என் மலர்
நீங்கள் தேடியது "அரசு பஸ்கள்"
- குளிர்சாதன பஸ்கள் வருகிற 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன.
- முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தொலைதூரப் பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோவை ஆகிய ஊர்களில் இருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதி நவீன சொகுசு பஸ், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பஸ்கள் வருகிற 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளன.
மேலும் திருவண்ணாமலையில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 160 அதிநவீன குளிர் சாதனம் மற்றும் குளிர்சாதனம் இல்லாத மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய பஸ்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் வருகிற 3 மற்றும் 4 ஆகிய இரு நாட்கள் இயக்கப்பட உள்ளன.
சிறப்பு பஸ்களுக்கு www.tnstc.in இணையதளம் மற்றும் டி.என்.எஸ்.டி.சி. செயலி ஆகியவற்றின் மூலமாக புறப்பாடு மற்றும் வருகை என இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
மேலும் பஸ் இயக்கம் குறித்த தகவலுக்கு மதுரை-9445014426, திருநெல்வேலி-9445014428, நாகர்கோவில்-9445014432, தூத்துக்குடி-9445014430, கோவை-9445014435, சென்னை தலைமையகம்-9445014463 மற்றும் 9445014424 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
- ஞாயிறு அன்று 7 ஆயிரத்து 563 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 340 பஸ்களும், நாளை மறுநாள் 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 55 பஸ்களும், நாளை மறுநாள் 55 பஸ்களும், இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர, மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 20 பஸ்களும், சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும் வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பஸ்களில் பயணிக்க நாளை 7ஆயிரத்து 227 பயணிகளும், நாளை மறுநாள் 2 ஆயிரத்து 975 பயணிகளும், ஞாயிறு அன்று 7 ஆயிரத்து 563 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பெண்கள் இலவச பயணத்திற்கான பணத்தை மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு தாமதமாக வழங்கி வருகிறது.
- போக்குவரத்து கழக ஊழியர்களின் சம்பளம் மற்றும் டீசல் பராமரிப்பு செலவுக்காக பணம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மகாலட்சுமி என்ற திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மட்டும் இலவச பயண திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலம் தெலுங்கானாவில் தினமும் 34 லட்சம் பெண்கள் அரசு பஸ்களில் பயணம் செய்கின்றனர். பெண்கள் இலவச பயணத்திற்கான பணத்தை மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு தாமதமாக வழங்கி வருகிறது.
இதனால் போக்குவரத்து கழக ஊழியர்களின் சம்பளம் மற்றும் டீசல் பராமரிப்பு செலவுக்காக பணம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க தற்போது ஆண்களுக்கும் அரசு பஸ்களில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பஸ்களில் பயணம் செய்யும் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு டிக்கெட் விலையில் 25 சதவீத சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சாதாரண மற்றும் விரைவு பஸ்கள் குளிர்சாதன பஸ்களில் இந்த சலுகை அமல்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் அதிக அளவில் ஆண்கள் அரசு பஸ்களை பயன்படுத்தி போதும் அரசுக்கு அதிக அளவில் வருவாய் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பி.ஆர்.டி.சி. நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- முதல்கட்டமாக கடந்த 14-ந்தேதி ஒப்பந்த ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் பி.ஆர்.டி.சி. எனப்படும் அரசு சாலை போக்குவரத்து கழகத்தின் மூலம் 60 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
பி.ஆர்.டி.சி.யில் 40 நிரந்த ஊழியர்கள், 130 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 2015-ம் ஆண்டு முதல் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் வேலைநிறுத்த முன் அறிவிப்பு கொடுத்து போராட்டம் நடத்தினர். அரசு பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவே போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் பி.ஆர்.டி.சி. நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து பி.ஆர்.டி.சி. சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டு போராட்ட நடவடிக்கை குழுவினர், 11 ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், 7-வது ஊதியக்குழு பரிந்துரைத்த சம்பளத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் தொடர் போராட்டத்தை தொடங்கினர்.
இதன் முதல்கட்டமாக கடந்த 14-ந்தேதி ஒப்பந்த ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். 21-ந் தேதி தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஒப்பந்த ஊழியர்கள் அறிவித்தனர்.
இதன்படி ஒருங்கிணைந்த கூட்டு போராட்ட குழுவினர் இன்று தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் புதுச்சேரியில் அரசு பஸ்கள் இயங்கவில்லை. பெரும்பாலான பஸ்கள் பணிமனைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
சென்னை, காரைக்காலுக்கு முன்பதிவு செய்த பயணிகளுக்கான பஸ்களை பி.ஆர்.டி.சி. நிர்வாகம் நிரந்தர ஊழியர்களை கொண்டு இயக்கியது.
புதுச்சேரியை பொறுத்தவரை அரசு பஸ்களை விட தனியார் பஸ்கள் அதிகம் என்பதாலும் தனியார் பஸ்கள் மற்றும் தமிழக அரசு பஸ்கள் இயக்க படுவதால் பயணிகளுக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை.
இருப்பினும் கிராமப்புற பகுதிகளில் பி.ஆர்.டி.சி. அரசு பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். இதற்கிடையே பி.ஆர்.டி.சி. பணிமனை முன்பு ஊழியர்கள் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) 355 பஸ்களும், சனிக்கிழமை 350 பஸ்களும் இயக்கப்படும்.
- பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 355 பஸ்களும், சனிக்கிழமை 350 பஸ்களும் இயக்கப்படும்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 55 பஸ்களும், சனிக்கிழமை 55 பஸ்களும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும், மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் சனிக்கிழமை 20 பஸ்களும் என மொத்தம் 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும், ஞாயிற்றுக்கிழமை (20-ந்தேதி) சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் 20,508 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
- ஏ.சி. வசதிகளும், இருக்கை வரிசையில் 2 பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வகையில் தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக களம் இறங்க இருக்கிறது.
சென்னை:
மக்களின் பிரதான போக்குவரத்து சேவைகளில் ரெயில் போக்குவரத்து இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது பஸ் போக்குவரத்துதான். அதிலும் அனைத்து தரப்பு மக்களும் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் 20,508 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படக்கூடிய பஸ்களில் ஏறி பயணிக்கும் மக்களுக்கு ஏற்ப வசதிகளும் இருக்கும் வகையில், அவ்வப்போது பஸ்களை புதிதாகவும் வாங்கி இயக்குகின்றனர். அதன்படி, இதுவரை இயக்கப்பட்ட புதிய அரசு பஸ்கள் பல்வேறு நிறங்களில் வலம் வந்தன. அந்த வரிசையில் தற்போது கண்ணை கவரும் வகையில் புதிய வண்ணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) பஸ்களை இயக்க இருக்கிறது.
கருப்பு, சாம்பல், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களை உள்ளடக்கி, பார்த்ததும் கண்ணில் ஒத்திக்கொள்வது போன்ற அழகில் வலம்வர இருக்கிறது. இன்னும் சில நாட்களில் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இருக்கின்றனர். இந்த பஸ்கள் பி.எஸ்.6 ரகம் ஆகும். மேலும் ஏ.சி. வசதிகளும், இருக்கை வரிசையில் 2 பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வகையிலும் தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக களம் இறங்க இருக்கிறது.
- பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
- பஸ்களை திருப்புவதற்கும், பஸ் நிலையம் அமைப்பதற்கும் போதுமான இடவசதி சிக்கல் உள்ளன.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் விமான நிலைய வளாகத்துக்குள் மாநகர பஸ்கள் வருவதில்லை. இதனால் பஸ்களில் செல்ல விரும்பும் பயணிகள் விமான நிலையத்தில் இருந்து சுமார் அரை கி.மீ. தூரம் நடந்து ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது பொருட்கள், பெரிய பைகளுடன் வரும் பயணிகளுக்கு சிரமமாக இருப்பதால் பலரும் கால்டாக்ஸியை நாடுகின்றனர்.
எனவே விமான நிலையத்திற்குள் பயணிகளை இறக்கி விடவும், ஏற்றிச் செல்லவும் மாநகர பஸ்களை அனுமதித்து இதற்காக தனியாக பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும் என்று பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்குள் மாநகர பஸ்கள் விரைவில் சென்று வர ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாநகர பஸ் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது, பயணிகளின் இந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். விமான அமைச்சகத்திடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் கிளாம்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் வகையில் பஸ்கள் இயக்கப்படும் என்றார்.
விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, மாநகர பஸ்கள் விமான நிலையத்திற்குள் சென்று வர அனுமதிக்கு தயாராக உள்ளோம். ஆனால் பஸ்களை திருப்புவதற்கும், பஸ்நிலையம் அமைப்பதற்கும் போதுமான இடவசதி சிக்கல் உள்ளன. இது சரிசெய்த பின்னர் மாநகர பஸ்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் என்றனர்.
- ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பு அடைந்துள்ளது.
- இதுவரையில் மிக குறைந்த அளவில் இருந்த முன்பதிவு ஒரு சில நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிந்துவிட்டதால் மாணவர்கள் விடுமுறையை கழிக்க வெளியூர் செல்கிறார்கள். உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு 24-ந் தேதியுடன் தேர்வு முடிகிறது.
கோடை விடுமுறை விடப்பட்டதால் வெளியூர் பயணம் இன்று அதிகரித்துள்ளது. நாளை புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறையாகும். அதனை தொடர்ந்து சனி, ஞாயிறு பொதுவான விடுமுறை வருவதால் சொந்த ஊர்களுக்கு பயணத்தை தொடங்கி உள்ளனர்.
ரெயில்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் அரசு பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பு அடைந்துள்ளது. இதுவரையில் மிக குறைந்த அளவில் இருந்த முன்பதிவு ஒரு சில நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் மே மாதம் வரையில் அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் பிற மாவட்டங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள். இன்றைய நிலவரப்படி ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.
இதுகுறித்து அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோடை விடுமுறையில் வெளியூர் பயணம் அதிகரிக்கும். இந்த வருடம் கடந்த ஆண்டை விட கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அரசு விரைவு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. தற்போது 1000 பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. அடுத்த மாதம் முதல் கூடுதலாக 100 பஸ்கள் இயக்கப்படும். புதிதாக 50 ஏ.சி.பஸ்கள் மே மாதம் விடப்படுகிறது.
இந்த மாதத்தின் இறுதியில் இருந்து வெளியூர் பயணம் மேலும் அதிகரிக்கும். கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து பயணத்தை தொடரும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
- பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மகாவீா் ஜெயந்தி தினமான நாளை (10-ந் தேதி), வார விடுமுறை தினங்களான சனி, ஞாயிறு மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினமான திங்கட்கிழமை (14-ந் தேதி) ஆகிய தொடா் விடுமுறை தினங்களை முன்னிட்டு, இன்றும் (புதன்கிழமை), வெள்ளி, சனிக்கிழமை ஆகிய நாட்களில் சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு இன்று (புதன்கிழமை) 190 பஸ்களும், நாளை மறுநாள் 525 பஸ்களும், சனிக்கிழமை 380 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதுபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (புதன்கிழமை) 50 பஸ்களும், வெள்ளிக்கிழமை 100 பஸ்களும், சனிக்கிழமை 95 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இது போல, மாதவரத்தில் இருந்து இன்று 20 சிறப்பு பஸ்களும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் 20 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 1680 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இதுதவிர, திங்கட்கிழமை (14-ந்தேதி) பொதுமக்கள் சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரையில் பஸ் நிறுத்தங்களில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்கின்றன.
- இதனால் பெண்கள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தின் 16 பணிமனைகளில் இருந்து பொதுமக்களின் வசதிக்காக 960 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 125-க்கும் மேற்பட்டவை பெண்கள் பயணிக்கும் இலவச பஸ்கள் ஆகும். மாணவ- மாணவிகள் உரிய அடையாள அட்டையுடன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய இயலும்.
மதுரை மாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாக 635 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இங்கு பஸ்களை கட்டாயம் நிறுத்திச் செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால் இது கடைப்பிடிக்கப்படுவது இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது;-
பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகியோர் அதிகாலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் பஸ் நிறுத்தத்தில் கால் கடுக்க காத்து இருக்கின்ற னர். ஆனாலும் அங்கீக ரிக்கப்பட்ட நிறுத்தங்களில் பெரும்பாலும் பஸ்கள் நிற்பது இல்லை. பஸ் நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரம் சென்ற பிறகு தான் நிறுத்தப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவி கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிப் போய் தான் பஸ்களில் ஏறி பயணம் செய்ய முடிகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் பயணிக்கும் இலவச பஸ்கள், பஸ் நிறுத்தங்களில் நிற்பதே இல்லை.
பஸ் நிறுத்தங்களில் காத்து இருப்பவர்கள், காசு கொடுத்து பயணிக்கட்டும் என்று டிரைவர், கண்டக்டர்கள் நினைக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் பெரும்பாலும் பஸ் நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்துவது இல்லை. எனவே மாணவிகள் நிறுத்தம் தாண்டி நிற்கும் பஸ்களில் ஓடிச்சென்று ஏறி பயணம் செல்வதை பார்க்க முடிகிறது. மதுரை மாநகர பஸ்சில் பயணித்த சிறுவன் ஒருவன், கடந்த சில மாதத்துக்கு முன்பு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே மதுரை மாநகரில் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். அப்படி செய்தால் அரசு பஸ்களில் கூட்டம் அலை மோதுவது குறையும்.
குறிப்பாக காளவாசல் பஸ் நிறுத்தம் உள்ள பகுதியில் எந்த பஸ்களை யும் முறையாக நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க செய்வது இல்லை. கண்ட இடத்தில் பஸ்களை நடுவழியில் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காளவாசல் சிக்னல் பகுதி முக்கிய சந்திப்பாக இருப்பதால் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு தற்காலிக தீர்வு காண்பதை விட்டு விட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஆம்புலன்சு வாகனங்கள் அதிக நேரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறது.
அடுத்தபடியாக இலவச பஸ்களில் பயணிக்கும் பெண்களிடம், ஒரு சில கண்டக்டர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். அசிங்கமாக பேசுகின்றனர். பள்ளிக்கூட மாணவ- மாணவிகளை தரக்குறை வாக பேசுகின்றனர். ஆனா லும் இதனை சகித்துக் கொண்டு பொதுமக்கள் வேறு வழியின்றி அரசு பஸ்களில் பயணம் செய் வதை பார்க்க முடிகிறது.
ஆரப்பாளையத்தில் இருந்து அரசு பஸ்சில் சென்ற கல்லூரி மாணவி ஒருவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பஸ் கண்டக்டர் ஒருவர் பாலியல் சில்மிஷம் செய்து கைதான சம்பவம் குறிப்பிடத்தக்கது.
எனவே அரசு பஸ்களில் வேலை பார்க்கும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் சுய ஒழுங்கை கடைப்பிடிப்பது அவசியம் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக மதுரை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக வட்டாரத்தில் கூறியதாவது:-
அரசு பஸ்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்ல வேண்டும் என்று டிரைவர்- கண்டக்டர்களுக்கு அறி வுறுத்தி உள்ளோம். பயணிகளிடம் கனிவாக பேசும் படியும் வலியுறுத்தி வருகிறோம். போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை- மாலை நேரங்களில் கூடுத லாக பஸ்கள் இயக்கப்படு கின்றன. பள்ளிகூட மாணவ-மாணவிகளுக்கு தனியாக பஸ் இயக்குவது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.
- அரசு பஸ்களில் டிஜிட்டல் பெயர் பலகை இல்லாததால் 20 கண்டக்டர்களுக்கு மெமோ கொடுத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
- ஓமலூர், வாழப்பாடி, எருமாபாளையம், ராசிபுரம், பணிமனை பஸ்களில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சேலம்:
சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக வணிக பிரிவு மேலாளர் செல்வகுமார் தலைமையில் பயண சீட்டு பரிசோதகர்கள் கடந்த 12-ந்தேதி காலை 5.30 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதில் ஓமலூர், வாழப்பாடி, எருமாபாளையம், ராசிபுரம், பணிமனை பஸ்களில் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டவில்லை. மழை நீர் ஒழுகுகிறது. டிஜிட்டல் போர் பிட்டிங் செய்யவில்லை. வழிதட எண், ஊர் பெயர் கையால் எழுதப்பட்டுள்ளது உள்ளிட்ட குறைகள் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 20 பஸ்களின் கண்டக்டர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டது.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கை டிரைவர்கள், கண்டக்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மாநகரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.
- நவீன வசதிகளுடன் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும்.
திருப்பூர் :
அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் திருப்பூா் மாநகராட்சி 3வது மண்டல மாநாடு ஏஐடியூசி. சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின் விவரம் வருமாறு:-திருப்பூா் மாநகராட்சி பகுதியில் நவீன வசதிகளுடன் உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும். மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வார்டுகளிலும் நவீன கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டும்.
அதேபோல வாா்டில் ஒரு இடத்திலாவது நூலகம் அமைக்க வேண்டும். மாநகரில் சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு மாநகர பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். மாநகரில் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






