search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avadi"

    • மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    • பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலத்தை விரைவில் திறக்க பொதுமக்கள் கோரிக்கை.

    ஆவடி:

    பட்டாபிராம், சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையின் குறுக்காக அமைக்க ப்பட்டுள்ள ரெயில்வே பாதை வழியாக சென்னையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசலும், அவரச தேவைக்கு செலவோரும் கடும் அவதி அடைந்தனர்.

    இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக கடந்த 2010-ம் ஆண்டில் ரூ.33 கோடி செலவில் அப்பகுதியில் நான்கு வழிச்சாலையுடன் ரெயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரெயில்வே துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, ரெயில்வே துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை திட்டத்தை மறுமதிப்பீடு செய்தது.

    இதன்படி, திட்ட மதிப்பீடு ரூ.52.11 கோடியாக உயர்ந்தது. திருத்திய மதிப்பீட்டின்படி கடந்த 2018-ம்ஆண்டு ரெயில்வே மேம்பால பணிகள் தொடங்கப்பட்டன.

    இதனை 2 ஆண்டுகளில் முடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதிக்கு இயக்கப்படும் வாகனங்கள் தற்போது மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.

    பட்டாபிராம் போலீஸ் நிலையம் அருகே தண்டுரை, அன்னம்பேடு வழியாக மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக சென்று அங்கிருந்து நெமிலிச்சேரி ரவுண்டானாவை கடந்து சென்னை- திருத்தணி நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும். இதனால், வாகனங்கள் சுமார் 6 முதல் 9 கிமீ தூரம் வரை மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    பல்வேறு காரணங்களால் பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலப்பணி முடிவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வந்தது.

    இதையடுத்து கடந்த சில மாதங்களாக ரெயில்வே மேம்பாலப்பணிகள் வேகமாக நடைபெற்று வந்தது.

    கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த மேம்பால பணி தற்போது நிறை வடைந்து உள்ளது. பாலத்தில் தடுப்புகள் அமைத்து வர்ணம் பூசப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

    இதில் பாலத்தில் சென்னை- திருவள்ளூர் நோக்கி வாகனங்கள் செல்லும் பாதை முழுவதும் பணிகள் முடிந்து உள்ளன.

    திருவள்ளூர்-சென்னை செல்லும் பாதையில் மட்டும் சில பணிகள் முடிக்க வேண்டி உள்ளது. இதுவும் வரும் நாட்களில் விரைந்து முடிக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.

    எனவே பொதுமக்களின் நலன்கருதி பட்டாபிராம் ரெயில்வே மேம்பாலத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • திருவள்ளூர்மாவட்ட பொதுப்பணி துறை நிர்வாகம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டது.
    • ஆக்கிரமிப்பாளர்களை காலிசெய்ய கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    ஆவடி:

    ஆவடி அருகே உள்ள நடுக்குத்தகையில் சுமார் 51.ஏக்கர் நிலபரப்பில் பெரியஏரி உள்ளது. இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ஏரி நிலத்தை ஆக்கிரமித்து ஏராளமானோர் கடைகள், வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.

    இதையடுத்து திருவள்ளூர்மாவட்ட பொதுப்பணி துறை நிர்வாகம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டது. அதிகாரிகள் விசாரணையில் 391, வீடுகள் சுமார் 15 ஏக்கர் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து இருப்பது தெரியவந்தது.

    ஆக்கிரமிப்பாளர்களை காலிசெய்ய கோரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

    இதற்கிடையே தற்போது மேலும் புதிதாக ஏரியை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டி இருப்பதாக பொதுப்பணி துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரின் உதவியுடன் நடுக்குத்தகை பெரிய ஏரியில் ஆக்கிரமித்து கட்டிய 10-க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டிடங்களை இடித்து அகற்றினர். மேலும் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மீட்கப்பட்ட நகை, பணம் மற்றும் பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் கலந்துகொண்டு போலீசாரை பாராட்டினார்.

    ஆவடி:

    ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி. அம்பத்தூர், கொரட்டூர், நசரத்பேட்டை, வெ ள்ளவேடு, செவ்வாபேட்டை, செங்குன்றம்,உட்பட 25 போலீஸ் நிலையங்கள் உள்ளது.

    இதில் கடந்த 2023 - 2024 ல் நடந்த திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசார் திறமையாக செயல்பட்டு சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 185 பவுன் தங்க நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளி, 398 செல்போன்கள், ரொக்க பணம் 4 லட்சத்து 67 ஆயிரத்து 500 யை போலீசார் மீட்டு உள்ளனர்.

    மீட்கப்ட்ட நகை, பணம் மற்றும் பொருட்களை உரிய வர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மீட்கப்பட்ட நகைகளை பார்வைக்கு வைக்கப்பட்டு இருப்பதை பார்க்க தங்க நகை கடை போல் காட்சியளித்தது.

    ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் கலந்துகொண்டு மீட்கப்பட்ட நகை,பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். இதில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரையும் அவர் பாராட்டினார்.

    நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் ( ஆவடி ) ஐமான் ஜமால், (செங்கு ன்றம்) பாலகிரு ஷ்ணன், போ க்குவரத்து துணை கமிஷனர் ஜெய லட்சுமி, உதவி கமிஷனர்கள் ஆவடி அன்பழகன், பட்டாபிராம் சுரேஸ்குமார், அம்பத்தூர் கிரி ஆகியோர் பங்கேற்றனர்.

    • காவேரி கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
    • குறைந்த அளவு தண்ணீர் விநியோகத்தால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்திற்கு வரும் காவேரி கூட்டுகுடிநீர் குழாய் மண்டபம் அருகே உடைப்பு ஏற்பட்டு வெளி யேறும் தண்ணீர் குளம் போல தேங்கி காணப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் தண்ணீர் வழங்க வேண்டும். ஆனால் தண்ணீர் குறைந்த அளவே வரும் நிலையில் நகராட்சி சார்பில் நம்பு நாயகி அம்மன் கோயில் அருகே நகராட்சி நீருற்று நிலையத்தில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு பற்றாக்குறையை பூர்த்தி செய்து வருகிறது.

    இந்தநிலையில், காவேரி கூட்டு குடிநீர் தீட்டத்தின் மூலம் நாள் தோறும் வழங்கப்படும் 30 லட்சம் லிட்டர் தண்ணீர் தற்போது 80 சதவீதம் குறைந்து நாள் ஒன்றுக்கு 5 லட்சம் வரை மட்டும் தண்ணீர் வழங்கப் படுகிறது. இதனால் ராமேசு வரத்தில் கடுமையாக குடிநீர் தட்டுப்பாடு எற்பட் டுள்ளது.

    மேலும் வாரத்திற்கு 2 நாட்கள் மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காவேரி கூட்டு குடிநீர் குழாய் மண்டபம் அருகே உடைந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் பொது மக்கள் அவதியடைந்துள் ளனர்.

    சேதமடைந்துள்ள குழாய் உடைப்புகளை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சிறப்பு கனவம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் சீமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் ராமேசுவரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருமங்கலம் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.
    • பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள உயர்தர உணவகமும் கட்டிய நாள் முதல் மூடியே கிடக்கிறது.

    திருமங்கலம்

    மதுரை-நெல்லை வழித்தடத்தில் திருமங்கலம் ரெயில் நிலையம் முக்கிய நிலையமாக அமைந்துள்ளது. மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பயணிகள் ரெயில்களும் நின்று செல்லும் இந்த ரெயில் நிலையங்களில் சென்னை, பெங்களூர், புனலூர் உள்ளிட்ட எக்ஸ் பிரஸ் ரெயில்கள் நின்று செல்கின்றனர்.

    சமீபத்தில் மதுரையில் இருந்து நெல்லை வரையில் அமைக்கப்பட்ட இரட்டை வழிப்பாதையும் இங்கு அமைந்துள்ளது. இதனால் திருமங்கலம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகளை தென்னக ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. என்.எல்.சி. நிறுவனம் சார்பில் பயணிகள் வசதிக்காக திருமங்கலம் ரெயில் நிலையம் முன்புறம் நவீன கழிப்பறை கட்டப்பட்டது.

    கட்டிடபணிகள் நிறைவடைந்த 6 மாதங்கள் கடந்துவிட்ட பின்பு இந்த புதிய கழிப்பிடம் திறக்கப் படாமல் பூட்டியே காட்சியளிக்கிறது. இதே போல் ரெயில்வே நிலையத்திற்குள் பல ஆண்டுகளாக இருக்கும் பொது கழிவறையும் திறக்கப் படாமல் காணப்படுகிறது. ரெயில்கள் வரும் வரையில் பயணிகள் காத்திருக்கும் இடத்தில் சிமெண்டால் அமைக்கப்பட்ட நாற்காலிகளும் முதல்பிளாட்பாரத்தின் பராமரிப்பு பணிக்காக இடித்து அகற்றப்பட்டு விட்டது.

    இதனால் பயணிகள் ரெயில்கள் வரும் வரையில் நிற்கவேண்டியுள்ளது. பயணி களுக்கான ஓய்வறையில் உள்ள இரும்பு நாற்காலிகளும் உடைந்து சிதைந்து போய் காணப்படுகிறது. ரெயில் பயணிகளின் முக்கிய தேவை யான குடிநீர் வசதி திருமங்கலம் ரெயில்வே நிலையத்தில் இல்லை. இங்குள்ள 2 பிளாட்பாரங்களிலும் உள்ள குழாய்களை திறந்தால் தண்ணீ ருக்கு பதில் காற்றுதான் வருகிறது.

    ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் கட்டணம் கொடுத்து குடிநீர் பாட்டில்களை வாங்கி வரும் நிலை உள்ளது. இது தவிர முதலாம் பிளாட்பாரத்தை உயர்த்தவும், அகலப்படுத்தும் பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் மிகவும் குறுகலாக காணப்படும் முதல்பிளாட்பாரத்தில் நிற்கும் ரெயிலில் ஏறி இறங்க பயணிகள் குறிப்பாக முதியோர்கள், பெண்கள் கடும் சிரமத்திற்குள் ளாகி வருகின்றனர்.

    இது குறித்து பயணிகள் கூறுகையில், திருமங்கலம் ரெயில் நிலையத்தில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. குடிநீர், கழிவறை வசதிகள் இல்லை. சென்னைக்கு செல்லும் முத்துநகர் மற்றும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரண்டுமே இரவு 10.30 மணிக்கு மேல்தான் திருமங்கலம் வருகின்றன. இந்த ரெயில்களில் பயணம் செய்யும் பயணிகள் இரவு வேளையில் நிலையத்தில் நடந்து செல்ல இயலாது. ஏனெனில் இங்கு தெருவிளக்கு எரிவதில்லை. வளாகம் இருளாக காணப்படுகிறது.

    முதல்பிளாட்பாரத்தில் ரெயில்கள் நிற்பதால் குறுகலான பிளாட்பாரத்தில் இரவு வேளையில் ரெயிலில் ஏற இயலவில்லை. இங்கு பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள உயர்தர உணவகமும் கட்டிய நாள் முதல் மூடியே கிடக்கிறது. இதை திறப்பதற்கான வழிகள் எதுவும் தென்படவில்லை.

    தற்போது மெட்ரோ ரெயில் திருமங்கலத்தில் இருந்து தான் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி காணப்படும் திருமங்கலம் ரெயில் நிலையம் வசதிகளை ஏற்படுத்தி தரத்தினை உயர்த்த வேண்டும் என்பதே நகரமக்களின் கோரிக்கையாகும்.

    • வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது.
    • நோய் பரவும் அபாயம் நிலவி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் ஈஸ்வரன் கோவில் தெரு வில் தனியார் மருத்துவ மனைகள், கல்வி நிறுவ னங்கள், மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வணிக வளாகங்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் வாகனங்களிலும் நடந்தும் சென்று வருகின்ற னர். இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி சார்பில் மழைக்காலங்களில் அந்தந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காத வகையில் சுமார் 44 கோடி ரூபாய் செலவில் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி அருகே வடிகால் வாய்க்கால் கட்டுமான பணி யை பாதியில் நிறுத்திவிட்டு சென்றதால் தற்போது கழிவுநீர் முழுவதும் சாலை யில் பெருக்கெடுத்து ஓடி குட்டை போல் தேங்கி உள்ளது. பள்ளி வளாகம் எதிரில் குட்டை போல் தேங்கியுள்ள கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் வருகிற 14-ந்தேதி பள்ளி கள் திறக்க உள்ள நிலை யில் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும். இது மட்டும் இன்றி சாலை வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் அனைவரும் மிகுந்த அவதி அடைந்து வருவதோடு சாலையில் செல்லும் வாகனங்கள் கழிவுநீர் மீது செல்வதால் பொதுமக்கள் மீது கழிவுநீர் தெளித்து துர்நாற்றம் வீசுவதோடு உடல் அரிப்பு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் நிலவி உள்ளது.

    ஆகையால் கடலூர் மாந கராட்சி நிர்வாகம் பாதி யில் நிறுத்தப்பட்ட வடி கால் வாய்க்கால் பணி களை உடனடியாக கட்டி நடவடிக்கை எடுக்கா விட்டால் இப்பகுதி முழு வதும் தண்ணீர்சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத் தும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. ஆகை யால் இதனை உடனடியாக கண்காணித்து நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சாலைகளில் தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
    • சாலைகளில் பள்ளம் தோண்டுவது பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நேற்று மாலை கருமேகங்கள் திரண்டன. 5 மணிக்கு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் பெய்த இந்த மழை காரணமாக சங்கரன் கோவில் முக்கு, காந்தி கலைமன்றம், சத்திரப்பட்டி ரோடு, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    மாலை நேரத்தில் பெய்த மழையால் கல்லூரி மற்றும் வேலை முடிந்து வீட்டுக்கு சென்றவர்கள் கடும் அவதியடைந்தனர். நேற்று பெய்த ஒரு மணி நேர பலத்த மழையால் ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

    இங்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் இந்த பணிகள் தற்போது வரை முடியவில்லை. இதன் காரணமாக ராஜபாளையம்-சத்திரப்பட்டி சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. நேற்று பெய்த கனமழையால் இந்தப்பகுதியில் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்துசெல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்தனர்.

    இதேபோல் சத்திரப்பட்டி, ஆலங்குளம், வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கணபதியாபுரம் ரெயில்வே தரைபாலத்திலும், மலையடிப்பட்டி சாலையிலும் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கியது. இதனால் அந்த வழியே சென்ற கனரக வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் கடந்து சென்றன.

    ராஜபாளையம் நகரில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சி திட்டப்பணிகள் என்ற பெயரில் சாலைகளில் பள்ளம் தோண்டுவது பெரும்பாலான இடங்களில் நடந்து வருகிறது. இதனால் நகரில் பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன.

    மழை நேரத்தில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கிவிடுவதால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

    • நேற்று வழக்கம்போல், சுல்தான்பேட்டை பகுதியிலேயே வாரச்சந்தை கூடியது.
    • வியாபாரிகளுக்கு கடை போட இடம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுல்தான் பேட்டையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சந்தை கூடுவது வழக்கம். தற்போது காங்கிரீட் தளம் மற்றும் மேற்கூரை அமைக்க ரூ. 1 கோடியே 47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று வருகிறது.

    அதனால் வார சந்தை தற்காலிகமாக பழைய பஸ் நிலையம் அருகே மாற்றப்படும் என டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் அறிவித்தது. ஆனால் நேற்று வழக்கம்போல், சுல்தான்பேட்டை பகுதியிலேயே வாரச்சந்தை கூடியது.

    வாரசந்தையில் பணிகள் நடைபெற்று வருவதால், பாதிக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கடை போட இடம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் பில்லர் அமைக்க 10-க்கும் மேற்பட்ட பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.

    இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் அறியாமல் பள்ளத்தில் விழும் வாய்ப்புள்ளது. வாரச்சந்தை மாற்றும் முடிவில் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் மெத்தனமாக இருப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வாரச்சந்தை பழைய பஸ் நிலையம் அருகே இடமாற்றம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு, வியாபாரிகளுக்கும் கழிப்பிட வசதி முதற்கொண்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    ஒரு சில வியாபாரிகள் இடமாற்றத்தை எதிர்த்து இதே பகுதியில் கடை போட்டு வருகின்றனர். வரும் நாட்களில் வார சந்தை பழைய பஸ் நிலையம் அருகே கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படும் என கூறினார்.

    • சென்னையில் இ ருந்து அரசு பஸ் 48 பயணிகளை ஏற்றுக் கொண்டு மேல்மலையனூருக்கு வந்து கொண்டிருந்தபோது, திடீரென டீசல் டியூப் கட் ஆகி அரசு பஸ் நடுரோட்டில் நின்றது.
    • பஸ்சில் பயணம் செய்த மேல்மலையனூருக்கு செல்லும் பயணிகள் 48 பேர் நடுரோட்டில் இறக்கிவிடப்பட்டனர்.

    விழுப்புரம்:

    சென்னையில் இ ருந்து அரசு பஸ் 48 பயணிகளை ஏற்றுக் கொண்டு மேல்மலையனூருக்கு வந்து கொண்டிருந்தது. திண்டிவனம் அடுத்த மேல் பேட்டை அருகே அரசு பேருந்து வரும்போது திடீரென டீசல் டியூப் கட் ஆகி அரசு பஸ் நடுரோட்டில் நின்றது. இதனால் பஸ்சில் பயணம் செய்த மேல்மலையனூருக்கு செல்லும் பயணிகள் 48 பேர் நடுரோட்டில் இறக்கிவிடப்பட்டனர்.

    அரை மணி நேரத்துக்கு மேலாக மாற்று பஸ் வர வைக்கப்படாமல் நடுரோட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் பயணிகள் காத்திருந்து அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

    • பெண்கள், மாணவ-மாணவிகளுக்கு தனி பஸ்கள் இயக்கப்படுமா? பழுதான பஸ்களால் தினமும் அவதிபடும் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
    • தமிழக அரசு பெண்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாத டவுன் பஸ்களை இயக்கி வருகிறது.

    மதுரை

    மதுரையில் 24 மணி நேரமும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரத்திலும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் தினமும் வேலைக்கு செல்லும் பொது மக்களும், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் சென்று வருகின்றனர். தமிழக அரசு பெண்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லாத டவுன் பஸ்களை இயக்கி வருகிறது.

    மதுரையில் ஏராளமான டவுன் பஸ்கள் இயக்கப்படு கின்றன. காலை, மாலை நேரங்களில் அதிக அள வில் பயணிகள் கூட்டம் இருக்கும். தற்போது உள்ள பஸ்கள் போதுமான அளவில் இல்லாததால் மாணவர்கள், பெண்கள் படிக்கட்டில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் அவல நிலை உள்ளது. அவ்வாறு பயணம் செய்யும் மாணவர்கள் பலியாகும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது.

    மதுரையில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்கள் ஓருசில பஸ்கள்தான் நன்றாக உள்ளன. பல பஸ்கள் ஓட்டை, உடைசல் மற்றும் இருக்கைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இருந்த போதிலும் பயணிகள் அவைகளின் பயணம் செய்து வருகின்றனர். இந்த பஸ்களில் 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கின்றன.

    ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ரூ.5, 6, 9, 13, 15 என்று 5 வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படு கிறது. இதனால் குறைந்த கட்டண பஸ்களில் ஏற வரும் பயணிகள் வேறு வழியில்லாமல் கூடுதல் கட்டணம் உள்ள பஸ்களிலும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    இந்த கட்டணம் ஷேர் ஆட்டோ கட்டணத்துக்கு நிகராக உள்ளதால் தினமும் போக்குவரத்துக்காக அதி களவு செலவு செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    எனவே குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். விபத்து ஏற்படுத்தும் வகையில் பழுதான பஸ்களை இயக்குவதை கைவிட வேண்டும். புதிய பஸ்கள் அதிகமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கூறுகின்றனர்.

    பெரும்பாலான டவுன் பஸ்கள் பயணிகளுக்கு போக்கு காட்டிவிட்டு பல நிறுத்தங்களில் நிற்காமல் சென்றுவிடுவதாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக புகார் உள்ளது. மேலும் ஏறும்போதும், இறங்கும்போதும் டிரைவர் கள் அவசரப்பட்டு பஸ் களை இயக்குவதாக கூறப்படுகிறது.

    தனியார் பஸ்கள் பயணி களை ஏற்றி செல்வதைபோல் அரசு பஸ்களும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் அவர்களை ஏற்றி செல்ல வேண்டும். மாணவ-மாணவிகளை, பெண்கள் ஏற்றாமல் போக்குகாட்டி செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

    மேலும் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகளும் அதிகமாக ஏற்படுகிறது. எனவே மகளிருக்கு தனி பஸ்கள் இயக்கவேண்டும். மாணவ-மாணவிகளுக்கு தனி பஸ்கள் இயக்க வேண்டும். அவைகள் காலை, மாலை நேரங்க ளில் அதிக அளவில் இயக்கப்படவேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது. அதனை நிறைவேற்ற அரசு முன்வரவேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கூறு கின்றனர்.

    • சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
    • ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு.

    மதுரை

    திருப்பரங்குன்றம் யூனியன் நிலையூர் 1-வது பிட், கைத்தறிநகர் ஊராட்சி மன்றம் உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் சாலையில் சுற்றி திரிகின்றன. இது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகின்றன.

    மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு கைத்தறிநகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • அபிராமம் அருகே அடிப்படை வசதி இல்லாமல் கிராம மக்கள் தவிக்கின்றனர்.
    • கிராம மக்கள் வீடுகளில் வசூல் செய்து மண் அடித்து சாலையை சமன் செய்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள வங்காருபுரம் கிராமத்தில் 1200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    15 ஆண்டுகளுக்கு மேலாக வங்காருபுரம் கிராமத்தில் இருந்து வீரசோழன் செல்லும் பிரதான சாலை 100 மீட்டருக்கு அமைக்க ப்படாமல் எல்லையை காரணம் காட்டி அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

    கிராமத்திற்குள் செல்லும் அந்த சாலையை அபிராமம் ஊராட்சி ஒன்றிய அதிகா ரிகள் இந்த எல்லை பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது என்றும், பரமக்குடி ஊராட்சி சேர்ந்த அதிகாரிகள் அபிராமம் எல்லைக்கு உட்பட்டது என்றும் கூறி மக்களை அலைக்கழிக்கின்றனர்.

    ஆனால் சாலை அமைப்ப தற்கான முழு தொகையும் எடுத்துவிட்டு 100 மீட்டர் சாலை அமைக்காமல் விட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தனர். மேலும் அந்த சாலை குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது.

    மழைக்காலங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.கிராம மக்கள் வீடுகளில் வசூல் செய்து மண் அடித்து சாலையை சமன் செய்துள்ளனர்.

    இரவு நேரங்களில் இந்த பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும் அச்சப்படுகின்றனர்.

    இதுகுறித்து அதிகாரி களுக்கு பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிராமமக்கள் குற்றம் சாட்டினர் .

    ஒரே கிராமத்திற்குள் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    ×