து செல்கின்றனர்.

    இவ்வாறு பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் பஸ் நிலையத்திற்குள் இருந்த கடைகளின் முன்பாக வெயில், மழை காலங்களில் ஒதுங்கி நின்று காத்திருந்து பஸ் ஏறி செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் வாலாஜா நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.2 கோடியே 8லட்சம் மதிப்பில் பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி புனரமைக்கும் பணி மேற்கொள்ள முடிவு செய்து பூமி பூஜையும் போடப்பட்டது.

    பஸ்நிலையத்தை விரிவுபடுத்தும் பணிக்காக பஸ் நிலையத்திலிருந்த அனைத்து கடைகளும் இடிக்கப்பட்டு விட்டதால் பொதுமக்கள் வெயிலுக்கோ, மழைக்கோ ஒதுங்கி நிற்க கூட இடமில்லாமல் பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் நின்றபடியே காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர்.

    மழைக்காலம் தொடங்கி விட்டதால் அவ்வப்போது திடீரென மழை பெய்து வருகிறது. இதனால் மழையில் நனையாமல் ஒதுங்கி நிற்க கூட இடமில்லாமல் பொதுமக்கள், பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பஸ் நிலையத்தை பார்வையிட்டு பஸ் நிலைய பணிகள் முடிவடையும் வரை பொதுமக்கள், பயணிகள் பயன் பெறும் வகையில் தற்காலிக நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பழனி ரெயில்நிலையத்தில் கடந்த சில நாட்களாக வாகன நிறுத்தம் செயல்பாடு இல்லாமல் உள்ளது.
    • வாகன நிறுத்தம் பூட்டி கிடப்பதால் மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்திச் செல்கின்றனர்.

    பழனி:

    பழனி வழியாக கோவை, பாலக்காடு, திருச்செந்தூர், திருவனந்தபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. இந்த ரெயில்களில் பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்று வட்டார பகுதி மக்கள் என தினமும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர்.

    குறிப்பாக பழனி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள், அரசு, தனியார் நிறுவன பணியாளர்கள் திண்டுக்கல், உடுமலை செல்லும்போது தங்கள் வாகனங்களை பழனி ரெயில்நிலைய வாகன நிறுத்தத்தில் விட்டுவிட்டு சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் பழனி ரெயில்நிலையத்தில் கடந்த சில நாட்களாக வாகன நிறுத்தம் செயல்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் அங்கு மோட்டார் சைக்கிள்களை நிறுத்த முடியாமல் ரெயில்நிலையத்தின் வெளிப்பகுதியில் பயணிகள் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.

    வாகன நிறுத்தம் பூட்டி கிடப்பதால் மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பற்ற நிலையில் நிறுத்திச்செல்கின்றனர். இதனால் வாகன திருட்டு அபாயமும் உள்ளது. எனவே ரெயில்நிலையத்தில் வாகன நிறுத்த வசதியை மீண்டும் கொண்டுவர நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, வாகன நிறுத்தத்துக்கான ஒப்பந்தம் இன்னமும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது. எங்களின் மோட்டார் சைக்கிள்களை ரெயில்நிலையத்தின் வெளிப்பகுதியில் நிறுத்தி வருகிறோம். எனவே மீண்டும் வாகன நிறுத்தம் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.

    • சென்னை - நாகப்பட்டினம் புதுவை - விழுப் புரம் தேசிய நெடுஞ்சாலை யில் 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது.
    • குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு உள்ளாகி பஸ்சில் பயணம் செய்து வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    சென்னை-நாகப்பட்டினம் புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை யில் 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இதில் 17 கிலோ மீட்டர் தூரத்திற்குள் முக்கிய கிராமங்களை இணைக்கும் பகுதியில் 5 மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து மாறி, மாறி செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருபுவனை யில் ஏரிக்கரை சாலையில் உள்ள பனை மரங்களை அகற்றாமல் மேம்பால பணிகள் முடிவடைந்து தற்போது, மேம்பாலத்தின் வழியாக புதுவை- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன.

    இதனால் பாலம் தொடங்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரை ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணிகள் நடந்து சென்று பாலத்தின் இறக்கத்தில் பஸ்சுக்காக காத்திருந்து பயணித்து வருகிறார்கள்.

    இந்த பகுதிகளில் பயணியர் நிழற்குடையோ, நிழலுக்கு மரங்களோ இல்லை இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும் சிரமத்திற்கு உள்ளாகி பஸ்சில் பயணம் செய்து வருகிறார்கள்.

    எனவே திருபுவனையில் பனைமர சாலையில் உள்ள பனை மரங்களை உடனடியாக அகற்றி அப்பகுதியில், சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி நிற்பதால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • கொடைக்கானலுக்கு நல்ல நிலையில் உள்ள அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    கொடைக்கானல்:

    கொடைக்கானலுக்கு சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலா இடங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி நிற்பதால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    நேற்றுஇரவு கொடைக்கானலுக்கு சென்ற அரசு பஸ் நடுவழியிலேயே பழுதாகி நின்றது. இதனால் மற்ற வாகனங்களும் செல்ல முடியாமல் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    எனவே தரமற்ற பஸ்களை நிறுத்திவிட்டு கொடைக்கானலுக்கு நல்ல நிலையில் உள்ள அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தை நம்பியே உள்ளனர்.
    • முன்பதிவில்லா பயணச்சீட்டும் குறித்த நேரத்திற்குள் பெற முடியவில்லை.

    தென்காசி:

    நெல்லை - தென்காசி ரெயில் வழித்தடத்தில் மிக முக்கியமான ரெயில் நிலையமாகவும், 2-வது அதிக வருமானம் தரும் ரெயில் நிலையமாகவும் பாவூர்சத்திரம் விளங்கி வருகிறது.

    இந்த ரெயில் நிலையத்தில் தற்போது காலை 8.30 முதல் 10.30 வரையும், நண்பகல் 11.30 முதல் 12.30 வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் முன்பதிவு மையம் இயங்கி வருகிறது. இந்த முன்பதிவு மையமானது ரெயில் நிலைய மேலாளர்களால் இயக்கப்படுகிறது.

    டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தனியாக வர்த்தக அலுவலர்கள் யாரும் கிடையாது. இதனால் சில நேரங்களில் பராமரிப்பு பணிகளுக்காக ரெயில்கள் வரும் போது ஸ்டேஷன் மாஸ்டர்களால் முன்பதிவு செய்ய முடிவதில்லை.

    மேலும் பாவூர்சத்திரம் ரெயில் நிலையமானது பிளாக் ஸ்டேஷன் என்பதால், தென்காசிக்கும், கடையத்துக்கும் இடையே உள்ள ரெயில்வே கேட்டு களை மூடுவது, திறப்பது குறித்த கட்டுப்பாட்டு அறை பாவூர்சத்திரத்தில் உள்ளது.

    பயணிகள் தவிப்பு

    ரெயில் நிலைய மேலாளர்கள், ரெயில்கள் இயக்கத்தை ஒழுங்கு படுத்துவது மட்டுமல்லாமல் முன்பதிவையும் சேர்த்து செய்வதால், சரியான நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிக்கின்றனர்.


    இதுகுறித்து திப்ப ணம்பட்டியைச் சார்ந்த ரெயில் பயணி ஜெகன் கூறியதாவது:-

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தை நம்பியே உள்ளனர்.

    சென்னை, பெங்களூரு, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு செல்வதற்கு 120 நாட்களுக்கு முன்பாக காலை 8 மணிக்கு செய்யப்படும் முன்பதிவு, காலை 11 மணிக்கு குளிர்சாதன வசதி அல்லாத பெட்டிகளுக்கு செய்யப்படும் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.

    காலை 10 மணிக்கு செய்யப்படும் ஏ.சி. தட்கல் மட்டுமே முன்பதிவு செய்ய முடிகிறது. பரா மரிப்பு ரெயில்கள் வந்து விட்டால் அதுவும் செய்ய முடியாது.

    ரெயில்வேயின் ஆட்குறைப்பு நடவடிக்கை காரணமாக, வர்த்தகப் பணியாளர்கள் நீக்கப்பட்டு, ரெயில் நிலைய மேலாளர்கள் மேற்கொள்வதால், ரெயில்கள் வரும் நேரங்களில் முன்பதிவு செய்ய முடியவில்லை. மேலும் முன்பதிவில்லா பயணச்சீட்டும் குறித்த நேரத்திற்குள் பெற முடிய வில்லை.

    தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு செய்யப்படும் நேரங்களில் பயணி களுக்கும், நிலைய மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

    இதற்கு முன்பு பாவூர்சத்தி ரம் தபால் நிலையத்தில் ரெயில் முன்பதிவு மையம் செயல்பட்டு வந்ததால் பயணிகள் மிகவும் பயன டைந்து வந்தனர். தற்போது அங்கும் ஆள் குறைப்பு நடவடிக்கை காரணமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு மையம் மூடப்பட்டுள்ளது.

    எனவே ஆயிரக் கணக்கான பயணிகளின் நலன் கருதி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை முன்பதிவு மையம் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் செயல் படும் வகையில் தனியாக டிக்கெட் முன்பதிவு ஊழியர் ஒருவரை நியமித்து முன்பதிவு மற்றும் முன்பதிவல்லாத டிக்கெட்டுகள் தடைபடாமல் தொடர்ந்து இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • மதுரையில் அரசு பஸ்களின் அவலநிலையால் பயணிகள், பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    • சாதாரண கட்டண ேபருந்தை அதிகளவில் இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    மதுரை

    தென் மாவட்டங்களில் முக்கிய நகரமாக விளங்கும் மதுரைக்கு நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் செல்ல போதிய அளவில் அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை.

    இதேபோல் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும் நாள்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோர் என ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் அரசு பஸ்சில் வந்து செல்கின்றனர். ஆனால் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    தற்போது பஸ்கள் போதுமான அளவில் இல்லாததால் மாணவர்கள், பெண்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. அவ்வாறு பயணம் செய்யும் மாணவர்கள் பலியாகும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.

    மதுரையில் இருந்து இயக்கப்படும் பல டவுன் பஸ்களில் ஓட்டை, உடைசல் மற்றும் இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பஸ்களில் 60 சதவீத பஸ்கள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. இருந்த போதிலும் அந்த பஸ்களிலும் பயணிகள் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர். இந்த பஸ்களில் 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கின்றன.

    ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ரூ.5, 6, 9, 13, 15 என்று 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கிறது. இதனால் குறைந்த கட்டண பஸ்களில் ஏற வரும் பயணிகள் வேறு வழியில்லாமல் கூடுதல் கட்டணம் உள்ள பஸ்களிலும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த கட்டணம் ஷேர் ஆட்டோ கட்டணத்துக்கு நிகராக உள்ளதால் தினமும் போக்குவரத்துக்காக அதி களவு செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    எனவே சாதாரண கட்டண பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வகையில் பழுதான பஸ்களை இயக்குவதை கைவிட வேண்டும். புதிய பஸ்கள் அதிகமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கூறுகின்றனர்.

    பெரும்பாலான டவுன் பஸ்கள் பயணிகளுக்கு போக்கு காட்டிவிட்டு பல நிறுத்தங்களில் நிற்காமல் சென்றுவிடுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக புகார் உள்ளது. மேலும் ஏறும்போதும், இறங்கும்போதும் டிரைவர் கள் அவசரப்பட்டு பஸ் களை இயக்குவதாக கூறப்படுகிறது.

    தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்வதைபோல் அரசு பஸ்களும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் அவர்களை ஏற்றி செல்ல வேண்டும். மாணவ-மாணவிகளை, பெண்களை ஏற்றாமல் போக்குகாட்டி செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்யும் நிலை உள்ளது.

    மேலும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது பெண்களுக்கு பாலியல் தொல்லைகளும் அதிகமாக ஏற்படுகிறது. எனவே மகளிர், மாணவ-மாணவிகளுக்கு தனி பஸ்கள் இயக்க வேண்டும். அவைகள் காலை, மாலை நேரங்க ளில் அதிக அளவில் இயக்கப்படவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. அதனை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

    • நாசரேத்தில் மாலை 5. 20 மணிக்கு புறப்பட்டு கடைய னோடை, குரங்கணி, ஏரல், முக்காணி, தூத்துக்குடி வழியாக மதுரை வரை ஓடிய தடம் எண் 553 என்.எக்ஸ். 1 என்ற அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
    • இந்த பஸ்சை நம்பி பயணம் செய்யும் கடையனோடை, குரங்கணி பகுதி மாணவ-மாணவிகள், கர்ப்பிணி பெண்கள் முதியோர் என பல்வேறு தரப்பினரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    நாசரேத்:

    நாசரேத்தில் மாலை 5. 20 மணிக்கு புறப்பட்டு கடைய னோடை, குரங்கணி, ஏரல், முக்காணி, தூத்துக்குடி வழியாக மதுரை வரை ஓடிய தடம் எண் 553 என்.எக்ஸ். 1 என்ற அரசு பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்த பஸ்சை நம்பி பயணம் செய்யும் கடையனோடை, குரங்கணி பகுதி மாணவ-மாணவிகள், கர்ப்பிணி பெண்கள் முதியோர் என பல்வேறு தரப்பினரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

    நாசரேத்தில் இருந்து மாலை 3.40-க்கு ஒரு தனி யார் பஸ் இந்த வழித் தடத்தில் புறப்படுகிறது. அதன் பின்னர் 5.20க்கு இந்த அரசு பேருந்து புறப்படும். அதன் பின்னர் இரவு 7.30 மணிக்கு மீண்டும் இந்த தனியார் பஸ் இதே வழித்தடத்தில் புறப் பட்டு தூத்துக்குடி செல்லும்

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக அரசு பஸ் ஓடாத தால் மாலை பள்ளி, கல் லூரி சென்று ஊர் திரும்பும் மாணவ-மாணவிகள்இரவு 7.30மணி வரை நாசரேத் பஸ் நிலையத்தில் காத்துக் கிடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தலையிட்டு நிறுத்தப்பட்ட இந்த பஸ்சையும் மற்றும் பல கிராமப் பகுதி பஸ்களையும் உடனடியாக இயக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பொதுமக் கள் மாணவ-மாணவிகள் மற்றும் கடையனோடை குரங்கணி ஊர் பொதுமக் கள் சார்பாக தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

    • மத்திய ரெயில்வே மண்டல அதிகாரிகளிடம் கொண்டு செல்ல மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுெமன பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
    • கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் கோவை-குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இடம் கிடைப்பது எப்போதுமே அரிதிலும் அரிதாக உள்ளது.

    திருப்பூர் : 

    கோவைக்கும் மும்பைக்குமான வர்த்தக தொடர்புகள் அதிகம். அதனால் தான் கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் கோவை-குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலில் இடம் கிடைப்பது எப்போதுமே அரிதிலும் அரிதாக உள்ளது. இந்த ரெயில் முன்பு மும்பையின் குர்லாவிலிருந்து பெங்களூரு வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.

    கொங்கன்க்ஷக்ஷயில்வே அமைத்த பின் கோவை வழியிலான ரெயில்கள் திருப்பப்பட்டன. அதை ஈடுகட்டும் வகையில் 1998ல் அப்போதைய கோவை எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன் முயற்சியால்இந்த ரெயில் கோவை வரை நீட்டிக்கப்பட்டது.

    இந்த ரெயிலில் முன்பு 11 பெட்டிகள் சாதாரண ஸ்லீப்பர் வகுப்புப் பெட்டிகளாக இருந்தன. இதனால் நடுத்தட்டு மக்கள், வர்த்தகர்கள் பலரும் இந்த ரெயிலில் தொடர்ந்து பயணித்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த 26ந்தேதியில் இருந்து இந்த ரெயிலில் அனைத்துப் பெட்டிகளும் எல்.எச்.பி., எனப்படும் அதி நவீன வசதிகளுடைய பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றம் ஒரு வகையில் வரவேற்கத்தக்கதாக இருப்பினும் இதில் சாதாரண ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை பாதிக்கும் மேலே குறைக்கப்பட்டுள்ளது.

    முன்பு 11 பெட்டிகளில் 720 ஸ்லீப்பர் இருக்கைகள் இருந்தன. தற்போது மாற்றப்பட்டுள்ள எல்.எச்.பி., பெட்டிகளில் நான்கு பெட்டிகள் மட்டுமே ஸ்லீப்பர் வகுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு பெட்டிக்கு 80 இருக்கைகள் என்பதால் 320 ஸ்லீப்பர் இருக்கைகள் மட்டுமே உள்ளன. இதனால் ஸ்லீப்பர் இருக்கைகளின் எண்ணிக்கை 400 வரை குறைக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர வகுப்பினரை பாதிப்பதாக உள்ளது.

    இதேபோல வேறு சில  ரெயில்களில் எல்.எச்.பி., பெட்டிகள் மாற்றப்பட்டபோதும், ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. உதாரணமாக தூத்துக்குடி - மைசூரு -மயிலாடுதுறை ரெயிலில், எல்.எச்.பி., பெட்டிகள் மாற்றப்பட்டபோதும் ஸ்லீப்பர் பெட்டிகள் அதே எண்ணிக்கையில் தான் உள்ளது. அந்த ரெயில் தென்மேற்கு ரெயில்வேயால் இயக்கப்படுகிறது.

    குர்லா எக்ஸ்பிரஸ், மத்திய  ரெயில்வேயால் இயக்கப்படுகிறது. எனவே, தூத்துக்குடி-மைசூரு-மயிலாடுதுறை ரெயிலில் தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகள் செய்தது போல குர்லா எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    குர்லா எக்ஸ்பிரஸ், தொலைதூர ரெயில் என்பதால் ஏ.சி.,பெட்டிகளை அதிகம் சேர்த்திருப்பதாக ரெயில்வே அதிகாரிகளால் விளக்கம் தரப்படுகிறது. எனவே குறைந்தபட்சம் ஸ்லீப்பர் பெட்டிகளின் எண்ணிக்கையை 7ஆக அதிகரிக்க வேண்டுமென்று கோரப்படுகிறது. இதை மத்திய ரெயில்வே மண்டல அதிகாரிகளிடம் கொண்டு செல்ல இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுெமன பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×