search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானலுக்கு இயக்கப்படும் ஓட்டை உடைசல் அரசு பஸ்களால் பயணிகள் அவதி
    X

    மலைச்சாலையில் பழுதாகி நின்ற அரசு பஸ்.

    கொடைக்கானலுக்கு இயக்கப்படும் ஓட்டை உடைசல் அரசு பஸ்களால் பயணிகள் அவதி

    • வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி நிற்பதால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • கொடைக்கானலுக்கு நல்ல நிலையில் உள்ள அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    கொடைக்கானல்:

    கொடைக்கானலுக்கு சீசன் தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் சுற்றுலா இடங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி நிற்பதால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    நேற்றுஇரவு கொடைக்கானலுக்கு சென்ற அரசு பஸ் நடுவழியிலேயே பழுதாகி நின்றது. இதனால் மற்ற வாகனங்களும் செல்ல முடியாமல் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    எனவே தரமற்ற பஸ்களை நிறுத்திவிட்டு கொடைக்கானலுக்கு நல்ல நிலையில் உள்ள அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×