search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nilagukudai"

    • 3 நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
    • பயணிகள் நிழற்குடைகளை மானாமதுரை எம்.எல்.ஏ.தமிழரசி தொடங்கி வைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் ராஜகம்பீரம் மற்றும் மதுரை-ராமேசுவரம் சாலையில் உள்ள பைபாஸ் ரோடு, மானாமதுரை பிருந்தாவனம்-பரமக்குடி ரோடு ஆகிய 3 இடங்களில் புதிதாக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டிருந்தது. ராஜகம்பீரம் பகுதியில் மாற்றுதிறனாளிகள் மற்றும் முதியோர் பயன்படுத்தும் வகையில் சாய்வு தளத்துடன் அமைக்கப்பட்டிருந்தது. 3 இடங்களில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை மானாமதுரை எம்.எல்.ஏ.தமிழரசி தொடங்கி வைத்தார். பின்னர் பெண் முதியோர்களுக்கு சேலைகள் வழங்கினார்.

    மதுரையில் இருந்து ராஜகம்பீரம் வழியாக மானாமதுரை வரை பஸ் விடவேண்டும். புதிதாகஅமைக்கப்பட்ட பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் நிற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழரசி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை விடுத்தனர். விழாவில் மானாமதுரை நகராட்சிஆணையாளர் கண்ணன், ராஜகம்பீரம் ஊராட்சி மன்ற தலைவர் முஜிப்ரகுமான், நகராட்சி கவுன்சிலர் இந்துமதி திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அபிராமம் அருகே நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தத்தால் பயணிகள்- மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
    • பொட்டகுளம் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள பொட்டகுளம் கிராம மக்களும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் வெளியூர் செல்லவேண்டும் என்றால் அபிராமம் - பார்த்திபனூர் செல்லும் மெயின் ரோட்டுக்கு வந்து பஸ் ஏற வேண்டும்.

    பொட்டகுளம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் வெயில் காலங்களிலும், மழை காலங்களிலும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாண விகள் அவதிப்படுகின்றனர்.

    இந்த கிராமத்தில் சுமார் 250 குடும்பத்திற்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பொட்ட குளம் கிராம மக்க கூறுகையில், எங்கள் ஊரிலிருந்து பஸ் நிறுத்தம் இருக்கும் மெயின் ரோட்டுக்கு 5.கி.மீ தூரம் நடந்தே வரவேண்டி உள்ளது.

    அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் படிப்பதற்கும், வெளியூர் செல்லவும் சிரமப்படுகிறோம்.இந்த பஸ் நிறுத்த்தில் மழையிலும், வெயிலிலும் நிற்க முடியாமல் வயதா னவர்களும், குழந்தைகளும், கர்ப்பிணிகளும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

    இந்த பஸ் நிறுத்தத்திற்காக 30 ஆண்டுகளாக நிழற்குடை கேட்டு பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் பொட்டகுளம் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ×